<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-15229466</id><updated>2011-12-02T00:37:38.004-08:00</updated><title type='text'>நட்புக்காக</title><subtitle type='html'>நட்பின்றி யாருமில்லை
நண்பர்களின்றி நானில்லை</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://forusdear.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://forusdear.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>தாணு</name><uri>http://www.blogger.com/profile/04865211166801373288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>67</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-15229466.post-5801056110529816682</id><published>2007-03-06T22:34:00.000-08:00</published><updated>2007-03-06T22:39:54.645-08:00</updated><title type='text'>சிசுக்கொலையும் கருக்கொலையும்</title><content type='html'>``&lt;span style="color:#ff0000;"&gt;மங்கையராய்ப் பிறப்பதற்கே- நல்ல&lt;br /&gt;மாதவம் செய்திடல் வேண்டுமம்மா’’&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;ஏட்டுசுரைக்காய்க் கவிக்குதவாது, எழுதப்படும் போற்றுரைகள் பெண்களுக்குதவாது. மாதவம் செய்து பெற்றிட்ட கண்மணிகள் இன்று மண்ணுக்குள் புதையுண்டு அழிந்து கொண்டிருக்கும் காலம். `சர்வதேச மகளிர் தினம்’ கொண்டாடப் படும் வேளையில் அவலப் பட்டு அழிந்துகொண்டிருக்கும் பெண்ணினம் பற்றித் தீர்க்கமாக சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.&lt;br /&gt;&lt;br /&gt;உலக அளவில் ஆண்களைவிட பெண்களின் ஜனத்தொகை 200 மில்லியன்கள் குறைவாக உள்ளதாக ஒரு கருத்துக் கணிப்பு சொல்கிறது. புள்ளி விபரங்களை கோர்வைப்படுத்திக்கொண்டு வந்தால் இது எவ்வளவு வேகமாக குறைந்து வருகிறது என்பது புரியும்..1991 ஜனத்தொகை கணக்கின்படி 1000 ஆண்களுக்கு 945 பெண்கள் என்றிருந்த சதவீதம், 2001 கணக்கெடுப்பில் 927/1000 என்று குறைந்துள்ளது. கணக்கெடுப்புகளையும் சதவீதங்களையும் தவிர்த்துப் பார்க்கும் போதும் பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருவது வெளிப்படையாக்வே தெரிகிறது. UNICEF நிறுவனத்தின் கணக்கெடுப்பின் படி இந்திய ஜனத்தொகையில் 50 மில்லியன் பெண்கள் காணாமல் போனவர்கள் வரிசையில் உள்ளனர். பாலின அடிப்படையிலான கருக்கலைப்புகள்,பெண் சிசுக் கொலைகள் போன்றவையே பெண்களின் ஜனத்தொகையைக் கணிசமாகக் குறைக்கும் முக்கியமான காரணமாகக் கருதப் படுகிறது. அதற்கு அடிப்படைக் காரணங்களாக வரதட்சணை, பெண்குழந்தை குறித்த சமுதாயப் பார்வை, சடங்குகள் சம்பிரதாயங்கள் ஆகியவை சொல்லப் படுகின்றன.&lt;br /&gt;பெருவாரியான குடும்பங்களில் ஆண்குழந்தைகளையே விரும்புகின்றனர்.&lt;br /&gt;· ஆண்கள் குடும்ப பாரம்பரியத்தை நிலை நிறுத்தும் அடையாளங்களாகக் கொள்ளப்படுகிறார்கள். வாரிசு உரிமை, ஈமக் கிரியை செய்யும் உரிமை போன்ற சடங்குகள், சம்பிரதாயங்கள் சார்ந்த கடைபிடித்தல்கள் ஆண்களுக்கே உரியதாகக் கருதப் படுகிறது.&lt;br /&gt;· வீட்டைப் பராமரிக்க உடலுழைப்பு; பொருள் ஈட்டும் திறைமை, குடும்பத் தலைமை என்ற பொறுப்பு எல்லாமே ஆண்களின் தனித்துவமாகக் கொள்ளப் படுகிறது.&lt;br /&gt;· திருமண பந்தங்களில் வரவுகளை வரதட்சணையாகப் பெறும் பேறும் ஆண்களுக்கே உரித்தானது. மனைவி என்ற பந்தத்தை குடும்பத்துடன் இணைத்து மேலும் ஒரு நபரை உழைப்பில் சேர்த்துக் கொள்வதும் ஆண்களின் சிறப்பாகக் கருதுகின்றனர்.&lt;br /&gt;பெண்குழந்தைகள் பலவீனமானவர்களாகவும், திறைமையற்றவர்களாகவும், செலவு செய்யப்பட வேண்டியவர்களாகவுமே சித்தரிக்கப்படுகிறார்கள்.&lt;br /&gt;``பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்’’ கூட ஏதோ அரிய நிகழ்வுகளாகவே கருதப் படுகிறதே அன்றி பெண்களின் முன்னேற்றமாகக் கொள்ளப்படுவதில்லை.&lt;br /&gt;இதுபோன்ற எண்ணற்ற ஆணாதிக்க சிந்தனைகளின் தாக்கமே மறைமுகமாக பெண்ணினத்தை நலிவுறச் செய்கிறது என்பதுதான் உண்மை. அதை விடுத்து, `எய்தவன் இருக்க அம்பை நோகும்’ தன்மையதாக பெண் சிசுக் கொலைக்கும் கருக்கலைப்புக்கும் பெண்களே காரணமென்ற மாயத்தோற்றத்தை ஊடகங்களும் அரசும் உண்டாக்கி வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தையைக் கருத்தரித்து அதனால் வரும் மசக்கை, வாந்தி போன்ற சுகவீனங்களால் கஷ்டப்பட்டும் அதைத் தாங்கி, உடலில் ஒரு அங்கமாக வளரும் குழந்தையை அழிப்பதை ஒரு தாயால் சந்தோஷமாக செய்ய முடியுமா? அதை அழிக்கும் முகாந்திரங்களில் அவளது ஆரோக்கிய சீர்கேட்டிற்கு வரும் பிரச்னைகளை விரும்பி வரவேற்பாளா?பெண் சிசுக்கொலையை முன்னின்று செய்வதே முந்தைய தலைமுறையைச் சேர்ந்த பாட்டிகள்தான் என்றாலும், அதைச் செய்யத்தூண்டுவது எது? பெண்ணுக்குப் பெண்ணே எதிரி ஆவது யாரால், எதனால்?&lt;br /&gt;&lt;br /&gt;பிறந்திருக்கும் பெண்குழந்தையால் , வாழ்ந்து கொண்டிருக்கும் பேத்தியின்/மகளின் வாழ்க்கை அஸ்தமனமாகிவிடக் கூடாதென்ற எண்ணத்தாலேயே பிறந்திருக்கும் பெண்மகவை அழிக்கத் துணிகிறார்கள் முந்தைய தலைமுறையினர். அழிக்கும்செயலை நியாயப்படுத்த முடியாதுதான்.ஆனாலும் புரையோடிப் போயிருக்கும் பிரச்னையின் வேர்களைப் புரிந்துகொள்ளாமல் மேலோட்டமான கருத்துக் கணிப்புகளும், தடுப்பு முயற்சிகளும் விழலுக்கிறைத்த நீராகத்தான் போய்க் கொண்டிருக்கின்றன; ஆனாலும் பெண்குழந்தைகளின் சதவிகிதம் அதிகரிக்கவில்லை இன்னும்!&lt;br /&gt;&lt;br /&gt;மனிதர்களின் மனநிலை மாற வேண்டும்; அதற்கு சமுதாய மாற்றம் அவசியம் தேவை. வரதட்சணைக் கொடுமையால் எத்தனையோ மரணங்களும் விவாகரத்துகளும் அன்றாடம் நடந்துகொண்டிருந்தாலும் , வரதட்சணையை அடியோடு அழிக்க முடியவில்லை இன்னமும். அதன் தாக்கத்தால் பெண்குழந்தையைப் பெற்றவர்கள் படும் அவதியும் சொல்லி மாளாது. அதிலும் சில குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களிடமும், சில குறிப்பிட்ட ஊரைச் சேர்ந்தவர்களிடமும் அதன் பாதிப்பு அதிகமாக உள்ளது. உதாரணத்துக்கு மதுரை மாவட்டத்தின் உசிலம் பட்டி, சேலம், ஈரோடு, தர்மபுரி போன்ற இடங்களில் பெண்குழந்தைகளை அதிகமாக வெறுக்கும் தன்மை உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களில் எத்தனை விதமான தம்பதியர்?!&lt;br /&gt;· ஆண்குழந்தை வேண்டுமென்ற ஒரே காரணத்துக்காக ஆறு முறை கருக்கலைப்பு செய்தும் , மறுபடியும் சோதனைக்குழாய் மூலம் ஆண்குழந்தையே பெற வைக்க முடியுமா என்று யோசனை கேட்க வந்த தம்பதி; மனைவியை மட்டும் தனிப்பட விசாரித்த போது தன்னால் நடப்பது எதையும் தடுக்க முடியாததைச் சொல்லி, ஏதாவது நோவென்று சொல்லி கர்ப்பபையையே எடுத்துவிடுங்கள் என்று காலில் விழுந்த 45 வயது பெண்மணி;&lt;br /&gt;· முதல் மனைவிக்கு மூணும் பெண்ணாகிவிட்டதால் 15 வயது வித்தியாசத்தில் சின்னப் பெண்ணைத் திருமணம் செய்து, அவளுக்கும் பெண் பிறந்ததும் விவாகரத்துப் பெற முயற்சி செய்யும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்;&lt;br /&gt;· விந்தணுவே இல்லாத நிலையில் சோதனைக்குழாய் மூலம் கருத்தரிக்க வந்த சமயத்திலும் , ஆண்குழந்தையாக இல்லாவிட்டால் கருக்கலைப்பு செய்துகொள்ள தயார் நிலையில் உள்ள கணவன்;&lt;br /&gt;· மறுபடி மறுபடி கருக்கலைப்பு செய்ய உடன்பாடில்லாததால் வருடக் கணக்கில் கணவருக்குத் தெரியாமல் கருத்தடை மாத்திரை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் மனைவி;&lt;br /&gt;இன்னும் எத்தனையோ விதங்கள். தனக்கு நேரும் ஒவ்வொரு வடுவும் காயமும் தன் பெண்குழந்தைக்கு வரக்கூடாது என்ற வைராக்கியமே மனதை இரும்பாக்கிவிடும் போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊடகங்களின் அடுத்த இலக்கு மருத்துவத் துறை! கருக்கலைப்பும் சிசுக்கொலையும் மருத்துவர்களின் ஏகோபித்த அங்கீகாரத்துடன் முனைந்து செய்யப்படுவதாக வாய்ப்புக் கிடைக்கும் வேளைகளிலெல்லாம் வாய் கிழியப் பேசுவது இவர்களுக்கு ஒரு பொழுது போக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;சில பாலினம் சார்ந்த நோய்களுக்கு சிகிச்சை செய்ய ஏதுவாகக் கண்டுபிடிக்கப்பட்ட பரிசோதனை முறைகள் ( ஸ்கேன் போன்றவை) ஆரம்ப காலங்களில்,பெண்குழந்தைகளைக் கருவிலேயே கலைத்துக் கொள்ள உபயோகிக்கப் பட்டது உண்மைதான். மூன்று முதல் நான்கு மாதங்கள் தாண்டிய நிலையில் , கருவிலிருக்கும் குழந்தைக்கு பிறவிக் குறைபாடு இருப்பது அறியப்படும் போது, அக்குழந்தை மற்றும் தாயின் நிலை கருதி மருத்துவ ரீதியாக கருக்கலைப்பு செய்யப்படுவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட பரிசோதனை முறைகள் பாலினம் சார்ந்த கருக்கலைப்புக்கும் அடித்தளமாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அதே கால கட்டங்களில் அரசாங்க மருத்துவ மனைகளிலும் நான்குமாத கருக்கலைப்பு மிகுந்த அங்கீகரிப்புடன் செய்யப்பட்டுதான் வந்தது. குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்பவர்களுக்கு கருக்கலைப்பு செய்து அறுவை சிகிச்சை செய்வதும் வாடிக்கையாக இருந்தது. ஜனத்தொகை கட்டுப்பாட்டைத் தீவிரமாகக் கடைப்பிடிக்க ஐந்தாண்டு/பத்தாண்டு திட்டங்களுடன் கருக்கலைப்பும் அங்கீகரிக்கப்பட்டு வந்தது. அரசாங்கம் தனியார் என்ற பாகுபாடின்றி கருக்கலைப்பு பிரச்னைகளின்றி கடைப்பிடிக்கப் பட்டு வந்தது. அதனால் பெண்குழந்தைகளை கருக்கலைப்பு செய்துகொள்ளும் சதவீகிதத்தினரும் இந்த கும்பலுடன் சேர்ந்து கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீப காலக் கணக்கெடுப்புகள் பெண்குழந்தைகளின் பிறப்பு விகித குறைவைச் சுட்டிக் காட்ட ஆரம்பித்த பிறகுதான் ஸ்கேன் பண்ணிப் பார்த்து கருக்கலைப்பு செய்யப்படுவது தவறு என்று எல்லா மட்டத்திலும் உணரப்பட்டுள்ளது. அதன் பிறகு இது போன்ற கருக்கலைப்புகள் வெகுவாகக் குறைந்துவிட்டன என்பதும் தெரிகிறது; ஆனால் அவை எல்லாம் மேல்மட்டமாகத் தெரியும் உண்மைகளே. அதன் பின்னரும் பெண்குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிக்காதது எதனால் ?&lt;br /&gt;&lt;br /&gt;சட்டதிட்டங்களும் கட்டுப்பாடுகளும் மருத்துவர்களையும் பரிசோதனைக் கூடங்களையும் ஒழுங்கு படுத்தலாம். ஆனால் அடிப்படைக் காரணமான ``பெண்குழந்தை தேவையற்றது’’ என்ற மனப்பக்குவத்தை மாற்ற என்ன முயற்சி எடுக்கப் பட்டுள்ளது? அதை நிறைவேற்றிக் கொள்ள அலையும் தம்பதியரைக் கட்டுப் படுத்துவது எங்ஙனம்?&lt;br /&gt;ஆட்சி மாறும்போது அறிவிக்கப்படும் கவர்ச்சிகரமான திட்டங்களோ, பெண்குழந்தைகள் மேம்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் திட்டங்களோ சரிவர சென்றடையவில்லை என்பதுதான் உண்மை. அடிப்படை பிரச்னை சரி செய்யப்படாததால் இன்னும் கருக்கலைப்பும் சிசுக்கொலையும் அதே முனைப்புடன் நடந்து கொண்டுதான் இருக்கிறன, வெவ்வேறு முறைகளில், மாறுபட்ட கோணங்களில்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்கென் செய்து பாலினம் சொல்லப்படுவதில்லை என்பதால், மறுபடியும் சிசுக்கொலையின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. `பிறந்து சில மணிநேரமே ஆன குழந்தை குப்பைத் தொட்டியில் கண்டெடுப்பு’’; ``தொப்புள்கொடி கட்டப்படாமல் புதரில் வீசியெறியப்பட்ட பிஞ்சுக் குழந்தை’’- இப்படி ஏகப்பட்ட மனதை உருக்கும் நிகழ்வுகள் அன்றாடம் தினசரிகளில். இத்தகைய இறப்புகளின் புள்ளிவிபரங்களுக்கும் உண்மையான இறப்புக்கும் ஏகப்பட்ட முரண்பாடுகள். பெரும்பாலானவை வெளியில் சொல்லப் படுவதே இல்லை. மீறிக் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதை சமாளிக்க ஏகப்பட்ட வழிமுறைகள்.பெண்சிசுக்கொலையை காவல்துறை கூர்ந்து கவனிப்பது தெளிவானதால் கொல்ல உபயோகிக்கும் முறைகளையும் நவீனப்படுத்திக் கொள்கிறார்கள்.&lt;br /&gt;சேலம் அருகில் ஒரு கிராமத்தில் பெண்சிசுக்கொலை செய்யப்படும் முறைகளை தன்னார்வத் தொண்டு நிறுவன நண்பர் ஒருவர் அழாத குறையாகச் சொன்னது மிகவும் வருத்தம் தருவதாக இருந்தது.&lt;br /&gt;பாலில் நெல்மணிகளைப் போட்டுப் புகட்டுவதும், கள்ளிப்பால் கொடுப்பதும்தான் பழைய முறைகள். ஆனால் இப்போது ரொம்பக் கொடூரம். பிறந்த உடன் பாலுக்குப் பதிலாக கெட்டியான சூடான கோழி சூப் அல்லது புகையிலைச் சாறு கொடுப்பது. ஜீரணிக்க முடியாமல் வயிறு உப்பலெடுத்து குழந்தை மரிக்கும் கொடூரம்; வயிறு முட்ட முட்ட பால் கொடுத்து ஈரத்துணியில் இறுக்கமாக சுற்றி வைத்துவிடுவது, மூச்சுத் திணறல் எடுத்து குழந்தை இறந்துவிடும்; தொப்புள் கொடியைக் கட்டாமல் விட்டுவிடுதல், அதிகமான இரத்த விரையத்தில் இறப்பது; வேகமாகச் சுழலும் பெடெஸ்டல் மின்விசிறியின் முன் படுக்கவைத்து மூச்சுத்திணறல் ஏற்படுத்துவது; இன்னும் எத்தனை விதங்களோ, நினைப்பதற்கே கஷ்டமாக உள்ளது.&lt;br /&gt;இது குறித்து அந்த மனிதர்களிடம் விசாரித்தாலும் பதில் ஒரே மாதிரியாகத்தான் உள்ளது. பெண்ணாக வளர்ந்து நான் படும் பாட்டைவிட முளையிலேயே உயிரை விடுவது மேல் என்பது போல்தான் பேசுகிறார்கள். பெண்சிசுக்கொலை பற்றிய குற்ற உணர்ச்சியே அவர்களிடம் இருப்பதில்லை. தங்கள் குழந்தைக்கு நல்லது செய்துவிட்டதாகவே நம்புகிறார்கள். இந்த மன நிலை மாறாதவரை கருக்கலைப்பும் பெண்சிசுக்கொலையும் திரை மறைவில் நடந்துகொண்டேதான் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களும் மருத்துவ மனைகளும்தான் கருக்கலைப்பு செய்வதில்லையே தவிர முறையற்ற மருத்துவ தொழில் செய்துவரும் தாதியர், ஆயாக்கள் போன்றோர் அதைத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஸ்கேன் உபகரணத்தை பதிவு பெறாத போலி மருத்துவர்கள்கூட உபயோகிக்கும் நிலைமைதான் நம் நாட்டில் உள்ளது. அவர்கள் மூலம் பாலினம் பற்றி அறிந்துகொண்டு ஆயாக்களிடம் கருக்கலைப்பு செய்துவரும் பெண்கள் இன்னும் இருக்கிறார்கள். கொஞ்சம் கல்வி அறிவு உள்ளவர்களும் பாலினம் பற்றி அறிந்து கொண்டு சுய மருத்துவம் (self-medication) மூலம் கருச்சிதைவு செய்து கொள்கிறார்கள். மருத்துவர்களையும் ஸ்கேன் செண்ட்டர்களையும் கட்டுப்படுத்தும் அரசு இயந்திரத்தால் இவர்களை எதுவும் செய்ய முடிவதில்லை. நான்கு மாத கருவைக் கூடக் கலைத்துக் கொள்ள ஏதுவாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள வீரியமான மாத்திரைகள் மருந்துக் கடைகளில் மிக இலகுவாகக் கிடைக்கிறது. அந்த மருந்துகள் மருத்துவரின் பரிந்துரையின்றி கொடுக்கப்படக் கூடாது என்ற கட்டுப்பாடு எங்கும் இல்லை.&lt;br /&gt;முறை தவறிய வழிகள் மூலம் கருச்சிதைவுக்கு உட்படுத்திக்கொண்டு, பின்விளைவுகள் (complications) எல்லை மீறும்போது மட்டுமே மருத்துவரை அணுகும் கும்பல் அதிகரித்துக் கொண்டு வருகிறது. அநேகமாக அவர்களில் அதிகம்பேர் உயிருக்கு ஆபத்தான நிலைமையிலேயே அழைத்துவரப் படுகிறார்கள். உதிரப் போக்கும் சீழ்பிடித்தலுமே இவற்றில் முக்கிய பிரச்னைகளாக இருக்கும். ரத்த வங்கிகள் இல்லாத இடங்களிலும், தரமான தீவிர சிகிச்சைப் பிரிவு இல்லாத இடங்களிலும் உயிரைக் காப்பாற்றுவது இயலாமல் போகிறது.&lt;br /&gt;இங்கு பரிமாறிக்கொள்ளப்பட்ட விஷயங்கள் ஒரு சின்ன நூலிழையே( an iceberg only) மறைந்து கிடக்கும் அவலங்களும் அழிவுகளும் நம் முன் பெரும் பூதமாக நிற்கிறது. இதன் தாக்கம் அறிந்த ஒவ்வொருவரும் தங்கள் வரையில் இந்த உண்மைகளை உற்றார் உறவினர் வரை கொண்டு செல்லலாம்;மலடு நீக்கும் மருத்துவத்திற்காக லட்சங்களில் செலவு செய்பவர்களை பெண்குழந்தைகளித் தத்தெடுத்துக்கொள்ள அறிவுரை கூறுகிறோம்;நமது குழந்தைகளுக்கு வரதட்சணை தருவதில்லை என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்; நமது சக்திக்கு உட்பட்ட இடங்களில் பெண்களின் வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும்; இப்படி நம்மால் இயன்ற சிறு சிறு விஷயங்களை சோர்வுறாமல் தொடர்ந்து செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்திய ஊடக புள்ளிவிபரங்களின்படி திருமண பந்தத்தின் மீது நம்பிக்கை இழந்த இளைய சமுதாயம் ``சேர்ந்து வாழும் ‘’(living together) கலாச்சாரத்துக்கு மாறி வருவது புலனாகிறது. முள்ளை முள்ளால் எடுப்பது போல் வரதட்சணைக் கொடுமைகளை அழிக்க இது ஒரு புரட்சியாகக் கூட மாறலாம். பெண்களில்லாத உலகத்திலே ஆண்களினாலே என்ன பயன் என்று உணரும்போது&lt;br /&gt;``பெண்மையைப் போற்றுதும் பெண்மையைப் போற்றுதும்’’ என்ற சுலோகம் உயிர் பெறும். அந்த நாள் விரைவில் வர வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் என் கருத்துக்களை முடிக்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15229466-5801056110529816682?l=forusdear.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://forusdear.blogspot.com/feeds/5801056110529816682/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15229466&amp;postID=5801056110529816682&amp;isPopup=true' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/5801056110529816682'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/5801056110529816682'/><link rel='alternate' type='text/html' href='http://forusdear.blogspot.com/2007/03/blog-post.html' title='சிசுக்கொலையும் கருக்கொலையும்'/><author><name>தாணு</name><uri>http://www.blogger.com/profile/04865211166801373288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15229466.post-116283238560426151</id><published>2006-11-06T08:54:00.000-08:00</published><updated>2007-01-04T22:37:12.286-08:00</updated><title type='text'>படித்ததில் பிடித்தது</title><content type='html'>ஆங்கிலமாக இருந்தாலும் அருமையாக இருந்த ஆர்ட்டிக்கிள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; Happiness is a voyage, not a destination&lt;br /&gt;&lt;br /&gt;We  convince ourselves that life will be better once we are married, have a baby, then another&lt;br /&gt;&lt;br /&gt;Then we get frustrated because our children are not old enough,and that will be well when they are older&lt;br /&gt;&lt;br /&gt;Then we are frustrated because they reach adolescence and we we must deal with them  Surely we’ll be happier when they grow out of  the teen years&lt;br /&gt;&lt;br /&gt;We tell ourselves, our life will be better when our spouses gets his/her act together,when we have a nice car, when we can take a vocation, when we finally retire&lt;br /&gt;&lt;br /&gt;The truth is that there is no better time to be than right now&lt;br /&gt;  If not, then when?&lt;br /&gt;&lt;br /&gt;Your life will always be full of challenges It is better to admit as much  and to decide to be happy in spite of it all&lt;br /&gt;&lt;br /&gt;For the longest time , it seemed that life was about to start. Real life.&lt;br /&gt;   &lt;br /&gt;But there was always some obstacle along te way, an ordeal to get through, some work to be finished, some            to be given, a bill to be paid. Then life would start.&lt;br /&gt;&lt;br /&gt;That point of view helped me see that there isn’t any road to happiness.&lt;br /&gt;HAPPINESS IS THE ROAD&lt;br /&gt;    So  enjoy every moment.&lt;br /&gt;Stop waiting for school to end, for a return to school, to  loose ten pounds, to gain ten pounds, for work to begin, to get married, for Friday evening, for Sunday morning, waiting for a new car , for your mortgage to be paid off, for spring , for summer, for fall, for winter, for for the first or fifteent of the month, for your song to be played on the radio, to die, to be reborn……….before deciding to be HAPPY.&lt;br /&gt;&lt;br /&gt; Happiness is a voyage, not a destination.&lt;br /&gt; There is no better time to be Happy than….&lt;br /&gt;   NOW!&lt;br /&gt; Live and enjoy the moment.&lt;br /&gt;&lt;br /&gt;Now think and try to answer these questions:&lt;br /&gt;1. Name the 5 richest people in the world&lt;br /&gt;2. Name the last 5 Miss Universe Winners&lt;br /&gt;3. Name the last  10 Nobel Prize Winners.&lt;br /&gt;4. Name the last 10  Winners of the Best Actor Oscar.&lt;br /&gt;Cant do it?  Rather difficult , isn’t  it?&lt;br /&gt;Don’t worry , nobody remembers that.&lt;br /&gt;  Applause dies away!&lt;br /&gt;  Trophies  gather  dust!&lt;br /&gt;  Winners are soon forgotten!&lt;br /&gt;Now answer these questions:&lt;br /&gt;1. Name three teachers who contributed to your education&lt;br /&gt;2. Name three friends who helped you in your hour of need.&lt;br /&gt;3. Think of a few people who made you feel special&lt;br /&gt;4. Name five people whom you like to spend time with.&lt;br /&gt;More manageable! It’s easier, isn’t it?&lt;br /&gt;&lt;br /&gt;The people who mean something to your life are not rated the ``Best’’, don’t have  the most money, haven’t won the greatest prizes…They are the ones who care about you, take care of you , those who, no matter what, stay close by.&lt;br /&gt; Think about it for a moment.&lt;br /&gt; Life is very short!&lt;br /&gt; And you, in which list are you? Don’t know?&lt;br /&gt;Let me give you a hand.&lt;br /&gt;You are not among the most ``famous”, but among those to whom I remember to send this message…….&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Sometime ago, at the Seattle Olympics, nine Athelets, all mentally or physically  challenged, were standing on the start line for the 100m race. The gun fired and the race began. Not everyone was running,but everyone wanted to participateand win. &lt;br /&gt;They run in threes, a boy tripled and fell, did a few somersaults and started crying. The other eight heard him crying. They slowed down and looked behind them. They stopped and came back……All of them.   A girl with Down’s Syndrome sat down next to him , hugged him and asked,`` feeling better now?”.Then all nine walked shoulder to shoulder to finish the line. &lt;br /&gt; The whole crowd stood up and applauded. And the applause lasted a very long time….People who witnessed this still talk about it. Why?&lt;br /&gt;&lt;br /&gt;Because deep down inside us , we all know that the most important thing in life is much more than winning for ourselves. The most important thing in this life is to help others to win. Even if that means slowing down and changing our own race.&lt;br /&gt;&lt;br /&gt; ``A candle looses nothing if it is used to light another one”&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15229466-116283238560426151?l=forusdear.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://forusdear.blogspot.com/feeds/116283238560426151/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15229466&amp;postID=116283238560426151&amp;isPopup=true' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/116283238560426151'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/116283238560426151'/><link rel='alternate' type='text/html' href='http://forusdear.blogspot.com/2006/11/blog-post.html' title='படித்ததில் பிடித்தது'/><author><name>தாணு</name><uri>http://www.blogger.com/profile/04865211166801373288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15229466.post-115081753259612231</id><published>2006-06-20T08:29:00.000-07:00</published><updated>2006-08-17T03:55:40.430-07:00</updated><title type='text'>வாலிபமே வா! வா!!</title><content type='html'>வளர் சிதை மாற்றம்&lt;br /&gt;&lt;br /&gt;பன்னிரண்டு வயது வரை &lt;br /&gt;குட்டைப்பாவாடை ரெட்டைஜடை என்று&lt;br /&gt;பட்டாம் பூச்சியாய்ப் பாடித் திரிந்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;பார்த்ததெல்லாம் ஆசைப்பட்டேன்&lt;br /&gt;பிடித்ததெல்லாம் பற்றிக் கொண்டேன்&lt;br /&gt;கிடைக்காத போது அடம் பிடித்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;தோழனோ தோழியோ பேதமின்றி சுற்றினேன்&lt;br /&gt;தோலுக்கு வெளியேயும் பேதம் அறியேன்&lt;br /&gt;தோழமை ஒன்றே சுகம் என்றிருந்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;பதின்மூன்று வயது வந்தேன்&lt;br /&gt;பார்வைகளின் பேதம் கண்டேன்&lt;br /&gt;பட்டும்படாத உறவுகள் அறிந்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;குட்டைப் பாவாடை கணுக்கால் இறங்கியது&lt;br /&gt;மார்புக் கவசமாய் முந்தானை மூடியது&lt;br /&gt;ரெட்டை ஜடை ஒருமைக்குத் தாவியது&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளித் தோழர்கள் பாவிகளாக்கப் பட்டனர்&lt;br /&gt;பள்ளி செல்லும் பாதை பரிசீலிக்கப்பட்டது&lt;br /&gt;பள்ளி செல்வதே கேள்விக்குரியானது!&lt;br /&gt;&lt;br /&gt;குதித்து விளையாடுவது தடுக்கப்பட்டது&lt;br /&gt;குழுவினருடன் அரட்டை அஸ்தமனமானது&lt;br /&gt;குனிந்து நடக்கக் குட்டு வைக்கப் பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;வயதுக்கு வரும் பருவம் என்றழைத்து&lt;br /&gt;சிறு மலரின் சிறகுகளைப் பிய்த்துவிட்டு&lt;br /&gt;பூ மலரும் நாளுக்கான முன்னேற்பாடாம்?!!!&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்களைப் பார்த்தும் வந்ததடி நாணம்&lt;br /&gt;எதனாலோ இந்த இம்சைகள், அறியோம்&lt;br /&gt;எதிரில் பார்த்தும் விலகிப் போனோம்&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா பக்கத்தில் படுத்துக் கதை பேசத் தடை &lt;br /&gt;அண்ணா தம்பிகளைத் தொட்டுப் பேசத் தடை&lt;br /&gt;அடுத்த வீட்டு ஆண்களையோ பார்க்கவே தடை!&lt;br /&gt;&lt;br /&gt;அடக்குமுறைகளும் எதிர்ப்பு இயக்கங்களும்&lt;br /&gt;அடுக்களை தொடங்கி தெருப்படி வரை தொடர்ந்தது &lt;br /&gt;அம்மா பிள்ளை சண்டைகள் தினமும் ஆர்ப்பரித்தன&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாடி!&lt;br /&gt; &lt;br /&gt;ஒருவழியாய்ப் பதினெட்டில் நுழைந்தேன்!&lt;br /&gt;பள்ளியிலிருந்து கல்லூரி செல்லும் பருவம்&lt;br /&gt;பழமையிலிருந்து மாறத் துடிக்கும் மனம்.&lt;br /&gt;பறக்கத் துடிக்கும் பட்டாம்பூச்சித்தனம்&lt;br /&gt;&lt;br /&gt;பதின்ம வயதுகளின் தயக்கம் நீக்கி&lt;br /&gt;பத்தாம் பசலித்தனங்களிலிருந்து விடுபட்டு&lt;br /&gt;இரண்டும் கெட்டான்தனத்திலிருந்து &lt;br /&gt;இனி பெறப் போவது சுதந்திரம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;BYE BYE ADOLOSCENCE!!&lt;br /&gt;வாலிபமே வா வா!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15229466-115081753259612231?l=forusdear.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://forusdear.blogspot.com/feeds/115081753259612231/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15229466&amp;postID=115081753259612231&amp;isPopup=true' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/115081753259612231'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/115081753259612231'/><link rel='alternate' type='text/html' href='http://forusdear.blogspot.com/2006/06/blog-post_20.html' title='வாலிபமே வா! வா!!'/><author><name>தாணு</name><uri>http://www.blogger.com/profile/04865211166801373288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15229466.post-115010814095024049</id><published>2006-06-12T03:27:00.000-07:00</published><updated>2006-06-21T11:36:22.673-07:00</updated><title type='text'>சண்டைக்கு இழுக்கும் ஜாதி</title><content type='html'>தருமியின் பதிவில் `மதம்’ பற்றி ஆரம்பித்த காரசாரமான சர்ச்சை கொஞ்சம் கொஞ்சமாக விலகி ஜாதி பற்றிய விவாதத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. தருமி அவர்களுக்கு இதுபோல் சிண்டு முடிந்து களேபரத்தை வளர்த்து விடுவதில் ஏக சந்தோஷம் என்று தெரிகிறது. அவருக்கு `நாரதர்’ என்ற பெயர் பொருத்தமாக இருந்திருக்கும்!&lt;br /&gt;ஆனாலும் இந்த ஜாதிச் சண்டை இடைவெளி விட்டு விட்டு தவணை முறையில் நடந்து கொண்டேதான் இருக்கிறது. இதற்கு மூலமும் கிடையாது, முடிவும் வராது. ஜாதி வேணுமா வேண்டாமான்னு ஒரு தர்க்கம், ஜாதி ஏற்றத்தாழ்வுகள் பற்றி காட்டமான இன்னொரு தர்க்கம், இடையிடையே என் ஜாதி, உன் ஜாதி என்று தனிப்பட்ட மூர்க்கமான சர்ச்சைகள்- இவர்கள் எல்லோருமே படித்து முடித்து வேலையில் செட்டில் ஆகிவிட்டவர்கள்; அல்லது அடுத்த தலை முறையின் எதிர்காலத்துக்கு வழி வகை செய்து விட்டவர்கள்; அத்தி பூத்தாற் போன்றவர்களே இளைஞர்களாக இருக்கும் வாய்ப்பு. இரண்டும் கெட்டான் தனத்தில் இருக்கும் மத்திய வயதினரின் பார்வையே வேறாகத்தான் இருக்கும். அவர்கள் இந்த சண்டைக்கெல்லாம் வர மாட்டார்கள். ஓரமாக உட்கார்ந்து பிள்ளைகளின் படிப்பில் ஜாதி விஷயம் எத்தனைதூரம் குழப்பம் ஏற்படுத்தும் என்று ஆரய்ந்து கொண்டு இருப்பார்கள். ஜாதி அவர்களின் ஒவ்வொரு நாள் அசைவிலும் அங்கமாகியிருக்கும்.&lt;br /&gt;பிறப்பு பதிவு பண்ண மருத்துவ மனையில் பதிவேடுகளில் முத்திரை பதிக்கும் நாளில் தொடங்கி மக்களுக்குத் திருமணம் நடத்தி வைக்கும் பருவம் வரை இந்த ஜாதி அவர்களின் நிழல் போலத்தானே நடை போடுகிறது. எனக்கு ஜாதி பற்றி பேசுவதே பிடிக்காது என்று புறம்தள்ளி நடக்க முயற்சித்தால் பிறப்புச் சான்றிதழ்கூட வாங்க முடியாமல் தாசில்தார் அலுவலகத்துக்கும் மருத்துவ மனைக்கும் அல்லாட வேண்டியதுதான். இதில் தண்டிக்கப்படுபவர் யார்? எவருடைய பிறப்பு சான்றிதழிலும் ஜாதிக் குறியீடு தேவையில்லை என்று அரசு ஆணை போடப்பட்டால் ஒழிய அந்த கட்டத்தில் ஜாதியை ஒழிக்க முடியாது. பள்ளி இறுதியில் ஜாதிச் சான்றிதழ்கள் பள்ளிக்கூடம்  மூலமே வழங்கப்பட வேண்டும் என்று தற்போது ஆணை போடப் பட்டுள்ளது. அது வழங்கப்படும் விதம் பற்றி கேட்டால் இன்னும் கேலிக்குரியது. மாணவர்கள் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும்போதே அலுவலகத்தில் இருந்து கையெழுத்து வாங்க வருவார்கள். பள்ளியில் சொன்ன இடத்தில் கையெழுத்திட்டு பழகிய குழந்தைகள் வாசித்துக் கூடப் பார்க்காமல் கையெழுத்திடுவார்கள். ஜாதிச் சான்றிதழ் வந்த பிறகு பெற்றோர் மண்டையைப் பிய்த்துக் கொள்ள நேரிடும்படி இருக்கும். சுத்த கிறிஸ்தவ பெயர்கள் இந்து மதத்திற்கும், இந்து பெயர்கள் முஸ்லீம் மதத்திற்குமாக மாற்றி எழுதப் பட்டிருக்கும் (ஜாதி ஒருங்கிணைப்பை சிறுவயதில் முறைப்படுத்தும் முகாந்திரமாக இந்த ஏற்பாடு இருக்குமோ என்று சந்தேகப் பட வேண்டாம்) எந்த ஜாதியா வேணா இருந்திட்டுப் போகட்டும்னு வறட்டு வேதாந்தம் பேசிகிட்டு இருக்க முடியுமா? ரிசர்வேஷன் பிரச்னைகள் அடுத்து கல்லூரிப் படிப்பிற்குத் தடைக் கல்லாகி விடுமே! விரும்பாவிட்டாலும் வித்தியாசத்தை நேர் செய்ய வேண்டியது பெற்றோர் கடமையல்லவா?&lt;br /&gt;என்னுடைய நெருங்கிய நண்பர் குடும்பத்தில் சமீபத்தில் நடந்தது. அவர்கள் கலப்பு மணம் செய்தவர்கள். இருவரின் ஜாதியோ மதமோ அடுத்தவரின் சுதந்திரத்தில் குறுக்கிடாதவாறு இயல்பான வாழ்க்கை நடத்துபவர்கள். ஒருவர் பார்வர்ட் கம்யூனிட்டி, அடுத்தவர் பிற்படுத்தப் பட்டோர் சமூகம். தங்கள் மகனுக்கு எந்த ஜாதியும் தேவையில்லை என்ற உணர்வுடன் ஓப்பன் கோட்டாவில் பதிவு செய்திருக்கிறார்கள். அவனது படிப்புக்கு ஏற்ற கல்வி கிடைக்கட்டும் , வேறெந்த ரிசர்வேஷனும் தேவையில்லை என்பது அவர்களின் ஒருமித்த கருத்து! அவனும் மிக நன்றாகப் படிக்கக் கூடிய மாணவன். ஆனாலும் இந்த ரிசர்வேஷன் பிரச்னையால் நல்ல கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு தட்டிப் போய்விடுமோ என்ற ஆதங்கத்தில் ஏனைய நண்பர்கள் அனைவரும், அவனுக்கு நியாயமாக இருக்க வேண்டிய பிற்படுத்தப் பட்டோர் சான்றிதழ் வாங்கும்படி  நண்பரை ஒரே நச்சரிப்பு, என்னையும் சேர்த்துதான். `ஆடை அணியா ஊரில் கோவணம் கட்டியவன் ஆண்டி’ என்ற கருத்துதான் என்னுடையதும். ஜாதி அடிப்படையிலேயே கல்வி வாய்ப்புகள் வழங்கப்படும் ஒரு சமுதாயத்தில், ஜாதியை மறுதலித்தல்கூட தவறான செய்கைதான். நல்ல வேளையாக எங்க எல்லோருக்கும் ஆசுவாசம் கிடைக்கும்படி ஓ.சி. கோட்டாவிலேயே நல்ல மதிப்பெண்கள் எடுத்துவிட்டான். ஆனால் எத்தனை பேருக்கு இத்தைகைய வாய்ப்பு கிடைக்கும்? எத்தனை பெற்றோர்களால் புரட்சிகரமான கருத்துகளுக்காக புதல்வர்களைப் பலியிட முடியும்?பாரதியின் கனவுகளைப் பழங்கணக்காகத்தான் பார்க்க முடியும், மேற்கோள்களாக்கத்தான் காட்ட முடியும் இப்போதைக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குத் தெரிந்து ஜாதி பார்க்கப்படாத ஒரே ஏரியா காதலர் பூங்காதான். அங்கு ஆண் பெண் என்ற பேதம் தவிர ஜாதி மதம் எல்லாமே புறம் தள்ளப் பட்டவைதான். அங்கு கூட கல்யாணம் என்ற சடங்கு நிகழ்த்தப்பட வேண்டிய நிலையில்தான் ஜாதியும் மதமும் மூக்கை நுழைக்கின்றன. பெரிசுகளின் ஆசியோடு கல்யாணம் நடத்தப்படுமானால் ஏதாவது ஒரு ஜாதியும், மதமும் நசுக்கப்பட்டு dominant person இன் முறைப்படி எல்லாம் நடக்கும். அங்கும் ஜாதி மத பேதம் அழிக்கப்படுவதில்லை, இணைகோடுகள் ஒரே கோட்டில் செலுத்தப் படுகின்றன, அவ்வளவுதான். இதையெல்லாம் மீறி எங்கோ சில இடங்களில் ஜாதி மத பேதங்கள் தவிர்த்த அனுசரணையான திருமணங்களும் நடக்கின்றன. அவையெல்லம் மியூசியத்தில் உள்ள கண்காட்சிப் பொருளாகத்தான் சமுதாயத்தால் பார்க்கப் படுகிறது.&lt;br /&gt;ஜாதியே தேவையில்லை என்று வாழ்வது நமது நாட்டில் சாத்தியமில்லை. &lt;br /&gt;நமது குழந்தைகளுக்கு ஜாதி வேறுபாடுகளற்ற அணுகுமுறையைக் கடைப்பிடிக்கக் கற்றுத்தருவதுதான் தற்போதைய நிலைமையில் சாத்தியமான ஒன்று. நம்மால் செய்யக்கூடிய ஒன்றும்கூட.&lt;br /&gt;எங்களது பள்ளிப் பருவ காலம் வரையில்கூட ஜாதிய வேறுபாடுகளை உணர்த்தும் உணவுப் பழக்கங்கள் இருந்தன. தயிர் சாதம்  vs  பழைய கஞ்சி போன்ற பிரிவினைகள் இப்போது பள்ளிகளில் காணப் படுவதில்லை. சைவம் vs அசைவம் கூட இப்போது ஜாதிப் பிரிவுகளைச் சொல்வதில்லை. சின்னச் சின்ன முன்னேற்றங்கள் அடுத்த தலைமுறையில் மெதுவாக வந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதை விடாப்பிடியாக கொழுந்துவிட்டு எரிய வைப்பவை அரசியல் ஆதாயங்களும் பதவி வேட்டைகளும்தான். &lt;br /&gt;எத்தனையோ உப்பு சப்பற்ற விஷயங்களுக்கெல்லாம் சட்டம் இயற்றவும், ஆணை பிறப்பிக்கவும் தெரிந்த அரசு எந்திரத்துக்கு, ஜாதி என்ற வார்த்தையை முக்கியமான பதிவுகளிலிருந்து விலக்க முடியாதா? கண்ணிருக்கும் குருடர்கள்! ஜாதிப் பெயரை வைத்தே அரசியல் நடத்தும் வெறியர்கள் உள்ள நாட்டில் ஜாதி வேணுமா வேண்டாமா என்ற விவாதமே வெட்டியானது!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15229466-115010814095024049?l=forusdear.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://forusdear.blogspot.com/feeds/115010814095024049/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15229466&amp;postID=115010814095024049&amp;isPopup=true' title='46 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/115010814095024049'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/115010814095024049'/><link rel='alternate' type='text/html' href='http://forusdear.blogspot.com/2006/06/blog-post_12.html' title='சண்டைக்கு இழுக்கும் ஜாதி'/><author><name>தாணு</name><uri>http://www.blogger.com/profile/04865211166801373288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>46</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15229466.post-114961236855093406</id><published>2006-06-06T09:38:00.000-07:00</published><updated>2006-06-22T08:34:04.806-07:00</updated><title type='text'>மது, நானும் வந்திட்டேன்!!!</title><content type='html'>வலைப்பதிவர் : தாணு&lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பூ பெயர் : நட்புக்காக&lt;br /&gt;&lt;br /&gt;சுட்டி   :http://forusdear.blogspot.com&lt;br /&gt;&lt;br /&gt;ஊர்   : திருச்செந்தூர் அருகே `ஆறுமுகநேரி’ என்ற கிராமம்&lt;br /&gt;&lt;br /&gt;நாடு   :தமிழ்நாடு(நம்மை இணைத்ததும் அந்நாடே அன்றோ?)&lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பூ அறிமுகம்செய்தவர் &lt;br /&gt;`ஸ்டேஷன்பெஞ்ச்’ ராம்கி!&lt;br /&gt;பாலர் பருவம் முதல் பள்ளி இறுதிவரை வகுப்புத் தோழன். நேற்றுவரை `நீ’யாக இருந்தவர் வலை உலகின் பண்பாடு காரணமாக `நீங்கள்’ ஆனவர்!!&lt;br /&gt;&lt;br /&gt;முதல் பதிவு ஆரம்பித்த நாள் :26 th August 2005&lt;br /&gt;&lt;br /&gt;இது எத்தனையாவது பதிவு  :63&lt;br /&gt;&lt;br /&gt;இப்பதிவின் சுட்டி   :http://forusdear.blogspot.com/2006/06/blog-post.html&lt;br /&gt;(சுட்டி இலவசக் கொத்தனார் உபயத்தால் சரி செய்யப் பட்டது))&lt;br /&gt;வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்:&lt;br /&gt;ஒரே விதமாகச் சென்று கொண்டிருக்கும் வாழ்க்கைச் சூழல் போரடித்த தருணத்தில் ஏதாவது புதுமையாகச் செய்ய வேண்டுமென்று நினைத்து Japanese language கற்றுக் கொள்ள விழைவதாக ராம்கியிடம் சொன்னேன். முதலில் வலைப்பூ பற்றி அறிந்துகொள்ளுமாறு சொல்லி அதற்குரிய முகாந்திரங்களையும் டவுண்லோட் செய்து கொடுத்த போது ஆரம்பித்த பூமாலை இன்றளவும் வாசம் வீசிக்கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சந்தித்த அனுபவங்கள்:&lt;br /&gt;இணையம் என்றாலே ஒரு வித மூடு மந்திரம், அதில் உலாவும் அன்பர்கள் அனைவருமே ஏமாற்றுக்காரர்கள், நாமும் புனை பெயருடன் தான் உலா வர வேண்டும் என்று இருந்த நினைப்பைப் புரட்டிப் போட்ட இடம் வலைப்பூ; நிழல்களை நிஜமாக்கித் தந்த நிச்சய பூமி; எழுத ஆரம்பித்த தருணத்திலேயே நம்மைப் பற்றிய விவரங்களை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற ஆவலைத் தூண்டிய அழகான அன்பான உலகம்; தம்பிகள் முதல் மருமகன்கள் தொடங்கி, துளசி முதல் தருமி வரை என்னற்ற நண்பர்களைத் தந்த ச்ந்தோஷமான தளம்.; இன்னும் எத்தனையோ அனுபவங்கள்.&lt;br /&gt;தீபாவளியன்று கோவை அருகில் `கல்லாறு’ சுற்றுலாத் தலம் அருகே நடந்து கொண்டிருந்தபோது திடீரென வந்த வெளி நாட்டுத் தொலைபேசி அழைப்பு `நான் உஷா பேசறேங்க, துபாயில் இருந்து’ .( நம்ம ராமச்சந்திரன் உஷா) அந்த நிமிடம் ஏற்பட்ட சந்தோஷத்தை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.&lt;br /&gt;ஒரு மத்தியான தூக்கக் கலக்கத்தில் `NJ யில் இருந்து பத்மா (தேன்துளி பத்மா) பேசறேன்’ன்னு வெகுநேரம் அளவளாவிய போது அடைந்த புளகாங்கிதம்;&lt;br /&gt;செல்வராஜ் ஈரோடு வந்தபோது, அத்தனை அலுவல்களுக்கிடையிலும் நேரில் வந்து பார்த்துச் சென்றது;&lt;br /&gt;இன்னும் அருணா சீனிவாஸ், நம்ம மதுமிதா( இந்தப் பதிவின் காரணகர்த்தா) தருமி போன்றோர் தொலைபேசியில் பேசியபோது கிடைத்த நட்பு;&lt;br /&gt;சிங்.ஜெயகுமார் முயற்சியால் , நான் விரும்பிக் கேட்ட புத்தகத்தை, கூரியர் மூலம் என் கையில் கிடைக்க வைத்த பெருந்தன்மை- &lt;br /&gt;எனது பெயரைப் பார்த்து ஒத்த பெயருடைய சில நண்பர்கள், யாஹூ குழுமத்திலிருந்து நண்பர்களாகினார்கள். சில மருத்துவ நண்பர்களும் தொடர்பு கொண்டார்கள்&lt;br /&gt;(சந்தித்த அனுபவங்களே பெரும் பதிவாகிவிடும் போலிருக்கே)&lt;br /&gt;&lt;br /&gt;பெற்ற நண்பர்கள்:&lt;br /&gt;சந்தித்த அனுபவங்களிலேயே ஓரளவு நட்பு வட்டம் வந்துவிட்டது. ஆனாலும் சிவா, இளா, சிபி, பரஞ்சோதி போன்ற பக்கத்து ஊர் நண்பர்களையே, வலைப்பூக்கள் மூலம்தான் அடையாளம் கண்டுகொண்டேன். இன்னும்பெயர் எழுதப்படாவிட்டாலும் நண்பர்கள் வட்டம் அதிகம்தான். எனது பதிவுகளில் தளராமல் பின்னூட்டமிடும் அனைவரும் என் நண்பர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;கற்றவை:&lt;br /&gt;வெகுகாலமாக எழுதுவதே மறந்து போயிருந்த நேரத்தில் மறுபடியும் எழுத ஆரம்பித்ததால் கிடைத்த relaxation நன்கு பயனளிப்பதாக உள்ளது. ஒரு சிக்கலான கேஸில் மாட்டிக்கொள்ளும்போது ஏற்படும் மனத் தளர்வைக்கூட  நீக்கவல்லதாக என்னுடைய எழுத்துக்கள் உள்ளது.&lt;br /&gt;எழுத்து சுதந்திரம் இருந்தாலும் கண்டபடி எழுதக் கூடாது என்பதை நிறைய பதிவுகள் வாசித்துக் கற்றுக் கொண்டேன்.&lt;br /&gt;சில மருத்துவ முன்னேற்றங்களைக் கூட மற்றவர்கள் பதிவின் மூலம் நிறைய நேரம் அறிகிறேன். சந்திர வதனாவின் பதிவுகள் அதில் முக்கியமானது.&lt;br /&gt;நியூஸி பற்றி வெளிப்படையாகத் தெரிந்தவற்றைவிட துளசி மாதிரி நண்பர்கள் விளக்கமாக எழுதும்போது, என் குழந்தைகளுக்கு அதைக் காட்டி சந்தோஷப் பட்டுக் கொள்கிறேன்.&lt;br /&gt;உள்ளங்கையில் உலகம் என்பது நிஜமாகவே ஒரு திரைக்குள் குவிந்துகிடப்பதைத் தெரிந்துகொண்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தில் கிடைத்த சுதந்திரம்:&lt;br /&gt;பார்த்ததை, கேட்டதை, நினைத்ததை என்று எது பற்றி வேண்டுமானாலும் எழுதக் கிடைத்த வாய்ப்பு போதாதா? எடிட் செய்யப்படாமல் நம் எண்ணங்கள் பிரதிபலிப்பதே எழுதக் கிடைத்த சுதந்திரத்தால்தானே!&lt;br /&gt;&lt;br /&gt;இனி செய்ய நினைப்பவை:&lt;br /&gt;ஒவ்வொரு பதிவு எழுதியதும் ,அடுத்து தொடர்ச்சியாக எழுத வேண்டுமென்று நினைக்கிறேன், முடிவதில்லை. நேரம் கிடைக்கும்போதெல்லாம் தட்டச்சு செய்து வைத்துக்கொண்டு தவணை முறையிலாவது பதிவு செய்ய வேண்டுமென்று நினைத்திருக்கிறேன்.&lt;br /&gt;நிறைய பதிவுகள் வாசித்துவிட்டு போய்விடுகிறேன், முடிந்த அளவு பின்னூட்டமும் இட வேண்டுமென்று முயலவேண்டும். &lt;br /&gt;மதுமிதா போன்றோர் ஆக்கபூர்வமாக ஏதாவது செய்வதைப் பார்க்கும்போது, நாமும் ஏதாவது செய்யவேண்டுமென்று முனைப்பு வருகிறது, செயல் படுத்த முடிவதில்லை. ஏதேனும் ஒரு புதுமை செய்ய வேண்டும். (ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன)&lt;br /&gt;&lt;br /&gt;உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:&lt;br /&gt;ஆரம்பக்கல்வி திருச்செந்தூர் அருகே ஆறுமுகநேரி என்ற கிராமத்தில்.&lt;br /&gt;MBBS- திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி&lt;br /&gt;DGO   - ஸ்டேன்லி மருத்துவக்கல்லூரி&lt;br /&gt;அரசு மருத்துவராக 15 வருடங்கள் ( வேலூர் ,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி, ஈரோடு மாவட்டங்களில்)&lt;br /&gt;கணவரும் மருத்துவர் மயக்கவியல் நிபுணர்( அந்நாள் கல்லூரித் தோழர், இந்நாள் வாழ்க்கைத் துணைவர்)&lt;br /&gt;கலப்புமணத்தில் விளைந்த முத்துக்கள்  இரண்டு-&lt;br /&gt;மகள் - +2 வில் அடியெடுத்து வைத்திருக்கிறாள்&lt;br /&gt;மகன் -6 ஆம் வகுப்பு செல்கிறான்.&lt;br /&gt;உடன் பிறந்தோர் என்னையும் சேர்த்து எட்டு பேர், அதில் ஒருவர் வலைப்பதிவரும் கூட!&lt;br /&gt;47 வயதில் நடை பயின்று கொண்டிருக்கிறேன், ஆனாலும் முப்பது வயதுதான் மதிக்க முடியும் என்பது என் கணவரின் முகஸ்துதி! ( நம்மளைப் பற்றி நாமே மெச்சிக்காட்டி எப்படி?)&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்வம்:&lt;br /&gt;சந்தர்ப்பங்கள் வாய்க்கும்போது வலைப்பதிவு நண்பர்களை நேரில் பரிச்சியம் செய்து கொள்ள வேண்டுமென்று பேராவல். டூர் செல்லும்போது முன்பெல்லாம் புது இடங்களைப் பார்க்கும் ஆர்வம் இருக்கும். இப்போது அந்த இடத்தில் வலைப்பதிவு நண்பர் யாரையாவது சந்திக்க முடியுமா என்ற ஆர்வம் மேலோங்கியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;(ஒருவழியா மூணு நாளா எழுதி இன்னைக்கு அரங்கேற்றிட்டேன் )&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15229466-114961236855093406?l=forusdear.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://forusdear.blogspot.com/feeds/114961236855093406/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15229466&amp;postID=114961236855093406&amp;isPopup=true' title='39 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/114961236855093406'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/114961236855093406'/><link rel='alternate' type='text/html' href='http://forusdear.blogspot.com/2006/06/blog-post.html' title='மது, நானும் வந்திட்டேன்!!!'/><author><name>தாணு</name><uri>http://www.blogger.com/profile/04865211166801373288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>39</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15229466.post-114883536925088488</id><published>2006-05-28T09:54:00.000-07:00</published><updated>2006-06-09T09:42:14.336-07:00</updated><title type='text'>கடப்பாரை- காக்கைக் கம்பி</title><content type='html'>ப்ளாக் பக்கம் வந்தே ரொம்ப நாளாச்சு என்ன விஷயம் பத்தி எழுத ஆரம்பிக்கலாம்னு யோசிச்சிகிட்டு இருக்கும்போதே, நம்ம துளசி ஒரு லீட் கொடுத்திட்டாங்க. `கடப்பாரை’ பத்தி கேட்டிருந்தாங்க. அது பத்தி ஒரு ஜோக் நினைப்பு வந்ததும் அதையே மறுபிரவேசப் பதிவாக்கிவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்க அண்ணனோட பள்ளிப் பருவத்து ஜோக் இது. அந்தக் காலத்திலெல்லாம் வகுப்பில் பெயர் கிரமமாக உக்கார வைக்க மாட்டாங்க, உயரப்படிதான் உக்காரணும். முதல் வரிசையில் என் அண்ணனும் அவன் தோழர்கள் நால்வரும் உக்கார்ந்திருப்பாங்க. அதில் மோகன் என்று ஒரு அண்ணன், கேரள நண்பர். அவரது தமிழ் கேட்கவே ரொம்ப காமெடியாக இருக்கும், அத்துடன் அவர் ரொம்ப அப்பாவி வேறு. மத்த நாலு வாண்டுகள் என்ன சொன்னாலும் அதை கர்ம சிரத்தையாக நம்பிவிடுபவர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருநாள் ஆங்கில ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது `CROW-BAR’( அதாங்க நம்ம துளசி கேட்ட கடப்பாரை) என்றால் என்னன்னு கேடிருக்கார். முதல் வரிசை அளுங்க யாருக்கும் தெரியலை, ஆனாலும் தப்பா சொல்லி மாட்ட மொகன் அண்ணாவை ஒப்பேத்திட்டாங்க. அவரிடம் இவங்க நாலுபேரும் சீரியஸாக விவாதிக்கின்றனர்.&lt;br /&gt;`டேய் மோகா! &lt;span style="color:#ff0000;"&gt;CROW&lt;/span&gt; –ன்னா என்னடா?’&lt;br /&gt;அவங்களும் பயபக்தியுடன் `&lt;span style="color:#000099;"&gt;காக்கை&lt;/span&gt;’ என்று பதில் சொல்றாங்க.&lt;br /&gt;`&lt;span style="color:#ff0000;"&gt;BAR&lt;/span&gt;’ –ன்னா என்னடா?’&lt;br /&gt;பதில் பளீர்னு வருது இந்த அப்பாவியிடம் இருந்து `&lt;span style="color:#000099;"&gt;கம்பி&lt;/span&gt;’&lt;br /&gt;`அப்போ CROW-BAR ன்னா ``&lt;span style="color:#cc33cc;"&gt;காக்கைக் கம்பி&lt;/span&gt;” தானேன்னு முடிச்சிட்டாங்க.&lt;br /&gt; பதில் தெரிந்த சந்தோஷத்தில் வேகமா எழுந்து `சார், நான் சொல்றேன்’ன்னு வாத்தியாரைக் கூப்பிட்டாச்சு. வேறு யாருக்கோ பூஜை பண்ணிக் கொண்டிருந்த ஆசிரியர் இவங்க பக்கம் வந்து `சொல்லு’ ன்னு கேட்கிறார்.&lt;br /&gt;மொத்த வகுப்பையும் ஒருதரம் ஹீரோ மாதிரி சுத்திப் பார்த்துட்டு `காக்கைக் கம்பி’ ன்னு சத்தமா சொல்லிட்டு வாத்தியாரின் பாராட்டுதலுக்காக காத்திருக்கிறார். ஆசிரியருக்கு ஒண்ணும் புரியலை. `என்னடா சொல்றே’ன்னு கேட்கிறார். அப்போ கூட சுதாரிச்சுக்கத் தெரியாத அப்பாவித் தனத்துடன் ஆங்கிலத்துக்கு மிகச் சரியான தமிழ் அர்த்தம் விளக்குகிறார் அண்ணா.&lt;br /&gt;அடுத்த நொடியில் படபடவென்று சத்தம். பாராட்டுக்களுடன் வந்த கைதட்டல்கள் அல்ல. சரமாரியாக முதுகில் விழுந்த அடி. ஏவி விட்ட நால்வர் அணி பரிதாபமாக பயந்து போய் உட்கார்ந்திருந்தார்கள். அடி வாங்கிய ஏமாளியை சாயங்காலமே சினிமாவுக்குக் கூட்டிட்டுப் போய் ஐஸ் வச்சி சரி பண்ணியது தனிக்கதை.&lt;br /&gt;&lt;br /&gt;(அப்பாடி பதிவு ஒண்ணு போட்டாச்சு- மக்கள் நம்மளை மறந்திடக் கூடாதில்லே)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15229466-114883536925088488?l=forusdear.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://forusdear.blogspot.com/feeds/114883536925088488/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15229466&amp;postID=114883536925088488&amp;isPopup=true' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/114883536925088488'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/114883536925088488'/><link rel='alternate' type='text/html' href='http://forusdear.blogspot.com/2006/05/blog-post.html' title='கடப்பாரை- காக்கைக் கம்பி'/><author><name>தாணு</name><uri>http://www.blogger.com/profile/04865211166801373288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15229466.post-114494670654152513</id><published>2006-04-13T09:31:00.000-07:00</published><updated>2006-12-05T01:37:52.766-08:00</updated><title type='text'>கொடிவேரி அணை</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/3608/1351/1600/kodiveri%202.jpg"&gt;&lt;img style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/3608/1351/320/kodiveri%202.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/3608/1351/1600/kodiveri%201.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/3608/1351/320/kodiveri%201.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  அடிக்கிற வெயிலுக்கும் வீசுற அனல் காற்றுக்கும் , எங்கேயாவது நீர் நிலைகள் தென்பட்டால் மூழ்கிப் போயிடலாமான்னு இருக்கு இல்லையா?&lt;br /&gt; திருமண நாள் கொண்டாட ஒரு வருடமாக ப்ளான் பண்ணி, ஐரோப்பா டூரில் ஆரம்பித்து, அது சிங்கப்பூராகத் தேய்ந்து, இடைவேளையில் சிம்லாதான்  என்று தீர்மானிக்கப்பட்டு , வழக்கம்போல எங்கேயும் போகவில்லை. என் கணவருக்கு `எல்லைக் காவல் தெய்வம்’ னு பேர் வைச்சிருக்கேன். நாலுநாள் வெளியூர் போயிட்டாக்கூட யாராச்சும் ஈரோட்டைத் தூக்கிட்டுப் போயிடுவாங்கன்னு கருத்தோட காவல் காக்கிற ஆளு( சும்மா விளையாட்டுக்கு அவங்களைக் கிண்டுவதற்குச் சொல்றது).&lt;br /&gt;கடைசி கடைசியா `இவ்விடத்தால’ இருக்கிற கொடிவேரியாவது போவோம்னு அருள் பாலிச்சாங்க! நானும் குழந்தைகளும், கூடுதலா நண்பரோட பிள்ளைகள் ரெண்டுபேருமா காலையிலிருந்தே வெயிட்டிங். திருமண நாளை முன்னிட்டு மருத்துவமனையை மூடவெல்லாம் முடியாது, மக்கள் பின்னிடுவாங்க. எங்க ஊர் பெரிய மாரியம்மன் கோவிலில் மஞ்சத் தண்ணீர் தெளிக்கும் வைபவம் என்பதால் ஊர்லே நாட்டிலே எல்லாருக்கும் லீவ், எனக்கும் லீவ்!!!&lt;br /&gt;`காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி’’ கதையாக ஒரு வழியா அந்தி சாயற நேரத்துக்கு எங்களைக் கூட்டிப் போக வந்திட்டாங்க.&lt;br /&gt;கார்லே போறப்பொ ஒரே டென்ஷன். ஒருவேளை அணைக்குள்ளே நுழையும் நேரம் முடிந்திருந்தால் பொக்குன்னு போயிடுமேன்னு கவலை. அப்படி இல்லாட்டி வண்டியை நேரே பவானிசாகருக்குத் திருப்பிக்கலாம், அங்கே வண்ண விளக்குகளெல்லாம் சனிக்கிழமைதான் போடுவாங்க சூப்பரா இருக்கும்னு பிள்ளைகளை மனதளவில் ரெடி பண்ணிகிட்டே வந்தோம்.&lt;br /&gt;அப்பாடி கொடிவேரி வந்து சேர்ந்தாச்சு, கேட்டும் திறந்திருந்தது!! நுழைவுச் சீட்டு கொடுப்பவர் கடையைக் கட்டிட்டு போயிட்டாரு. அதுக்குப் பிறகு Open to all தான் போலிருக்கு. இறங்கியதும் பிள்ளைகளெல்லாம் குளிக்க ஆயத்தமா ஓடினப்போ நான் மட்டும் கேமிராவும் கையுமா சுத்திகிட்டு இருந்தேன். பின்னே! உங்களுக்கெல்லாம் `படம்’ காட்டுறதா வேறே ப்ராமிஸ் பண்ணியிருந்தேனே! மேலே போட்டிருப்பது அதிலிருந்து ஒரு படம்தான்.&lt;br /&gt;கொடிவேரி அணை என்பது சின்ன அழகான அணை. தண்ணி வடியும் இடம் சூப்பரான அருவி. பவானிசாகர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அடுத்த நிலை கொடிவேரிதான். பெரியார் மாவட்டம் முழுவதுமே கீழ் பவானி பாசனத் திட்டம்(Lower Bhavani Project-LBP) மூலமாக விவசாயம் செய்யப் படுவதால் அங்கங்கே சின்னச் சின்ன அணைகள் கட்டப்பட்டு பராமரிக்கப் படுகிறது. கொடிவேரிக்கு அடுத்தது அணைத்தோப்பு என்ற குட்டி அணை(பவானி ஆறு காவேரியுடன் சங்கமமாகும் கூடுதுறையில் இருக்கிறது-அழகான சங்கமேச்வரர் ஆலயத்துடன்)&lt;br /&gt;கொடிவேரியின் மேல்தட்டு அமைதியான ஏரிபோன்ற பரந்த நீர்ப்பரப்பு. அதில் படகு சவாரி போவது சுகமான அனுபவம். அக்கரைக் கொடிவேரியின் கரையில் ஏறியதும் சின்ன ஓட்டுவீடு இருக்கும். `சின்னத் தம்பி’ படத்தில் வரும் பிரபுவின் வீடு. பரிசல்காரர்களுக்கு அங்கு நடத்தப் பட்ட ஷூட்டிங்குகள், அங்கு விஜயம் செய்த திரையுலகப் பிரமுகங்கள் பற்றி நடந்த கதைகளும், சொந்தக் கற்பனைகளுடன் கூடிய புருடாக்களும் சொல்வது பெருமை, கேட்பது நமக்கு ஜாலி. `அன்னக்கிளி’ முதல்` வெற்றிவேல் சக்திவேல்’ வரை பெரிய சகாப்தங்களை உள்ளடக்கிய இடம்.&lt;br /&gt;&lt;br /&gt;படகு சவாரி முடித்துவிட்டு குளிக்கக் கிளம்பினால் மேலே அணையிலா கீழே அருவியிலா என்பது அவரவர் நீச்சல் திறமையைப் பொறுத்தது. மேலே கொஞ்ச தூரம் வரை சிமெண்ட் தளம் போடப்பட்டிருக்கும், அதில் நின்று கொண்டு குளிக்கலாம். வெளியிலிருந்து பார்க்கும்போது பயமுறுத்துவதாக இருக்கும், ஆனால் இறங்கினால் இடுப்பளவுதான் ஆழம். அதற்கு மீறுவது அருவியாகிக் கொட்டிவிடும், தடுப்புச் சுவரின் உயரமே அவ்வளவுதான். அதைப் பிடித்துக்கொண்டே அக்கரை வரை தண்ணீரில் நடக்கவும் செய்யலாம். வெளியூர் சுற்றுலாப் பயணிகள் பயத்துடன் பரிசலில் மட்டும் போகும்போது, வேண்டுமென்றே தண்ணீருக்குள் நடந்து சென்று எங்கள் `வீரத்தைக்’ காட்டிக் கொள்வது பிடித்தமான விளையாட்டு! அதுவும் ஆன்பிள்ளைகளைத் துச்சப் பார்வை பார்த்துக் கொண்டு பெண்கள் நடப்பது கூடுதல் த்ரில்.&lt;br /&gt;&lt;br /&gt;கீழே அருவியில் குளிப்பது கொஞ்சம் அபாயம் நிறைந்ததுதான். ஆழம் மிகக் குறைவாகவே இருந்தாலும், வழுக்குப் பாறைகளும், சுழல்களும் கவனத்தில் கொள்ள வேண்டியவை. பொறுமையாக தேர்ந்த அநுபவத்துடன் செல்லும் எங்களைப் போன்ற ஆட்களுக்கு பிரமாதமான இடம். குற்றாலம் போனால்கூட இவ்வளவு ப்ரீயாகக் குளிக்க முடியாது. தண்ணீரின் வீச்சும் உடலுக்கு ஒத்தடம் கொடுக்கும் விதமாகவே இருக்கும். குட்டிப் பிள்ளைகளை இறங்கி ஓடும் ஆற்றில் விளையாட விடலாம், பயமிருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் தண்ணி அடித்துவிட்டு குளிக்கவென்றே வரும் கூட்டத்தினர் அடிக்கடி விபத்துக்களில் மாட்டுவதும் சகஜம். சில சுழல்களின் ஆழம் கண்டுபிடிக்கமுடியாதது. நிதானத்துடன் இருப்பவர்கள் தடம் பார்த்து குளிக்கச் செல்லுவர். நிலை மறந்தவர்கள் மூழ்கி இறந்துவிடும் அபாயமும் உண்டு. அதனால் கொடிவேரி செல்ல நினைப்பவர்கள் கைடாக என்னையும் அழைத்துச் செல்லவும். கோபியில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் 20 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. ஈரோட்டிலிருந்து 40 நிமிடப் பயணம்.&lt;br /&gt;&lt;br /&gt;கொடிவேரி மீன் பற்றிச் சொல்லாமல் முடித்தால் பரஞ்சோதி வருத்தப் படுவார். சுடச்சுட அப்போதே பிடித்த மீன்களைப் பொரித்துக் கொடுப்பார்கள். குளித்த சோர்வு நீங்க சாப்பிட்டுப் பார்த்தவர்களுக்கு அந்தச் சுவை மறக்கவே மறக்காது. நாங்க போன அன்றுதான் நேரமாகிவிட்டதே, கடையெல்லாம் காலி. ஆனாலும் என் கணவர் துருவி விசாரித்து அண்மையிலுள்ள கிராமத்தில் கடை கண்டுபிடித்து பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுத்து ஹீரோ ஆயிட்டாங்க. அன்னைக்கு உண்மையாலுமே அவங்கதானே ஹீரோ! (அப்போதானே நான் ஹீரோயின் ஆகமுடியும்-கண்டுக்காதீங்க!)&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோருக்கும் திருமண நாள் விருந்தாக ஒரு அணையும் அருவியும் சுற்றிக் காட்டிட்டேன் பார்த்தீங்களா!! வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15229466-114494670654152513?l=forusdear.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://forusdear.blogspot.com/feeds/114494670654152513/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15229466&amp;postID=114494670654152513&amp;isPopup=true' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/114494670654152513'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/114494670654152513'/><link rel='alternate' type='text/html' href='http://forusdear.blogspot.com/2006/04/blog-post_13.html' title='கொடிவேரி அணை'/><author><name>தாணு</name><uri>http://www.blogger.com/profile/04865211166801373288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15229466.post-114448645999327216</id><published>2006-04-08T01:51:00.000-07:00</published><updated>2006-04-14T10:23:26.286-07:00</updated><title type='text'>மகள் வாழ்த்துடன் திருமணநாள்</title><content type='html'>இன்று( ஏப்ரல் 8 ), எங்கள் திருமண நாளுக்கு வந்த வாழ்த்துக்களிலேயே அருமையான அன்பான என் பெண்ணின் வாழ்த்தைப் பறைசாற்றி பீற்றிக் கொள்ளவேண்டுமென்ற பேராவலில், ஆங்கிலத்தில் இருந்தாலும் பரவாயில்லை என்று தட்டச்சு செய்துவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6600cc;"&gt;Dear Mummy&amp; Daddy,&lt;br /&gt;&lt;br /&gt;            This is not an ordinary wish; neither is it for two ordinary people. This is a special wish for two special people.&lt;br /&gt;&lt;br /&gt;                        ``HAPPY WEDDING DAY’’&lt;br /&gt;&lt;br /&gt;Some say marriages are held in heaven. But when your marriage was held in Madras, it was transformed into Heaven.&lt;br /&gt;&lt;br /&gt;                        Woman has a man in it,&lt;br /&gt;                        Female has a male in it,&lt;br /&gt;                        Even she has a he in it.&lt;br /&gt;So a man cannot be without a woman and a woman is indispensable without a man. That was how you two had been since April 8 th 1988.&lt;br /&gt;&lt;br /&gt;     ``ஆதார ஸ்ருதி எங்கள் அன்னை என்றால்&lt;br /&gt;      அதற்கேற்ற ஸ்வரம் எங்கள் தந்தை’’&lt;br /&gt;இவ்வாறு இன்னும் பல ஆண்டுகள் நீங்கள் வாழ வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;காலையிலிருந்தே வாழ்த்துக்கள் தொலைபேசியிலும், நேரிலும் வந்த வண்ணமே இருந்தாலும் கூட என் மகள் பல் கூட விளக்காமல் கையில் வாழ்த்தட்டை(அவளே வண்ணக் காகிதங்களும் வெட்டி ஒட்டப்பட்ட படங்களும் கொண்டு உருவாக்கியது) தந்து கன்னத்தில் கொடுத்த அன்பு முத்தம் கல்யாண நாளை கனம் பண்ணிவிட்டது. தமிழ் மேற்கோள் ஏதோ ஒரு பாடலில் வரும் வரிகளாம், பொருத்தமாகத் தேர்வு செய்து போட்டிருக்கிறாள். `சினிமாக் கிறுக்கர்கள் சபை’யில் அவளையும் சேர்த்துக் கொள்வதாக வாக்களித்திருக்கிறேன். மனம் மகிழ வைத்த மலர்களை, என் மக்கட் செல்வங்களை  நீரில் நனைய வைக்க `கொடிவேரி அணை’ கூட்டிச் செல்வதாக வாக்களித்துள்ளேன். (சின்னத்தம்பி’ படத்தில் வருமே அந்த அணைதான்)போயிட்டு வந்து `படம்’ காட்டறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15229466-114448645999327216?l=forusdear.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://forusdear.blogspot.com/feeds/114448645999327216/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15229466&amp;postID=114448645999327216&amp;isPopup=true' title='52 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/114448645999327216'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/114448645999327216'/><link rel='alternate' type='text/html' href='http://forusdear.blogspot.com/2006/04/blog-post.html' title='மகள் வாழ்த்துடன் திருமணநாள்'/><author><name>தாணு</name><uri>http://www.blogger.com/profile/04865211166801373288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>52</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15229466.post-114224382471828679</id><published>2006-03-13T01:54:00.000-08:00</published><updated>2006-03-17T01:25:47.956-08:00</updated><title type='text'>திணறும் +2 தேர்வு;கொக்கரிக்கும் தேர்தல்</title><content type='html'>ஆண்டு முழுவதும் , ஏன் பள்ளிப் பருவம் முழுவதுமே உயிரைவிட்டு படிக்கும் மாணவர்களின் ஒரே குறிக்கோள் +2 தேர்வு. அதற்கான முகாந்திரங்கள், பேற்றோர்களின் மிகைப்படுத்தப் பட்ட ஆர்வத்தைப் பொறுத்து, சில குழந்தைகளுக்கு மேல்நிலைப் பள்ளியில் காலெடுத்து வைத்ததுமே ஆரம்பித்து விடுகிறது. அதனால் ஏற்படும் மன உளைச்சல்களும், பொருளாதாரப் பிரச்னைகளும் தேர்வுக்கு வெகு முன்னதாகவே தோன்றிவிடுகிறது. தனது குழந்தையின் எதிர்காலமே அந்த 8 வினாத் தாள்களில்தான் முடிவாகப் போகிறது என்ற தேவையற்ற பயமும் கவலையும், ஏறத்தாழ எல்லா பெற்றோர்களையுமே ஆட்டி வைக்கிறது. அது தேவையானதா இல்லையா என்ற வாதமெல்லாம் அவரவர் சூழ்நிலையைப் பொறுத்ததே.&lt;br /&gt; ஆனால் அத்தைகைய முக்கியத்துவம் வாய்ந்த தேர்வும், அதற்குரிய பாடத் திட்டங்களும், நுழைவுத் தேர்வுகளும் ஏகப்பட்ட குழப்பத்திலிருப்பதால் கதி கலங்கி நிற்பவர்கள் அந்த வருடத் தேர்வை எதிர் நோக்கும் மாணவர்களும் அவர்கள் பெற்றோர்களும்தான். இது இந்த வருடப் பிரச்னை மட்டுமல்ல. சில காலமாகவே ஆண்டுதோறும் பிள்ளைகளைத் திரிசங்கு சொர்க்கத்தில் தவிக்க விடுவது அரசு எந்திரத்துக்கு ஒரு பொழுது போக்கு!&lt;br /&gt;ஒரு சாதாரண கல்வித் திட்டத்தில் தொலைநோக்கு பார்வையோ ஆழ்ந்த அறிவுடன் கூடிய பரிந்துரைகளோ கொண்டுவரமுடியாத கல்வித் துறை எப்படி தரம் மிக்க இளைய சமுதாயத்தை உருவாக்கத் துணை செய்யும்? நன்கு படிக்கின்ற புத்திசாலியான மாணவர்கள் கூட கதி கலங்கி, தேர்வை எதிர்கொள்ளும் தைரியமற்று மனக்குழப்பத்துடன் தேர்வைச் சந்திக்கும் வகை செய்வதுதானா இந்த படிப்பு?&lt;br /&gt;நாளுக்கொரு பாடத்திட்டம், எதிர்த்து குரலெழுப்பப் பட்டால் சிறிது குறைத்துக்கொள்வது; நுழைவுத் தேர்வு உண்டா இல்லையா என்ற நிலைமைகூட தேர்வுக்கு முந்தைய நாள்வரை தெரியாமலிருக்கும் அவலம்; கிராமப்புற மாணவர்களை முன்னேற்றப் போவதாகப் பீற்றிக் கொண்டு அனைத்து மாணவர்களையுமே விளையாட்டுப் பொம்மைகள்போல் பந்தாடுவது; நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கூட ஏற்றுக்கொள்ளாமல் அரசியல் ஆதாயங்களுக்காக மேல்முறையீடு என்ற போர்வையில் நாட்களைக் கடத்துவது- இன்னும் எத்தனை எத்தனை இடைஞ்சல்கள் இந்த வருடம் தேர்வெழுதும் மாணவர்களுக்கு.&lt;br /&gt;நுழைவுத் தேர்வு கண்டிப்பாக இருக்காது என்பதால் எந்தப் பள்ளியிலுமே பயிற்சிகள் சரிவரக் கொடுக்கப் படவில்லை. ஆனால் இப்போது திடீரென அறிவிக்கப்படும் சாத்தியம் இருப்பதால் அதற்கான முன்னேற்பாடுகளுக்கு ஆயத்தம் செய்ய வேண்டிய அவசரம்- நுழைவுத் தேர்வு இல்லாத பட்சத்தில் தேர்ந்தெடுப்பது சிரமம் என்ற நோக்கில் மிகக் கடினமாக்கப் பட்டுள்ள சமீபத்திய வினாத்தாள்கள்-அதனால் செண்டம் வாங்கும் வாய்ப்புகளையே தவற விட்டுவிடுவோமோ என்ற கவலை- மார்க் குறையும் வாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டு விட்ட வேளையில் மறுபடி நுழைவுத் தேர்வு எழுத நேரும்போது, அதே மதிப்பெண் விகிதத்தில் தேறியிருக்கும் CBSE மாணவர்களுடன் போட்டி போடவேண்டிய நிர்ப்பந்தம்- எத்தனை சோதனைகளைத்தான் இந்தக் குழந்தைகள் தாங்குவது?&lt;br /&gt;&lt;br /&gt;ஒழுங்காகப் படித்தால் ஏனிந்த தடுமாற்றம் என்று கேட்கவே முடியாது. நமது காலத்தைய படிப்புகளைவிட எத்தனையோ மடங்கு சுமை ஏற்றப் பட்டுவிட்ட பாடத்திட்டத்தில் சரிவர சொல்லித் தரும் ஆசிரியர்கள்கூட நிறைய பள்ளிகளில் இல்லை. சுயமாக சிந்தித்து இணையான பதிலை எழுதினால்கூட சுழித்துவிட்டு மதிப்பெண்களைக் குறைக்கும் திருத்துதல் அமைப்பு யாரையும் சுயமாகப் படிக்க விடுவதில்லை. அவர்கள் சொல்லும் வடிவத்திலும் வார்த்தைகளிலும்தான் பதில் அமைய வேண்டும். அறிவுடன் கூடிய பிள்ளைகள் இங்கு தேவைப்படுவதில்லை. சொன்னதைத் திருப்பிச் சொல்லும் கிளிப் பிள்ளைகள் போதுமாம்! பாவம் அந்தப் பச்சைக் கிளிகள்! ஸ்டேட் ராங்க் வாங்கி தொழிற்கல்வியில் சேர்ந்தாலும் கூட ரெகுலராக பாஸ் பண்ணுவதற்கே தத்தித் தத்தி நடைபயிலுகிறார்கள். திடீரென PATTERN மாற்றப்பட்டால்கூட அதை பின்பற்றக் கஷ்டப்படுபவர்கள்தான் MAJORITY.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தொல்லைகளிலிருந்தெல்லாம் மீண்டு எப்படியோ பரீட்சை எழுதி முடித்தாலும் திருத்துபவர்களின் மூட் மற்றும் சுமுகமான நிலைமையைப் பொறுத்துதான் மார்க் பெறும் பாக்கியம். மிகுந்த இம்சைகளுக்கிடையில் திருத்தும் ஆசிரியரை எரிச்சல் படுத்தவென்றே அடிப்படை வசதிகளற்ற இடங்களில் விடைத்தாள் திருத்தும் பணி. போன பொதுத் தேர்வு ஒன்றில் வரிசையாக வந்த நம்பர்கள் நூறு சதவிகித தேர்ச்சி, அதில் மிக சாதாரண மாணவனும் அடக்கம். இன்னுமொரு லிஸ்ட்டில் வரிசையாக ஆவரேஜ் மதிப்பெண்கள், இதில் பள்ளியின் முதல் மாணவனும் அடக்கம். இதையெல்லாம் பார்க்கும்போது- ராசி, வாஸ்து, விதி, அதிர்ஷ்டம் என்ற எல்லா கெட்ட வார்த்தைகளும் மனதைப் புரட்டிப் போட்டுவிடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;திருவள்ளுவர் சொன்னதெல்லாம் பொய்யாகிப் போயிடும் போல இருக்கு.`கற்றணைத்தூறும் அறிவு’ என்பது நடைமுறை சாத்தியமாக உள்ளதா? குரங்கு கைப் பூமாலையென பிஞ்சுகள் வெம்பிப் போயிருக்கின்றன, தேற்றுவாரின்றி! தேற்ற வேண்டிய பெற்றோர்களோ சிறகிழந்த பறவைகள் போலுள்ளார்கள்.&lt;br /&gt;மாற்றங்களையும், மாறுதல்களையும் திட்டமிட்டு முன்னதாக செய்ய முடியாதா? தண்ணீர்ப் பிரச்னை வரும்வரை `நதிநீர்ப் பிரச்னை’யை மூலையில் போடுவதுபோல் இளைய தலைமுறையின் வாழ்க்கையோடு விளையாடலாமா? விளையாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள், வேதனையோடு நாமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம்.&lt;br /&gt; நாளிதழ்களும் மற்ற ஊடகங்களும் வரிந்து கட்டிக் கொண்டு தேர்தல் செய்திகளிலேயே புரண்டு கொண்டிருக்கின்றன. தேர்வின் பொருட்டு மாணவர்களும் பெற்றோரும் கதிகலங்கி நிற்பதைக் கண்டுகொள்ளவோ காதில் வாங்கிக் கொள்ளவோ நாதியில்லை. +2 வினாத்தாள்கள் மிகவும் கடினம் என்று ஏதோ ஒரு மூலையில் சிறப்புச் செய்தியாக வந்ததோடு சரி.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியென்ன வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி இந்த தேர்தல்? ரொம்ப யோசித்து,மண்டையைக் குடைந்து , கால்கடுக்க வரிசையில் நின்று, ஓட்டுப் போட்டாலும் ஏதாவது மாறுகின்றதா? ஆளும் கட்சியோ, எதிர்க் கட்சியோ எதுவுமே நிலையில்லாத கட்சிகள் ஆகிவிட்ட நிலையில்! கட்சித் தலைவர் ஒருவரைத் தவிர மற்ற எல்லோருமே இந்தக் கட்சியா எதிர்க் கட்சியா என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாத அளவு தாவல்களும், வரவேற்புகளும்.! சீட்டுகளின் எண்ணிக்கைக்காக தாவும்போது கொள்கைகளைத் தூர எறிந்துவிட்டு புதுக்கொள்கைகளைத் தத்தெடுப்பவர்களும்,சொந்தப் பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் பொருட்டு வலியோரைச் சார்ந்து நிற்க நினைப்பவர்களும், இன்னும் அரசியல் என்பதே குடும்பத்துக்காக மட்டும் என்று இருப்பவர்களும், மற்றவர்கள்(மக்கள்) எக்கேடு கெட்டால் என்ன என் மனம்போனபடி காய்கள் நகர்த்தப் பட வேண்டும் என்று அலைபவர்களும்- இதில் யார்தான் எந்தப் பிரச்னையையும் மனிதாபிமானத்துடன் கவனிக்கப் போகிறார்கள்? இதே கல்வித் திட்டப் பிரச்னை வாழையடி வாழையாக புதுப் புது தோற்றங்களுடன் சஞ்சரித்துக் கொண்டேதான் இருக்கும். எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளின்னு  சொல்வாங்களே அதுதான் உண்மை.&lt;br /&gt;படித்தவர்கள் வாக்குப் போட முன்வராததால்தான், நாட்டு நடப்பு தெரியாத பாமரர்களின் வாக்குகள் நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கின்றன என்று ஆளாளுக்கு வாய் கிழியப் பேசுவார்கள். நிலைமையை சீர்தூக்கி பார்க்கும்போது எவருக்குமே ஓட்டு போடுதல் நியாயமில்லை என்று தோன்றும்போது கால்கடுக்க வரிசையில் நிற்பானேன் என்றுதான் பலரது எண்ணமும். எந்தக் கொள்ளிக்குப் போட்டாலும் அது நம் தலையைச் சுடப் போவது உறுதி, அதைப் போய்த் தேர்ந்தெடுக்கணுமா?&lt;br /&gt;இங்கு எவருக்கும் நாட்டு நலன் என்பது 10% கூட மனசில் இல்லை. அப்படி இருந்தால், நாம் தோற்றாலும் பரவாயில்லை , பலமுள்ள எதிர்க்கட்சியாக இருந்து நல்லது செய்வோம் என்ற எண்ணம் இருக்குமே! எதிர்க்கட்சி என்பதே கேலிக்குரியது என்று நினைப்பவர்களுக்கு அடிப்படை அரசியல் அறிவாவது இருக்கிறதா? தேர்தலில் வரம்புமீறல்களும் கள்ளத்தனங்களும் இருக்கக்கூடாது என்று முனைந்து செயலற்றி வரும் தேர்தல் கமிஷன் போன்ற அமைப்பு போல், இப்படித்தான் ஆட்சி நடத்த வேண்டும் என்ற வரைமுறைகளை உள்ளடக்கிய ஏதாவது ஒரு கமிஷன் வந்தால்தான் அரசியல் என்பது சாக்கடை நிலையிலிருந்து நீரோடை நிலைக்கு வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளிநடப்பு செய்யும் MLA பதவி பறிப்பு; சட்டசபைக்கு குறிப்பிட்ட காலங்கள்வரை வராதவர் ஓட்டுப் போடவே தகுதியற்றவர்; முதலில் கடைப்பிடித்த கொள்கையைக் கடாசிவிட்டு எதிர் கட்சி தாவுபவர்களுக்கு தேர்தலில் நிற்கத் தடை- இதுபோல் வித்தியாசமான கமிஷன் ஒன்று வந்தால் நல்லாயிருக்காதா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15229466-114224382471828679?l=forusdear.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://forusdear.blogspot.com/feeds/114224382471828679/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15229466&amp;postID=114224382471828679&amp;isPopup=true' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/114224382471828679'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/114224382471828679'/><link rel='alternate' type='text/html' href='http://forusdear.blogspot.com/2006/03/2.html' title='திணறும் +2 தேர்வு;கொக்கரிக்கும் தேர்தல்'/><author><name>தாணு</name><uri>http://www.blogger.com/profile/04865211166801373288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15229466.post-114209326772802500</id><published>2006-03-11T08:03:00.000-08:00</published><updated>2006-05-06T06:40:33.633-07:00</updated><title type='text'>வண்ணக் குழப்பம்</title><content type='html'>&lt;span style="color:#330033;"&gt;வ&lt;/span&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;ண்&lt;/span&gt;&lt;span style="color:#33cc00;"&gt;ண&lt;/span&gt;&lt;span style="color:#ff0000;"&gt;க்&lt;/span&gt; &lt;span style="color:#993399;"&gt;குழப்பம்&lt;/span&gt;&lt;br /&gt;கலர் பார்ப்பதிலிருந்து கலர் கலரா ரசிப்பது வரை வண்ணங்கள் நம் வாழ்க்கையோடு ஒன்றிப்போய்விட்ட விஷயம். ஆனால் ஒவ்வொரு வண்ணத்துக்கும் தனிச் சிறப்பு இருப்பதுபோல் இரட்டை அர்த்தங்கள் கொள்ளும்படியாகவும் பயன் படுகின்றன. கீழே சொல்லப்பட்ட வண்ண அடைமொழிகளுக்கு யாராவது உரிய விளக்கம் சொன்னால் நன்றாக இருக்கும். ( பரிசெல்லாம் கிடையாதுங்க, ஏழைப்பட்ட ஜனங்க நாங்க)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffcc00;"&gt;மஞ்சள்&lt;/span&gt; பத்திரிகை&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;நீலப்&lt;/span&gt; படம்&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;பச்சை&lt;/span&gt; வசனங்கள்&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;சிகப்பு&lt;/span&gt; விளக்கு&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் எத்தனையோ இருக்கலாம், எனக்குத் தெரிந்த நாலு!&lt;br /&gt;(ரொம்ப நாளா பதிவு போட நேரமே கிடைக்கலியா, அதுதான் இந்த இடைச் சொறுகல்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15229466-114209326772802500?l=forusdear.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://forusdear.blogspot.com/feeds/114209326772802500/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15229466&amp;postID=114209326772802500&amp;isPopup=true' title='28 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/114209326772802500'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/114209326772802500'/><link rel='alternate' type='text/html' href='http://forusdear.blogspot.com/2006/03/blog-post.html' title='வண்ணக் குழப்பம்'/><author><name>தாணு</name><uri>http://www.blogger.com/profile/04865211166801373288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>28</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15229466.post-114088527317653300</id><published>2006-02-25T08:25:00.000-08:00</published><updated>2006-03-08T23:26:12.436-08:00</updated><title type='text'>நால்வர் அணியால் நானும் சங்கிலியில்</title><content type='html'>`சங்கிலித் தொடர்’ன்னு ஏதோ இருக்குதேன்னு ஜோ பதிவிலிருந்து பின்னோக்கி போய்ப் பார்க்கும்போது, திடீர்னு இளா பதிவில் என்னையும் `சங்கிலி’யிட்டிருப்பது தெரிந்தது. ஆனாலும் இன்னும் கொஞ்சம் `நதி மூலம்’ பார்க்கலாம்னு துருவினாலும் அதுக்கு மேல் போக முடியலை. அதுக்குள் தருமி வேறு உன் பாடு- எப்படியோ தொடர்ந்து கொள் என்று சாபமிட்டிருந்தார்(சும்மா கேலிதான்);சிங். ஜெயக்குமார் இந்த அக்காவை அன்புடன் அழைத்திருந்தார்;சமீபத்தில் பாரதியின் நாலு நல்ல வார்த்தையாகிப் போனேன் -இனியும் சங்கிலியைப் பின்னாமல் விட்டால், அதை உடைத்த பாவியாகிவிடுவேனோ என்ற அவசரத்தில் இந்தப் பதிவு!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;மேற்கொண்ட நான்கு வேலைகள்&lt;/span&gt;:&lt;br /&gt;சென்னை, ராமாராவ் பாலி க்ளினிக்கில் தகுதி பெற்ற மருத்துவராய் முதல் பணி ஆரம்பம்&lt;br /&gt;அரும்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவில் சொந்த க்ளினிக் வைத்து சுதந்திரமாகத் திரிந்த அடுத்த கட்டம்.&lt;br /&gt;அரசுப் பணியில் ஊர் ஊராகச் சுற்றியது படு கஷ்டம்.&lt;br /&gt;ஈரோட்டில் மருத்துவமனை தொடங்கியிருப்பது இன்றைய கால கட்டம்.&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;மிகவும் பிடித்த 4 படங்கள்&lt;/span&gt;:&lt;br /&gt;1.      தம்பிக்கு எந்த ஊரு&lt;br /&gt;2.      மெளனராகம்&lt;br /&gt;3.      சிந்து பைரவி&lt;br /&gt;4.      கோகுலத்தில் சீதை&lt;br /&gt;(நாற்பது படங்களுக்கு மேல் இருக்கும் லிஸ்ட்டில், முன்னுரிமை தரப்பட்டவை)&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;வசித்த நான்கு இடங்கள்&lt;/span&gt;:&lt;br /&gt;1.      ஆறுமுகநேரி, தூத்துக்குடி மாவட்டம்-பிறந்த ஊர்&lt;br /&gt;2.      ஹைகிரவுண்ட்,திருநெல்வேலி-படித்த ஊர்(கல்லூரி)&lt;br /&gt;3.      நுங்கம்பாக்கம், சென்னை-திருமணத்துக்கு முன்&lt;br /&gt;4.      ஈரோடு - திருமணத்துக்குப் பின்.&lt;br /&gt;(நாடோடியாய்த் திரிந்தவர்களிடம் நாலு ஊர் மட்டும் சொல்லச் சொல்வது கொடுமை. ரொம்ப கஷ்டப்பட்டு தேர்வு செய்த லிஸ்ட்)&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பிடித்த 4 டிவி நிகழ்ச்சிகள்&lt;/span&gt;:&lt;br /&gt;1.      K Tvயில் இரவு 8 மணி சினிமா,பிடித்த படம் வரும்போது.&lt;br /&gt;2.      நேரம் குறிப்பிடமுடியாத இடைவேளைகளில் சன் ந்யூஸ்&lt;br /&gt;3.      சேனல் பாகுபாடில்லாமல் பாடல் வரும் அலைவரிசை&lt;br /&gt;4.      ??????&lt;br /&gt;(ரொம்ப கஷ்டமான கேள்வி)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;சுற்றுலா சென்ற நாலு இடங்கள்&lt;/span&gt;:&lt;br /&gt;     1 .டார்ஜிலிங் &amp; காங்டாக்&lt;br /&gt;     2.டெல்லி, ஆக்ரா, ஜெய்ப்பூர்&lt;br /&gt;     3. அவுரங்காபாத்- அஜந்தா , எல்லோரா&lt;br /&gt;     4. ஹைதராபாத்&lt;br /&gt;(மிக சமீபமாகச் சென்ற இடங்கள்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பிடித்த 4 உணவுகள்&lt;/span&gt;:&lt;br /&gt;புளிக்குழம்பு, தேங்காய்த் துவையல்&lt;br /&gt;அவியல், இடி சாம்பார்(சாம்பார் பொடி உரலில் இடிப்பார்கள்)&lt;br /&gt;கூட்டாஞ்சோறு, கூழ் வத்தல்&lt;br /&gt;இட்லி, லைன் சட்னி( கொஞ்சூண்டு தேங்காயில் பாத்திரம் நிறைய எங்க அம்மா வைக்கும் சட்னி)&lt;br /&gt;(இது எல்லாமே எனக்கு விடுமுறையில்தான் கிடைக்கும், அப்போதானே ஊரிலிருந்து அக்கா மதினி எல்லாரும் வருவாங்க, செய்து தருவாங்க!!)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;நான் இருந்திருக்க வேண்டிய நாலு இடங்கள்&lt;/span&gt;:&lt;br /&gt;&lt;br /&gt;1.      அரும்பாக்கம் க்ளினிக் தொடர்ந்திருந்தால் சென்னை வாசி&lt;br /&gt;2.      அரசுப் பணி நீடித்திருந்தால் எந்த ஊரோ?&lt;br /&gt;3.      DGO படிக்கப் போகாமலிருந்தால் தூத்துக்குடி&lt;br /&gt;4.      கிடைத்த MD படித்திருந்தால் கோயம்புத்தூர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;தினமும் உலா வரும் 4 இடங்கள்&lt;/span&gt;:&lt;br /&gt;1.      தமிழ்மணம்&lt;br /&gt;2.      ஜி மெயில்&lt;br /&gt;3.      யாஹூ&lt;br /&gt;4.      ஹாட் மெயில்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பிடித்த 4 பாடல்கள்&lt;/span&gt;&lt;br /&gt;பூவே செம்பூவே உன் வாசம் வரும்&lt;br /&gt;வா வெண்ணிலா உன்னைத்தானே&lt;br /&gt;நிலாவே வா வா(மெளன ராகம்)&lt;br /&gt;மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;நன்றி சொல்ல வேண்டிய நால்வர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இளா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;தருமி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஜெயக்குமார்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பாரதி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:#000000;"&gt;இந்த சங்கிலித் தொடர் எதனால் ஆரம்பித்தார்களோ, ஆனால் எழுத வேண்டுமென்ற கடமை உணர்வைத் தூண்டிவிடுகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#3333ff;"&gt;என் அன்புச் சங்கிலியின் பிடியில் வரவேண்டிய  நால்வர்&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000000;"&gt;சிரில் அலெக்ஸ்&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;சித்தன்&lt;/p&gt;&lt;p&gt;ஸ்டேஷன்பென்ச் ராம்கி&lt;/p&gt;&lt;p&gt;செல்வராஜ்&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#3333ff;"&gt; &lt;/p&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15229466-114088527317653300?l=forusdear.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://forusdear.blogspot.com/feeds/114088527317653300/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15229466&amp;postID=114088527317653300&amp;isPopup=true' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/114088527317653300'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/114088527317653300'/><link rel='alternate' type='text/html' href='http://forusdear.blogspot.com/2006/02/blog-post_114088527317653300.html' title='நால்வர் அணியால் நானும் சங்கிலியில்'/><author><name>தாணு</name><uri>http://www.blogger.com/profile/04865211166801373288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15229466.post-113964630568734843</id><published>2006-02-11T00:21:00.000-08:00</published><updated>2006-11-17T10:59:37.330-08:00</updated><title type='text'>வாரிசு உருவாகிறது</title><content type='html'>வாரிசுகளை  உருவாக்குவது அரசியலிலும், சினிமாவிலும் சர்வ சாதாரணம். அதைத் தமிழ்மணத்தில் உருவாக்கும் முதல் ஆள் நானாக இருப்பேனோ என்ற புளகாங்கிதத்தில் ஏற்பட்டது இந்தப் பதிவு.&lt;br /&gt;சற்று ஓய்வாக இருந்த நேரத்தில் மகளிடம்(பதினொன்றாம் வகுப்பு மாணவி) என் பதிவுகளைக் காண்பித்து பேசிக்கொண்டிருந்த போது மெதுவாகத் தானும் சில கவிதைகள் எழுதி வைத்திருப்பதாகச் சொன்னாள். ஏற்கனவே எங்கள் get2gether மலருக்கு சில ஆங்கில கவிதைகள் எழுதித் தந்திருந்தாள். தமிழ் கவிதைகளுக்கு ஒரு நோட் போட்டு அப்பப்போ தோணும்போது எழுதியதாகச் சொல்லி சின்ன தொகுப்பு கொடுத்தாள். நிஜமாகவே சந்தோஷமாக இருந்தது. ஆங்கில மோகமும் புழக்கமும் அதிகமாக உள்ள சூழலில் தமிழில் கவிதை எழுத விழைந்த என் அன்பு மகளின் தமிழ் ஆர்வத்தைச் சிறப்பிக்கும் விதமாக இந்தப் பதிவு.&lt;br /&gt;அவளுக்கெனவே ஒரு ப்ளாக் தனியாக தொடங்கப்போவதாக அவளிடம் சொல்லியுள்ளேன்(தேர்வு முடிந்த பின்பு) அதன் முன்னோட்டமான இதற்கு உங்களின் ஆதரவைப் பொறுத்து அவள் தமிழ்ப் பயணம் தொடரும்.இனி வருவது அவள் கவிதைகள்!!!!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஏழைப் பெண்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தலைகுனிந்து&lt;br /&gt;நாணத்துடன் நடந்தால் .....வெகுளி&lt;br /&gt;பாரதிகண்ட பெண்ணாக&lt;br /&gt;நேர்ப்பார்வையுடன் நடந்தால்....ஆணவம்&lt;br /&gt;&lt;br /&gt;குடும்பத்தைக் காப்பாற்ற&lt;br /&gt;செல்கிறாள் வேலைக்கு;&lt;br /&gt;அவளைக் காப்பாற்ற&lt;br /&gt;யாருண்டு நாளைக்கு!&lt;br /&gt;&lt;br /&gt;கனவுகளைச் சுமந்து&lt;br /&gt;மேடை ஏறுகிறாள்..........விவாகம்&lt;br /&gt;வரதட்சணையால் கனவுகள் இழந்து&lt;br /&gt;நீதிமன்றம் செல்கிறாள்.......விவாகரத்து!&lt;br /&gt;&lt;br /&gt;இவை சமுதாயத்தின் கொடுமை&lt;br /&gt;இதுவே பெண் அடிமை&lt;br /&gt;துவண்டுவிடாதே பெண்ணே இதைக் கண்டு&lt;br /&gt;உயர்ந்துகாட்டு உன்மேல் நம்பிக்கை கொண்டு!&lt;br /&gt;&lt;br /&gt;காளானுக்கே கொடுப்பாய் பூச்செண்டு&lt;br /&gt;ஆளப்பிறந்தவள் பெண்ணென்று!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;     &lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;ஆசை;ஆசை&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இமயமலையின் மீது ஏறி நிற்க ஆசை&lt;br /&gt;     நிலவின் மீது கூடைப்பந்தாட ஆசை&lt;br /&gt;ஆப்ரிக்க காட்டிற்குள் நுழைய ஆசை&lt;br /&gt;     சிங்கத்தின்மீது சவாரி செல்ல ஆசை&lt;br /&gt;வரிக்குதிரையின் வரிகளை எண்ண ஆசை&lt;br /&gt;     பாலைவனத்தில் நீச்சல்குளம் கட்ட ஆசை&lt;br /&gt;பூவிற்குள் வண்டாய் நுழைந்து&lt;br /&gt;     தேனைத் திருட ஆசை&lt;br /&gt;என் ஆசிரியர்களுக்கும் ஒருநாள்&lt;br /&gt;பாடம் நடத்திட ஆசை&lt;br /&gt;இந்தியத் திருநாட்டின்&lt;br /&gt;     இணையற்ற ஜனாதிபதியாக ஆசை&lt;br /&gt;இத்தனை ஆசைகளும் நிறைவேற&lt;br /&gt;     இன்பமுடன் நூறாண்டு வாழ ஆசை!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;           &lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;கல்பனா சாவ்லா&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;கனவு கண்டாய் அன்று&lt;br /&gt;வானம் எல்லையில்லை என்று&lt;br /&gt;உலக மரபுகளைக் கொன்று&lt;br /&gt;விண்வெளியை வென்று&lt;br /&gt;சாதித்துக் காட்டினாய் நன்று!&lt;br /&gt;&lt;br /&gt;கற்பனை மட்டும் போதாது&lt;br /&gt;அது வெற்றியென்று ஆகாது&lt;br /&gt;நல்குரவு என்று பாராது&lt;br /&gt;நன்கு உழைப்பதே தக்கது&lt;br /&gt;இதை உணர்த்தினாய் இப்போது!&lt;br /&gt;&lt;br /&gt;விண்கலத்தில் சென்றாய்&lt;br /&gt;எங்களை விட்டுப் பிரிந்தாய்&lt;br /&gt;விண்மீன்களுடன் கலந்தாய்&lt;br /&gt;ஆனாலும்&lt;br /&gt;எங்கள் மனதில் நீங்காது நின்றாய்!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;     &lt;span style="color:#000066;"&gt;&lt;strong&gt;தோழன்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;எனக்கு உன்னை&lt;br /&gt;சிறுவயதிலிருந்தே தெரியும்!&lt;br /&gt;ஆனால்&lt;br /&gt;பார்வையால் மட்டுமே&lt;br /&gt;நமக்குப் பேசத் தெரியும்!&lt;br /&gt;உன் பார்வையால்தான்&lt;br /&gt;நான் உயிர் வாழ்கிறேன்!&lt;br /&gt;இதனால்&lt;br /&gt;ஞாயிறுகூட விடுமுறை எடுக்காமல்&lt;br /&gt;என்னைப் பார்க்கவரும் சூரியனே!&lt;br /&gt;இரவில் மட்டும்&lt;br /&gt;என்னை விட்டு&lt;br /&gt;விலகுவது ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;     &lt;em&gt;&lt;span style="color:#ff0000;"&gt;மலரே&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/em&gt;மலரே!  மலரே!&lt;br /&gt;இயற்கையின் குழந்தையே&lt;br /&gt;சிரித்தாய் மலர்ந்தாய்&lt;br /&gt;உலகை அழகாக்கினாய்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணதாசன் பாடலைப் போல் அழகு&lt;br /&gt;வானவில்லைப் போல் வண்ணம்&lt;br /&gt;குழந்தையின் பாதத்தைப் போல் மென்மை&lt;br /&gt;இவையே உன் தன்மை!&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி, உன் அழகில்&lt;br /&gt;டைட்டானிக் கப்பல் போல்&lt;br /&gt;மூழ்கியிருக்கும் ரசிகையின் கூந்தலில்&lt;br /&gt;வந்தமர உனக்கு விருப்பமா?&lt;br /&gt;&lt;br /&gt;எண்ணங்களும் ஆக்கமும் அவளது தனிச் சொத்து, தட்டச்சு செய்தது மட்டுமே என் பங்கு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15229466-113964630568734843?l=forusdear.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://forusdear.blogspot.com/feeds/113964630568734843/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15229466&amp;postID=113964630568734843&amp;isPopup=true' title='71 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/113964630568734843'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/113964630568734843'/><link rel='alternate' type='text/html' href='http://forusdear.blogspot.com/2006/02/blog-post_11.html' title='வாரிசு உருவாகிறது'/><author><name>தாணு</name><uri>http://www.blogger.com/profile/04865211166801373288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>71</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15229466.post-113916298789376518</id><published>2006-02-05T10:07:00.000-08:00</published><updated>2006-02-08T06:43:14.626-08:00</updated><title type='text'>தற்காலிக விடைபெறல்</title><content type='html'>&lt;p&gt;&lt;br /&gt;எனக்கு முன் எழுதிய `நட்சத்திரங்கள்’ எல்லோருமே ஏதோ ஒரு வகையில் தனித் தன்மையுடன் எழுதிச் சென்றார்கள். எதைப் பற்றி எழுதுவது என்று யோசித்தாலும் யாரோ எழுதியிருப்பது போன்ற மாயைதான் தெரிகிறது. ஆனாலும் கொடுக்கப்பட்ட பொறுப்பிலிருந்து தப்பிக்க முயல்வது, மதியின் விருந்தோம்பலை அவமதிப்பது போலாகிவிடும் என்பதால் என் சிறு பிள்ளைத்தனமான பதிவுகளை உங்கள்முன் சமர்ப்பித்தேன்.. வாதத்துக்குரிய விஷயங்களை அலசி வலைப்பூகளில் செம்பூக்கள் பூக்க விடாமல், மணம் வீசும் வாரமாகவே இருக்கும் பொருட்டு, நிகழ்வுகளையும் நினைவுகளையும் பற்றி மட்டுமே பேசினேன்.&lt;br /&gt;அதற்கு முக்கிய காரணம், கொஞ்ச நாட்களுக்கு முன் ஒரு சூடான விவாதத்தின் நடுவில் ஒரு பெண் வலைப்பதிவர் சார்பற்ற முறையில் சின்ன கருத்து சொன்னபோது, அவரையெல்லாம் அந்த ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளவில்லை என்பதுபோன்ற பதிலை வாசித்தேன். பெண்களுக்கு ஆழ்ந்து சிந்தித்து விவாதம் செய்யும் அறிவு இருக்கப்போவதில்லை என்ற தொனியில் பதில் சொல்லப்பட்டதாக எனக்குப் பட்டது. அதிகமாக விவாதத்தில் கலந்து கொள்ளாததால் ஒரு விஷயம் குறித்த திறனாய்வு பெண்களுக்கு இருக்காது என்று கருத்து கொள்ளப்பட்டது போலும். நிறைய விவாதங்களின் இடையே ஒரு பார்வையாளினியாக பலமுறை எட்டிப் பார்த்துள்ளேன்.&lt;br /&gt; இந்த ஆண்களின் விவாதமும் அவ்வளவுதான்! எத்தனையோ விஷயங்களில் பிடித்த முயலுக்கு மூணு கால் பாணியில்தான் எல்லா விவாதங்களுமே உள்ளது. தாம் சொன்ன அர்த்தம்தான் சரியென்ற போக்கு ஓரளவு ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான், ஆனால் நியாயமே எதிர்புறம் இருந்தாலும் விதண்டா வாதத்துக்காக நாட்கணக்கில் இழுத்துச் செல்லப்பட்ட பதிவுகளையும் பார்த்தேன். Man is subjected to changes at all ages என்று எங்கேயோ வாசித்த நினைவு. மனிதனே மாறும்போது மனிதனால் கைக்கொள்ளப்படும் கருத்துக்கள் மாறலாகாதா? மாறக்கூடாது என்ற பிடிவாதத்துடனே சிலர் இருப்பதும் தெரிகிறது. சமூகம் பலதரப்பட்ட மனிதர்களின் கலவை, ஆனால் இணையம் படித்தவர்களின் பாசறை. சராசரி மனிதர்களின் பார்வையைவிட நம் பார்வை சற்றே தரம் உயர்ந்து இருக்கவேண்டுமென்பதே என் கருத்து.&lt;br /&gt;என்ன, கருத்து கந்தசாமி மாதிரி உபதேசம் செய்யிறேனா? நிச்சயமா இல்லை. ஒரு புத்தகம் வாசிப்பதை விட, பத்திரிகையை அலசுவதை விட, டிவி பார்ப்பதைவிட வலைத்தளங்களில் பறந்து பறந்து படிப்பது, புது சுவையாக இருக்கிறது. இடையில் கடிபடும் சின்ன கற்கள் சில சமயங்களில் கசப்பு சுவை கூட்டிவிடுகிறதே என்ற ஆதங்கம்தான். அதனால் சாப்பிடாமல் இருக்க முடியுமா? (சாப்பாடு என்றவுடன் துளசி நினைவு வந்துவிட்டது. என் வாரத்தில் லீவ் வாங்கிட்டு போயிட்டதால் அவங்ககூட `கா’ விட்டுட்டேன்னு சொல்லீடுங்க புள்ளைங்களா!)&lt;br /&gt;முதல் ரெண்டுமூணு பதிவுகளுக்கு வந்த பின்னூட்டங்களுக்கு என்னால் இயன்றவரை பதில் எழுதிக் கொண்டிருந்தேன். ப்ளாக்கருக்கு என் மேல் என்ன கோபமோ தெரியவில்லை, பின்னூட்டங்களை யெல்லாம் ஒதுக்கி விட்டது. `கமெண்ட் மாட்ரேஷனுக்குள் சென்றால், உங்கள் விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை மன்னிக்காவும்’ னு சளைக்காமல் கடுப்பேத்திகிட்டே இருந்தது. அதனால் சின்ன சோர்வு வந்துவிட்டதால் அடுத்த பதிவு எழுதவே மனசில்லாமல் உட்கார்ந்திருந்து, தினமும் கடைசி நிமிடங்களில்தான் போஸ்ட் பண்ணினேன்.&lt;br /&gt;பரவாயில்லை, பின்னூட்டங்களின் எண்ணிக்கையை விட, நண்பர்களின் ரசிப்பைப் பகிர்ந்துகொள்ள முடியவில்லையே என்ற கவலைதான். இந்த குழப்பத்திலேயே, மற்றவர்களின் பதிவை வாசித்தாலும் பின்னூட்டம் இட முடியாமல் போய்விட்டது. தினமும் வீட்டுக்கு இரவு 12 மணிவாக்கில் போவதால், கணவரும் குழந்தைகளும்வேறு முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டார்கள். `நான் இந்த வார நட்சத்திரமாக்கும், அதனால் கொஞ்சம் வேலை’ ன்னு சொன்னாலும், அந்த நட்சத்திரம் கான்செப்ட் என்னன்னு புரிஞ்சுக்காததால் கொஞ்சம் எரிச்சலுடன் அலைந்தார்கள். ஒருவழியா இன்னைக்கு பிள்ளைகளுக்கு `பீசா’வும், ஆத்துக்காரருக்கு அவிச்ச கடலையும் பரிமாறி ஐஸ் வைச்சாச்சு!&lt;br /&gt;இந்த ஒரு வாரமும் என் அறுவையைத் தாங்கிக் கொண்ட தமிழ்ப் பெருங்குடி மக்களுக்கு நன்றி. என்மேல் நம்பிக்கை வைத்து பொறுப்பை ஒப்படைத்த மதி, காசி அவ்ர்களுக்கும் நன்றி. எதுவுமே எழுதி வைச்சுக்கலைங்கிறதாலே கொஞ்சம் டென்ஷன்தான். ஏதாவது வேலையில் மாட்டிகிட்டு சொதப்பிடக் கூடாதேன்னு! ஒருவழியா நேர்முகத் தேர்வு முடிச்சுட்டு வந்த மாதிரி இருக்கு.&lt;br /&gt;மத்தவங்க மாதிரி நட்சத்திர வாரம் முடிஞ்சதும் காணாமப் போயிடுவேன்னு நினைக்காதீங்க! இனிமேல்தானே நம்ம அறுவை முழுவீச்சில் ஆரம்பிக்கப் போகுது!&lt;br /&gt;அடுத்து வரப்போற நட்சத்திர அன்பர்களுக்கு ஒரு அறிவுரை&lt;br /&gt;*முதல் பதிவு போட்டவுடனேயே போய், சொக்கார் சொந்தக்காரர், நண்பர் , நண்பரல்லாதோர் எல்லாப் பதிவிலும் போய் ஒரு அட்வர்டைஸ்மெண்ட் குடுத்திடுங்க!&lt;br /&gt;*ரெண்டு நண்பர்களை stand-by ஆக ரெடி பண்ணி வைச்சுக்கோங்க, அடிக்கடி மாடரேஷனை பப்ளிஷ் பண்ண வசதியா இருக்கும்.&lt;br /&gt;*பின்னூட்ட நாயகர்களையும், நாயகிகளையும் கொஞ்சம் நல்லா கவனிச்சுக்கோங்க.&lt;br /&gt;*என்னோட பதிவையும் அப்பப்போ எட்டிப் பார்த்துக்கோங்க!!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15229466-113916298789376518?l=forusdear.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://forusdear.blogspot.com/feeds/113916298789376518/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15229466&amp;postID=113916298789376518&amp;isPopup=true' title='41 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/113916298789376518'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/113916298789376518'/><link rel='alternate' type='text/html' href='http://forusdear.blogspot.com/2006/02/blog-post_113916298789376518.html' title='தற்காலிக விடைபெறல்'/><author><name>தாணு</name><uri>http://www.blogger.com/profile/04865211166801373288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>41</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15229466.post-113916118939935850</id><published>2006-02-05T09:37:00.000-08:00</published><updated>2006-06-19T17:57:40.806-07:00</updated><title type='text'>ஆதலினால் காதல் செய்வீர்</title><content type='html'>`&lt;span style="color:#ff0000;"&gt;காதல் என்பது எது வரை’&lt;/span&gt;&lt;br /&gt;எல்லாராலும் எப்போவுமே கேட்கப்படும் கேள்விதான். ஒவ்வொருத்தரும் அவங்களோட நிகழ்கால வாழ்க்கையைப் பொறுத்து வித விதமா அர்த்தம் சொல்லிக்குவாங்க. என்னைப் பொறுத்தவரை காதல்ங்கிறது சாகிற வரை கூட வரப் போவது.&lt;br /&gt;&lt;br /&gt;காதல்ங்கிறது ஆண்-பெண் காதல் மட்டுமில்லைங்கிறது என்னோட அபிப்பிராயம். அந்தக் காதலுமே அடிக்கடி அவஸ்தைக்குள்ளானாலும், அடித்தளமாயிருக்கிற அன்பு மாறப் போறதில்லை. என்னோட பதிவுகளை வாசித்த என் தம்பி, இளமைக்காலம் பற்றி எழுதிட்டே, கல்லூரி வாழ்க்கை பற்றியும் எழுதிட்டே, உன் இல்லற வாழ்க்கை பத்தி எழுதினால் என்னன்னு மெயில் அனுப்பியிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோரின் இல்லற வாழ்க்கையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கும் என்பது என் அபிப்பிராயம். வாழ்க்கையின் நிகழ்ச்சிகளும் அன்றாட போராட்டங்களும் கொஞ்சம் வேறு வேறாகத் தெரிந்தாலும், அடிப்படை அநுபவங்கள் ஒன்றாகத்தானே இருக்க முடியும். அதனால் பொதுவாகவே இல்லற வாழ்க்கை பற்றி எழுதலாம்னு நினைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கல்யாணம் என்பது காதலித்தோ, உறவுகளால் சேர்த்து வைக்கப்பட்டோ உருவானாலும், வாழ்க்கைக்கு &lt;span style="color:#ff0000;"&gt; க.மு&lt;/span&gt;.; &lt;span style="color:#3333ff;"&gt;க.பி.(&lt;/span&gt;கல்யாணத்துக்கு முன், பின்) என்று இரண்டு பாகங்கள்தான். காதல் வயப்பட்டு,காத்திருந்து , போராடி மணம் செய்து கொள்வதினாலேயே வாழ்க்கை சொர்க்கமாக இருந்து விடப் போவதில்லை. குடும்பத்தாரால் நிச்சயிக்கப்பட்டு ஒருவரை ஒருவர் புதிதாய் அறிந்து வாழ்வதாலும் அந்த வாழ்க்கை நரகமாகவும் ஆகிவிடப் போவதில்லை. வாழ்க்கை அதன் நிச்சயித்த போக்குபடிதான் நடக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;காதலிக்கும் காலங்களில் நல்ல பக்கங்களை மட்டுமே பரிமாறிக் கொள்வதாலும், பிரச்னை ஏற்படுமோ என்று தோன்றும் விஷயங்களைப் பற்றி பேசாமலே இருந்துவிடுவதாலும் அதன் தாக்கம் க.பி. வாழ்க்கையில் இடறத்தான் செய்யும். அதைக் குற்றமாகப் பார்த்து பிரச்னையாக்கும்போதுதான் நிறைய காதல் மணங்கள் தோற்றுவிடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;நமது சமூகத்தில் திருமணம் என்பது இரண்டுபேருக்கு இடையில் நடப்பது அல்ல, இரண்டு குடும்பங்களுக்கு இடையில் நடப்பது. இரண்டு மனமும் ஒன்றிப் போய் சந்தோஷமாக வாழ்ந்தாலும் அதைக் குலைக்கவென்றே ஏகப்பட்ட விஷமங்கள் குடும்பம் என்ற போர்வையில் வரும். நன்கு படித்து, முற்போக்கான எண்ணம் கொண்ட வீடுகளில் கூட வீட்டுக்கு வரும் மருமகளின்மேல் ஒரு அந்நியத்தனம் வருவது ஏனோ தெரிவதில்லை. மனிதர்கள் நல்லவர்கள், ஆனால் சமூகம் கொடுமையானது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆணாதிக்கம் மிகுந்த நம் சமூகத்தில், கணவன் என்ற குடும்பத்தலைவனின் மன முதிர்வு, பொறுத்தாட்கொள்ளுதல், விட்டுக் கொடுத்தல் போன்றவற்றைப் பொறுத்தே பிரச்னைகள் கொம்பு சீவப் படுகின்றன. ஆனால் அந்த நேரத்தில் மட்டும் தங்கள் பொறுப்புகளைத் தட்டிக் கழித்து, பெண்களின் சண்டையாலும், விட்டுக் கொடுக்காத தன்மையாலுமே பிரச்னைகள் ஏற்படுவதாக் மாய்மாலம் காட்டி ஒதுங்கிக் கொள்வர். தம்மால் முடியாத காரியம் என்று ஆணாதிக்கப் போர்வையை விலக்கிக் கொள்ளும் சமயமும் இதுவாகத்தான் இருக்கும்!&lt;br /&gt;எனக்கு மிக நெருங்கிய குடும்பத்தின் கதையில், காதல் மணம்தான், குடும்பத்தாரின் தலையீடு கூட அவ்வளவு தூரம் கிடையாது. ஆனால் அந்தப் பெண்ணின் மனம் திரிந்து போன காரணத்தால் தினமும் சண்டையும், குழப்பமும். ஆனால் அந்தக் கணவர் அவளது பிரச்னையின் வேர்கள் எங்கு என்று புரிந்து கொண்டு, பொறுமையாக குடும்பத்தை வழி நடத்துகிறார். ஆணின் பங்களிப்பு குடும்பத்தை நேர் பாதையில் கொண்டு செல்வதைப் பார்த்தேன்.அவளுக்கு சரிக்கு சமமாக அவரும் பொங்க ஆரம்பித்தால் , அங்கு குடித்தனம் நடக்காது! இங்கு ஆணாதிக்கம் அன்பை வலுக்கட்டாயமாக திணிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றுமொரு நண்பர் வீட்டில் தனக்காக குடும்பம் ,உறவுகள் முதலியவற்றைத் துறந்து வந்திருக்கும் பெண்ணிடம் காட்ட வேண்டிய சாதாரண புரிதலைக் கூட காட்டாததால், மனம் வெதும்பி நிற்கும் மனைவியைப் பார்க்கிறேன். மனைவியின் பொறுமையும், விட்டுக் கொடுத்தலும் அங்கே நிலைமைய நேர் செய்துகொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற பிரச்னைகள் கல்யாணம் ஆன புதிதில் அநேகமாக வருவதில்லை, எல்லா வகையிலும் செட்டில் ஆகிவிட்டதாக நினைக்கும் மத்திய வயதில்தான் வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;திருமணம் ஆன புதிதில், வாழ்க்கை காட்டும் புதுமைகளும், உடல்ரீதியான ஈர்ப்பும் , சின்னச் சின்ன வேற்றுமைகளைப் பெரிதாக்குவதில்லை. கொஞ்ச நாள் போனபிறகு, இனக்கவர்ச்சி மறைந்து ஒரு சலிப்பு ஏற்படும் வயதில், குழந்தைகள் என்ற பாலம், அவர்களை  இணைக்கும் கருவியாகிறது. குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்ற அடுத்தடுத்த பொறுப்புகள், இருவருக்குமிடையில் உள்ள பேதங்களைப் பின்னே தள்ளிவிடுகிறது. ஒரு வழியாக பொறுப்புகளை முடித்து நிம்மதியாக உட்காரும்போதுதான், இணைப் பறவைகளுக்கிடையே உள்ள இடைவெளியே தெரிய ஆரம்பிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களுக்கு மாதவிடாய் சார்ந்த உடல் மாற்றங்கள் பெரிய அளவில் மன அழுத்தத்தைக் கொடுக்கும் நேரம்;ஆண்களுக்கு அதுவரை ஓடி ஓடி உழைத்ததால் ஏற்படும் சலிப்புடன் கூடிய அலுப்பு. இருவருமே தாங்கள்தான் கவனிக்கப் பட வேண்டிய நிலையில் இருக்கிறோம், எதிராளி கவனிக்கவில்லை என்ற குறையுடன் வாழ்க்கை ஓடும் போது, ஏகப்பட்ட மன முறிவுகள்.&lt;br /&gt; சமீப காலங்களில் விவாகரத்து கோரும் தம்பதியரின் வயது அறுபதுகளைச் சுற்றியே இருப்பதாக, வக்கீல் தோழி ஒருவர் சொன்னார்.அவர்களின் கதையைக் கேட்டால், இளமைக் காலத்தில் உருகி உருகி காதலித்த்வர்களாய் இருப்பார்கள். எங்கே போனது அந்தக் காதல்? இன்னும் மனதின் அடியில்தான் புதைக்கப்பட்டுதான் உள்ளது, ஆனால் இடைப்பட்ட வாழ்க்கையில் புரிந்து கொள்ள அவகாசமே எடுத்துக் கொள்ளாததினால் வந்த மனமுறிவு.&lt;br /&gt;&lt;br /&gt;இயந்திரகதியான வாழ்க்கையில், தம்பதியர் தனித்து செலவிடும் நேரங்களே குறுகி விட்டன. சதாகாலமும் குடும்பத்தின் நிகழ்வுகள் பற்றியே பேசி , சிந்தித்து, தங்களைப் பற்றிய உணர்வே இல்லாமல் போய்விட்டவர்கள். செக்ஸ் என்பது கூட ஒரு உடல் தேவை என்ற அளவில்தான் ஏற்றுக் கொள்ளப் படுகிறதே ஒழிய, இரு மனங்களின் சங்கமத்திற்கான அடையாளமாகக் கொள்ளப் படுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் ஸ்டேட்ஸில் இருந்து வந்திருந்த என் உறவினர் ஒரு அழகான விஷயம் சொன்னார். அங்கேயும் வாரத்தின் 5 நாட்கள் மிக இயந்திரத்தனமான வாழ்க்கைதானே. அங்கே டேட்டிங் என்ற விஷயத்தின் சித்தாந்தமே வேறாம். தம்பதியர்தான் கண்டிப்பாக டேட்டிங் போகணுமாம். குழந்தைகளை நெருங்கிய உறவினர்களோ நண்பர்களோ பொறுப்பேற்றுக் கொளளச் செய்துவிட்டு கண்டிப்பாக டேட்டிங் போக வேண்டுமாம், அப்போதுதான் தம்பதியரின் அன்பு சாஸ்வதமாக இருக்கும் என்று புரிந்து செய்கின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நம் ஊரில் `அது போல் ‘ டேட்டிங் ( நமது மனதில் டேட்டிங்க்கு ஒரு அர்த்தம் வைத்திருக்கிறோமே, அதுவல்ல) சமாச்சாரம் கண்டிப்பாக வர வேண்டும். மன உளைச்சல்களுடன் அலைமோதும் நிறைய தம்பதியர் அதனால் பயனடைவார்கள். அப்படி ஒரு சூழல் வந்த பிறகுதான் காதல் என்பது எதுவரைன்னு அறுதியிட்டுச் சொல்ல முடியும்.( ஆலப்புழா படகு வீடுகள் ஐடியல் லொகேஷன்!!)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15229466-113916118939935850?l=forusdear.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://forusdear.blogspot.com/feeds/113916118939935850/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15229466&amp;postID=113916118939935850&amp;isPopup=true' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/113916118939935850'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/113916118939935850'/><link rel='alternate' type='text/html' href='http://forusdear.blogspot.com/2006/02/blog-post_113916118939935850.html' title='ஆதலினால் காதல் செய்வீர்'/><author><name>தாணு</name><uri>http://www.blogger.com/profile/04865211166801373288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15229466.post-113913059711225499</id><published>2006-02-05T01:08:00.000-08:00</published><updated>2006-02-06T03:23:03.170-08:00</updated><title type='text'>கடற்கரைக் கவிதைகள்</title><content type='html'>`திருநெல்வேலிக்காரங்க தேர் பார்க்க மாட்டாங்க, திருச்செந்தூர்க்காரங்க கடல்லே குளிக்க மாட்டாங்க’ என்பது எங்க ஊர்ப்பக்க வட்டார மொழி. ஆனால் திருச்செந்தூர் பக்கத்து ஊர்காரங்களுக்கு கடல் குளியல்னா உசுரு. திருச்செந்தூர் பத்தி நிறையப் பேர் அழகழகா எழுதியிருக்காங்க. நான் அதைச் சுத்தி உள்ள கடற்கரைகள் பத்தி மட்டும்தான் சொல்லப் போறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரைக் கிழக்கு கடற்கரையில் எத்தனையோ புகழ் பெற்ற கடற்கரைகள் இருந்தாலும், செந்தூரின் அழகே அழகு. கோவில் வாசலிலிருந்து பார்த்தால் மணப்பாடு வரை தெரியும்,பின்னாடி திரும்பிப் பார்த்தல் காயல்பட்டிணம் வரை தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற கடற்கரைகளைக் காட்டிலும் தென்கோடி வரவர தேசிய ஒருமைப்பாடு தெரியிற மாதிரி அமைந்திருக்கும். திருச்செந்தூர் இந்துக்களின் புனிதக் கடவுளின் தலமாக இருக்கிறது. அதனை ஒட்டிய வீரபாண்டியன்பட்டினம் முழுவதுமாக கிறிஸ்தவர்களைக் கொண்டது. அதிலுள்ள கிறிஸ்தவ தேவாலயம் திருச்செந்தூருக்கு இணையான பிரசித்தி பெற்றது. முருகன் கோயில் கோபுரம் எவ்வளவு கம்பீரமாக இருக்குமோ அதே போன்று நெடிதுயர்ந்த தேவாலயக் கோபுரங்களும் மிக அழகு. அதை அடுத்த காயல்பட்டிணம் முழுக்க முழுக்க இஸ்லாமியர்களை உள்ளடக்கிய ஊர். அங்குள்ள மசூதியும் மிக்க சிறப்பு வாய்ந்ததே!&lt;br /&gt;இந்த மூணு ஊர்களைப் பற்றி அப்புறம் எழுதறேன்&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மூன்று ஊரின் பிள்ளைகளும் படிக்கும் பொது கல்லூரி ஆதிதனார் கல்லூரி. சுற்றி உள்ள ஊர்களின் பாடசாலைகளிலும் அநேகமாக மூன்று மத ஆசிரியர்களும் நல்லிணக்கத்துடன் இன்று வரை பணியாற்றி வருகிறார்கள். நாட்டின் பல மூலைகளிலும் ஏற்படும் மதக் கலவரங்கள் இங்குள்ளவர்களை அந்நியப் படுத்தியதில்லை. அந்த வகையில் நான் பிறந்த மண் புண்ணியம் செய்ததே!&lt;br /&gt; ராஜீவ் காந்தி ஆட்சியில் இருந்தபோது தென்தமிழகத்தைப் பார்வையிட வந்த போது இந்த மூன்று மதத் தலங்களிலும் பிரியமுடன் வழிபட்டதாகக் கேள்வி.&lt;br /&gt;தற்போது கிழக்குக் கடற்கரைச் சாலையை குமரி வரை நீட்டிக்கும் ஆலோசனைகள் நடந்து வருகின்றன. அவ்வாறு இணைக்கும் போது இன்னும் அழகிய கடற்கரைகள் வெளி உலகுக்குத் தெரியும்.&lt;br /&gt;செந்தூரில் இருந்து குமரி நோக்கி செல்லும் போது அடுத்து வருவது மணப்பாடு கடற்கரை. சமீபத்தில் வந்த `இயற்கை’ படம் பார்த்தவர்களுக்கு அந்த கடற்கரைதான் மணப்பாடு என்று தெரியும். ரொம்ப அழகான ஆரவாரம் இல்லாத கடல். நிலப்பரப்பு கொஞ்ச தூரம் உள்ளே சென்று சின்ன தீபகற்பத்தை உருவாக்கியிருப்பதால்  ஊரின் பக்கம் உள்ள கடல் அமைதியாக இருக்கும் .செந்தூரின் சீற்றம் மிக்க கடலில் குளிக்க பயப்படுபவர்கள் இந்த அமைதிக் கடலில் குளிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மீன் பிரியர்களுக்கு நாக்கில் தினவு எடுக்கும் வகையில் புதிதாகப் பிடிக்கப்பட்ட விதவிதமான மீன்கள் கடற்கரையில் கொட்டப் பட்டிருக்கும். கடற்கரையிலிருந்து ஊரை நிமிர்ந்து பார்த்தால் வெவ்வேறு வடிவங்களில் அமைக்கப் பட்டிருக்கும் தேவாலயங்கள் எட்டி எட்டி பார்க்கும். படகு வைத்திருப்பவர்களைக் கொஞ்சம் அன்புடன் கேட்டால், கடலுக்குள் கட்டுமரத்தில் கூட்டிச் செல்வார்கள்,த்ரில்லிங்காக இருக்கும். மோட்டார் படகிலும் செல்லலாம்.&lt;br /&gt;எங்களைக் கடலுக்குள் 2 கி.மீ. தூரம் வரை கூட்டிச் சென்று படகை நிறுத்திக் கொண்டார்கள். அலையே தெரியவில்லை, ஆழமும் குறைவுதானாம், குதித்து நீச்சல் கூட அடிக்கலாம்னு சொன்னாங்க. எங்க வாண்டுக ரெண்டும் குதிப்பேன்னு நிக்குதுங்க! அவ்வளவு அமைதியாக இருந்தது.&lt;br /&gt;மணப்பாடுக்கும் செந்தூருக்கும் நடுவில் சின்ன கடற்கரை- குலசேகரப் பட்டிணம். அந்தக் காலத்தில் அங்கே மட்டும்தான் டீச்சர் ட்ரெயினிங் கல்லூரி இருந்ததாம். எங்க அக்காவிலிருந்து, மாமியார் வரை அதன் மாணவிகள். தசரா சமயத்தில் அங்குள்ள கோவில் திருவிழா ரொம்ப பிரசித்தி. விதவிதமான வேடமிட்டு நேர்த்திக் கடன் செலுத்துவது வாடிக்கை. தமிழ்நாடு முழுவதிலிருந்தும் வேண்டுதல் நிரைவேற்ற வருகிறார்கள். அந்த சீசனில் அந்த ரோட்டிலேயே போகக் கூடாது, பயங்கர ட்ராபிக் ஜாம் ஆகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;மணப்பாட்டில் குளித்துவிட்டு ஈரம் காயாமலே அடுத்த கடலுக்குள் இறங்கி விடலாம், வரிசையாக கடற்கரைக் கிராமங்கள்தான். ஆனாலும் அடுத்த சிறப்பு உவரி கடலுக்குத்தான். கடற்கரையில் ஒரு கிறிஸ்தவ தேவாலயம் , கப்பல் வடிவத்திலேயே அமைக்கப் பட்டிருக்கும். கடலில் இருந்து பார்த்தால், கப்பல் தரை தட்டி நிற்பது போலவே இருக்குமாம். கடலுக்கும் ஊருக்கும் இடைவெளி 10 அடிகூட இருக்காது, அலையின் சீற்றமோ சாதாரண நாட்களில் கூட ரொம்ப பயங்கரமா இருக்குது. புயல் வீசும்போது எப்படி இருக்குமோன்னு அச்சமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே கடல்தான், ஆனாலும் எத்தனை பரிமாணங்கள்! செந்தூரில் அழகும் ஆக்ரோஷமும், மணப்பாடில் ரொம்ப அமைதியாக, உவரியில் பயங்கர வேகமும் சீற்றமுமாக!&lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் பார்த்துவிட்டு கன்னியாகுமரி கடற்கரை போனால் ரொம்ப கமர்ஷியலாக இருப்பதுபோல் தோணிவிடுகிறது. சுற்றுலா அந்தஸ்து வந்ததுமே அதன் இயற்கை அழகு கெட்டுப் போய்விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;நடுவில் முட்டம் கடற்கரை எங்கேயோ இருப்பதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன், இன்றுவரை பார்க்கவில்லை. `அலைகள் ஓய்வதில்லை’ வந்ததிலிருந்து பார்க்க வேண்டுமென்று ஆசையாக இருந்தபோதும், எப்படியோ தட்டிப் போய்விடுகிறது. அதிலும் `சுட்ட மீனும் சுறாப் புட்டும்’ பற்றி சிரில் அலெக்ஸ் எழுதியதைப் படித்த பிறகு அடுத்த முறை கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய லிஸ்ட்டில் சேர்த்தாச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;எப்பவும் நம்ம ஊர் கடலையே பார்த்துப் பழகிய கண்களுக்கு இந்த முறை மேற்குக் கடற்கரை விருந்தளித்தது. கேரளாவின் கடல் வேறுவிதமான அழகு. இய்ற்கை அழகு கெடாதபடி கடற்கரையை சுற்றுலா மையங்களாகவும் மாற்றி வைத்திருப்பது ஆச்சரியமாக இருந்தது. ஆலப்புழாவில் பேக் வாட்டர் போட்டிங் போனது மறக்க முடியாத அநுபவம். ரெண்டு பக்கமும் வீடுகளைப் பிரிப்பதே தண்ணீர்ப் பரப்புதான். அதில் மீனோ, காய்கறிகளோ வியாபாரம் செய்பவர்கள் இக்குணியூண்டு படகில் கூவிக் கூவி வியாபாரம் செய்ததைப் பார்க்க புதுமையாகவும் அழகாகவும் இருந்தது. எதிர் வீட்டுக்கு ஊர்வம்பு பேசப் போகணும்னாக்கூட படகில்தான் போகணும். சுவாரசியமான பொழுதுபோக்கு இல்லையா? படகு வீடுகளைப்ப் பார்த்தால் ஐந்து நட்சத்திர ஹோட்டலின் அறைபோல் சவுகரியமாக இருக்குது. நிறைய தேனிலவு தம்பதிகள் அதில் தங்க வருவாங்களாம். நமக்கும் காலம் கடந்துவிடவில்லை, அறுபதாம் கல்யாணம் முடிச்சுட்டு நேரா இங்கே வந்திட வேண்டியதுதான்னு முடிவு பண்ணிகிட்டேன்.&lt;br /&gt;என்ன கடல் காற்று ரொம்ப உப்பு கரிக்குதா? விளக்கமாகவே எழுதலைங்களே! சும்ம கோடி காட்டியிருக்கேன், எப்படியும் பின்னூட்டங்களில் கடல் இளவரசர்கள் அதிக விபரங்களைச் சொல்லுவார்கள் என்ற நம்பிக்கையில். மேலே இருப்பது திருச்செந்தூர் கடல்தான், வள்ளி ஒளிந்த குகைக்கு முன்பு உள்ள பகுதி.&lt;br /&gt;பி.கு:பின்னூட்டப் பெட்டியில் கமெண்ட் மாடரேஷன் ஏதோ தகராறு பண்ணுது, அதனால் பின்னூட்டங்கள் மறைந்து கொள்கின்றன. என்னுடனாவது பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைப்பவர்கள் எப்பவும் போல் பின்னூட்டமிடவும். நிர்வாகிகளுக்கு அறிவித்துள்ளேன். நாளையாவது சரியாகுதா பார்க்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15229466-113913059711225499?l=forusdear.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://forusdear.blogspot.com/feeds/113913059711225499/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15229466&amp;postID=113913059711225499&amp;isPopup=true' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/113913059711225499'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/113913059711225499'/><link rel='alternate' type='text/html' href='http://forusdear.blogspot.com/2006/02/blog-post_05.html' title='கடற்கரைக் கவிதைகள்'/><author><name>தாணு</name><uri>http://www.blogger.com/profile/04865211166801373288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15229466.post-113898829138681993</id><published>2006-02-03T09:36:00.000-08:00</published><updated>2006-02-08T21:48:56.213-08:00</updated><title type='text'>சினிமாக் கிறுக்கர்கள் சபை</title><content type='html'>சினிமா என்பது மத்தியதரக் குடும்பங்களின் தவிர்க்க முடியாத பொழுது போக்கு அம்சம். குடும்பத்தவர் அனைவரையும் சுற்றுலா மாதிரி வெளியே கூட்டிச் செல்ல முடியாத பட்ஜெட் பத்மநாபர்களுக்கு சர்வ ரோக நிவாரணி சினிமாதான். எவ்வளவுதான் டிவி, விசிடி, டிவிடின்னு புது கண்டுபிடிப்புகள் வந்தாலும் ,தியேட்டரில் போய் ஜனரஞ்சகமாக சினிமா பார்க்கும் சுகம் வராது.&lt;br /&gt;ஒவ்வொரு வயதிலும் சினிமா பார்க்கும் முறை வேண்டுமானால் மாறலாம், ரசிப்புத் தன்மை மாறாது. சின்ன வயசில் டூரிங் தியேட்டரில் பட்ம் பார்த்தப்போ என்ன ஒரு லயிப்பு. அப்போதெல்லாம் படம் சரியா புரியாது, அம்மா அக்காவெல்லாம் உருகி உருகி  படம் பார்க்கும்போது நமக்கு போரடிக்கும். மணலைக் கூட்டி கோபுரம் மாதிரி கட்டி, அதன் உச்சியை கொஞ்சம் தட்டி விட்டு சிம்மாசனம் மாதிரி செய்து அதில் ஏறி உக்காந்துக்கிறது. பின்னாடி இருந்து யாராச்சும் மறைக்குதுன்னு சொன்னாலும், சின்ன சிணுங்கல் சிணுங்கினால் போதும், அம்மா அவங்க கூட மினி சண்டை போட்டு அரியணையைத் தக்க வைத்துவிடுவாங்க. மறைக்குதுன்னு சொன்னவங்க மூச்சு காட்டாமல் தள்ளி உக்காந்து பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க. அவங்க வாண்டும் அதேதானே பண்ணியிருக்கும். இடைவேளை எப்போடா விடுவாங்கன்னு பார்க்க வேண்டியது, அப்போதானே முறுக்கு சுண்டல் எல்லாம் வரும். சாப்பிட்டு ஒரு குட்டித் தூக்கம் போட்டிருந்தால் படம் முடிஞ்சிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நிரந்தரத் தியேட்டர் வந்த பிறகு இந்த சுகம் போயிட்டுது ஆனாலும் இங்கே வேறே ஜாலி. திரையை ஒட்டி சின்ன மேடை இருக்கும். கூட்டம் அதிகமா இருக்கும் காலங்களில் அதுல உட்கார்ந்து பார்க்கும்போது, சிவாஜி எம்.ஜி.ஆர் எல்லோரும் கைக்கெட்டும் தூரத்தில் இருப்பாங்க!தரை டிக்கெட்டில் உட்கார்ந்து  `ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் தலைவர் விதவிதமா பாவாடை கட்டி வந்த சீன்களை உருக்கமா பார்த்து ரசிச்ச காலம்.&lt;br /&gt; மருத்துவக் கல்லூரி போனபிறகு வீட்லே நம்ம ஸ்டேட்டஸ் உசந்திட்டதாலே, பென்ச் டிக்கெட்டுக்கு புரமோஷன். அனாலும் தரையை ஏக்கத்தோடதான் பார்த்துக்குவேன், அங்கேதான் பால்ய தோழிகளெல்லாம் உக்கர்ந்திருப்பாங்க.&lt;br /&gt;கல்லூரி வந்த பிறகு சினிமா பார்க்கிற ஸ்டைலே மாறிடுச்சு. ஒவ்வொரு படத்துக்கும் குறிப்பிட்ட துணை செட் ஆயிடும். கமல் படம் சிலரோட, ரஜினி வேறு சிலரோட, பாரதிராஜா வேற க்ரூப் கூடன்னு செம டைட் செட்யூல். சளைக்காமல் படம் போயிடுவோம். யாராவது ஒருத்தர் கையில் ஐந்து ரூபா இருந்தா போதும், ரெண்டுபேரா கிளம்பிட வேண்டியது. பஸ் காசு 35+35 , எழுபது பைசா!!! சினிமாவுக்கு ரெண்டு ரூபா, கணக்கு சரியாயிடுச்சா?&lt;br /&gt;யாருக்காவது கெஸ்ட் வந்திட்டு போனால் பாக்கெட் மணி கிடைத்துவிடும், உடனே ஜூட்தான். படம் பார்த்துட்டு வந்து மெஸ்ஸில் வட்ட மேஜை மாநாடு போட்டு படத்தை அக்கு வேறு ஆணி வேறா அலசுறது. சில சமயம் பெரிய சண்டையில் போய் முடிஞ்சுடும். பூர்ணிமா ஜெயராம் அழகுதானா இல்லையான்னுகூட சண்டை போட்டு ஒரு மாசம் அறைத் தோழிகூட பேசாமல் இருந்தது கூட உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சந்தோஷமெல்லாம் ,காதல் என்ற மாயாவி பீடிக்கும் வரைதான். அதற்குப் பிறகு சொல்லாமல் சைட்டு கூட சினிமா போறதுதான் தலையாய வேலை. ஒருத்தருக்குத் தெரியாமல் அடுத்தவர் அவங்க அவங்க ஆளுங்ககூட கிளம்பிப் போய், ஒரே தியேட்டரில் முன்னும் பின்னுமாக உட்கார நேர்ந்து அசடு வழியும் நிகழ்ச்சிகள் ரொம்ப சாதாரணமாக நடக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்க காலத்திலெல்லாம், சினிமா தியேட்டர்தான் காதலர்களின் சொர்க்க வாசல். அநேகமா மருத்துவக் கல்லூரி ஜோடிகள் குறைந்தது பத்தாவது ஒவ்வொரு காட்சியிலும் இருப்பார்கள். இடையிடையே இந்த வாத்தியார்கள் வேறு படத்துக்கு வந்து தர்மசங்கடப் படுத்திடுவாங்க.&lt;br /&gt;படிச்சு முடிச்சு சென்னையில் செட்டில் ஆன காலத்தில்தான் சுகமாக சினிமா பார்த்ததாக தோணுது. அழகா டிக்கெட் புக் பண்ணிட்டு , சுகமா ஆட்டோவில் போய் இறங்கி, நமக்குன்னு நேர்ந்துவிட்ட சீட்டில் உட்கார்ந்து, ஏ.சி. தியேட்டரில் படம் பார்ப்பதே தனி சுகம்தாங்க&lt;br /&gt;.&lt;br /&gt;ஊரிலிருந்து யார் சென்னை வந்தாலும் உடனே படத்துக்கு டிக்கெட் எடுப்பதுதான் முதல் அஜெண்டா. நிறைய நேரங்கள் இரண்டாம் ஆட்டம் பார்த்துட்டு காலாற மவுண்ட் ரோடிலிருந்து வீடு வரை படம் பற்றி விவாதித்துக்கொண்டே நடப்பது நல்லா இருக்கும். இப்போகூட நான் சென்னை வருகிரேனென்றால் என் தம்பி ,முதல் காரியமாய் சினிமா டிக்கெட் தான் எடுப்பான், ரிட்டர்னுக்கு ட்ரெயின் டிக்கெட் கூட ரெண்டாம் பட்சம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு ரத்தத்தில் ஊறிப் போன சினிமா பார்க்கும் பழக்கம் ஈரோடு வந்த பிறகு ஏன் நசித்துப் போனது? சுகாதாரச் சீர்கேடான திரை அரங்குகள், முன்பதிவு இல்லாத அவலம், குடும்பத்தினர் ஆளுக்கு ஒரு புறம் அமரவேண்டிய ஸீட்டிங், இதையெல்லாம் பொறுத்துக் கொண்டாலும் உட்கார்ந்து பார்க்க முடியாத அளவு கமர்ஷியல்தனம் நிறைந்த படங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அழகிய தீயே; அழகி;  தவமாய் தவமிருந்து போன்ற படங்கள் எல்லாம் இத்தனை அசெளகரியங்களிலும் தியேட்டரில் போய் பார்க்க முடிந்தது அந்த படங்களின் வெற்றிதான்.இவ்வளவுதூரம் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிப்போனது சினிமா.&lt;br /&gt;&lt;br /&gt;யாராச்சும் சரியான `சினிமா கிறுக்கு’ன்னு சொன்னால் கோபமாய்த்தான் வரும். சினிமா பார்ப்பவர்களெல்லாம் அறிவில் கொஞ்சம் மட்டமானவர்கள் என்ற வியாக்கியானத்தை உடைய கோஷ்டி ஒன்று உள்ளது. சினிமா பார்ப்பவர்களின் அறிவு எதனால் குறையுமென்று அவர்களால் விளக்க முடிவதில்லை. இன்னொரு கோஷ்டி தமிழ்ப் படங்கள் பார்ப்பவர்களெல்லாம் காட்டான்கள் போலவும் ஆங்கில அல்லது பிற மொழிப் படம் பார்ப்பவர்களே அறிவு ஜீவிகள் என்பது போலும் பேசித் திரிவார்கள். மொழி வேறு அறிவு வேறுன்னு புரியாத அவர்களின் விமர்சனம் தேவையற்றது. என்னோட எழுத்துக்களிலும், பின்னூட்டங்களிலும் சினிமாவின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். என்னால் ஒரு விஷயத்தைப் புரிய வைக்க உதவும் அற்புதமான சாதனம் சினிமா, அதை வெளிக்காட்டிக் கொள்வதில் என்ன தவறு?&lt;br /&gt;தற்போதைய சினிமாக்களை முழுதுமாக உட்கார்ந்து பார்க்க முடிவதில்லை என்பது என் அங்கலாய்ப்பு, அது கூட எனது பார்வையின் கோணம் மாறியதால் இருக்கலாம். இப்போதைய இளைய தலைமுறையை குறிவைத்து எடுக்கப் படும் படங்கள், அடுத்த தலைமுறை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நமக்கு தோதாக இல்லாமலிருக்கலாம் என்பதுகூட ஒரு வாதம்தான்.&lt;br /&gt;`மன்மத ராசா மன்மத ராசா’ பாடலை என்னால் உட்கார்ந்து பார்க்க முடியவில்லை. ஆனால் என் மகன் ` தனுஷ் அண்ணா என்ன அழகா ஆடறாங்க’ன்னு சொன்னப்போ பார்வையின் கோணங்கள் மாறுவது புரிந்தது.&lt;br /&gt;சினிமாவிலிருந்து வாழ்க்கையைக் கற்றுக் கொள்ள வேண்டியதில்லை, வாழ்க்கையின் மாறுபட்ட வடிவங்களை அலசும் ஆரோகியமான மனம் இருந்தால் போதும். சினிமா என்பது சாமான்னியர்களுக்கு எட்டாத கனவு தேசமாக இருந்தபோது அதைத் தலையில் தூக்கி ஆடினார்கள். இப்போது சகலருக்கும் புரிந்த ஒன்றாகி , எவரும் பங்கேற்கலாம் என்ற நிலைமை வந்ததும் அதைத் தரையில் போட்டு மிதிக்கும் பாங்கு பெருகிவிட்டது.&lt;br /&gt;சினிமாவினால் வரும் சீரழிவுகள் சினிமாவிலிருந்தேவா வருகின்றது?  அதில் வரும் நிகழ்வுகள் தங்கள் பிரச்னைபோல் இருப்பதால் ஈர்க்கப்பட்டு அதுபோல் செய்தாலென்ன என்று முடிவெடுக்கும் அரை வேக்காடுகளின் அவசர புத்தி. அதுபோன்ற சங்கடங்களை உருவாக்கும் சமுதாயத்தின் முட்டுக் கட்டைகள்.&lt;br /&gt;நாட்டை ஆளும் தலைவர்களையே சினிமா மூலம்தான் இனம் கண்டுகொள்ளும் நிலைமையில்தான் இன்னும் நிறைய சமுதாயங்கள் இருக்கின்றன. அதில் நல்ல விஷயங்களைக் கொஞ்சமாவது சொல்ல வேண்டுமென்ற தார்மீகக் கடமையுணர்வு சேரன் போன்ற சிலருக்காவது இருக்கும்பட்சத்தில், சினிமா நல்ல மீடியம்தான்.&lt;br /&gt;ஆதலினால் நண்பர்களே-&lt;br /&gt;&lt;br /&gt;``நிறைய சினிமா பார்த்து&lt;br /&gt;நிறைவாய்  விமர்சனம் செய்து&lt;br /&gt;சேருங்கள் சீக்கிரம்&lt;br /&gt;சினிமாக் கிறுக்கர்களின் சபையில்’’&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15229466-113898829138681993?l=forusdear.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://forusdear.blogspot.com/feeds/113898829138681993/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15229466&amp;postID=113898829138681993&amp;isPopup=true' title='46 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/113898829138681993'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/113898829138681993'/><link rel='alternate' type='text/html' href='http://forusdear.blogspot.com/2006/02/blog-post_03.html' title='சினிமாக் கிறுக்கர்கள் சபை'/><author><name>தாணு</name><uri>http://www.blogger.com/profile/04865211166801373288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>46</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15229466.post-113890275075793729</id><published>2006-02-02T09:50:00.000-08:00</published><updated>2006-02-03T08:13:58.270-08:00</updated><title type='text'>கல்லூரியின் ஹிட் லிஸ்ட்</title><content type='html'>பள்ளிப் பருவத்து நினைவுகளும் சேஷ்டைகளும் ஒருவிதம் என்றாலும், கல்லூரியில் அடிக்கும் லூட்டிதான் ரொம்ப விசேஷமானது. அதிலும் மிக நீண்ட வருடங்கள் ( எங்கள் காலத்தில் ஆறரை வருடங்கள்) ஒரே கல்லூரியில் படிக்கும்போது பண்ணப்படும் குரும்புகள் எத்தனை வகை! மிசா சட்டம் அமுலுக்கிருந்த கால கட்டத்தில் தேர்வு நடந்ததால் என்போன்ற சாமான்யர்களுக்கும் சீட் கிடைத்தது. எங்கள் வகுப்பில் எல்லோருமே ஒரே பொருளாதாரத் தட்டில்தான் இருப்போம். எங்களுக்கு முந்திய, பிந்திய வகுப்பு மாணவர்களில் ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கும். நாங்கள் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதால் படிப்பதிலிருந்து குறும்புகள் வரை ஒரே தட்டில் இருக்கும். எல்லா வகுப்பு போலவும் படிப்பே பிரதானமான முன் பென்ச் மக்களை எங்கள் குழுவில் சேர்த்துக் கொள்வதில்லை. பசங்களே பரவாயில்லை என்னும்படி பெண்களாகிய எங்கள் குறும்புகள் இருக்கும். ஆனால் யாரையும் காயப்படுத்துவதில்லை, கலாய்த்துக் கொண்டே இருப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்கள் ஹாஸ்டல் கல்லூரியின் பின்புறத்திலேயே இருக்கும். எங்கள் அறையில் இருந்து பார்த்தால் கல்லூரி வராண்டாவில் நடப்பவை துல்லியமாகத் தெரியும், அவ்வளவு அருகாமை. சில விஷயங்களுக்கு நன்மையாக இருந்தாலும் , பல விஷயங்களுக்கு, இந்த அமைப்பு இடைஞ்சலாகவும் இருக்கும். நூலகம் சென்றுவரும் புத்தகப் புழுக்களுக்கு, இரவு எந்நேரமானாலும் திரும்புவது சுலபம். ஆனால் ஹாஸ்டலே வீடாக இருக்கும் எங்களுக்கு ரொம்ப பிரச்னை.சுதந்திரமாக அப்படி இப்படி இருக்க முடியாது. கல்லூரியில் சேர்ந்த புதிதில்தான் நிறைய பேர் சைக்கிள் ஒட்டக் கற்றுக் கொண்டோம். கல்லூரியைச் சுற்றி உள்ள சாலையில் செல்லாமல் பழக முடியாது. அதனால் வந்த வம்பு, வாத்தியாரின் ஹிட் லிஸ்ட்டில் எங்கள் பெயர் சேர்க்கப்பட்டது!(ஹிட் லிஸ்ட் என்றால் இந்த வருடம் யாரெல்லாம் பெயில் பண்ணப்படுவார்கள் என்பது பரீட்சைக்கு முன்னரே தேர்வு செய்யப்பட்டுவிடும் லிஸ்ட்) எதுக்காகத் தெரியுமா? புரொபஸர் நடந்து வந்து கொண்டிருந்த போது எதிரே சைக்கிளில் சென்ற அம்மணி இறங்கி வணக்கம் சொல்லவில்லை!! எப்படி சொல்ல முடியும்? இறங்கினால் ஏறத் தெரியாதே!!யாராவது ஏற்றித்தான் விடணும், வண்டி நிற்காமல் ஓடிக்கொண்டே எவ்வளவு நேரம்னாலும் செல்லும்! இதைப் போய் வாத்தியாரிடம் விளக்க முடியுமா? வைச்சாரு எங்களை தீவிரவாதிகள் லிஸ்ட்டில். ஆனாலும் நாங்க எப்படி ஆளுங்க? மூணுமாசம் சோறு தண்ணி இல்லாமல் படிச்சு பாஸ் பண்ணிட்டோம். அப்பாடி ஒரு கண்டம் தப்பிச்சோம்.( எங்க வீட்லேயெல்லாம் என்ன நிபந்தனை தெரியுமா? என்ன சேட்டை வேணா பண்ணிக்கோங்க, பெயில் மட்டும் ஆகக் கூடாது!) ஆனாலும் விதி எங்களை விடுவதாயில்லை. இரண்டாம் வருடம்,ஆய்வுக்கூடங்களில் டெமான்ஸ்ட்ரேஷன் நடக்கும்போது ஆசிரியரை சுற்றி கும்பலாக நிற்கும்போது, பின்னாடி நிற்பவர்களுக்கு சரியாகக் கேட்காது. என் வகுப்புத் தோழி ஒருத்தி, கொஞ்சம் குறும்பு கூடுதலாக உள்ளவள்; வேண்டுமென்று செய்தாளோ தற்செயலாகச் செய்தாளோ எட்டிப் பார்க்கும் முகமாக எதையோ பற்றிக் கொள்வதாக நினைத்து வாத்தியாரின் ஓவர் கோட்டைப் பிடித்து இழுத்துவிட்டாள். ஆனால் பலே அள், அவர் திரும்பும்போது சட்டென்று விலகி விட்டாள், மாட்டியவள் நான்! இந்த வருஷமும் ஹிட் லிஸ்ட். மறுபடி அதே கதை, வெறித்தனமாகப் படிச்சு பாஸாயிட்டோம்.( எங்க குழுவில் யார் சேட்டை பண்ணினாலும், எல்லார் பெயரும் மொத்தமாக லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டு விடும்) ரெண்டாம் கண்டம் தப்பிச்சாச்சு!&lt;br /&gt;இனிமேல் வாத்தியார்களிடம் ஜாக்கிரதையாக இருக்கணும்னு முடிவெடுத்து மூனாம் ஆண்டு நுழைந்தால், விதி வகுப்புத் தோழனின் மூலம் வந்தது! நாங்க பாட்டுக்கு `மாப்பிள்ளை பென்ச்’சில் உட்கார்ந்து எங்களுக்குள் `மகளிர் மட்டும்’ கதைகள் பேசி சிரித்ததைத் தப்பர்த்தம் பண்ணிக்கொண்டு சண்டைக்கு வந்துவிட்டான்(ர்). அதில் தெரிந்த நியாயமின்மைக்கு நீதி கேட்கும் முகமாக தோழியர் இடை புகுந்து, சின்ன கலாட்டாவாகி, வகுப்புக்கு செல்லாமல் வெளியிருப்பு போராட்டம்! அந்த வருஷ ப்ரொபஸர் ரொம்ப ஸ்டிரிக்ட். சண்டைக்கு மூல காரணம் நாங்களே என்று மனதில் பதிய விட்டு மறுபடி ஹிட் லிஸ்ட், மறுபடி அதே கதை.( நிஜமாகவே எல்லா வருடமும் ஒரே அட்டெம்ப்ட்டில் தேர்வான ஒரு சிலரில் நானும் ஒருத்தி, நம்புங்கப்பா)&lt;br /&gt;அப்பாடி ஒருவழியாக தப்பித்து மருத்துவமனை பக்கம் ஓடி வந்தாச்சு. எல்லா வருடத்து மாணவர்களும் கலந்து வகுப்புகளுக்கு செல்வதால், நம்மை விட கில்லாடியான ஆட்கள் அங்கே இருந்ததால் ,நம்ம சாயம் வெளுக்கலை. சின்னச் சின்ன குறும்புகள் செய்தாலும், பெரிய குறும்புகளுக்கு முன் காணாமல் போய்விட்டன. தனிப் பெரும்பான்மை கிடைக்காததால் சிறிது வருத்தம் என்றாலும் கொஞ்சம் அடக்கி வாசித்தோம்.&lt;br /&gt;ஆனாலும் நாலாம் வருட தேர்வுக்கு நான்கு நாட்களே இருந்த போது அப்பா திடீரென தவறிவிட்ட அதிர்ச்சி , தேர்வையே புறம் தள்ளும் சோகத்துக்கு கொண்டு போய்விட்டது. கண்டிப்பாக தேர்வெழுத முடியாது என்று நினைத்திருந்தபோது, ஏதோ பிரச்னையால் திடீர் ஸ்டிரைக் ஏற்பட்டு இரண்டு மாதங்களுக்குத் தேர்வே தள்ளி வைக்கப் பட்டது!!&lt;br /&gt;இறுதியாண்டு, இதுதான் எல்லா ரெக்கார்டுகளிலும்  வரும். அதனால் கொஞ்சம் பம்மிப் பதுங்கி வாலைச் சுருட்டிக் கொண்டோம்.ஆனால் எல்லா நண்பர்களின் ரிசல்ட்டையும் கேலிக்குள்ளாக்கும் விதமாக ஒரு பிரச்னையான ப்ரொபஸர். படிப்பிற்கும் தேர்வு முடிவுக்கும் சம்பந்தமே இல்லை என்னும் நிலை. எல்லோருமே மன அழுத்தத்துடன் க்ளினிகல் பரீட்சை சென்றோம். பெயிலானவுடன் பரீட்சை லீவுக்கு யார் யார் வீட்டுக்கு எப்போ போய் டேரா போடறதுன்னு பேச்சு வார்த்தை நடக்குது!ஆனால் பாருங்க,  வெளியிலிருந்து வந்த எக்ஸாமினர் நிலைமையின் தன்மையை  உணர்ந்து மார்க்குகளை அள்ளிப் போட்டு தகுதி வாய்ந்த மாணவர்களையெல்லாம் கடைத் தேற்றிவிட்டார்!!! எப்படியோ நாங்களும் மருத்துவர்களாயிட்டோம்!&lt;br /&gt;கல்லூரியின் வசந்த காலம்னா அது ஹவுஸ் சர்ஜன் பண்ணிய போதுதான். அந்த சமயத்திலும் கூட பசங்க என்னைச் சிக்கலில் மாட்டி விட்டுட்டாங்க! ஒரு பார்ட்டியின் போது எங்க HOD தன்னைப்பற்றிய உண்மையான விமர்சனங்களை வரவேற்பதாகச் சொன்னபோது எல்லோரும்  முகஸ்த்துதியாக அள்ளி வீசிக் கொண்டிருந்த போது, அவரின் அடுத்த பக்கத்தை சொல்லும்படியாகிவிட்டது, ஓவர் பாசாங்கைத் தாங்க முடியாமல். அவ்வளவுதான், course completion certificate தராமல் போயிடுவார்ன்னு பயம் காட்டி குழப்பிட்டாங்க. ஆனால் ஏதோ ஒரு வகையில் மற்ற எல்லோரையும் விட ஒளிவு மறைவின்றி பேசிய என்னிடம் அவர் கூடுதல் அன்போடு இருந்ததாகப் பட்டது!&lt;br /&gt;&lt;br /&gt;நாங்க பண்ணிய சேட்டைகளே இப்படி என்றால் ,எங்க பசங்க அட்டகாசத்துக்கு கேட்கணுமா? `ஒருதலை ராகம்’ படம்னு நினைக்கிறேன், பெண்கள் எல்லோரும் கும்பலா போயிட்டு வந்துகிட்டு இருக்கோம். ஹாஸ்டலுக்கு கொஞ்சம் முன்னாடி இருட்டா இருக்கும், அந்த இடத்தில் சாலையின் குறுக்கே யாரோ படுத்திருப்பது போல் இருந்தது. குடிபோதையா, பிணமா, எதுவுமே கணிக்க முடியாத மசமச இருட்டு. எல்லோருமே ஒருவித தயக்கத்தில் நின்றுகொண்டிருக்கும் போது கொஞ்சம் தைரியமான தோழி மெதுவாக அருகே சென்று குனிந்தாள். வீலென்று ஒரு சத்தம், எல்லோரும் ஆளுக்கொரு திக்கில் சிதறி ஓடினோம், என்ன நடந்தது என்று கூட யாருக்கும் புரியவில்லை. படபடப்பு நீங்கியதும் ஆளாளுக்கு கொஞ்ச தூரம் தள்ளி நின்று ஆராய்ந்து பார்த்தால், சாலையின் நடுவில் யாரோ உட்கார்ந்திருக்காங்க, குனிந்து பார்த்த தோழி பயப்படாமல் நிற்கிறாள். பயம் தெளிந்து மெதுவாக எல்லோருமாக பக்கத்தில் போய்ப் பார்த்தால், எங்கள் வகுப்பு நண்பர் ஒருவர் சிரித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார். நாங்களெல்லோரும் சினிமா போயிருப்பதைத் தெரிந்து கொண்டு, எங்களைக் குமைப்பதற்காக அப்படிச் செய்திருக்கிறார்கள். மெதுவாக அக்கம் பக்க புதர்களிலிருந்து மீதி நண்பர்கள் வந்து சேர்ந்தார்கள். அந்த வீலென்ற சத்தமும், எல்லோரும் சிதறி ஓடியதும் இன்று நினைத்தாலும், சிரிப்பை அடக்க முடிவதில்லை.&lt;br /&gt;இவர்களைக் கடுப்பேற்றுவதற்காகவே பெண்கள் மட்டும் குற்றாலம் சென்றோம், பழிக்குப் பழி!! எவ்வளவுதான் வீம்பும், சண்டையும், தகராறும் போட்டாலும், எங்களுக்குள் உள்ள அன்பும் உரிமையும் மற்ற வகுப்பில் உண்டா என்று சொல்லத் தெரியவில்லை.அதை சமீபத்தில் உனர்ந்து கொண்டோம்.&lt;br /&gt; 25 வருடங்கள் கழித்து போனவருடம் கொடைக்கானலில் get2gether போட்டோம், வகுப்பு நண்பர்கள் மட்டும், குடும்பத்தினர் நீங்கலாக. அதே அளவு நட்பு, அன்பு, புரிதல் எல்லாம் இத்தனை வருட இடைவெளிக்குப் பின்னும் இருந்தது கண்டு புளகாங்கித்துப் போனோம். குடும்பத்தினரை நீக்கிவிட்டு இதைகைய சந்திப்பு தேவையா என்று எல்லா தரப்பிலிருந்தும் விமர்சனங்கள்., கண்டனங்கள்; காதுகளைச் செவிடாக்கிக் கொண்டு நடத்தி முடித்தோம், மனதை நிறைத்துக்கொண்டு திரும்பி வந்தோம். (organise பண்ணிய ஆளு யாரு, நானாச்சே, சலசலப்புக்கெல்லாம் அஞ்சுவேனா)&lt;br /&gt;எதைப் பற்றி எழுதுவது என்ற முன்னேற்பாடின்றி உட்கார்ந்ததால், தோணியபடி எழுதிவிட்டேன், எல்லாமே `நட்புக்காக’த்தானே!&lt;br /&gt;``உள்ளம் என்பது ஆமை-அதில்&lt;br /&gt;உண்மை என்பது ஊமை;&lt;br /&gt;சொல்லில் வருவது பாதி-நெஞ்சில்&lt;br /&gt;உறங்கிக் கிடக்குது மீதி’’&lt;br /&gt;&lt;br /&gt;(சொன்னதை விட சொல்ல மறந்த கதைகள் ஏராளம்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15229466-113890275075793729?l=forusdear.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://forusdear.blogspot.com/feeds/113890275075793729/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15229466&amp;postID=113890275075793729&amp;isPopup=true' title='34 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/113890275075793729'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/113890275075793729'/><link rel='alternate' type='text/html' href='http://forusdear.blogspot.com/2006/02/blog-post_02.html' title='கல்லூரியின் ஹிட் லிஸ்ட்'/><author><name>தாணு</name><uri>http://www.blogger.com/profile/04865211166801373288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>34</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15229466.post-113881349079335168</id><published>2006-02-01T09:02:00.000-08:00</published><updated>2006-02-02T21:35:07.726-08:00</updated><title type='text'>பெண்களைக் காப்பாற்றுங்கள்</title><content type='html'>நாளிதழில் அடிக்கடி காணப்படும் செய்தி` பிறந்து சில மணிநேரமே ஆன குழந்தை குப்பைத் தொட்டியில் வீசப்பட்டது’-`பச்சிளம் குழந்தையின் சடலம் புதர் மறைவில் வீசப்பட்ட பரிதாபம்’ – இன்னும் சோகம் தாங்கிய சிசுக்களின் மரணப் பட்டியல். சமீப காலங்களில் இவை அளவுக்கு அதிகமாகக் கண்ணில் படுவதுபோல் ஒரு தோற்றம். இத்தைகைய சிசுக்கள் அநேகமாக, பெண்குழந்தைகள்தான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அடுத்த சோகமாக `அரசின் தொட்டில் குழந்தை திட்டத்தில் புதிய வரவு’களும் பெண்குழந்தைகளே.&lt;br /&gt;காலம் காலமாக பெண்சிசுக்கொலைகள் சில மாவட்டங்களின் பொதுச் சொத்தாக இருந்தது. அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், விழிப்புணர்வு இயக்கங்களும் கட்டுப் படுத்த முடியாத அளவு கொடூரமாக காணப்பட்ட நிகழ்ச்சிகள் இடையில் சற்று குறைந்தது போல் காணப்பட்டது. அரசும் தங்களின் அயரா உழைப்பின் மூலம் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வந்ததாக மார் தட்டிக் கொண்டது.. ஆனால் பெண் குழந்தை பிறப்பின் விழுக்காடு படிப்படியாகக் குறைந்து கொண்டேதான் வந்ததே ஒழிய இடையில் கூடியது போல் தெரியவில்லை. இப்போது மறுபடியும் பழைய நிலைக்கே சிசுக்கொலை விகிதம் கூடி வருகிறது. இடையில் நடந்தது என்னவாக இருக்கும்?&lt;br /&gt;மருத்துவ புரட்சியின் பலனாக இடையில் ஸ்கேன் என்ற மாயக் கண்ணாடி கிடைக்கப் பெற்றவுடன் கருவிலிருக்கும் குழந்தையின் செக்ஸ் கண்டுகொள்ளப்பட்டது. தங்களுக்கு வேண்டாத குழந்தையைக் கருவிலேயே அழித்துக் கொள்ளும் விஷயம் காதும் காதும் வைத்த மாதிரி அரங்கேறத் தொடங்கியது. கண்முன் ரத்தமும் சதையுமாகப் பிறக்கும் குழந்தையைக் கொல்வதைவிட, கண்மூடிய மயக்க நிலையில் அந்தக் குழந்தையைத் தவிர்த்துவிடும் வசதி எல்லோருக்கும் ரொம்ப செளகரியமான முறையாகப் போய்விட்டது. இந்தக் கால கட்டங்களில்தான் பெண் சிசுக்கொலை குறைந்தாலும், பெண்குழந்தை பிறப்பு அதிகரிக்காமல் போனது.&lt;br /&gt;இந்த வசதியால் வந்த வக்கிரம், மறுபடி மறுபடி கருத்தரிப்பது, ஸ்கேன் செய்து, மறுபடி கருக்கலைப்பு செய்வது என தொலைக்காட்சி சீரியல் போல் ஆக ஆரம்பித்தது. அரசு இயந்திரமும் எப்போதும் போல் விழுக்காடுகளை தோண்டித் துருவி விஷயத்தின் ஆழத்தைப் புரிந்துகொள்ளும்போது , சமுதாயத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் இதன் தாக்கம் புரையோடிப் போய்விட்டது. `கருவிலிருக்கும் குழந்தையின் பாலினம் கண்டறியப்படுவது சட்டப்படி குற்றம்’ என்று கண்டிப்பான நடைமுறை கொண்டு வந்ததும் , மறுபடி ஆரம்பிச்சிட்டாங்க சிசுக் கொலையை. ஆக! எந்த வகையானாலும் ,பெண்குழந்தை வேண்டாம் என்பதுதான் basic பிரச்னை.&lt;br /&gt;தன் இனம் வேண்டாமென்று வலுக்கட்டாயமாக முயற்சிகளை மேற்கொள்வதே ஒரு பெண்தான். அந்த அளவு பெண் குழந்தை மேல் வெறுப்பா? பெற்ற குழந்தையைக் கொல்ல அனுமதிக்கும் தாய் எப்படி ஒரு மனுஷத் தன்மையுள்ளவள் ஆவாள்?ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் அதை அனுமதிப்பவள் பெண்ணே அல்ல. இப்படி ஆயிரமாயிரம் கேள்விகளும் அதைவிட அதிகமான விமர்சனங்களும் தினமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. கருவில் அழித்தாலும், கண்முன்னே கள்ளிப் பால் கொடுத்து கொன்றாலும் அந்தப் பெண்ணின் மனம் சந்தோஷமா படப் போகிறது? சினிமாவுக்குப் போவதுபோல் சீரியல் பார்ப்பதுபோல், ஒரு குழந்தையை வயிற்றில் தாங்கி காவு கொடுப்பது இலகுவான விஷயமா? இத்தனையையும் தாண்டி ஏன் நடக்கிறது? சமுதாயம்தான் காரணம். `திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டைத் தடுக்க முடியாது’. பெண்களின் வளர்ப்பும் திருமணமும் சில சமூகங்களில் கணக்குப் போட்டு பார்க்க முடியாத எல்லைகளில் இருக்கிறது. அத்தைகைய வீடுகளில்தான் பெண்சிசுக் கொலையும் அதிகமாக இருக்கிறது. குறிப்பிட்ட சில மாவட்டங்கள் தவிர ஏனைய இடங்களில் இந்தப் பிரச்னை அதிகமாக இல்லை என்பதை மறுக்க முடியாது.&lt;br /&gt;என்னுடைய நண்பரின் பெண்ணுக்கு திருமணம் நிச்சயமாகி இருக்கிறது. ஒரே பெண்தான். சமீபத்தில் சில பொருளாதாரச் சிக்கல்களால் ஓரளவுதான் சீர் செய்ய முடியும் என்ற நிலை. மாப்பிள்ளை வீட்டார் பெருந்தன்மையுடன் உங்கள் பெண்ணுக்கு நீங்கள் செய்வது உங்கள் விருப்பப்படி என்று சொல்லிவிட்டனர். ஆனால் கொடுமையைப் பாருங்க! பெண்வீட்டு சொந்தங்கள் எல்லாம் சேர்ந்து, அதெப்படி விட்டுக் கொடுக்கலாச்சு, கார் கொடு, வீடு கொடு, இவ்வளவுக்கு குறைச்சலாக நகை போடக்கூடாது என்று ஏக கலாட்டா. மிகவும் படித்த, ஓரளவு நல்ல வசதி உள்ள ,ஒரு பெண் மட்டுமே உள்ள குடும்பத்தின் நிலை. இது ஏதோ ராமாயணக் காலத்துக் கதை அல்ல, நாலு நாளைக்கு முன்னால் நடந்த கதை. இதுவே ரெண்டாவதும் ஒரு பெண் இருந்து அதற்கும் சேமிக்க வெண்டிய நிலைமை இருந்தால், அந்த தகப்பனின் நிலை என்னவாகும்? படித்தவர்கள் நாம்தான் இதை மாற்ற பாடுபடவேண்டும், இது போன்ற பேச்சுகளுக்கு செவி கொடுக்கலாகாது என்பதெல்லாம் விவாதத்திற்கும் வலைப்பூ பதிவுகளுக்கும் சாத்தியமாகலாம். யதார்த்தம் என்பது வேறு. சமுதாயத்தின் ஆணிவேரை மாற்றாமல் மலர்களும் கனிகளும் இலைகளும் மாற முடியாது.&lt;br /&gt;இவ்வளவு ஆழமான பிரச்னையை, வெறும் `ஸ்கேன் பார்த்து செக்ஸ் சொல்லக்கூடாது’ என்ற சின்ன சட்டத்தால் மட்டும் சரி செய்ய முடியுமா? ஸ்கேனில் பார்க்கமாட்டாங்க, பிறந்ததும் பார்க்கத்தானே செய்வாங்க. அபார்ஷன் என்ற நிலையிலிருந்து சிசுக் கொலை என்ற காட்சி மாறல்தான் நடக்கும். ஜனத்தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக கருக்கலைப்பை சட்டமாக்கிவிட்டு, பெண்குழந்தைக்காக கருக்கலைப்பு செய்யக்கூடாது என்று sub-division போட்டால் இந்த பிரச்னையை எப்படித் தடுக்க முடியும்? கருக்கலைப்பு சட்டத்தையே ரத்து செய்தாலன்றி இதை மட்டும் கட்டுப்படுத்துவது எப்படி?&lt;br /&gt;இரண்டு மாதங்களுக்குள் குழந்தை வேண்டாமென்று கருக்கலைப்பு செய்வதை அனுமதிக்கும் போது, மனோ ரீதியாக, ஐந்து மாதத்தில் செய்யும் கருக்கலைப்பும் அதே கோணத்தில்தானே பார்க்கப்படும். அதன் மீது அதிகப்படியான பயமோ தயக்கமோ வருவதில்லையே?செக்ஸ் பார்த்து கருக்கலைப்பு செய்வது குற்றம் என அச்சுறுத்தும் அதே அரசு, ஐந்து மாத கருவையும் கலைக்கும் வீரியம் மிகுந்த மாத்திரைகளை மருந்துக் கடைகளில் சாதாரணமாக புழங்க அனுமதிப்பது எதைகைய முரண்பாடு? முறைப்படுத்தப்படாத போலி மருத்துவர்களிடம் அறைகுறையாக அபார்ஷன் செய்துகொண்டு அல்லலுறும் அபலைகளும் எத்தனை பேர்!&lt;br /&gt;இதையெல்லாம் தாண்டி தொட்டில் குழந்தைகளாக மாறும் குழந்தைகளின் எதிர்காலம் எப்படியிருக்கும்? `அநாதைகள்’ என்ற புதிய சமுதாயம் உருவாக இது அடிகோலுமோ?&lt;br /&gt;கேள்விகள் மண்டையைக் குடைந்தாலும், எந்த வகையில் நம் பங்கு இருக்கவேண்டும் என்பதே குழப்பமாகத்தான் இருக்கிறது.&lt;br /&gt;நேற்றைய என் பதிவில் சொன்னதுபோல், ``அழகை வழிபடுவதுபோல் உண்மையை வழிபடுவது அவ்வளவு எளிதன்று’’.&lt;br /&gt;பெண்கல்வி, வேலை வாய்ப்பில் பெண்களுக்கெ முதல் இடம் என்று பெண்களையே முன்னிலைப்படுத்தும் நிலைமை வராவிட்டால், பெண்களின் ஜனத்தொகை இன்னும் குறைந்து,பாஞ்சாலி ஸ்டைல் திருமணங்கள்தான் நடக்கும். இதை விளையாட்டுக்காகச் சொல்லவில்லை,உண்மையாகவே சொல்கிறேன். இப்போதே ஆண்:பெண் விகிதாச்சாரம் 4-5: 1 இருப்பதால்தான் இந்த அரசியல் சட்டங்களும் அச்சுறுத்தல்களும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15229466-113881349079335168?l=forusdear.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://forusdear.blogspot.com/feeds/113881349079335168/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15229466&amp;postID=113881349079335168&amp;isPopup=true' title='30 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/113881349079335168'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/113881349079335168'/><link rel='alternate' type='text/html' href='http://forusdear.blogspot.com/2006/02/blog-post.html' title='பெண்களைக் காப்பாற்றுங்கள்'/><author><name>தாணு</name><uri>http://www.blogger.com/profile/04865211166801373288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>30</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15229466.post-113868363772191282</id><published>2006-01-30T20:56:00.000-08:00</published><updated>2006-03-11T10:52:24.943-08:00</updated><title type='text'>காண்டேகரின் கிரெளஞ்சவதம்</title><content type='html'>``அன்பு செலுத்துவதென்றால் மலரோடு விளையாடுவது என்று நினைத்திருந்தேன்.அது மல்லிகையாக இல்லாவிட்டாலும் ரோஜாவாக இருக்கும்;ஒரு சமயம் ரோஜாவின் முள்பட்டுக் கையில் ரத்தம் வரலாம் என்பதற்குமேல் என் கற்பனை ஓடியதில்லை. இன்று அறிந்து கொண்டேன்;அன்பு செலுத்துவதென்றால் நெருப்போடு விளையாடுவது’’-&lt;br /&gt;காண்டேகரின் `கிரெளஞ்சவதம்’’ படித்தவர்களுக்கு இது மிகவும் பிடித்தமான மேற்கோளாக இருக்குமென்று நினைக்கிறேன். ரோஜாவை முள்ளுடன் பார்க்கும்போதெல்லாம் இந்த வரிகள் நினைவுக்கு வந்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் பக்கத்துக்கு பக்கம் வாழ்க்கையோடு இயைந்த தத்துவங்களைச் சலிப்புத்தட்டாமல் சொல்வதில் அவருக்கு இணை அவரே! அவரது படைப்புகளை மொழிபெயர்த்த கா.ஸ்ரீ.ஸ்ரீ. யின் திறமை அதைவிட சுகம். காண்டேகரின் நாவல் ஏதாவது இருக்கான்னு கடைகளில் விசாரிக்கும்போது, நிறைய சமயங்களில், அற்பமாக பார்த்த கடைக்காரர்கள் உண்டு. அநேக நேரங்களில் பெரிய கடைகளில் அவர்களை மட்டம் தட்டும் விதமாக காண்டேகர் பற்றி கேட்ட நாட்களும் உண்டு, கண்டிப்பாக இருக்காது என்ற தைரியத்தில்(நல்ல வேளையாக என்றும் மூக்குடை பட்டது இல்லை).ரொம்ப நாட்கள் அவரது புத்தகங்கள் சரிவரக் கிடைக்காமல் இருந்தது.சமீபத்தில் அல்லையான்ஸ் பதிப்பகம் அவரது புத்தகங்கள் அனைத்தும் மலிவுத் தொகுப்பாக போட்டிருந்தார்கள். வாங்கி ஹாலில் அலங்காரமாக அடுக்கிவிட்டேன். கிரெளஞ்சவதம் மட்டும்தான் வாசிக்க பொழுது இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் முதலில் வாசித்தபோது, காதலித்த நாட்களில், அர்த்தம் வேறுமாதிரி இருந்தது. சண்டை போடும் நாட்களில் மட்டும் இந்த வார்த்தைகள் கீதோபதேசம் மாதிரி காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும். அன்பு என்பதே மனிதர்களை நெருப்பில் வேகவிடும் கொடூரமான விஷயமாகத் தெரியும். காதல் கை கூடி வாழ்க்கையில் செட்டில் ஆனபிறகும் இந்த அன்பு செலுத்துவது நம்மைப் பாடாய்ப் படுத்திதான் வைக்கிறது.&lt;br /&gt;அன்பு என்ற வார்த்தை வரும்போதே , எதிர்பார்ப்பு என்ற துணையும் கூடவே வந்து விடுகிறது. ஒரு தலைப் பட்சமாக எதிர்பார்ப்புகளே அற்ற அன்பு செலுத்துவது ஞானிகளுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். நம்(என்) போன்ற சராசரிகளுக்கு சாத்தியப் படுவதில்லை. அதனால் வரும் சலிப்புகளும் சங்கடங்களும், இனிமேல் யாரிடமும் அன்பாகப் பழகவே கூடாது என்ற வீம்பை உருவாக்கும். ஆனால் அடுத்த நிமிடமே வேறு வகையில் அன்பு வயப்படுவது மனித இயல்பு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆண்கள் வேண்டுமானால் விதண்டாவாதமாக எதிர்பார்ப்புகளற்ற நேசத்துடன் இருப்பதாகக் காட்டிக் கொள்வார்கள். ஆனால் உண்மையில் பெண்களை விட பலவீனமானவர்கள் ஆண்களே. பெண்களின் possessivnessஐ கிண்டலடிக்க வேண்டுமானால் இந்த வாதம் பயன்படலாம். உண்மையில் கூடுதல் எதிர்பார்ப்புகள் அவர்களுடையதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே காண்டேகர் அன்பின் ஆழம் எதுவரை போய் நிற்கும்னு அழகா ஒரு கவிதையை மேற்கோளாகச் சொல்வார்:&lt;br /&gt;``முன்இணை யாகிய அன்றிலின்&lt;br /&gt;மோகங்கொள் ஆணினைக் கொன்றனை&lt;br /&gt;மன்நெடு நாள்இனி வாழ்கலை;&lt;br /&gt;வாழ்கலை! வாழ்கலை! வேடனே!’’&lt;br /&gt;வேடனின் அம்பு பட்டு ஆண் பறவை இறந்தது கண்டு பெண் பறவை இனி வெகுநாள் வாழப்போவதில்லை என்று வால்மீகி புலம்புவதை வெவ்வேறு மனிதர்களின் பார்வையில் வெவ்வேறு விதமாக பொருள் சொல்லியிருப்பார். கதை முழுவதிலும் வரும் இந்த பாடல் வரிகள் வால்மீகியின் உத்தமராம சரிதம் படிக்காமல் போனோமே என ஏங்க வைக்கும். சுலோ(கதை நாயகி)வின் எண்ண ஓட்டங்கள் ஒவ்வொரு வயது மாற்றத்திலும் நமக்குள்ளும் பரிணாம மாற்றமாக நிகழ்வது போன்றே இருக்கும். திலீபனும், அப்பண்ணாவும் அவர்கள் பாணியில் இந்த கவிதைக்கு கருத்துகொள்வது இன்னும் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கும். மூன்று கதாபாத்திரங்களின் எண்ண ஓட்டத்தில் மட்டுமே முழுக் கதையையும் நகர்த்தியிருப்பார். திடுக்கிடும் சம்பவங்களோ, கிளர்ச்சியூட்டும் வசனங்களோ இல்லாமல் யதார்த்தமான தத்துவங்களால் மட்டுமே கதை நகரும்.&lt;br /&gt;&lt;br /&gt;`ஒருவரிடம் ஆசை வைப்பதும்,வைக்காமல் இருப்பதும் மனிதர்கள் கையில் இல்லை. அன்பு காவியத்தைப் போன்றது. அதை நாமாக நினைக்கும் போது செய்ய முடியாது’- ரொம்ப சத்தியமான வார்த்தைகள். அதனால்தான்,சலனமில்லாமல் செல்லும் வாழ்க்கைச் சக்கரம் திடீர்க் காதல்களால் நிலை தடுமாறிவிடுகிறது. கடிவாளத்தைத் திறம்பட பிடித்தவர்கள் ஊர் போய்ச் சேர்வார்கள், தவற விடுபவர்கள் திக்கற்று கஷ்டப்படுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;``ஒருவன் நூறு அழகிய நாவல்கள் எழுதிவிடலாம்.சுய சரிதம் ஒரே தடவைதான் எழுத வேண்டுமென்றாலும்கூட, அது அவனால் ஆகாத வேலை.அழகை வழிபடுவதுபோல் உண்மையை வழிபடுவது அவ்வளவு எளிதல்ல.எந்தப் பெண்ணும் தன் யதார்த்தமான சுய சரிதையை எழுத முடியாது என்பதுதான் உண்மை’’- சுய சரிதை என்ன சின்ன மலரும் நினைவுகள் கூட எடிட் செய்யப்பட்டே எழுதப்படும்!!!&lt;br /&gt;&lt;br /&gt;கிரெஞ்சவதம் வாசித்து முடித்த அன்றே அது பற்றி எழுத வேண்டுமென்று கை அரித்தது. ஆனால் நிறைய பேர் வாசிக்காமலே போய்விடலாம். எப்படியும் ஒருநாள் மதி `நட்சத்திரமாக விருப்பமா’ என்று கேட்பார்கள், அப்போது எழுதிவிட வேண்டும் என்று ஒதுக்கி வைத்துவிட்டேன். நேரம் பற்றாமல் போய்விட்டது, நன்கு தயார் செய்து எழுதியிருந்தால் இன்னும் நிறைய விஷயங்கள் பற்றி சொல்லியிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;காதலும், அன்பும் மட்டுமே பற்றி சொல்லியுள்ளேன். திலீபனின் புரட்சிக் கருத்துக்கள் பற்றி ஒரு வரிகூட சொல்லவில்லையே என்று ரெண்டு மூணுபேர் முணுமுணுப்பது கேட்கிறது. `புரட்சியின் மறுபெயர் காதல்’ என்பதுதானே திலீபனின் வாதம்!&lt;br /&gt;கவுண்டமணி-செந்தில் பாணியில் வாழைப்பழ ஜோக்தான் -``அதுதாண்ணே இது’’!!&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணதாசனின் கவிதைகள் எப்படி எல்லா சூழலுக்கும் ஏற்ற மாதிரி இருக்குமோ, அதே போலவே இவரது தத்துவ விளக்கங்களும் காலம் கடந்து சுவை கூட்டுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15229466-113868363772191282?l=forusdear.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://forusdear.blogspot.com/feeds/113868363772191282/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15229466&amp;postID=113868363772191282&amp;isPopup=true' title='39 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/113868363772191282'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/113868363772191282'/><link rel='alternate' type='text/html' href='http://forusdear.blogspot.com/2006/01/blog-post_31.html' title='காண்டேகரின் கிரெளஞ்சவதம்'/><author><name>தாணு</name><uri>http://www.blogger.com/profile/04865211166801373288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>39</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15229466.post-113859614787782641</id><published>2006-01-29T20:35:00.000-08:00</published><updated>2006-01-31T22:15:36.030-08:00</updated><title type='text'>சேரன் தந்த பாதிப்பு</title><content type='html'>தமிழ்ப்படங்கள் மனதில் தாக்கங்களை உண்டாக்குவது எப்போதோ ஒருதரம்தான். அந்த வகையில் சேரனின் `&lt;span style="color:#000099;"&gt;ஆட்டோகிராப்&lt;/span&gt;’ `&lt;span style="color:#000099;"&gt;தவமாய் &lt;/span&gt;&lt;span style="color:#000099;"&gt;தவமிருந்து’&lt;/span&gt; இரண்டுமே மைல் கற்கள்தான்.&lt;br /&gt;ஆண்களின் மலரும் நினைவுகள் போல் பெண்களும் மலர்ந்த நினைவுகளைச் சொல்ல ஆரம்பித்தால் எவ்வாறு ஏற்றக்கொள்ளப்படும் என்ற விவாத அரங்குக்குள் செல்ல விரும்பாமல் எனக்குள் முகிழ்த்த இளமை நினைவுகள் சிலவற்றை மட்டும் முதல் பதிவாக்கியுள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பாவாடை அணிந்த காலங்களில் ஆண்பிள்ளைகளுடன் சரிக்குச் சமமாக கோலி விளையாடுதல், பம்பரம் விடுதல்,கட்டக்குச்சி அடித்தல்(எங்க ஊர் கிரிக்கெட்) என்று ஊர் சுற்றிவிட்டு அம்மாவிடம் செமத்தியாகத் திட்டு வாங்கிய நாட்கள், இப்போது நினைக்கும் போது சிரிப்பு வர வைக்கிறது. முன்னாடி ரெண்டு அண்ணன்களும் பின்னாடி தம்பியுமாக ஆண் பிள்ளைகளுடனேயே வளர்ந்ததால் பெண்தோழிகளே அந்த வயதில் எனக்கு இல்லாமல் போய்விட்டது. அதிலும் என் தம்பியின் இம்சை தாங்க முடியாதது. கோபம் வந்தால் என்னைத் திட்ட அவன் சொல்லும் பெயர் `&lt;span style="color:#ff0000;"&gt;தன்வந்திரி&lt;/span&gt;’. அந்த வயதில் அது மருத்துவமேதையின் பெயரென்று புரியாததால் ஏதோ அசிங்கமாகத் திட்டுவதாக நினைத்து அவனுடன் மல்லுக் கட்டியிருக்கிறேன். நான் டாக்டர் ஆவதற்கு அவனின் முன்மொழிதல் அதுவென்று இருவருக்கும் புரியாப் பருவம்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டின் அருகில் இருக்கும் சிவன் கோவிலில் மணி அடிக்க ஏக போட்டியாக இருக்கும். எங்க ஓதுவார் தாத்தா அழகாகப் பாடுவார். அது திருவாசகமா, சமஸ்கிருதமான்னு கூட இன்னைக்கு வரை தெரியாது. அது முடிஞ்சதும் சுண்டல் கொடுப்பாங்களே அதுதான் ஸ்பெஷல். எங்க ஐயர்வாள் இருக்காரே, அவரை மாதிரி பொருளாதார நிபுணரை எங்கேயும் பார்க்க முடியாது. உள்ளங்கை முழுவதையும் அகலத் திறந்து பிரசாதத்தை அள்ளுற அழகைப் பார்த்தா வயிறே ரொம்பிட்ட மாதிரி இருக்கும். நம்ம கையில் பிரசாதம் விழும்போது கரெக்டாக பத்து சுண்டல்கூட இருக்காது!! அவ்வளவு நேர்த்தியா கொஞ்சூண்டு பிரசாதத்தை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்திடுவார். எங்க வீட்டு கல்யாணம் எல்லாம் அவர் நடத்தி வைத்ததாகத்தான் இருக்கும். (போனதரம் சென்ற போது வேறு ஒரு ஐயர் வந்திருந்தார். முதுமையின் தள்ளாமையில் வீட்டோடு தங்கிவிட்டதாகக் கேள்விப் பட்டேன்.) மணி அடிக்கும் தகராறில் மத்தியஸ்தம் செய்ய வந்த தாத்தா ஒருவர் எங்களைத் திட்டிவிட, அவர் வீட்டுக்குத் திரும்பும்போது இருட்டில் கும்பலாக நின்று மண்ணை வாரி வீசியதை கொஞ்சம் அவஸ்தையுடன் நினைவுபடுத்திக் கொள்கிறேன்.(சிறு வயதில் இதெல்லாம் சகஜமப்பா)&lt;br /&gt;எங்க ஊர் ரேஷன் கடையில் வரிசையில் நிற்பது ரொம்பக் கொடுமையான விஷயம். நிவாரண நிதி வாங்கச் சென்று விபரீதம் விளைந்த தன்மையிலேயே எங்க ரேஷன் கடை நிகழ்ச்சிகள் இருக்கும். பெரிய தலைகளெல்லாம் எங்களை மாதிரி குட்டீஸை இடித்து தள்ளி சவட்டிவிடுவார்கள். எனக்குப் பிடிக்காத வேலை அது. ஆனாலும் வீட்டில் சீனியாரிட்டி படி என் முறை வந்தபோது தம்பியிடம் தள்ளிவிட முயன்று தோற்றேன். `வயதுக்கு வருதல்’ பற்றி வகுப்புத் தோழியருக்கெல்லாம் பயமும் குழப்பமும் இருந்த காலத்தில், எப்போதடா நான் வயசுக்கு வருவேனென்று எதிர்பார்த்த ஆள் நானாகத்தான் இருந்திருப்பேன். எங்க வீட்டில் வயசுக்கு வந்திட்டா கடைக்கெல்லாம் போக வேண்டியதில்லை. ரேஷன்கடைக்குத் தம்பிதானே போவான்!! பெண்ணாயிருப்பதில் இது போன்ற சின்னச் சின்ன சலுகைகளும் கிடைக்கும்.&lt;br /&gt;அண்ணன்கள் அக்காக்களெல்லாம் அப்பாவிடமிருந்து நாலடியாவது தள்ளி நின்றுதான் பேசுவார்கள், அவ்வளவு பயமும் மரியாதையும். அப்பாகூடவே உக்கார்ந்து கதை பேசும் உரிமையும் செல்லமும் எனக்கும் தம்பிக்கும்தான் உண்டு. பண்டிகைக் காலங்களிலும் விசேஷங்களிலும் ஆண்கள் பந்தியில் அப்பாவுடன் அமர்ந்து சாப்பிடும் ஒரே பெண் நான்தான். பெண்கள் எல்லோரும் அடுப்படி சமையலிலும், அதன்பின் கூட்டமாக அமர்ந்து கதை பேசுவதிலும் பிஸியாக இருக்கும்போது நான்மட்டும் அப்பா அண்ணன்களுடன் சீட்டு விளையாடுவேன். அப்பாவின் மறைவுக்கு பின்னும்கூட என் சகோதரர்களுக்கு இன்றுவரை நான்தான் செல்லம், இன்னும் அதே ஆண்கள் பந்தி, சீட்டு விளையாட்டுதான். பெரிய குடும்பத்தின் கடைக்குட்டி என்பது ஒரு சுகம்தான்.&lt;br /&gt;வைகாசி விசாகம் என்பது திருச்செந்தூரின் முக்கிய திருவிழா. அதற்கு மதுரை வரையிலிருந்து கூட வண்டி கட்டிக் கொண்டு வருவார்கள்.அழகான கூண்டு வண்டிகள்.(நேற்றுதான் கரகாட்டக்காரன் படத்தில் வந்த அதே மாதிரி வண்டியை மகளுக்கு அறிமுகப் படுத்தினேன்) சாயங்கால நேரத்தில் வாசலில் தண்ணீர் தெளித்து அதில் சாய்வு நாற்காலிபோட்டு அப்பா உட்கார, நாங்கள் காலடியில் தென்னங்கீத்தில் அமர்ந்து வண்டிகளை எண்ணுவோம். விடியவிடிய வண்டி போய்க்கொண்டே இருக்கும்.வருஷம் தவறாமல் இப்படி எண்ணுவது எங்களுக்கு விசாகத்தின் அங்கமும் அடையாளமும். பேருந்துகளின் பெருக்கம் இத்தைகைய பாரம்பரிய சந்தோஷங்களைத் தொலைத்துவிட்டது. திருச்செந்தூரில் மாறிமாறி சித்திரைத் திருவிழா, வைகாசி விசாகம், ஆவணித்திருவிழா என்று மாதம் ஒரு சிறப்பு இருக்கும். ஆனால் எங்க ஊரிலிருந்து செந்தூர் செல்ல பஸ்ஸில் இடம் கிடைக்காது. கும்பலாக ரயில்வே லைனில் நடப்பது ரொம்ப ஜாலி விஷயம். ரெண்டு தண்டவாளத்திலும் ஒருவர் நடந்துகொண்டு கையை கோர்த்துக் கொண்டால் நடக்கும் அலுப்பே தெரியாது. யார் காலைக் கீழே ஊன்றாமல் வர்றாங்கன்னு போட்டி வேறே இருக்கும்.&lt;br /&gt;பொங்கல், தீபாவளின்னா வாசல் அடைத்து கோலம் போடுவது பெரிய கொண்டாட்டம். அதிலும் நான்தான் கோலத்தில் ஸ்பெஷலிஸ்ட். எனக்கும் அக்காவுக்கும் பத்து வயதுக்கு மேல் வித்தியாசம் என்பதால் எஞ்சோட்டுப் பொண்ணுங்களே போட்டிக்குக்கூட யாருமில்லை. அதனால் எங்க வீட்டுக்குப் போக பக்கத்துல சொந்தக்காரங்க வீட்டுக்கும் நான் தான் போடுவேன். எல்லோரும் தூங்கப் போயிட்டாலும் கடைசி வரை எங்க அப்பா பெஞ்ச் போட்டு துணைக்குப் படுத்திருப்பாங்க. எங்க வீடே போலீஸ் ஸ்டேஷன் முன்னாடிதான், பயமே கிடையாது, ஆனாலும் துணைக்கு இருப்பாங்க. உண்மையாக எங்க வீட்டுக்கு கதவே கிடையாது. இது பற்றி சமீபத்தில் என் நண்பர் ஒருவரிடம் சொல்லிக் கொண்டிருந்தபோது அவர் அடித்த கிண்டல் `குடும்பத்தை உருவாக்குறதுக்குப் பதிலா ஒரு கிராமத்தையே உருவாக்கி வைச்சிருக்காரு, அங்கே திருட வர்றவன் எதைத் தூக்கிட்டுப் போக முடியும்’ன்னு. அடிக்கடி நான் கல்யாணம்,காது குத்து, இழவுன்னு ஊருக்கு கிளம்பினாலும் இதே கிண்டல் தொடரும்` கிராமம்னு இருந்தா நாலு நல்லது கெட்டது நடந்துகிட்டே தானே இருக்கும். இதிலே என்ன ஸ்பெஷல் இருக்கு. இதுக்கு அலையிறதிலேயே வாழ்க்கை ஓடிடப் போகுது’ என்பார்.&lt;br /&gt;எங்க ஊர் சினிமா தியேட்டர் பற்றி சொல்லாட்டி பதிவே முற்றுப் பெறாது. எங்க வீட்டிலெல்லாம் நான் மருத்துவக் கல்லூரி போகும் வரை மண்ணெண்ணெய் விளக்குதான். அதில் வீட்டுப் பாடம் படிப்பது சிரமம் என்பதால் காலையில்தான் படிப்பு. அதனால் சாயங்காலத்துக்கு மேல் எல்லோரும் சுதந்திரப் பறவைகள். சுழற்சி முறையில் வீட்டிலிருந்து யாராவது சினிமாவுக்கு போவாங்க, படிக்கத் தேவையில்லாத வாண்டுகள் தினமும் அவங்க கூட தொத்திக்குவோம். வாரத்தில் எப்படியாவது ஏழுநாள் படம் பார்த்திடுவோம். தியேட்டரில் சீசன் டிக்கெட் முறை செயல்படுத்தினால் நன்றாக இருக்குமென்று கூட யோசித்துக் கொள்வோம், யாரும் நடைமுறைப் படுத்தவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ ரெண்டு பழைய நினைவுகளை அசைபோடலாம்னு ஆரம்பிச்சா, நிப்பாட்ட முடிய மாட்டேங்குது!!! ஒரு துளியே இவ்வளவு எழுதத் தூண்டுதுன்னா எங்க கதைக்கு ஒரு பிலிம் ரோல் பத்தாது போலிருக்கே. சீரியல் சினிமாதான் எடுக்கணும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15229466-113859614787782641?l=forusdear.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://forusdear.blogspot.com/feeds/113859614787782641/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15229466&amp;postID=113859614787782641&amp;isPopup=true' title='57 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/113859614787782641'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/113859614787782641'/><link rel='alternate' type='text/html' href='http://forusdear.blogspot.com/2006/01/blog-post_30.html' title='சேரன் தந்த பாதிப்பு'/><author><name>தாணு</name><uri>http://www.blogger.com/profile/04865211166801373288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>57</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15229466.post-113794874735531759</id><published>2006-01-22T08:39:00.000-08:00</published><updated>2006-01-31T07:16:30.813-08:00</updated><title type='text'>திருப்பரப்பு அருவி</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/3608/1351/1600/DSC02663.jpg"&gt;&lt;img style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/3608/1351/320/DSC02663.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/3608/1351/1600/DSC02661.0.jpg"&gt;&lt;img style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/3608/1351/320/DSC02661.0.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/3608/1351/1600/DSC02661.jpg"&gt;&lt;/a&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/3608/1351/1600/DSC02686.jpg"&gt;&lt;/a&gt;புது வருடம் பிறந்ததிலிருந்தே ஒரே ஊர் சுற்றல்தான். பிரயாண அனுபவங்கள் பற்றியே ஆறேழு பதிவுகள் போடலாம் போல. ஆனாலும் போனவருடத்தின் கடைசி நாள் சென்றதிருப்பரப்பு அருவி ரொம்ப பிடிச்சிருந்தது.தமிழகத்தின் தென் கோடியில் உள்ள சிறிய, அழகான அருவி. நாகர்கோவிலில் இருந்து வந்தால் சுமார் 40 கி.மீ. தூரம் இருக்குமென்றார்கள். நாங்கள் திருநெல்வேலி தடத்தில் வந்ததால் ஆரல்வாய்மொழி கணவாய் வழியாக சென்றோம். ரோடு ரொம்ப மோசமாக இருந்தாலும்கூட சுற்றிலும் தெரிந்த இயற்கை வனப்புகள் சோர்வு தெரியாமல் செய்துவிட்டது. மரகதப் பச்சை விரித்த வயல்களும், தண்ணென்ற நிழல் பரப்பிய ரப்பர் தோட்டங்களும், கூடவே ஓடி வந்த வாய்க்கால்களும்-கொள்ளையோ கொள்ளை அழகு. மிக சமீபத்துக்கு போகும்வரை கூட அருவி இருக்கும் சுவடே தெரியவில்லை. மிகச் சின்ன அருவி,ஆனாலும் அதிலிருந்து விழும் நீரின் வேகம் அதிகம்தான். நீர் விழும் இடத்தில் அழகாக சிமெண்ட் தரை கட்டி விடப்பட்டுள்ளது. வழுக்கி விழும் அபாயமில்லை;காலில் முள்ளோ கண்ணாடித் துண்டுகளோ குத்தும் பயமில்லை; மேலிருந்து கற்களோ பாறையோ விழும் அபாயமுமில்லை. அருகிலேயே சின்ன நீச்சல் குளம் கட்டி விட்டிருக்கிறார்கள். அருவியின் சீற்றத்துக்கு பயந்த சின்ன வாண்டுகள் அதில் விளையாடிக் கொண்டிருக்கின்றன. அருவியின் நடை தளர்ந்து அமைதியான ஆறாக இறங்கி ஓடும் இடத்தில் ஏகப்பட்ட சினிமா படப்பிடிப்புகள் நடந்திருப்பது பார்த்த கணத்தில் புலனானது. `கடலோரக் கவிதைகள்’ முதல் `ஆண் பாவம்’ உள்ளிட்ட பல படங்களை நினைவு கூர்ந்தோம். அவரவர் சினிமா அறிவைப் பொறுத்து ஏகப்பட்ட சினி க்விஸ்கள் அரங்கேறியது.சிறு குழந்தைகள், பெற்றோர், பெரியோர் என்ற பலதரப்பட்ட கூட்டத்துடன் செல்வதற்கு ஏற்ற பாதுகாப்பான அருவியாகத் தெரிகிறது. அருகிலேயே படகுத் துறை, பெரிய இந்து வழிபாட்டுத்தலம் , சின்ன அணைக்கட்டு போன்ற அமைப்பு என சிறந்த பொழுது போக்கு இடமாக உள்ளது.கொல்லிமலை அருவி, ஏற்காடு கிள்ளியூர் அருவி,பாபநாசம் பாணதீர்த்தம் அருவி போன்றவை கிளர்ச்சியூட்டும், அட்வென்ச்சர் தனமான அருவிகள். ஆனால் திருப்பரப்பு `குடும்ப அருவி’ன்னு சொல்லலாம். இந்த பதிவு எழுத எழுதவே `நான் பார்த்த அருவிகள்’ன்னு ஒரு தொடரே போடலாம் போல் நிறைய சரக்கு கைவசம் இருப்பது நினைவுக்கு வருகிறது.எல்லோருக்கும் காலம் கடந்து சமர்ப்பிக்கும் என் `புத்தாண்டு வாழ்த்துக்கள்’&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15229466-113794874735531759?l=forusdear.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://forusdear.blogspot.com/feeds/113794874735531759/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15229466&amp;postID=113794874735531759&amp;isPopup=true' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/113794874735531759'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/113794874735531759'/><link rel='alternate' type='text/html' href='http://forusdear.blogspot.com/2006/01/blog-post_113794874735531759.html' title='திருப்பரப்பு அருவி'/><author><name>தாணு</name><uri>http://www.blogger.com/profile/04865211166801373288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15229466.post-113773784821047484</id><published>2006-01-19T20:52:00.000-08:00</published><updated>2006-01-19T22:17:28.600-08:00</updated><title type='text'>திருப்பரப்பு அருவி</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/3608/1351/1600/DSC02661.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/3608/1351/320/DSC02661.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/3608/1351/1600/DSC02686.jpg"&gt;&lt;img style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/3608/1351/320/DSC02686.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;புது வருடம் பிறந்ததிலிருந்தே ஒரே ஊர் சுற்றல்தான். பிரயாண அனுபவங்கள் பற்றியே ஆறேழு பதிவுகள் போடலாம் போல. ஆனாலும் போனவருடத்தின் கடைசி நாள் சென்ற&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;திருப்பரப்பு அருவி&lt;/span&gt; ரொம்ப பிடிச்சிருந்தது.&lt;br /&gt;தமிழகத்தின் தென் கோடியில் உள்ள சிறிய, அழகான அருவி. நாகர்கோவிலில் இருந்து வந்தால் சுமார் 40 கி.மீ. தூரம் இருக்குமென்றார்கள். நாங்கள் திருநெல்வேலி தடத்தில் வந்ததால் ஆரல்வாய்மொழி கணவாய் வழியாக சென்றோம். ரோடு ரொம்ப மோசமாக இருந்தாலும்கூட சுற்றிலும் தெரிந்த இயற்கை வனப்புகள் சோர்வு தெரியாமல் செய்துவிட்டது. மரகதப் பச்சை விரித்த வயல்களும், தண்ணென்ற நிழல் பரப்பிய ரப்பர் தோட்டங்களும், கூடவே ஓடி வந்த வாய்க்கால்களும்-கொள்ளையோ கொள்ளை அழகு. மிக சமீபத்துக்கு போகும்வரை கூட அருவி இருக்கும் சுவடே தெரியவில்லை. மிகச் சின்ன அருவி,ஆனாலும் அதிலிருந்து விழும் நீரின் வேகம் அதிகம்தான். நீர் விழும் இடத்தில் அழகாக சிமெண்ட் தரை கட்டி விடப்பட்டுள்ளது. வழுக்கி விழும் அபாயமில்லை;காலில் முள்ளோ கண்ணாடித் துண்டுகளோ குத்தும் பயமில்லை; மேலிருந்து கற்களோ பாறையோ விழும் அபாயமுமில்லை. அருகிலேயே சின்ன நீச்சல் குளம் கட்டி விட்டிருக்கிறார்கள். அருவியின் சீற்றத்துக்கு பயந்த சின்ன வாண்டுகள் அதில் விளையாடிக் கொண்டிருக்கின்றன. அருவியின் நடை தளர்ந்து அமைதியான ஆறாக இறங்கி ஓடும் இடத்தில் ஏகப்பட்ட சினிமா படப்பிடிப்புகள் நடந்திருப்பது பார்த்த கணத்தில் புலனானது. `கடலோரக் கவிதைகள்’ முதல் `ஆண் பாவம்’ உள்ளிட்ட பல படங்களை நினைவு கூர்ந்தோம். அவரவர் சினிமா அறிவைப் பொறுத்து ஏகப்பட்ட சினி க்விஸ்கள் அரங்கேறியது.&lt;br /&gt;சிறு குழந்தைகள், பெற்றோர், பெரியோர் என்ற பலதரப்பட்ட கூட்டத்துடன் செல்வதற்கு ஏற்ற பாதுகாப்பான அருவியாகத் தெரிகிறது. அருகிலேயே படகுத் துறை, பெரிய இந்து வழிபாட்டுத்தலம் , சின்ன அணைக்கட்டு போன்ற அமைப்பு என சிறந்த பொழுது போக்கு இடமாக உள்ளது.&lt;br /&gt;கொல்லிமலை அருவி, ஏற்காடு கிள்ளியூர் அருவி,பாபநாசம் பாணதீர்த்தம் அருவி போன்றவை கிளர்ச்சியூட்டும், அட்வென்ச்சர் தனமான அருவிகள். ஆனால் திருப்பரப்பு `குடும்ப அருவி’ன்னு சொல்லலாம். இந்த பதிவு எழுத எழுதவே `நான் பார்த்த அருவிகள்’ன்னு ஒரு தொடரே போடலாம் போல் நிறைய சரக்கு கைவசம் இருப்பது நினைவுக்கு வருகிறது.&lt;br /&gt;எல்லோருக்கும் காலம் கடந்து சமர்ப்பிக்கும் என் `புத்தாண்டு வாழ்த்துக்கள்’&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15229466-113773784821047484?l=forusdear.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://forusdear.blogspot.com/feeds/113773784821047484/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15229466&amp;postID=113773784821047484&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/113773784821047484'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/113773784821047484'/><link rel='alternate' type='text/html' href='http://forusdear.blogspot.com/2006/01/blog-post.html' title='திருப்பரப்பு அருவி'/><author><name>தாணு</name><uri>http://www.blogger.com/profile/04865211166801373288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15229466.post-113558991070037247</id><published>2005-12-26T01:36:00.000-08:00</published><updated>2005-12-26T01:38:30.733-08:00</updated><title type='text'>கருப்பு ஞாபகங்கள்</title><content type='html'>கடந்த வருடம் நடந்த&lt;br /&gt;கசப்பான நிகழ்ச்சிகள்..&lt;br /&gt;&lt;br /&gt;கணப்பொழுது நினைத்துப் போகும் நம்&lt;br /&gt;கண்களுக்கே கண்ணீர் நிற்கவில்லை&lt;br /&gt;கணப்பொழுதுகூட மறக்காத நெஞ்சங்களுக்கு?&lt;br /&gt;கண்ணீர் வற்றி இதயமே வறண்டிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி என்பது&lt;br /&gt;நாலுபுறமிருந்தும் வேண்டியதுதான்&lt;br /&gt;ஆனால் மனிதர்களை&lt;br /&gt;நாராய்க் கிழித்துப்போட்டு வரவேண்டுமா?&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீரங்கமோ கும்பகோணமோ&lt;br /&gt;ஸ்ரீநகரோ நாகையோ&lt;br /&gt;இயற்கை அன்னை மனம்வைத்து&lt;br /&gt;இனியாவது இரக்கம் காட்டட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தில்லியோ திருநெல்வேலியோ&lt;br /&gt;பீகாரோ பீளமேடோ&lt;br /&gt;மனித மனங்கள் மனம்திருந்தி&lt;br /&gt;வன்முறையை மறுதலிக்கட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த காலங்களின் கறுப்பு தினங்களுக்கு&lt;br /&gt;அஞ்சலியோடு விடைகொடுத்துவிட்டு&lt;br /&gt;வரப்போகும் புத்தாண்டு&lt;br /&gt;இருண்ட இதயங்களில் ஒளிஏற்றட்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15229466-113558991070037247?l=forusdear.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://forusdear.blogspot.com/feeds/113558991070037247/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15229466&amp;postID=113558991070037247&amp;isPopup=true' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/113558991070037247'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/113558991070037247'/><link rel='alternate' type='text/html' href='http://forusdear.blogspot.com/2005/12/blog-post_26.html' title='கருப்பு ஞாபகங்கள்'/><author><name>தாணு</name><uri>http://www.blogger.com/profile/04865211166801373288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15229466.post-113535695197848811</id><published>2005-12-23T08:54:00.000-08:00</published><updated>2005-12-23T16:04:08.913-08:00</updated><title type='text'>நேற்றும் இன்றும்</title><content type='html'>அன்று........&lt;br /&gt;`இரவின் மடியில்’ கேட்ட பாடல்கள்&lt;br /&gt;இன்னிசையாக இருந்தது;&lt;br /&gt;பகலின் ஒளியில் பார்த்த காட்சிகள்&lt;br /&gt;பட்டாம்பூச்சியாக பறக்க வைத்தது;&lt;br /&gt;நினைத்து மகிழ்ந்த கணங்கள்&lt;br /&gt;நிழற்படம்போல் கண்ணிலேயே தவழ்ந்தது.&lt;br /&gt;படித்தவை சுவைத்தது&lt;br /&gt;பஞ்சணை கொஞ்சியது&lt;br /&gt;பல்வரிசை பளீரிட்டது&lt;br /&gt;பரபரவென்று நேரம் பறந்தது!&lt;br /&gt;இன்று.....&lt;br /&gt;பசித்தவன் தான் பழங்கணக்கு பார்ப்பானா?&lt;br /&gt;பாதிமுதுமை பார்க்க வைக்கிறது என்னையும்!&lt;br /&gt;அட உன்னையும்தான்!&lt;br /&gt;படிக்கட்டு ஏறினால் மூச்சு வாங்கும்&lt;br /&gt;பார்வை மங்கி கண்ணாடி முகத்தில் ஏறும்!&lt;br /&gt;பாழாய்ப்போன மனசு மட்டும்&lt;br /&gt;பள்ளியையும் கல்லூரியையும் பசுமையாய்&lt;br /&gt;புரட்டிப் பார்த்து பெருமூச்சு படர விடும்!&lt;br /&gt;காதலையும் கவிதைகளையும் இளமையையும்&lt;br /&gt;திரும்பிப் பார்த்து திருப்திப் படும்!&lt;br /&gt;&lt;br /&gt;என்றும்.......&lt;br /&gt;வாழ்க்கையை&lt;br /&gt;ரசித்தவர்களுக்குத் திருப்திதான்....&lt;br /&gt;தொலைத்தவர்களுக்கோ&lt;br /&gt;எதிலுமே விரக்திதான்!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15229466-113535695197848811?l=forusdear.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://forusdear.blogspot.com/feeds/113535695197848811/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15229466&amp;postID=113535695197848811&amp;isPopup=true' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/113535695197848811'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/113535695197848811'/><link rel='alternate' type='text/html' href='http://forusdear.blogspot.com/2005/12/blog-post_23.html' title='நேற்றும் இன்றும்'/><author><name>தாணு</name><uri>http://www.blogger.com/profile/04865211166801373288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15229466.post-113440679523457128</id><published>2005-12-12T08:58:00.000-08:00</published><updated>2005-12-12T08:59:55.286-08:00</updated><title type='text'>அடையாளங்கள் தவறா?</title><content type='html'>அடையாளங்களைத் தொலைத்தல் என்பது எவருக்குமே சாத்தியமாகாத ஒன்று. எழுத்திலோ நடை உடை பாவனைகளிலோ வருந்தித் தருவித்துக் கொள்ளும் புது வேஷங்களுக்கு இடையிலும் நம்  original  அடையாளம் மறைந்து போவதில்லை. இது நமது பலவீனமல்ல, நம் வேர்களின் பலங்கள். அந்த அடையாளம் எதனாலும் வரலாம்- மொழி, ஜாதி, மதம், படிப்பு- எதுவாகத்தான் இருக்கட்டுமே. அதை ஏன் மறைக்க வேண்டும்? அந்தந்த விஷயங்களின் துவேஷ சிந்தனைக்கு இடம் தராத வகையில், அடுத்தவர் மனதைப் பாதிக்காத வகையில் அந்த அடையாளங்களைத் தவிர்க்க வேண்டிய அவசியம்தான் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;`தமிழன்’ என்ற மொழியின் அடிப்படையிலான அடையாளத்தை வரவேற்பதும், பெருமைப் படுத்துவதும் சரியென்று ஏற்றுக் கொள்ளும் நாம் மற்ற அடிப்படையிலான அடையாளங்களை மட்டும் கூறு போட்டு விமர்சிப்பதேன்? தமிழ்மணத்தில் எல்லோரின் ஒருமித்த உணர்வும் தமிழின் அடிப்படை என்பதால்!! இதில் வரும் அடிதடி சண்டைக் காட்சிகள், அடுத்து, `தேவர் மணம்’; பார்ப்பணர் வலைப்பூ’ ; `நாடார் பதிவுகள்’; etc,etc போன்ற தனித்தனி  குழுமங்களை உருவாக்குமோ என்னவோ?&lt;br /&gt;&lt;br /&gt;`நீங்கள் தமிழரா’ என்று விழிக்கப்படும்போது ,ஒரு புலம்பெயர்ந்தவருக்கு எவ்வளவு புல்லரிப்பு வருமோ, அதே அளவு `நீங்க திருநெல்வேலியா’ என்று கேட்கப்படும்போது எனக்கு வரும். இன்னாரின் சொந்தமா என்று என் கணவர் வீட்டு மனிதர்களைப் பற்றிக் கேட்கும்போது `ஆம்’ என்று சொன்னாலும்,&lt;br /&gt;என் பிறந்த வழிச் சொந்தங்களையும் பிரதிபலிக்க வேண்டுமென்ற உணர்வு தோன்றுவது எந்த ஜாதியின் அடிப்படையோ, மதத்தின் பாதிப்போ இல்லை. என் வளர்ப்பின் அடையாளத்தைத் தொலைத்துவிடுவேனோ என்ற அங்கலாய்ப்பாக இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;குழலி, தேன்துளி பத்மா, ராமச்சந்திரன் உஷா போன்றவர்கள் தங்களால் எதிர்கொள்ளப்பட்ட நிகழ்வுகளை அந்தந்த சூழலின் பாதிப்புடன் எழுதும்போது ,அதற்கு ஒரு முத்திரை குத்திவிட்டுப் போவது ` படித்தவர்களின்’ அடையாளம் போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிப் பருவத்தில் பாதி புரிந்தும் புரியாத வயதில் என் அண்ணன் தீவிரமாக எனக்குள் போதித்திருந்த கருத்து, `ஜாதி மத பிரிவினைகள் எல்லாம் practical  ஆக போக்கணும்னா, ஒரு வீட்டில் ஏற்படும் திருமண சம்பந்தங்கள் பல வகுப்புகளையும் பல மதங்களையும் சார்ந்து இருக்கணும்’ என்பது. ( அவனால் பாவம் அதை நடைமுறைப் படுத்த முடியலை- அக்கா பொண்ணுமேல் காதல் வந்துவிட்டது) நானும் தம்பியும் அண்ணன் வாக்கை மீறாமல் காப்பாற்றிவிட்டோம். ஆனாலும் எங்களின் அடையாளம் இன்னும் ஆறுமுகநேரி சந்தைக்கடையின் புழுதி மணல்தான்!!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15229466-113440679523457128?l=forusdear.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://forusdear.blogspot.com/feeds/113440679523457128/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15229466&amp;postID=113440679523457128&amp;isPopup=true' title='27 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/113440679523457128'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/113440679523457128'/><link rel='alternate' type='text/html' href='http://forusdear.blogspot.com/2005/12/blog-post_12.html' title='அடையாளங்கள் தவறா?'/><author><name>தாணு</name><uri>http://www.blogger.com/profile/04865211166801373288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>27</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15229466.post-113413808611289040</id><published>2005-12-09T06:18:00.000-08:00</published><updated>2005-12-09T06:21:26.156-08:00</updated><title type='text'>தோழிக்காக!</title><content type='html'>படைப்புகள் படிக்கப்பட்டன&lt;br /&gt;படித்தவர்களால் பாராட்டவும்பட்டன&lt;br /&gt;அத்தனை சிறப்புகளையும் பின்தள்ளியது&lt;br /&gt;அன்புத் தோழியின் அங்கீகரிப்பு!&lt;br /&gt;&lt;br /&gt;இடைவெளியற்ற வேலைப் பளுவும்&lt;br /&gt;இயந்திரகதியான வாழ்க்கைச் சூழலும்&lt;br /&gt;இடைப்பட்ட காலங்களில்&lt;br /&gt;இடர்ப் படுத்தியது என் எழுத்துலகை!&lt;br /&gt;&lt;br /&gt;இன்று நீ வந்தாய்-என்&lt;br /&gt;இதய விளக்கில் எண்ணெய் ஊற்ற&lt;br /&gt;உன் சிரிப்பென்ற தீக்குச்சியால்&lt;br /&gt;என் மனதைப் பற்ற வைத்தாய்!&lt;br /&gt;&lt;br /&gt;புதிய அத்தியாயம் துவங்குகிறேன்&lt;br /&gt;பழைய தூசியைத் தட்டிவிட்டு&lt;br /&gt;விருந்தோ மருந்தோ மூணுநாள் என&lt;br /&gt;விடைபெற முடியாமல் திணறவேண்டும் நீ!!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15229466-113413808611289040?l=forusdear.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://forusdear.blogspot.com/feeds/113413808611289040/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15229466&amp;postID=113413808611289040&amp;isPopup=true' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/113413808611289040'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/113413808611289040'/><link rel='alternate' type='text/html' href='http://forusdear.blogspot.com/2005/12/blog-post_09.html' title='தோழிக்காக!'/><author><name>தாணு</name><uri>http://www.blogger.com/profile/04865211166801373288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15229466.post-113351423917124343</id><published>2005-12-02T01:02:00.000-08:00</published><updated>2006-09-15T18:22:06.366-07:00</updated><title type='text'>எங்க ஆட்டுக்கும் `சிசேரியன்'</title><content type='html'>`கம்பர் வீட்டுக் கட்டுத் தறியும் கவி சொல்லும்’கிற மாதிரி, டாக்டர் வீட்டு ஆட்டுக்குட்டிக்குக்கூட அறுவை சிகிச்சையில்தான் பிரசவம் பார்க்க வேண்டியிருக்குது.&lt;br /&gt;&lt;br /&gt;போனவருஷ `அறுவடைத் திருநாள்’ சமயம் எங்க வீட்டு குட்டிப்பையன் ஒரு ஆட்டுக்குட்டியை ஏலத்தில் எடுத்துவந்தான். அதுகூட ஏக கொஞ்சல் குலவல். ஆனால் அது போடற புழுக்கைகளை சுத்தம் செய்ய தகுந்த உதவியாளர்கள் இல்லாததால் தோட்டத்தில் கொண்டுபோய் விட்டுட்டோம். ஆனாலும் ஞாயிறுதோறும் அதைப் பார்த்து கொஞ்சிட்டு வராட்டி அவனுக்கு இருப்பு கொள்ளாது. சமீபத்தில் போனப்போ அது குட்டி போடப்போறதாக தோட்டக்காரத் தம்பி சொல்லிச்சு. இவனுக்கு ஏக சந்தோஷம், ரெண்டு குட்டிகூட விளையாடப்போறோம்னு.&lt;br /&gt;&lt;br /&gt;முந்தாநாள், நானும் என் ஹஸ்பெண்டும் செம பிஸி! திடீர்னு தோட்டக்காரன் போன் பண்ணி ஆடு குட்டிபோட முடியாமல் கஷ்டப்படுது, கவனிக்காமல் போயிட்டா செத்துப் போயிடும்போல இருக்குங்கிறான். எங்க ரெண்டுபேருக்கும் நகற முடியாதபடி கேஸ். வேற வழியில்லாமல் பிரெண்ட் வெட்டினரி மருத்துவரை ட்ரைவர்கூட அனுப்பி போய்ப் பார்த்துட்டு வரச் சொன்னோம். அவர் அங்கிருந்து போனில், உடனடியா ஆப்பரேஷன் பண்ணணும் குட்டி குறுக்கே கிடக்குதுன்னு சொன்னார். அதுக்கு சிரமப்பட வேணாம்னு தோணினால் கசாப்புக் கடைக்குக் கொடுத்திடலாம், உங்க விருப்பம் என்னன்னு கேட்டார். ரொம்ப கஷ்டமா இருந்தது, அதைக் கேட்டு. ஆப்பரேஷன் பண்ணினா ஆடு பிழைக்க வாய்ப்பு இருந்தா பண்ணிடுங்கன்னு எங்க வீட்டுக்காரர் சொல்லிட்டார். ஆனால் நாங்க நேரிடையாக உடனிருந்து உதவி செய்ய முடியாத நிலையில் இருப்பதையும் சொல்லிட்டோம். அவரே எல்லாம் பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டார். இது எதுவும் எங்க பையனிடம் சொல்லலை, மூலையில் உட்கார்ந்து அழ ஆரம்பிச்சிடுவானே!&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழியா எங்க வேலையெல்லாம் முடிச்சுட்டு கால்நடை அறுவை அரங்குக்குப் போனப்போ ராத்திரி 11 மணிக்கு மேலே ஆயிடுச்சு. எங்க நண்பரான கால்நடை மருத்துவரும், அறுவை சிகிச்சை செய்த அவரது நண்பரும் ஆட்டுக்கு bedside duty பார்த்துகிட்டு இருந்தாங்க. அப்போதான் ஆடு மயக்க மருந்து எபெக்ட்டில் இருந்து வெளி வந்து கொண்டிருந்தது. அப்பப்போ கண்ணை முழிச்சு எங்களைப் பாவமா பார்த்துச்சு.&lt;br /&gt;&lt;br /&gt; குட்டி சைஸ் கொஞ்சம் பெரிதாக இருந்துச்சாம், குறுக்கே வேறு கிடந்ததால் பிரசவம் ஆக முடியாமல் தவித்திருக்கிறது. கீழே வர முடியாததால் கர்ப்பப்பை உள்புறமாக கிழிந்துவிட்டது, குட்டியும் இறந்துவிட்டது. அறுவை சிகிச்சை மூலம் இறந்த குட்டியை எடுத்துவிட்டு கர்ப்பப்பையைத் தைத்திருப்பதாக நண்பர் சொன்னார். கர்ப்பப் பையும் வெகுநேர போராட்டத்தால் கிழிந்திருந்ததால், மிகவும் சிதைந்து போயிருப்பதாகவும் சொன்னார். 24 மணிநேரம் கழித்துதான் ஆடு பிழைக்கும் வகை அறியமுடியுமென்று சொன்னார். இதே வகையான விளக்கங்களைப் பலமுறை நோயாளிகளுக்குச் சொல்ல நேருமென்றாலும், வாயில்லா ஜீவனின் அவஸ்தையைத் தக்க தருணத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போனது வருத்தமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கா.ந. மருத்துவர் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட முறை, மயக்கம் கொடுக்க உபயோகித்த மருந்துகள், கொடுக்கப்பட்ட ஆண்டிபயாடிக் முதலியவை பற்றி விளக்கிச் சொன்னார். ஒருநாளாவது தீவிர கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டுமென்றும், தேவைப்பட்டால் IV Fluids கொடுக்க வேண்டுமென்றும் சொன்னார். எங்கள் மருத்துவ மனையின் கார் ஷெட்டில் அதற்குத் தேவையான வசதிகளுடன் படுக்கை தயாரிக்கப் பட்டது. செவிலியர்களுக்கு ஊசி குத்தும் முறை, காயத்துக்கு மருந்து போடும் விதமெல்லாம் சொல்லிக் கொடுத்தோம். ஆனாலும் என் கணவரே அத்தனை வேலையிலும் ஓடி ஓடி வந்து ஊசி போட்டுவிட்டு சென்றார். இன்றுதான் மேரி(எங்க செல்ல ஆடு) மெதுவாக எழுந்து நிற்கிறது, கொஞ்சம் கொஞ்சம் புல் சாப்பிடுது!!! கா.ந. மருத்துவர் தினமும் ஒருதரம் வந்து பார்த்துவிட்டு போகிறார்.&lt;br /&gt;நேற்றுதான் எங்க பையனுக்கு சொன்னோம். ரொம்ப வலிச்சுதா, குட்டி ஆடு எப்படி இருந்திச்சு, எல்லாம் சாப்பிட கொடுக்கலாமான்னு ஏகப்பட்ட கேள்விகளுடன் ஒருதரம் பார்த்துட்டு ஸ்கூலுக்கு போயிருக்கான். வந்த பிறகுதான் நோயாளியின் சொந்தக்காரர்களுக்கு விளக்கம் சொல்லும் பாணியில் அவனை கன்வின்ஸ் பண்ணணும். தோட்டத்தில் விட்டதால்தான் இப்படி ஆயிடுச்சு, வீட்டிலேயே நம்ம கூட வைச்சிருந்தா நல்லா இருந்திருக்கும்கிறது அவனது வாதம். அவன் கால்நடை மருத்துவர்தான் ஆகப் போறானாம்!&lt;br /&gt;&lt;br /&gt;அறுவை சிகிச்சையை உடனிருந்து பார்க்க முடியலையேன்னு என் வீட்டுக்காரருக்கு வருத்தம். மனிதர்களுக்கு போடப்படும் விதமாகவே மருந்துகள், தையல் நரம்புகள், மயக்கம் எல்லாமுமே! ஆனால் குழந்தைகளுக்கு போடப்படும் அளவில் !&lt;br /&gt;(கசாப்புக் கடையில் வெட்டுப் படும் ஆடுகளின் நிலையை மனது ஏனோ ஒருதரம் நினைத்துப் பார்க்கிறது).&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15229466-113351423917124343?l=forusdear.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://forusdear.blogspot.com/feeds/113351423917124343/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15229466&amp;postID=113351423917124343&amp;isPopup=true' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/113351423917124343'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/113351423917124343'/><link rel='alternate' type='text/html' href='http://forusdear.blogspot.com/2005/12/blog-post.html' title='எங்க ஆட்டுக்கும் `சிசேரியன்&apos;'/><author><name>தாணு</name><uri>http://www.blogger.com/profile/04865211166801373288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15229466.post-113206499639663787</id><published>2005-11-15T06:24:00.000-08:00</published><updated>2005-11-15T06:29:56.420-08:00</updated><title type='text'>`விடா'க்கண்டனும் `கொடா'க்கண்டனும்</title><content type='html'>(ராஜ் அவர்களின் பின்னூட்டத்திற்கு விளக்கம் நீளமானதாக இருபதால் ஒரு பதிவாகவே போட்டுவிட்டேன்).&lt;br /&gt;&lt;br /&gt;நிச்சயமா BSc/MSc படிப்பது என்பது மருத்துவம் படிப்பதைவிட ஈஸியானதுதான். அந்த துறையின் பாடங்களைக் கற்றுத் தேற வேண்டிய அறிவும், கடின உழைப்பும் ,dedication உம் இருந்தால் போதுமானது. தனது தகுதியைப் பொறுத்து சீட் வாங்கலாம் என்பதே பெரிய ஆறுதலும், ஊக்கமும் இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மருத்துவம் போன்றவை வெளியிலிருந்து பார்ப்பதற்குத்தான் பகட்டான படிப்பு. பள்ளியின் முதல் மாணவனோ, மாநில ரேங்க் வாங்கியவனுக்கோகூட  சீட் கிடைக்குமென்பதற்கு உத்திரவாதமே இல்லை. (பணத்தின் மூலம் வேண்டுமானால் வாங்கலாம்,அது தனிக் கதை) சுய முயற்சி கடுமையாக இருந்தாலும் கூட தோற்றுப் போகும் நிலைமை மிக அதிகம். மருத்துவம் படிக்கும் எதிர்பார்ப்புடன் படிக்கும் மாணவர்களின் மன இறுக்கம் இருக்கிறதே, அதை வார்த்தைகளில் சொல்ல முடியாது. .மிகக் குறைந்த மதிப்பெண் வித்தியாசத்தில் சீட்டைத் தவற விடும்போது, அந்த தோல்வி அளவிட முடியாதது. மருத்துவம் முயற்சி பண்ணி கிடைக்காதபோது மனநோய்க்கு ஆளான மாணவர்கள் கூட இருக்கிறார்கள்.அத்தைகைய மன உளைச்சல்களுடன் பெறப்படும் அக்கல்வி உடனே செட்டில் ஆகக் கூடிய வாய்ப்பை எந்த அளவு பெற்றுத் தருகிறது? மேற் படிப்பு செல்லாமல் செட்டில் ஆகவே முடிவதில்லை.மறுபடி அதே சர்க்கஸ்தான் PG படிப்பதற்கும். எல்லாப் போராட்டங்களையும் கடந்து ஒருவழியாக ஒரு நிலைப்பாட்டுக்குள் வரும்போது, அநேகமாக ஆண்களுக்கு வழுக்கை விழுந்து தொப்பை ஏறியிருக்கும், பெண்கள் முதிர் கன்னியர்களாகியிருப்பார்கள். வாழ்க்கையின் பெரும் பயணத்தை முடித்த களைப்புடன் அமர முடியாது. அடுத்த போராட்டமே அதன்பிறகுதானே ஆரம்பிக்கப் போகிறது.பயணத்தை இடையிலேயே நிறுத்திவிட்டு உட்காரவும் முடியாது. மருத்துவம் படிக்க குறிக்கோளை மனதில் ஏற்றிக் கொள்வதிலிருந்து, படித்து முடித்து `நல்ல’ முறையில் செட்டில் ஆவது வரை உள்ள மனப் போராட்டங்களை விலாவாரியாகச் சொல்ல ஆரம்பித்தால், நாலைந்து பதிவுகளாவது நீட்ட வேண்டியிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;படிக்கும் காலங்களில் ஜாலியாக சுற்றுவதும், சந்தோஷமாகத் திரிவதும் எல்லாக் கல்லூரி மாணவர்களின் பொதுச் சொத்து. ஆனால், மிக நீண்ட வருடங்கள் ஒரே கல்லூரி வளாகத்தில் சுற்றித் திரிவதால், மெடிக்கோஸ் சுற்றுவதுமட்டும் ஊரறிந்த ரகசியமாக இருக்கும். மற்றபடி படிப்பு விஷயத்தில் அவரவர் SYLLABUS அவரவர்களுக்கு முக்கியமானதே. நான் ஜாலியாகப் படிக்கலாம் என்று சொன்னது அந்த பாடங்களை அல்ல, அந்த படிப்பை( not the subject but the speciality- have I explained properly Raj?)&lt;br /&gt;&lt;br /&gt;படித்த பின்பு செட்டில் ஆவதும், BSc/MSc இல் சுலபம்தானே. நாம் இருக்கும் இடம் எத்தைகைய குக்கிராமமாக இருந்தாலும், வருங்காலத் துணை எந்த ஊரில் இருப்பவராக இருந்தாலும் அடிப்படைத் தகுதியான டிகிரி போதுமானது .தனது அறிவு, விடா முயற்சி போன்றவற்றைப் பொறுத்து அந்தத் துறையில் டாக்டரேட் வரை போகலாம்.. அதிலுள்ள முயற்சிகளுக்கு வானமே எல்லை. மருத்துவம் படிக்குமளவு சிறந்த மாணவர்களாக்த் தேறுபவர்களுக்கு பெளதீகமோ வேதியலோ படிப்பது கடினமாக இருக்குமா? படிக்க வேண்டிய கல்லூரி, ஊர், பிரிவுகள் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இருப்பதில்லையா? Doctorate போன்ற அளவு முன்னேறி வரும்போது, பொறுப்பும், எதிர்பார்ப்பும், கஷ்டங்களும் அதிகரிக்கும். ஆனால் அத்தைகைய முயற்சிகள் எதுவுமின்றி MSc போன்ற அளவு வந்தாலே நல்ல முறையில் செட்டில் ஆகலாம் என்பதுதான் என் விவாதம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஜாலியாக இருப்பது என்று சொன்னது, மன இறுக்கமற்ற துறை என்ற அர்த்தத்தில்தான். மருத்துவர்களின் சிரித்த முகங்களின் பின்னே எத்தனை இறுக்கமான இதயமும், பர பரவென்று சுற்றித் திரியும் கால்களின் பின்னே எத்தனை நிம்மதியற்ற மனதும் இருக்குமென்பது எத்தனை பேருக்கு மனதில் பதிவாகிறது? `MSc  முடிச்சுட்டு டாக்டரேட் எல்லாம் வாங்கியிருக்கிறார்’ என்று ஒருவரைச் சுட்டிக்காட்டும்போது, அவரின் அறிவை உயர்த்தும் விதமாகப் புகழும் மனிதர்கள், ஒரு டாக்டரைப் பற்றிப் பேசும்போது, எவ்வளவு பிடித்த டாக்டராக இருந்தாலும் கூட `அவங்களுக்கென்ன பிரமாதமான ப்ராக்டீஸ்’ என்று சொல்லும்போது, அந்த டாக்டரின் அறிவைக் குறித்து சொல்லுவதில்லை. அவரது வருமானம் குறித்தே `வஞ்சப் புகழ்ச்சி’யாகப் பேசுவதுதான் யதார்த்த வாழ்க்கை.&lt;br /&gt;&lt;br /&gt;எப்பவுமே அதே துறையில் இருப்பவர்களுக்குத்தான் அதிலுள்ள மேடு பள்ளங்கள் தெரியும். அதனால்தான் அக்கரைப் பச்சை பரவாயில்லை என்று தோன்றுகிறது. எனக்கு MSc படிப்பது அப்படித்தான் தோன்றுகிறது. ஆனால் basically  படிப்பது எந்த துறையாக இருந்தாலும், முயற்சியும் கடின உழைப்பும் இல்லாவிட்டால் எதிலுமே சோபிக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt; (கேள்விகளை விடாமல் தொடுத்த விடாக்கண்டனையும், பதிலில் பிடிகொடாமல் சமாளித்த கொடாக்கண்டனையும் யார் யாரென்று இந்நேரம் புரிந்திருக்குமே!!)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15229466-113206499639663787?l=forusdear.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://forusdear.blogspot.com/feeds/113206499639663787/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15229466&amp;postID=113206499639663787&amp;isPopup=true' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/113206499639663787'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/113206499639663787'/><link rel='alternate' type='text/html' href='http://forusdear.blogspot.com/2005/11/blog-post_15.html' title='`விடா&apos;க்கண்டனும் `கொடா&apos;க்கண்டனும்'/><author><name>தாணு</name><uri>http://www.blogger.com/profile/04865211166801373288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15229466.post-113189849438943556</id><published>2005-11-13T08:11:00.000-08:00</published><updated>2005-11-13T08:14:54.430-08:00</updated><title type='text'>வாத்தியார்களும் மாணவர்களும்</title><content type='html'>எனது `ராகிங்’ பதிவிற்கு ராமநாதன் இட்டிருந்த பின்னூட்டம் என் மனதில் எழுப்பிய தாக்கங்களே இந்தப் பதிவு. ரஷ்யாவில் ஆசிரியர்-மாணவர் இடையேயான உறவுகள் பற்றி எழுதியிருந்தார்.&lt;br /&gt;தமிழ்நாட்டில் பொதுவாக எங்க ஊர் மாதிரியான மத்திய தர நகரங்களில் ஆசிரியர்- மாணவன் உறவு சமீப காலங்களில் ரொம்பவே சிதைந்து வருகிறது. நல்ல STANDARD MAINTAIN பண்ணி ஓரளவு தரம் இருப்பதாக அறியப் பட்ட பள்ளிகளில் கூட வாத்தியார்-மாணவன் உறவு ஆரோக்கியமானதாக இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தவறு எங்கு ஆரம்பிக்கிறது?&lt;span style="color:#ff0000;"&gt;ஒரு சின்ன அலசல்&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போதைய கல்வித் தரத்தின் கூடுதல் சுமை; தொழிற் கல்விகளையே குறிவைத்து பிள்ளைகளை கல்வி கற்கத் தூண்டும் பெற்றோர்; இயந்தரத்தனமாக்கி விடப்பட்ட போதிக்கும் முறைகள்; `ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ சுகம் என்றிருந்த ஆசிரியர் சமுதாயம்,பணம் ஈட்டும் தொழிலாக மட்டுமே நினைத்து வேலைக்கு செல்வது; ஒழுங்கு, கட்டுப்பாடு என்பதெல்லாம் அடக்கியாளும் தன்மை,அதை பள்ளிகளில் கடைப்பிடித்தலாகாது என்ற மாறுபட்ட மனோபாவம்—இன்னும் இதுபோல் சில பல காரணங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிப் பருவம் முடிக்கும்போது தெரிந்திருக்க வேண்டிய அடிப்படைக் கல்வியை விடுத்து, குருவி தலையில் பனங்காய் வைப்பது போன்ற அளவுக்கு மீறிய பாடத் திட்டங்கள். 5 வருடங்களில் மருத்துவம் படிக்கும்போது படித்த பாடங்கள் அனைத்தும், +2 முடிக்கும்போதே முழுவதும் கற்றுக் கொள்ள வேண்டும் போன்ற சுமையான SYLLABUS. பயாலஜி எடுத்த அனைவரும் மருத்துவம் படிக்கப் போவதில்லை, ஆனாலும் அனைவருக்கும் அதே பாடத் திட்டம்தான். இதில் இன்னொரு BEAUTY என்னவென்றால், அதை நடத்தும் ஆசிரியர் பலருக்கே அது புரியாமல், சில டாக்டர்களிடம் ரகசியமாக TUTION எடுத்துக் கொள்வதும் உண்டு.(இது கதையல்ல நிஜம்). கணிதம் பற்றியோ சொல்லவே வேண்டாம். தினம் ஒரு புது மாறுதல்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தைகைய குழப்பமான பாடத் திட்டமும், நடத்துதல் சிரமங்களும் சேர்ந்து ட்யூஷன் போகாமல் முடியாது என்ற நிலைக்கு குழந்தைகளைத் தள்ளி விடுகின்றன. எங்கள் காலத்தில் ட்யூஷன் போவதென்றாலே அவமானமான விஷயம். மக்கு பசங்களும் சேட்டைக்காரப் பசங்களும்(இரு பாலருக்கும் பொதுவானதுதான்) மட்டும்தான் ட்யூஷன் போவாங்க. அநேக இடங்களில் ட்யூஷன் வாத்தியார் வகுப்பில் நல்லா படிக்கும் மாணவராகவே இருப்பார்கள். ஆசிரியர்களில் ட்யூஷன் எடுப்பவர்களும் குறைவாகவே இருப்பாங்க.&lt;br /&gt;இப்போ ட்யூஷன் எடுப்பதே ஒரு `கை’வந்த கலையாகிவிட்டது. அதிலும் ஏகப்பட்ட சட்ட திட்டங்கள். ஒரு வகுப்பின் மாணவன் அடுத்த வகுப்பு வாத்தியாரிடம் ட்யூஷன் செல்லக்கூடாது. மீறி போய்விட்டால் அந்த மாணவன் வருஷம் முழுவதும் ஏதோ ஒரு நொண்டி காரணத்துக்காக வகுப்பறையின் வெளியிலேயே நிற்கும் தண்டனை நாட்கள் அதிகமாக இருக்கும். மிக மோசமான வசவுகளால் கூனிக்குறுகும் நிலைக்கு தள்ளப் பட்டு முன்பிருந்ததை விடவும் குறைவான மதிப்பெண்கள் பெறும் மாணவர்களும் உண்டு. அதனாலேயே, இப்போதெல்லாம், பெற்றோர்கள் உஷாராக பள்ளி திறந்ததும், வகுப்பாசிரியரைத் தெரிந்துகொண்டு ட்யூஷன் பீஸ் என்ற காணிக்கைகளை அந்த பூசாரிகளுக்கு படைத்துவிடுகிறார்கள். அதன் பிறகுதான் புத்தகங்கள் கூட வீட்டுக்குள் வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் ஆசிரியர்கள் வட்டிக்கு விடுவதைப் பற்றிய விவாதம் ஒன்று வந்ததே, அதைவிடக் கொடுமையானது, இவர்களின் பீஸ் வாங்கும் முறைகள். ஒரு பாடத்துக்கு இவ்வளவு என்று `ரேட்’ நிர்ணயித்து விடுவார்கள். அதை ஒன்று அல்லது இரண்டு தவணையில் கொடுத்துவிட வேண்டும். அதைத்தானே அவர்கள் வட்டிக்கு விட வேண்டும்!!!! நான் 1-ஆம் வகுப்பிலிருந்து DG0 வரை படிக்க ஆன செலவுக்கு நிகரான தொகை என் பெண்ணின் ஒரு வருட ட்யூஷன் பீஸ்! என்னதான் MONEY INFLATION என்றாலும்கூட கணக்கு ரொம்பவே உதைக்குது!!&lt;br /&gt;(விளையாட்டாக என் பெண்ணிடம் நான் சொல்வது `குட்டிம்மா! கஷ்டப்பட்டு MEDICAL or ENGINEERING படிச்சுட்டு அடுத்தவங்களை நாடி வாழப் போறதைவிட, ஜாலியாக BSc-MSc- maths or physics படிச்சுட்டு வீட்டிலேயே ட்யூஷன் எடுத்தால் அதைவிட நிம்மதியாக செட்டில் ஆயிடலாமே’ என்று!(நல்ல அறிவுரைதானுங்களே?) வருமான வரி கட்ட வேண்டியதில்லை; நுகர்வோர் நீதிமன்றங்களில் கூண்டேற வேண்டியதில்லை; நினைத்த நாட்களில் விடுமுறை; ட்ரான்ஸ்பர் போன்ற தொந்தரவில்லை- எவ்வளவு வசதி பாருங்க?ஆனா அது கொஞ்சம் மக்கு, மருத்துவம்தான் படிக்கப் போவதா பீற்றிக்கொண்டிருக்குது, தலையெழுத்தை யாரால் மாற்ற முடியும்?)&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாதிரி ஆசிரியர்களின் நோக்கமும் செயல்பாடுகளும் மாறத் தொடங்கியபின், மாணவர்களின் மனோபாவமும் மாறத்தானே செய்யும். நல்ல மதிப்பெண்களெடுத்து வாத்தியார் கையால் மோதிரக் குட்டு வாங்கும் சந்தோஷங்களே சமீப காலங்களில் இல்லை. வாத்தியாருக்கு PET மாணவன், குறிப்பிட்ட வாத்தியாரின் ரசிகர் கூட்டம் போன்றவையெல்லாம் இருக்கிறதா என்பதே சந்தேகமாக உள்ளது.அப்படியே இருந்தாலும், இலுப்பைப் பூ போல்தான்னு நினைக்கிறேன்.&lt;br /&gt;ரசிகர் கூட்டம் இருக்குதோ இல்லையோ, ஹால் டிக்கெட் கைக்கு வந்ததும், வாத்தியாரைத் `தனியாக கவனிக்கும்’ கூட்டம் இருக்கிறதென்பதை சமீபத்தில் தெரிந்துகொண்ட போது அதிர்ச்சியாக இருந்தது. `வினை விதைத்தவர்கள்தான் வினை அறுக்கிறார்கள்’ என்பது புலன் ஆனாலும், கேட்கும்போது மனது வலித்தது.&lt;br /&gt;`எங்க காலத்திலே’ என்று ஏதாவது சொல்ல ஆரம்பித்தால் முகத்தை சுழிக்கும் இப்போதைய இளைய சமுதாயம், எங்கள் கால ஆசிரியர் - மாணவர் உறவுகளைப் போன்ற சந்தோஷங்களை இழந்த ஏழைகளே!&lt;br /&gt;இனிக்க இனிக்க தமிழ் உணர்வு ஊட்டி, இணையம் வரை நட்புள்ளங்களைப் பெற வைத்த தமிழாசிரியர் குழைக்காதன் சார்! அவரை சார் என்று சொன்ன காலங்களை விட `பெரியப்பா’ என்று சொல்வதுதான் அன்று முதல் இன்றுவரை எல்லோருக்கும் பிடித்த ஒன்று. அவரது அன்றைய மாணவர்கள் இன்றும் ஒரு பெரியப்பாவிடம் காட்டும் உண்மையான வாஞ்சையுடன் அவரைக் கண்டு அளவளாவுவது அரிய காட்சி. `டேய் நாராயணா உன் பெயரை எப்படி எழுதறது தெரியுமா’ன்னு சமீபத்தில் என் தம்பியிடம் `ந்ஆர்ஆய்அண்அன்’ என்று அந்த நடுங்கும் கரங்களால் எழுதிக் காட்டியபோது மெய்சிலிர்த்தது.தமிழ் மீது அவருக்கிருந்த ஈடுபாடு, இப்போதைய ஆசிரியர்களில் காண முடியுமா என்பது சந்தேகமே! அவர்மேல் எங்களுக்கிருக்கும் மாறா அன்பு, தற்போதைய மாணவர்களுக்கு அவர்கள் ஆசிரியர்கள் மேல் இருக்குமா? இன்னும் கணிதம் சொல்லிக் கொடுத்த இப்ராஹிம் சார், ஆங்கிலம் கற்றுத் தந்த அந்தோணி முத்து சார் என்று ஒரு தேசிய ஒருமைப்பாடே எங்கள் பள்ளியில் கோலோச்சி எங்களை வழிப்படுத்தியது. ஊருக்குப் போனால் பழைய சாரையெல்லாம் ஒரு ரவுண்டு பார்க்கப் போவது ரொம்ப பிடித்த நிகழ்ச்சி. இப்போதைய பிள்ளைகள் பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரி சென்ற பின், பழைய பள்ளியின் பக்கம் தலை வைத்துப் படுப்பதே தண்டனைபோல் அல்லவா பிள்ளைகள் நினைக்கிறார்கள்.&lt;br /&gt;(இவை பொதுவான நிகழ்ச்சிகள். எங்கள் வீட்டிலும் ஆசிரியைகள்,&lt;br /&gt;லெக்சரர்கள் உண்டு. தனிப்பட யாரையும் புண்படுத்தும் நோக்கமும் அல்ல.)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15229466-113189849438943556?l=forusdear.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://forusdear.blogspot.com/feeds/113189849438943556/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15229466&amp;postID=113189849438943556&amp;isPopup=true' title='29 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/113189849438943556'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/113189849438943556'/><link rel='alternate' type='text/html' href='http://forusdear.blogspot.com/2005/11/blog-post_13.html' title='வாத்தியார்களும் மாணவர்களும்'/><author><name>தாணு</name><uri>http://www.blogger.com/profile/04865211166801373288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>29</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15229466.post-113155682406552668</id><published>2005-11-09T09:14:00.000-08:00</published><updated>2005-11-09T09:20:24.100-08:00</updated><title type='text'>`ராகிங்'ன்னா என்ன?</title><content type='html'>மருத்துவக் கல்லூரி ராகிங் என்பது பரவலாக அலசப் படும் ஒன்று. மகனோ மகளோ மருத்துவம் படிக்க தேர்ந்தெடுக்கப் படும்போது அதை முழுமையாக அனுபவிக்கமுடியாதபடி, சின்ன நெருடல் ராகிங் காரணமாக எல்லா பெற்றோரிடமும் இருக்கும். அவ்வளவு மாகாத்மியம் பொருந்திய ராகிங் பயங்கரத்திலிருந்து தப்பித்த பெருமை எங்கள் வகுப்பையே சாரும்.&lt;br /&gt;     திருநெல்வேலி மரு.கல்லூரியில் முதலாமண்டு காலடி வைக்கிறோம்,தெரிந்தவர்களும் நண்பர்களும் பயம் காட்டி அனுப்பியிருந்த நேரம்.லேடீஸ் ஹாஸ்டலில்(&lt;span style="color:#ff0000;"&gt;House of angels&lt;/span&gt;) இருந்து வகுப்பறை வரை ஊர்வலம் போல் நாங்கள் கலர் கலராக செல்ல, முன்னும் பின்னும் இரு `அடியாட்கள்’ எங்களுக்கு காவலுக்கு வந்தாங்க. எங்க கல்லூரியின் சைக்கிள் ஸ்டாண்ட் தான் எல்லா நல்லது கெட்டதிலும் பங்கேற்கும் கதாபாத்திரம் (`அழகன்’ படத்து டெலிபோன் மாதிரி). எல்லா சீனியர் குங்ரகு(மாற்றிப் படிக்கவும்-குரங்கு)களும் வரிசையா நின்னுகிட்டு கத்தறதும், சீட்டியடிக்கிறதும், முதலில் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. பாவம்போல தலை குனிந்து போனோம்.&lt;br /&gt;ஆனால் சாயங்காலம் ஆனதும் சீனே மாறிப்போச்சு!&lt;br /&gt;&lt;br /&gt;     ரொம்ப நாள் நிலுவையில் இருந்த கல்லூரி தேர்தல் அறிவிக்கப் பட்டிருந்ததால், எங்களுக்கு ராகிங்கில் இருந்து exemption. போட்டியிடுபவர் பற்றிய எந்த விபரமும் அறியப்படாதவர்கள் என்பதால், எங்களை தாஜா பண்ணினா கணிசமான வோட்டு கிடைக்குமே!! எனவே இரண்டு தரப்பினரும் அன்பைப் பொழிஞ்சு தள்ளிட்டாங்க. (ஜாதி பிரிவு, மதப் பிரிவு, பொருளாதாரப் பிரிவு என்று ஏகப்பட்ட பிரிவினைகளை அந்த தேர்தல் எங்களுக்குள் உண்டாக்கி அதனடிப்படையிலேயே நண்பர் வட்டம் அமையும் வண்ணம் செய்துவிட்டது ஒரு வகையில் நெருடலான பாதிப்பே)&lt;br /&gt;&lt;br /&gt;     என்னதான் ராகிங் இல்லையென்று சந்தோஷப் பட்டுக் கொண்டாலும், அதை இழந்ததால் நாங்கள் இழந்ததும் கொஞ்சம் அதிகமே. வக்கிரப் படுத்தப் படாமல் செய்யப் பட்ட ராகிங் மூலம் சீனியர் மாணவர்களின் அன்புக்கு பாத்திரமாகும்போது, நிறைய உதவிகள் கிடைக்கும். கஷ்டப்படும் மாணவர்களுக்கு புத்தகங்கள் முதலானவை சேகரித்துக் கொடுப்பதிலிருந்து, பீஸ் கட்ட தாமதமாகும்போது உதவி செய்வது வரை நிறைய நட்புணர்வும் உருவாகும். எங்கள் கல்லூரி ஓரளவு கிராமீயத்தனமான atmosphereஐயே கொண்டதாக இருந்ததால் ரொம்ப சீரியஸான ராகிங் இருக்காது. ஆனால் சின்ன சின்னதா ரசிக்கிறமாதிரி நிறைய நடக்கும். அது முதலாண்டில் மட்டும் அல்ல, முதல் clinical yearஇன் போது ஆஸ்பத்திரி வளாகத்தில் நுழையும் வரை நடக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;உதாரணத்துக்கு&lt;/em&gt;:&lt;br /&gt;     முதல் க்ளினிகல் ஆண்டில் ஊசிபோடும் பிரிவில்தான் முதல் பாடம் ஆரம்பிக்கும். அப்போதெல்லாம் க்ளாஸ் சிரிஞ்ச் தான். அதை ஸ்டெரிலைசரில் இருந்து எடுத்து பிக்ஸ் பண்ணி ஊசி மாட்டி, மருந்து ஏத்தி-அப்பப்பா பெரிய வேலை அப்போது. அடிக்கடி சிரிஞ்ச் கீழே விழுந்து உடைந்து செவிலியர்களிடம் திட்டு வாங்குவதும் நடக்கும். எனக்கு immediate senior மாணவர் ஒருவர், என்னை குமைச்சுடணும்கிற நோக்கத்தோட வந்து தனக்கு ஊசி போட்டு விடுமாறு கையைக் காட்டிட்டு நின்றார். கையைப் பிடித்து ஊசி போட்டால் காலேஜ் முழுக்க, `அவள் என் கையைப் பிடிச்சா’ன்னு புரணி பேசறது, போடாமல் தயங்கி நின்னா அதையே சாக்காக வைச்சுகிட்டு மேலும் மேலும் கிண்டல் பண்றது. இதுதான் அங்கே நடைமுறை. அதனால் சீனியர் குங்ரகுங்க தலையைப் பார்த்ததுமே பெண்கள் கூட்டம் ஒழிஞ்சுக்குவாங்க. நாந்தான் கொஞ்சம் அடாவடி ஆச்சே, பொறுமையா B12 ஊசியை லோடு பண்ணினேன், நிதானமா அவர் சட்டைக் கையை மடிச்சுவிட்டுட்டு நறுக்குன்னு ஊசியை ஏத்திட்டேன். இதை எதிர்பார்க்காத அவர் `ஆ’ன்னு கத்தினதும் சக நண்பரே சிரிச்சுட்டார். அதற்குப் பிறகு நாங்க நல்ல நண்பர்களாயிட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;     ஆண்களுக்கு ராகிங் கொஞ்சம் சீரியசாக இருந்திருக்கலாம். என்ன மாதிரி ராகிங் செய்யப்பட்டோம்னு இது நாள்வரை எங்க வீட்டுக்காரர் என்னிடம் ஒரு வார்த்தை சொன்னதில்லையே!!&lt;br /&gt;&lt;br /&gt;ஆமா! &lt;span style="color:#3366ff;"&gt;ராகிங்னா என்ன&lt;/span&gt;?(தலைப்புக்குப் பொருத்தமா வந்திட்டேனா?)&lt;br /&gt;&lt;br /&gt;முகம்தெரியாத மனிதர்கள்&lt;br /&gt;முதல்தரம் பார்க்கும்போது&lt;br /&gt;முரட்டுத்தனம் காட்டினாலும்&lt;br /&gt;&lt;br /&gt;இறுதிவரை இணைந்து நின்று&lt;br /&gt;இன்னுயிர் நண்பர்களாவதுதான்&lt;br /&gt;நாங்கள் கண்ட ராகிங்!!&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய ராகிங் கண்டு&lt;br /&gt;நானும் பயப்படுகிறேன்&lt;br /&gt;மகளைக் கல்லூரி அனுப்ப!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15229466-113155682406552668?l=forusdear.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://forusdear.blogspot.com/feeds/113155682406552668/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15229466&amp;postID=113155682406552668&amp;isPopup=true' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/113155682406552668'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/113155682406552668'/><link rel='alternate' type='text/html' href='http://forusdear.blogspot.com/2005/11/blog-post.html' title='`ராகிங்&apos;ன்னா என்ன?'/><author><name>தாணு</name><uri>http://www.blogger.com/profile/04865211166801373288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15229466.post-113060341650591855</id><published>2005-10-29T09:28:00.000-07:00</published><updated>2005-10-29T09:30:16.540-07:00</updated><title type='text'>`டெல்லி' அரக்கர்கள்</title><content type='html'>மனித நேயமற்று&lt;br /&gt;மனதில் ஈரமற்று&lt;br /&gt;மனித காவு வாங்கும்&lt;br /&gt;மிருகங்கள் மனிதர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கை அழிவுகள்&lt;br /&gt;இந்தியா முழுதும் உலுக்கி வருகிறது&lt;br /&gt;இடையில் ஏனோ&lt;br /&gt;இந்த இதயமற்ற காட்டுமிராண்டித்தனம்?&lt;br /&gt;&lt;br /&gt;தூங்க இடமின்றித் தவிப்பவர்கள்&lt;br /&gt;தூங்கும்போதே அடித்துச் செல்லப்பட்டவர்கள்&lt;br /&gt;தாகத்திற்குக் கூட தண்ணீரின்றித் தவிப்பவர்கள்&lt;br /&gt;கண்ணீர் வரவழைக்கும் துயர்கள் நாடெங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மண்ணில் புதைந்தவர்களுக்கு&lt;br /&gt;மலரஞ்சலி செலுத்த முடியாவிட்டாலும்&lt;br /&gt;அண்டையில் வாழ்பவருடன்&lt;br /&gt;அனுசரிக்கக் கூட மனமில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;அழித்தவரின் கல்லறைக் கணக்குதான்&lt;br /&gt;அடுத்த நாளின் உணவோ அவர்க்கு?&lt;br /&gt;அனைவரையும் அழித்துவிட்டால்&lt;br /&gt;அடுத்த நாளென்பதே தேவையோ அவர்க்கு?&lt;br /&gt;&lt;br /&gt;இலக்குகளற்று இயக்கப்பட்டு&lt;br /&gt;நோக்கமின்றி படுகொலை புரிந்து&lt;br /&gt;திரும்பிப் பார்க்கையில் அங்கே&lt;br /&gt;துடித்து இறப்பது உன் தாயோ தந்தையோ.&lt;br /&gt;&lt;br /&gt;வெடிக்கும் குண்டுகளுக்குக் கூட&lt;br /&gt;வெடிக்க வேண்டிய எல்லை உண்டு&lt;br /&gt;அழிக்க நினைக்கும் அயோக்கியர்களுக்கோ&lt;br /&gt;அனைத்து பழிஉணர்வும் எல்லையற்றது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15229466-113060341650591855?l=forusdear.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://forusdear.blogspot.com/feeds/113060341650591855/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15229466&amp;postID=113060341650591855&amp;isPopup=true' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/113060341650591855'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/113060341650591855'/><link rel='alternate' type='text/html' href='http://forusdear.blogspot.com/2005/10/blog-post_29.html' title='`டெல்லி&apos; அரக்கர்கள்'/><author><name>தாணு</name><uri>http://www.blogger.com/profile/04865211166801373288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15229466.post-113016877156766223</id><published>2005-10-24T08:39:00.000-07:00</published><updated>2005-10-25T07:16:45.960-07:00</updated><title type='text'>ரட்சகியே ராட்சஸியாவாள்</title><content type='html'>பாக்கியராஜின் `&lt;span style="color:#ff0000;"&gt;தூறல் நின்னு போச்சு’&lt;/span&gt; படம் வந்த புதிது. நாட்டில் வான் பொய்த்து வறண்டுகிடந்த நேரம். சினிமாக்களுக்கு இதுபோல் அபசகுனமாக இடப்பட்ட பெயர்களால்தான் மழையே பெய்யவில்லை என்று பெரிய விவாதங்கள் நடந்து கொண்டிருந்தது. வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்பதுபோல்! அப்போது அதைக் கேட்டு கேலியாக சிரித்ததுண்டு.&lt;br /&gt;இப்போது `&lt;span style="color:#ff0000;"&gt;மழை&lt;/span&gt;’ படம் சக்கைப் போடு போடுகிறது, மழையும் சக்கைப் போடு போடுது.(யாராவது `ஊழலே ஊரைவிட்டு ஓடு’ன்னு படம் எடுக்கலாமே)&lt;br /&gt;&lt;br /&gt;போனவருஷம் கடுமையான தண்ணீர்ப் பஞ்சம். 1000 அடி போர்வெல் போட்டு கூட தண்ணீர் கிடைக்காத இடங்கள் அதிகம். இன்னும் கொஞ்ச காலத்தில் தென்னிந்தியா முழுவதும் பாலைவனமாகப் போவதாக ஏகப்பட்ட ஹேஸ்யங்கள். அறிவு பூர்வமாக சிந்திக்கத் தெரிந்தாலும், அடிமனதின் சுயநலத்துக்கு நான் மட்டும் விதிவிலக்காக முடியுமா? எதிர்காலம் பற்றி ஏகத்துக்கு கற்பனைகள், கனவுகள்.&lt;br /&gt;(கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள் என்று கவிஞர்.மீரா சொன்னது முதலில் நினைவுக்கு வரவில்லை, இப்போது வருகிறது)&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம காலத்துலே பரவாயில்லை, குழந்தைகள் எதிர்காலத்துக்காக சென்னை மாதிரி இடத்துலே கொஞ்சம் இடம் வாங்கிப் போடலாமா என்று பயங்கர யோசனை. தம்பி பக்கம் போகலாமா, அண்ணன் அருகில் இருக்கலாமான்னு ஒரு பட்டிமன்றம். அது சம்பந்தமா முடிவெடுக்கும் முன்பே அதிரடியாய் ஒரு `சுனாமி’ வந்து கதற வைச்சிட்டுது. அதிலிருந்து மீண்டு, உள்ளூர் சரிப்படாது, ஸ்டேட்ஸில் இருக்கும் சித்தப்பாவுடன் துரத்தி விட்டுடலாம்னு நினைச்சு , அதற்கு சம்பந்தப்பட்ட படிப்புகள் பற்றி விச்சரிக்கும்போதே, `ரீட்டா’ `ரீனா’ன்னு அமெரிக்காவே ஆட்டம் கண்டு போயிடுச்சு. சரி, இதெல்லாம் சரிப்பட்டு வராது, வட இந்தியாவில் இருக்கும் அத்தையுடன் ஒட்டிக்கொள்ளட்டும் என்று யோசிக்கும் வேளையில் அங்கு வந்ததோ அதிர்ச்சி தரும் பூகம்பம்.( துளசிக்கு எல்லா ஊரிலும் ஆட்கள் இருப்பதுபோல், எனக்கும் எல்லா இடத்திலும் இருக்கிறாங்களாக்கும்!!)&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோருக்கும் ஆவதுதானே நமக்கும் என்கிற பரந்த மனசு இல்லாமல் என்ன படித்து என்ன பயன் என்று ஒரு வழியாக மனதைத் தேற்றிக் கொண்டு, இருக்கும் இடமே சொர்க்கம்னு இருப்போம்னு பார்த்தால், மேட்டுர் அணை மடை திறந்து வெள்ளமாகி விழுங்கக் காத்திருக்கிறது. இதைத்தான் `நித்திய கண்டம் பூரண ஆயுசு’ன்னு சொல்லுவாங்க போல.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதர்களின் சைக்காலஜி விநோதமானதுதான்(என்னையும் சேர்த்து) நாலு திசைகளிலும் இயற்கையின் சீற்றம் அழிவுகளை உண்டாக்கிக் கொண்டிருக்கும்போது , `அப்படி நாம் பிழைத்தோம்’ என்ற உணர்வினால் வரும் மகிழ்ச்சியை நம்மால் கட்டுப்படுத்த முடிவதில்லை. அதே அழிவு நம்மைச் சூழ்ந்து நிற்கும்போது, அதன் பாதிப்பில்லாது இருப்பவர்களைப் பார்த்து வெறுப்பும் கோபமும் கொள்வதும் வாடிக்கையாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வாரத்துக்கு முன்னாடிதான் பிள்ளைகளிடம் `பெருமையாக’ சொல்லிக் கொண்டிருந்தேன்.`` ஈரோட்டில் சுனாமி மாதிரி புயலே வராது, மேற்குத்தொடர்ச்சி மலை இருப்பதால்; பூகம்பம் மாதிரி விஷயங்களும் வராது, தென்னிந்தியாவின் அடித்தட்டு தற்போதைக்கு திடமானதா இருக்கு; ஒருவேளை எதாச்சும் நடக்கணும்னா மேட்டூர் டேம் நிறைஞ்சு வெள்ளம் வந்தாத்தான்”-னு. எனக்கு கொஞ்சம் கரிநாக்குன்னு நண்பர்கள் சொல்லுவாங்க. &lt;span style="color:#009900;"&gt;பலிச்சுட்டுதே&lt;/span&gt;!(பார்த்திபன் பாணி accent உடன் வாசிக்கணும்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15229466-113016877156766223?l=forusdear.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://forusdear.blogspot.com/feeds/113016877156766223/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15229466&amp;postID=113016877156766223&amp;isPopup=true' title='41 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/113016877156766223'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/113016877156766223'/><link rel='alternate' type='text/html' href='http://forusdear.blogspot.com/2005/10/blog-post_24.html' title='ரட்சகியே ராட்சஸியாவாள்'/><author><name>தாணு</name><uri>http://www.blogger.com/profile/04865211166801373288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>41</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15229466.post-113000087754810536</id><published>2005-10-22T10:03:00.000-07:00</published><updated>2005-10-22T10:07:57.560-07:00</updated><title type='text'>``காக்க காக்க"</title><content type='html'>`யாகாவாராயினும் நாகாக்க'  என்பது நிறைய பேருக்கு மறந்துவிட்டது போலும்.  கருத்து சுதந்திரம், எழுத்து சுதந்திரம் போன்றவற்றில் இதுவரை தலையிடாத காசி, திடீரென இந்த முடிவெடுக்க வேண்டியிருந்தால், அதற்கு ஏதேனும் முக்கிய காரணம் இருக்கலாம். அதைத் தெளிவுபடுத்தவும் சற்று அவகாசம் தரவேண்டும். அதற்குள் விமர்சனம், எதிர்ப்பு என்ற போர்வையில் எத்தனை வசைபாடல்கள். அவரது முடிவில் எல்லோருக்குமே ஏதோ ஒரு வகையில் அதிருப்தி உள்ளது -அது செயல் படுத்தப் பட்ட அவசரம் குறித்தோ, பதிவுகள்  தணிக்கை செய்யும் தன்மை குறித்தோ- எதுவானாலும் ஒரு சின்ன அதிருப்தியைக் காட்டிவிட்டு காத்திருக்க எவருக்குமே பொறுமை இல்லை என்பது, மன முதிர்ச்சியின்மையையே காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt; `(உரிமைகள்)கொடுத்ததைக் கேட்டால் அடுத்தது பகை' என்பது எவ்வளவு பொருத்தம்.  பதில் சொல்லவில்லை என்பதாலேயே பழிவாங்கிவிட்டதாக கூக்குரலிடுவது என்ன நியாயம். வலைப் பதிவில் ரொம்ப ஜூனியரான என் போன்றோருக்கு இருக்கும் தோழமை உணர்வுகூட `பழம் தின்று கொட்டை போட்ட'  மூத்தோர்களுக்குக் காசியிடம் இல்லாதது வியப்பாக உள்ளது.  எடுத்த முடிவு சரியா தவறா என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் தவறுதான் என்று தீர்ப்பெழுதித் தண்டனையாகக் கண்டனங்களை தவறான சொற்கள் மூலம் வெளிப்படுத்துவது அத்துமீறல் இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;பதிவுகளைத் தனிமனித சொத்தாக நினைத்து யாரும் பதிவதில்லை. எல்லோரும் வாசிக்கவேண்டும் என்றுதானே எழுதுகிறோம். அதை `எல்லோரும்’ (குழந்தைகள் முதல் கிழடுகள் வரை) வாசிக்கும்படியான எழுத்து நாகரீகத்துடன் எழுத வேண்டுமென்பதற்கு இது ஒரு முன்னோட்டமாக இருக்கட்டுமே. ஓரளவு தணிக்கை இல்லாவிட்டால் `தமிழ்மணம்’ மஞ்சள் பத்திரிகை ரேஞ்சுக்கு இன்னும் சில நாட்களில் தள்ளப் பட்டுவிடுமோ என்பதாகத்தான் சமீபத்திய விவாதங்கள் சென்றுகொண்டிருக்கின்றன.&lt;br /&gt;நம்மூரில் வெளியாகும் சாதாரண குப்பைப் பத்திரிகையில்கூட ரெண்டு வரி எழுதி அச்சேற்ற நம்மால் முடியாது. மனதைப் பாதிக்கும் விஷயங்களை மறுநிமிடம் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள கிடைத்த அற்புதமான வாய்ப்பு. மாலை தொடுத்தவருக்கு அதிலிருக்கும் நெருஞ்சிப்பூக்களை அகற்ற உரிமையில்லையா? மாலையிலிருந்து உதிராமலிருக்க நினைப்பவர்கள் முட்களைத் துறந்துவிட்டு வர முயற்சிப்பதை விடுத்து காயப்படுத்துவது கண்ணியமாகுமா?&lt;br /&gt;&lt;br /&gt;எனது எழுத்துக்கள் எல்லை மீறும்போது எனக்கும் பச்சை விளக்கு அணைக்கப்படும் என்ற உணர்வு எழுத்துக்களின் தரத்தை உயர்த்தத்தானே செய்யும். விவாதத்திற்கும் விரசமான அலசல்களுக்கும் எல்லைக்கோடின்றி ஒரே நோக்கில் பார்ப்பதால்தான் இத்தனை கோபங்கள். முகமற்று எழுதும்போது சுதந்திரமும் கிடைக்கிறது, தரம்கெட்டு எழுதும் தந்திரமும் வருகிறது. விவாதங்களின் போக்கு தனக்கு பாதகமாக வரும் கட்டத்தில் எதிராளியின் மென்மையான பக்கத்தை, அது- மதமோ, ஜாதியோ, பாலினமோ- ஏதோ ஒன்றைக் கொச்சையாகத் தாக்கிவிட்டுத் தானே வெற்றி பெற்றதாகக் கொக்கரிக்கும் தன்மையால் அடைந்தது என்ன? சக பதிவர்களின் வெறுப்பும் அசூயையுமே! அதை விடுத்து நட்புடன், நகைச்சுவையுடன், எழுதிப் பாருங்களேன். துளசியின் பதிவு போல் எண்ணற்ற விருந்தினர்கள் தினமும் எட்டிப் பார்ப்பார்கள்.&lt;br /&gt;``காதலிக்க நேரமில்லை” படம் காலம் கடந்தும் நம்மை சிரிக்கவைப்பது போல்.&lt;br /&gt;&lt;br /&gt;``&lt;span style="color:#ff0000;"&gt;We are not that rich to throw away any friendship&lt;/span&gt;”&lt;br /&gt;&lt;br /&gt;(என்னை ஜால்ரான்னு சொல்லப் போற நண்பர்களுக்கு- இப்போவே நன்றி சொல்லிக்கிறேன்).&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15229466-113000087754810536?l=forusdear.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://forusdear.blogspot.com/feeds/113000087754810536/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15229466&amp;postID=113000087754810536&amp;isPopup=true' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/113000087754810536'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/113000087754810536'/><link rel='alternate' type='text/html' href='http://forusdear.blogspot.com/2005/10/blog-post_22.html' title='``காக்க காக்க&quot;'/><author><name>தாணு</name><uri>http://www.blogger.com/profile/04865211166801373288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15229466.post-112982456782439600</id><published>2005-10-20T08:58:00.000-07:00</published><updated>2005-10-20T09:09:27.840-07:00</updated><title type='text'>காசியின் பச்சை விளக்கு!!</title><content type='html'>பச்சை விளக்கு எரியுமென்றார்&lt;br /&gt;புரட்டி புரட்டிப் பார்க்கிறேன்&lt;br /&gt;எந்தப் பக்கம் எரியுமென்று&lt;br /&gt;எவரிடம் கேட்பது?&lt;br /&gt;&lt;br /&gt;காசியிடமே கேட்டுவிடுவோம்&lt;br /&gt;கவிதை மூலமாகவே!&lt;br /&gt;கத்திரிக்கோல் நமக்கில்லையெனில்&lt;br /&gt;கண்டிப்பாக தமிழ்மணம் தாய் வீடுதான்&lt;br /&gt;&lt;br /&gt;புலம்பக் கிடைத்த இடம் இது&lt;br /&gt;புலமை சோதிக்கும் மேடையும் இது&lt;br /&gt;கருத்துக்களைக் கருத்தரிக்கும்&lt;br /&gt;சொப்பன உலகமும் இது&lt;br /&gt;&lt;br /&gt;இடையிடையே ஏஞ்சல்களையும்&lt;br /&gt;இருட்டியபின் சில சாத்தன்களையும்&lt;br /&gt;இடற நேர்ந்தாலும் இனிப்பான&lt;br /&gt;இணையக் கடலல்லவா இது!&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மணத்தின் முத்துக்களை&lt;br /&gt;சில சொத்தை முத்துக்களானாலும்&lt;br /&gt;பொத்திப் பாதுகாக்க வேண்டுமென்று&lt;br /&gt;பொறுப்பாக வேண்டிக் கொள்கிறேன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15229466-112982456782439600?l=forusdear.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://forusdear.blogspot.com/feeds/112982456782439600/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15229466&amp;postID=112982456782439600&amp;isPopup=true' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/112982456782439600'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/112982456782439600'/><link rel='alternate' type='text/html' href='http://forusdear.blogspot.com/2005/10/blog-post_20.html' title='காசியின் பச்சை விளக்கு!!'/><author><name>தாணு</name><uri>http://www.blogger.com/profile/04865211166801373288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15229466.post-112922289338589499</id><published>2005-10-13T09:57:00.000-07:00</published><updated>2005-10-13T10:01:33.396-07:00</updated><title type='text'>வாழ்வின் விளிம்பில் முதுமை</title><content type='html'>முதுமை என்பதொரு மூன்றெழுத்து&lt;br /&gt;முடிவை நெருங்கும் கடையெழுத்து&lt;br /&gt;இறந்த காலங்கள் இன்பமாயிருக்கும்&lt;br /&gt;வருங்காலமோ கேள்விக்குறியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்ந்த காலங்களின் வசந்தங்கள்&lt;br /&gt;விழியோரக் கதைகள்  சொல்லும்&lt;br /&gt;வாழும் வாழ்க்கையின் நிச்சயமின்மை&lt;br /&gt;விழியோரங்களில் நீர் வடிக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;தேர்ந்தெடுத்த துணையோ&lt;br /&gt;பெற்றெடுத்த மகவோ&lt;br /&gt;சுற்றி நிற்கும் சுற்றமோ&lt;br /&gt;சொந்தமற்றுப் போகும் நேரம்.&lt;br /&gt;&lt;br /&gt;சேர்த்து வைத்த ஐஸ்வரியம்&lt;br /&gt;அர்த்தமற்றுப் போகும் நேரம்&lt;br /&gt;செல்லாக் காசாய் ஒடுங்கி இங்கே&lt;br /&gt;செல்லரிக்கப் போகும் தேகம்&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டு வந்து வாழ வேண்டுமென்று&lt;br /&gt;மெளன யாகம் ஆங்காங்கே&lt;br /&gt;மீண்டு வர வழிதெரியாத&lt;br /&gt;மெளன சாட்சியான உயிர் இங்கே.&lt;br /&gt;&lt;br /&gt;போகும் நேரம் தெரிந்துவிட்டதென்று&lt;br /&gt;புன்சிரிப்பால் உணர்த்திவிட்டு&lt;br /&gt;பொங்கியழும் உறவுகளைப் பிரிந்து&lt;br /&gt;பறந்து செல்லும் இன்னுயிர் ஒன்று!&lt;br /&gt;&lt;br /&gt;(&lt;span style="color:#3333ff;"&gt;எல்லா மரணங்களும் ஏற்படுத்தும் பாதிப்பு-&lt;br /&gt;அது எவ்வளவு முதிய வயதாக இருந்தாலும்&lt;/span&gt;)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15229466-112922289338589499?l=forusdear.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://forusdear.blogspot.com/feeds/112922289338589499/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15229466&amp;postID=112922289338589499&amp;isPopup=true' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/112922289338589499'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/112922289338589499'/><link rel='alternate' type='text/html' href='http://forusdear.blogspot.com/2005/10/blog-post_13.html' title='வாழ்வின் விளிம்பில் முதுமை'/><author><name>தாணு</name><uri>http://www.blogger.com/profile/04865211166801373288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15229466.post-112905287697974804</id><published>2005-10-11T10:44:00.000-07:00</published><updated>2005-10-11T10:47:56.980-07:00</updated><title type='text'>மெடிக்கல் ராமாயணம்(தேர்வு காதை)</title><content type='html'>மருத்துவக் கல்லூரியில் படித்து பாஸ் பண்ணுவதைவிட சொதப்பி பாஸ் பண்ணுவது ரொம்ப ரகளையான விஷயம். அதிலும் ரொம்ப காலம் (&gt;8-10 வருடங்கள்) நிதானமாகப் படிக்கும் நண்பர்கள் செய்யும் ரவுசு தாங்க முடியாது. ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் பாஸ் பண்ணிப் போயாவது நம் பிராணனை வாங்காமலிருக்கட்டும்னு சபிச்சுகிட்டே தள்ளிவிடப்பட்ட கேஸ்கள் அப்போதெல்லாம் ரொம்ப சகஜம். அவங்களுக்கு Chronic additionals  என்ற பெருமைக்குரிய பட்டமும் உண்டு. ஆனால் அந்த மாதிரி அண்ணன்கள் வெளிப்படையாக முரட்டுத்தனமாகத் தோன்றினாலும் ரொம்ப நல்ல பசங்களாக இருப்பாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இவங்களோட பாஸ் புராணம், ராகிங் கதைகள், வாத்தியார்களுடன் மோதல்கள் ஒவ்வொண்ணுமே ஒரு எபிசோட் எழுதலாம். எனக்குத் தெரிஞ்சது கொஞ்சம்தான், உண்மையில் நடந்தவைகள் பற்றி சொன்னால் ஒரு இராமாயணமே எழுதலாம் என்று சொல்ல்வார்கள்.அதான் இந்த தலைப்பு.முதல்லே கொஞ்சம் லொல்லு பண்ணின ஆசாமி பத்தி சொல்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt; தியரி பரீட்சை முடிந்ததும் viva voce என்ற ஓரல் டெஸ்ட் நடக்கும். அதில் ஸ்பாட்டர்ஸ் என்பது முன்னால் வைத்திருக்கும் பொருட்களில் ஒன்றை கண்டுபிடித்து சொல்வது. அதிலிருந்து கேள்விக்கணைகளைத் தொடுத்து மாணவர்களின் தகுதியை நிர்ணயம் செய்வார்கள். ஏழெட்டு தரம்  படையெடுத்தவர் ஒருவரின் முறை வந்தது. ஏற்கனவே கடுப்பு + கொஞ்சம் குறும்புடன் வந்து அமர்ந்தவரிடம்,அவரை எப்படியாவது பாஸ் பண்ணிவிட்டுவிடவேண்டுமென்று நினைத்திருந்த வாத்தியார் உனக்கு மிகவும் தெரிந்த பொருள் ஏதேனும் ஒன்றை எடு என்று சொன்னார். இவரும் ரொம்ப கர்ம சிரத்தையாக எழுந்துநின்று அப்படியும் இப்படியுமா அலசி சில நிமிடங்களைக் கரைத்து ஒரு பொருளைப் பெருமையுடன் தூக்கிக் காட்டினார். ஆசிரியருக்கே சிரிப்பு தாங்க முடியலை, அது மேஜை மேல் வைக்கப்படும் காலிங்பெல்! ஆனாலும் லொல்லு பண்ணிய மாணவனைக் கொஞ்சமேனும் கடுப்பேத்தாமல் பாஸ் கொடுக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டு, அதை ரெண்டு தரம் தட்டிவிட்டு இதிலிருந்து என்ன வந்துச்சுன்னு ஆசிரியர் கேட்டார். பதில் சொல்லித்தானே ஆகணும், `சத்தம்’னு மொட்டையாக பதில் வந்தது. அழைப்புமணியோசைன்னு சொன்னா அதிலிருந்து கேள்வி வந்திடுமாம் , அதனால் ரொம்ப எச்சரிக்கையான பதில்! குட்டி எட்டடின்னா தாய் எத்தனை அடி பாயும்? `சத்தம் எப்படி காதுகளில் புகுந்து மூளைக்குப் போகுதுன்’னு ஆரம்பிச்சு காதுலே தொடங்கி கால்கள் வரை  கேள்விமேல் கேள்வி கேட்டு புரட்டி எடுத்திட்டார். இதுதான் மொட்டத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடறதுன்னு சொல்வாங்க.நம்ம `தலை’க்கு தலை சுற்றலே வந்துட்டதா கேள்வி( ஆனாலும் அந்த அன்பான ஆசிரியர் பாஸ் கொடுத்திட்டதா கேள்வி)&lt;br /&gt;(தேர்வு காண்டம் என்றுதான் தலைப்புக் கொடுப்பதாக இருந்தேன். ஆணுறையின் ஆங்கிலப் பெயராக அர்த்தம் செய்துவிடக் கூடாதேயென்று காதை ஆகிவிட்டது)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;em&gt;கொசுறாக ஒரு ஜோக்:&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;சளித் தொந்தரவு உள்ள ஒருவருக்கு சீரியசாக பரிசோதனை செய்துகொண்டிருந்தார் நான்காம் ஆண்டு மாணவர் ஒருவர். உள்ளிருக்கும் தொந்தரவை நன்கு விளங்கிக்கொள்ள ந்ன்கு இழுத்து மூச்சு விடுமாறு நோயாளியிடம் கூறினார். அவரும் அவ்வாறே செய்தார். மாணவர்  இன்னும் கொஞ்சம் இழுத்து விடச் செய்யும் பொருட்டு `நல்லா இழுத்து மூச்சு விடுங்க’ன்னு சொன்னார். இவர் இம்சை தாங்காமலோ இல்லை நிஜமாகவே சொன்னது புரியாமலோ அந்த நோயாளி மாணவர் காதில் தொங்கிக் கொண்டிருந்த ஸ்டெதாஸ்கோப்பை வலிமையாக இழுத்துப் பிடித்துக்கொண்டு `இழுத்து’ மூச்சு விட்டார். பாவம் அந்த மாணவர் சக மாணவ, மாணவியர் முன் அசடு வழிந்தார்!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15229466-112905287697974804?l=forusdear.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://forusdear.blogspot.com/feeds/112905287697974804/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15229466&amp;postID=112905287697974804&amp;isPopup=true' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/112905287697974804'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/112905287697974804'/><link rel='alternate' type='text/html' href='http://forusdear.blogspot.com/2005/10/blog-post_112905287697974804.html' title='மெடிக்கல் ராமாயணம்(தேர்வு காதை)'/><author><name>தாணு</name><uri>http://www.blogger.com/profile/04865211166801373288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15229466.post-112902046122022516</id><published>2005-10-11T01:45:00.000-07:00</published><updated>2005-10-11T01:47:41.230-07:00</updated><title type='text'>இளைஞர்கள்- அன்றும் இன்றும்</title><content type='html'>சமீப காலங்களில் இந்நாட்டு மன்னர்களை, வருங்கால இந்தியத் தூண்களை, உரசிப் பார்ர்க்கும் சங்கதிகளையே கேட்டுக் கேட்டு அவர்களைப் பற்றிய ஒரு கவலையுடன் இருந்த காதுகளுக்கு நேற்று ஒரு அருமையான விருந்து கிடைத்தது. சமீபத்தில் பள்ளிப் பருவம் தாண்டி கல்லூரியில் அடியெடுத்து வைத்திருக்கும் தோழியின் மகன். அவனது தெளிந்த சிந்தனைகளையும், தீர்க்கமான முடிவுகளையும் தெரிந்து கொண்ட போது, தேவையற்றுக் குழம்புவர்கள் கிழட்டுப் பருவத்தை எதிர்நோக்கியிருக்கும் நாமே என்று தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;மாநிலத்திலேயே மூன்றாவது இடத்தில் தேறி மருத்துவப் படிப்புக்கு முன்னுரிமை கிடைத்தும் அதை வேண்டாமென்று தள்ளிவிட்டு பொறியியல் துறையில் தனக்குப் பிடித்த பிரிவை தேர்ந்தெடுத்து சேர்ந்துவிட்டான். தாய் மருத்துவராக இருந்தும் அவனைத் தன்வழியில் இழுக்க முடியவில்லை. தாயின் தோழர்களும் தோழியரும் (என்னையும் சேர்த்துத்தான்) மணிக்கணக்கில், வாரக் கணக்கில் விவாதித்தும் அவனின் தெளிந்த முடிவிலிருந்து மாற்ற எள்ளளவும் முடியவில்லை. அவனது நெருங்கிய நண்பனுக்கு மார்க் குறைந்ததால் அதிக பட்ச capitation fee கொடுத்து மருத்துவ சீட் வாங்கியதைப் பார்த்தும் கூட அவன்  மனது கொஞ்சம் கூட கலையவேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;படிப்பது , குறிப்பிட்ட துறையில் சேர்வது எல்லாமும் அந்தந்த நேரத்திய சூழலைப் பொறுத்தது என்றாலும் கூட , முடிவெடுப்பதில் இளைய தலைமுறைக்குள்ள தீர்க்கம் மனதுக்கு சுகமாக இருந்தது. இத்தனை வயதுக்குப் பிறகும் கூட அநேக நேரங்களில் நமது தீர்க்கமான முடிவுகள் சந்தர்ப்ப சூழலுக்கேற்ப திரிந்து விடுகிறது. அத்தனை pressure மத்தியிலும் அசையாமல் நின்றுவிட்டானே! இவன் மட்டுமே அபூர்வமானவன் என்று சொல்லவில்லை. இந்த வயதுக் குழந்தைகளெல்லோருமே நன்கு தெளிந்த சிந்தனையுடந்தான் இருக்கிறார்கள். அப்பா அம்மா டாக்டராக இருந்தும் பயாலஜி எடுக்க மாட்டேன் என்று கம்ப்யூட்டர் எடுத்த பையன், மாவட்டத்திலேயே பயாலஜியில் முதல் மார்க். ¼  மார்க்கில் மருத்துவப் படிப்பைத் தவறவிட்ட டாக்டர் வீட்டுப் பெண், எத்தனை லட்சம் கொடுத்தாவது, மெடிகல் சீட் வாங்கித்தருவதாகச் சொன்ன அப்பாவின் வாக்கைப் புறம் தள்ளிவிட்டாள். இன்னும் எத்தனையோ உதாரணங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு அறிவுபூர்வமாக தெளிவாக இருக்கும் இவர்களின் அடுத்த பக்கத்தை மட்டுமே பூதாகாரமாகக் காட்டி அசிங்கப் படுத்துவது ஊடகங்களே. எங்கோ நடக்கும் மேல்தட்டு நிகழ்ச்சிகளை விளம்பரத்துக்காக வெளியிடும்போது, அத்தனை இளைஞர்களுமே அதேபோல் இருப்பதாக ஒரு மாயையை உருவாக்குகிறார்கள். ஜீன்ஸ் போட்ட பெண்கள் எல்லோருமே தரக்குறைவானவர்கள் போலவும், நண்பர்கள் கூட்டத்துடன் இருப்பவர்கள் எல்லோரும் தவறான உறவு உள்ளவர்கள் போலவும் மிகைப் படுத்தி காட்டும் பத்திரிகைகள்தான் தவறானவை.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிப் பருவம் முடியும் வரை குடும்பம் என்ற கூட்டுக்குள், பெற்றோர் என்ற அன்புச் சிறையில் வளர்வதால், வெளி உலக உறவுகளோ நேரப் போக்குக்கான தனித்தன்மையான விஷயங்களோ தேவைப் படுவதில்லை. கல்லூரியில் சேரும்போது வரும் சுதந்திர உணர்வு , தன்னால் முடிவெடுக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அவர்களைச் சிறிது அசைத்துப் பார்ப்பது உண்மைதான். அதனால் காதலிலிருந்து கஞ்சா அடிப்பதுவரை எல்லாவற்றையும் பரீட்சார்த்தமாக முயன்று பார்ப்பதும் நடக்கத்தான் செய்கிறது. சிறிய சதவீதத்தவரைத் தவிர மற்றவரெல்லாம் தங்கள் இயல்புக்குத் திரும்பிவிடுவதும் வாடிக்கைதான். இது இன்று நேற்று தான் நடக்கிறதா? காலம் காலமாக வரும் நிகழ்வுகள்தான். எத்தனையோ கஞ்சா, தண்ணி கேஸ்கள் இன்று புகழ் பெற்ற மருத்துவர்களாகவும், பொறியியல் வல்லுநர்களாகவும் இல்லையா? இந்தப் பதிவை வாசிக்கும் எத்தனை ஆண்கள் இதுவரை தண்ணியே அடித்ததில்லை என்று சொல்லமுடியும். காதலித்துப் பார்க்காத( ஒருவேளை தோல்வியுற்றதாகவும் இருக்கலாம்) மனிதர்கள் எத்தனை பேர்?&lt;br /&gt;Love is a part of life which is unescapable. நாம் நடந்துவந்த பாதையில்தான் நம் சந்ததியும் செல்கிறது. அவர்கள் செய்வதை மட்டும் கண்டனப்படுத்தி அவர்களை அந்நியப் படுத்துவது ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;சின்னச் சின்ன தவறுகளும் தடுமாற்றங்களுமில்லாமல் வளரும் குழந்தைகள்தான் மிகப் பெரிய தோல்விகளைச் சந்திக்கிறார்கள், அதைத் தாங்க முடியாமல் தேவையற்ற முடிவுகளைத் தேடிக் கொள்கிறார்கள். குழந்தைகளின் திசை மாற்றம் கண்டிப்பாக பெற்றவர்களுக்குத் தெரியும்.அதை திருத்த வேண்டிய கட்டத்தில் தலையிடாமல் போகும்போதுதான் மக்களை இழக்கிறோம். என் மகன் தவறே செய்யமாட்டான் என்ற போலித்தனமான நம்பிக்கையிலிருந்து விடுபட்டு தன் மகனும் சாமான்யன் என்ற உணர்வு வரவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;காதலிப்பதாகத் தெரிந்து கத்தி கபடாக்களைத் தூக்கியோ, காதலர்களைப் பிரித்தோ சாதிப்பது ஒன்றுமில்லை. தண்ணியடிப்பதாகத் தெரிந்து பாக்கட் மணி நிப்பாட்டுவதாலோ, நண்பர்கள் சேர்க்கை சரியில்லை என்று தனிமைப் படுத்துவதாலோ பிரயோஜனமில்லை. உங்கள் குழந்தைகளுடன் பேசுங்கள், அதிக நேரம் பேசுங்கள், அவர்கள் எதிர்பார்க்கும்போதெல்லாம் பேசுங்கள். பெற்றோரின் நட்பில் வாழும் இளைஞர்கள் பாதை மறுவதில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15229466-112902046122022516?l=forusdear.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://forusdear.blogspot.com/feeds/112902046122022516/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15229466&amp;postID=112902046122022516&amp;isPopup=true' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/112902046122022516'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/112902046122022516'/><link rel='alternate' type='text/html' href='http://forusdear.blogspot.com/2005/10/blog-post_11.html' title='இளைஞர்கள்- அன்றும் இன்றும்'/><author><name>தாணு</name><uri>http://www.blogger.com/profile/04865211166801373288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15229466.post-112875886395753799</id><published>2005-10-08T01:02:00.000-07:00</published><updated>2005-10-08T01:07:43.966-07:00</updated><title type='text'>தாழம்பூ-வாழைப்பூ-வலைப்பூ!</title><content type='html'>பின்னூட்டங்களே இட்டுக்கொண்டிருந்தபோது , அடுத்தவர் நெருப்பில் குளிர்காய்வது சரியாக வராதுன்னு தோணியதால், பதிவெழுதப் புகுந்தேன். ஆரம்பித்த புதிதில் அடுக்கடுக்காக எழுதும்போது ரொம்ப புளகாங்கிதமாக இருந்தது. நாம எழுதறதை இத்தனை பேர் வாசிக்கிறாங்களே, இன்னும் எழுதணும்னு ஒரே உத்வேகத்தோடு தினமும் ஒரு பதிவு போடணும்போல் ஒரு அரிப்பு. வேலைப்பளு நெட்டி முறித்தாலும், தூங்குற நேரங்களைத் தியாகம் பண்ணிட்டு சக பதிவர்களுடன் கலந்துரையாடுவதில் ஒரு திரில். சாப்பிடும் நேரங்களை ஒதுக்கிவிட்டு சமபந்தி போஷனம் பண்ணுவதுபோல் ஒரு நிறைவு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆச்சு , ஓரளவு நாமும் ஒரு வலைப்பதிவர்ங்கிற அங்கீகாரம் கிடைச்சாச்சு. ஆறுமுகநேரியிலிருந்து அமெரிக்கா வரை, நெல்லையிலிருந்து நியூஸிலாந்துவரை என்று ஏகப்பட்ட நண்பர்களுடன் அறிமுகம். நாட்டு நடப்பிலிருந்து நவராத்திரி கொலுவரை நல்லது கெட்டது நாலும் பகிர்ந்துகொள்கிறோம். இணையத்தில் தெரிந்துகொண்டவர்களின் குரல்களை தொலைபேசியில் கேட்கும்போது வருவதோ புல்லரிப்பு. நிழலுலகம்போல் காட்சியளிப்பது நிஜமாகிப் போகும்போது இதயத்தில் ஒரு நெகிழ்வு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆஹா, நமக்கு அறிமுகமானது நம் நண்பர்களுக்கும் தெரியட்டுமென்று ஈ-கலப்பையையும், யூனிகோடையும் தெரியவைத்து அவர்களின் பதிவு பார்த்ததும் மனதில் ஒரு பெருமிதம். நித்திரைக்குச் செல்லுமுன் கடைசி பதிவையும் பார்த்துவிட்டு, நாள் தொடங்கியதும் இடைப்பட்ட வேளையில் வந்த பதிவுகளையும் மேய்ந்துவிட்டு, நேரமிருந்தால் பின்னூட்டம்,  நேரப் பற்றாக்குறையென்றால் நட்சத்திரத்தில் ஒரு குத்து- இப்படி சதா சர்வ நேரமும் திரை முன்னாலேயே உட்கார்ந்திருப்பதிலும் ஒரு ஆனந்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்டதில் கேட்டதில் சுவாரசியமான விஷயங்களை மகள் மகனுடனும்,  புதிதான விஷயங்களைக் கணவருடனும் பகிர்ந்து கொண்டு அவர்களையும் indirect ஆக பதிவுகளின் தொடர்பில் வைத்திருப்பதிலும் ஒரு சந்தோஷம். வெளிநாடுகளுக்கு பயணம் செய்யவேண்டுமென்றிருந்த ஆசைகூட இரண்டாம்பட்சமாகத் தோன்றுமளவுக்கு நாலு சுவர்களுக்குள்ளேயே இந்த உலகம் முழுவதும் சுற்றிவருவதில் ஒரு பெருமிதம்.&lt;br /&gt;&lt;br /&gt;நியூஸியின் காலக்கெடு போன்ற விஷயங்களையும், ரஷ்யாவில்&lt;br /&gt;க்யூவில் நிற்பது எதற்காக போன்றவற்றையும் எந்த பூகோளப் புத்தகத்திலிருந்தும் இவ்வளவு அந்நியோனியமாகத் தெரிந்து கொள்ளமுடியாது என்பதில் ஒரு பிடிப்பு. பெண்களை ஆண்கள் எழுத்துக்களால் தாக்கினாலும், பெண்கள் ஆண்களைக் கண்டித்துக் கடுப்பேற்றினாலும், கடல் அலை போல் மறுபடி மறுபடி பதிவுகளில் புரண்டு, மோதி, முத்தெடுக்கும்  முரண்பாடுகளும் ஒரு சுகம் இங்கே.&lt;br /&gt;&lt;br /&gt;பதிவு எழுத நேரம் வாய்க்காத தருணங்களிலும் பின்னூட்டங்கள் மூலமே அனைவருடனும் அளவளாவ முடிவது அதிகப்படியான&lt;br /&gt;வசதி இங்கு. வம்பு பேச்சோ, வரம்பு மீறிய பேச்சோ எதுவானால் என்ன, பேச்சுக்கள்தான் எங்களைப் பிணைக்கும் பாலம் இங்கே.&lt;br /&gt;பதிவுகளால் பதியனிடப்பட்டு இணையத்தில் வேரூன்றி நிற்கும்&lt;br /&gt;அட்சய மரத்தின் அபூர்வப் பூ நம் வலைப்பூ.&lt;br /&gt;&lt;br /&gt;(தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தமில்லை, சும்மா ஒரு attraction-க்காகத்தான்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15229466-112875886395753799?l=forusdear.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://forusdear.blogspot.com/feeds/112875886395753799/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15229466&amp;postID=112875886395753799&amp;isPopup=true' title='28 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/112875886395753799'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/112875886395753799'/><link rel='alternate' type='text/html' href='http://forusdear.blogspot.com/2005/10/blog-post_08.html' title='தாழம்பூ-வாழைப்பூ-வலைப்பூ!'/><author><name>தாணு</name><uri>http://www.blogger.com/profile/04865211166801373288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>28</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15229466.post-112843899548110510</id><published>2005-10-04T08:12:00.000-07:00</published><updated>2005-10-04T08:16:35.503-07:00</updated><title type='text'>காதலா.. காதலா!</title><content type='html'>``தேடி அலைகிறேன் – உன்&lt;br /&gt;தேய்ந்த செருப்பின் சுவடுகளை&lt;br /&gt;பார்த்துக் களிக்கிறேன் – உன்&lt;br /&gt;பாதம் பதிந்த பாதைகளை&lt;br /&gt;&lt;br /&gt;எழுதிக் கிழிக்கிறேன் – உன்&lt;br /&gt;நினைவு தொட்ட எண்ணங்களை&lt;br /&gt;பதறித் துடிக்கிறேன் – உன்&lt;br /&gt;பார்வை பட்ட தருணங்களில்&lt;br /&gt;&lt;br /&gt;வீம்புக்கு சண்டையிடுவேன்– உன்&lt;br /&gt;விழியசைவில் சரணடைய&lt;br /&gt;காரணமின்றி கடுப்படிப்பேன் – உன்&lt;br /&gt;கரங்களில் என்னை அர்ப்பணிக்க”.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இப்படியெல்லாம் எழுதியிருக்கிறேன்&lt;br /&gt;இளமை எனும் ஊஞ்சலாடியபோது&lt;br /&gt;இன்னும் என்னென்னவோ கிறுக்கியிருக்கிறேன்&lt;br /&gt;இதயத்தில் நீ &lt;span style="color:#3333ff;"&gt;மட்டுமே&lt;/span&gt; இருந்தபோது!&lt;br /&gt;&lt;/span&gt;( இப்போதும் இதயத்தில் நீதான்- ஆனால்&lt;br /&gt;  இல்லற இடிபாடுகளிடையே நீ!)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15229466-112843899548110510?l=forusdear.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://forusdear.blogspot.com/feeds/112843899548110510/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15229466&amp;postID=112843899548110510&amp;isPopup=true' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/112843899548110510'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/112843899548110510'/><link rel='alternate' type='text/html' href='http://forusdear.blogspot.com/2005/10/blog-post.html' title='காதலா.. காதலா!'/><author><name>தாணு</name><uri>http://www.blogger.com/profile/04865211166801373288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15229466.post-112823793470069678</id><published>2005-10-02T00:22:00.000-07:00</published><updated>2005-10-02T00:25:34.713-07:00</updated><title type='text'>இந்தியன் vs அந்நியன்</title><content type='html'>(&lt;span style="color:#3333ff;"&gt;சங்கர் படத் தலைப்புகள் அல்ல&lt;/span&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;இன்று இவன் இந்தியன்&lt;br /&gt;எவரையும் சட்டை செய்யாமல்&lt;br /&gt;எதையும் ஆக்ரோஷமாக எதிர்க்கும்&lt;br /&gt;இளவயது சுதந்திரன்.&lt;br /&gt;&lt;br /&gt;நாளைமுதல் இவன் அந்நியன்&lt;br /&gt;வெளிநாட்டு வேலை கிடைத்து&lt;br /&gt;சொந்தங்களைப் பிரிந்து செல்லும்&lt;br /&gt;பாவமான பருவ மகன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியனாய் இருந்தபோது&lt;br /&gt;இளமை துள்ளக் களித்திருந்தான்&lt;br /&gt;அந்நியன் ஆனபோதோ&lt;br /&gt;அநியாயத்துக்கு முதிர்ந்துபோனான்.&lt;br /&gt;&lt;br /&gt;பொருளாதாரம் உயர்ந்தது&lt;br /&gt;பொறுப்புகளோ தலை நிமிர்த்தியது&lt;br /&gt;வாழ்க்கைகூட இலகுவானது&lt;br /&gt;மனது மட்டுமே தனிமையானது!&lt;br /&gt;&lt;br /&gt;இடையிலே&lt;br /&gt;ஆறேழு வருடங்கள் ஓடிவிட்டது!&lt;br /&gt;இல்லறமும்&lt;br /&gt;இனிமையைக் கூட்டிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பிறந்தமண் பொருந்தாமல் போய்விட்டது&lt;br /&gt;புகுந்த தேசம் பிரிய முடியாததாகிவிட்டது&lt;br /&gt;இன்னாட்டு மன்னன்&lt;br /&gt;பிறதேசப் பிரஜையாகிவிட்டான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15229466-112823793470069678?l=forusdear.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://forusdear.blogspot.com/feeds/112823793470069678/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15229466&amp;postID=112823793470069678&amp;isPopup=true' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/112823793470069678'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/112823793470069678'/><link rel='alternate' type='text/html' href='http://forusdear.blogspot.com/2005/10/vs.html' title='இந்தியன் vs அந்நியன்'/><author><name>தாணு</name><uri>http://www.blogger.com/profile/04865211166801373288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15229466.post-112809729101476992</id><published>2005-09-30T09:18:00.000-07:00</published><updated>2005-09-30T09:21:31.016-07:00</updated><title type='text'>நெகடிவ் க்ரூப் ரத்தம்</title><content type='html'>இரத்ததானம் பற்றி சிமுலேஷன் அவர்கள் கதையைப் படித்தவுடன் &lt;span style="color:#ff0000;"&gt;Rh &lt;/span&gt;&lt;span style="color:#ff0000;"&gt;negative group&lt;/span&gt; பற்றி எழுதவேண்டுமென்று தோன்றியது.&lt;br /&gt;பாஸிடிவ் வகையைவிட நெகடிவ் வகை கொஞ்சம் அரிதானதுதான். அதிலும் பெண்களுக்கு நெகடிவ் ஆக இருந்துவிட்டால் சில பல பிரச்னைகள் குழந்தைப்பேறைப் பாதிக்கும். முதல் கர்ப்பத்தை நெகடிவ் தன்மை பாதிப்பதில்லை. ஆனாலும் கர்ப்பகாலங்களில் வெகு அபூர்வமாக ஏதேனும் ரத்தக் கசிவு கர்ப்பப்பையில் ஏற்பட்டு குழந்தைக்கு தொந்தரவு தரலாகாது என்பதால் அதற்குத் தேவையான பீரியாடிக் செக்கப் செய்யப்படும். குழந்தை பிறந்ததும், சிசுவின் ரத்த வகையும் தாயின் க்ரூப்போல் நெகடிவ் ஆக இருந்தால் கவலைப்பட வேண்டியதில்லை. பாஸிடிவாக இருக்கும் பட்சத்தில் தாய்க்கு ஒரு தடுப்பூசி போட வேண்டும். இது அடுத்த கர்ப்பத்தில் ஏற்படும் பிரச்னைகளைத் தடுப்பதற்காகவே. அப்படி போடாமல் தவறும் பட்சத்தில் அடுத்த குழந்தைக்கு கர்ப்பத்திலேயே ஒருவித மஞ்சள் காமாலையும் அதுசார்ந்த உடல் ரீதியான பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்புண்டு. அக்குழந்தைக்கு பிரசவத்துக்கு முன் கருவறையிலேயே(intra uterine)ரத்ததானம் செய்யவேண்டிய சூழல்கூட ஏற்படலாம்.&lt;br /&gt;பிரசவ சமயங்களில் பரிசோதனை செய்துகொள்வது ஓரளவு எல்லோராலும் நடைமுறைப்படுத்தப் பட்டுவிட்டதால் இது சம்பந்தமான பிரச்னைகள் குறைந்துள்ளது. ஆனால் மாறிவரும் பொருளாதார தேவைகளால் முதல் குழந்தையையே அபார்ஷன் செய்துகொள்ளும் நிலைமையும் அதிகரித்து வருகிறது. அதுவும் பதிவு பெற்ற மருத்துவர்களன்றி தாதியரிடமும் போலி மருத்துவர்களிடமும் செய்துகொள்ளும் அவலமும் இருக்கிறது. அப்போது ரத்தவகை கண்டு பிடிக்கப்படாமல், உரிய தடுப்பூசி போடப்படாமல், அடுத்த குழந்தையை ஆபத்துக்குள் தள்ளி விடுகிறார்கள். இதில் மணமாகாமல் கருவுறும் பெண்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. மேலும் கருக் கலைப்பிற்கான மாத்திரைகள் மெடிகல் ஸ்டோர்களில் டாக்டரின் பரிந்துரையின்றி மிக எளிதாகக் கிடைக்கிறது. நன்கு படித்தவர்கள்கூட எளிதாகக் கிடைக்கும் யூரின் கிட்கள் மூலம் பிரசவத்தை உறுதி செய்துவிட்டு பார்மஸியில் மாத்திரை வாங்கி சாப்பிட்டுக் கருவைக் கலைத்துக் கொள்கிறார்கள்.??!! அடுத்த கர்ப்பத்தின்போது பரிசோதனையில் நெகடிவ் என்று சொல்லும்வரை அது பற்றிய விழிப்புணர்வே அவர்களுக்கு இருப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு போடப்படும் தடுப்பூசியின் விலை கொஞ்சம் அதிகமே. சுமாராக 2500-3000 ரூபாய் ஆகிவிடும். ஆனால் அரசு மருத்துவ மனைகளில் இலவசமாகவே போடப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் பிரசவம் ஆனால் கூட, டாக்டரின் பரிந்துரையின் பேரில் தடுப்பூசி போடமட்டுமே கூட அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆகலாம். இந்த வசதி பிரசவத்துக்குமட்டுமே, கருக்கலைப்புக்கு அல்ல.&lt;br /&gt;பிரசவத்தின் பிறகு போடும் தடுப்பூசியின் அளவில் பாதி அளவு கருக்கலைப்பிற்கு பின் போட்டால் போதுமானது.&lt;br /&gt;இரண்டாவது பிரசவத்திற்குப் பிறகு கர்ப்பத்தடை செய்துகொள்பவர்கள்கூட தடுப்பூசி போடவேண்டும். பின்னாளில் ஏதேனும் ரத்தம் செலுத்தவேண்டியிருந்தால் தொந்தரவு வராமலிருப்பதற்காக..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15229466-112809729101476992?l=forusdear.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://forusdear.blogspot.com/feeds/112809729101476992/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15229466&amp;postID=112809729101476992&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/112809729101476992'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/112809729101476992'/><link rel='alternate' type='text/html' href='http://forusdear.blogspot.com/2005/09/blog-post_112809729101476992.html' title='நெகடிவ் க்ரூப் ரத்தம்'/><author><name>தாணு</name><uri>http://www.blogger.com/profile/04865211166801373288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15229466.post-112807618906117254</id><published>2005-09-30T03:20:00.000-07:00</published><updated>2005-09-30T03:29:49.073-07:00</updated><title type='text'>இரத்ததான தினம்</title><content type='html'>&lt;p&gt;                              இரத்ததான தினம்- அக்டோபர் 01.&lt;/p&gt;&lt;p&gt; &lt;span style="color:#ff0000;"&gt;``மனித நேயத்தை வார்த்தைகளால் அல்ல&lt;br /&gt;       ரத்த தானத்தால் வெளிப்படுத்துவோம்”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுழலுவதற்கே என்று உருவாக்கப்பட்டது இரத்தம்&lt;br /&gt;மீண்டும் ஊறப்போவது நிச்சயம். பரிசோதனைக்குழாய்க் குழந்தையை சாத்தியமாக்கிய மருத்துவ முன்னேற்றத்தால்கூட செயற்கை இரத்தத்தைத் தயாரிக்க இன்றளவும் இயலவில்லை. இரத்த இழப்பை இரத்தத்தால் மட்டுமே ஈடு செய்ய முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;      18 முதல் 60 வயது வரையுள்ள எல்லா ஆண்களும் பெண்களும் இரத்த தானம் செய்யலாம்.&lt;br /&gt;      இரத்த தானம் செய்பவரின் எடை குறைந்தபட்சம் 45 கிலோ இருக்க வேண்டும்&lt;br /&gt;      ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராமுக்கு மேல் ( 85%) இருக்கவேண்டும்&lt;br /&gt;      இரத்த அழுத்தம் இயல்பாக (மேல் அளவு 100-140 &amp; கீழ் அளவு 60- 90) இருக்க வேண்டும்.&lt;br /&gt;      மூன்று மாததிற்கு ஒருமுறை இரத்ததானம் செய்யலாம்.&lt;br /&gt;      இரத்ததானம் செய்ய 20 நிமிடங்களே ஆகும். தானம் செய்தவுடன் வழக்கம்போல் அன்றாட வேலைகள் மேற்கொள்ளலாம்.&lt;br /&gt;      ஒவ்வொருடைய உடலிலும் தோராயமாக 5 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்ததானத்தின்போது எடுக்கப்படும் இரத்தம் 350 மில்லி லிட்டர் மட்டுமே. அதுவும் 24 மணி நேரத்துக்குள்ளாக உடலால் மீண்டும் ஈடுசெய்யப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;Ø      கருவுற்றிருக்கும்போதும்,தாய்ப்பால் ஊட்டும்போதும் இரத்ததானம் செய்ய வேண்டாம்.&lt;br /&gt;Ø      பெரிய அறுவை சிகிச்சை செய்த 6 மாதங்களுக்கும், சிறிய அறுவைசிகிச்சை செய்துகொண்ட 3 மாதங்களுக்கும் தானம் செய்வதைத் தவிர்க்கலாம்.&lt;br /&gt;Ø      மலேரியா சிகிச்சை பெற்ற 3 மாதங்களுக்கும், மஞ்சள் காமாலை சிகிச்சை பெற்ற 6 மாதங்களுக்கும் தானம் செய்வதைத் தவிர்க்கவும்.&lt;br /&gt;Ø      பால்வினை/ எச்.ஐ.வி. நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தானம் செய்யலாகாது.&lt;br /&gt;&lt;br /&gt;அக்டோபர் 01- தேசிய தன்னார்வ இரத்ததான நாள். மேற்கு வங்காளத்திற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு தன்னார்வலர் பட்டியலில் இரண்டாவது இடம் வகிக்கிறது. அக்டோபர் மாதம் முழுவதும் தமிழகமெங்கும் இரத்ததான தன்னார்வலர் (voluntary donors) பட்டியல் தயாரிப்பு மும்முரமாக நடைபெற உள்ளது.&lt;br /&gt;உயிர் காக்கும் உன்னதப்பணியில் உங்களையும் இணைத்துக் கொள்ள இரத்த தானம் செய்யுங்கள். அருகிலுள்ள இரத்த வங்கியை அணுகுங்கள், இரத்தக் கொடையாளராய்ப் பதிவு செய்து கொள்ளுங்கள்.&lt;br /&gt;மேல் விபரங்களுக்கு:&lt;br /&gt;       தமிழ்நாடு மாநில குருதிப் பரிமாற்றுக் குழுமம்,&lt;br /&gt;       417, பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை-8.&lt;br /&gt;      தொலைபேசி: 044- 28190467/28190891&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;நன்றி&lt;/em&gt;:  ``&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;இமைகள்&lt;/span&gt;&lt;/strong&gt;”(இந்திய மருத்துவக் கழகம் வழங்கும்&lt;br /&gt;                   மருத்துவ மாத இதழ்)&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15229466-112807618906117254?l=forusdear.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://forusdear.blogspot.com/feeds/112807618906117254/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15229466&amp;postID=112807618906117254&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/112807618906117254'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/112807618906117254'/><link rel='alternate' type='text/html' href='http://forusdear.blogspot.com/2005/09/blog-post_30.html' title='இரத்ததான தினம்'/><author><name>தாணு</name><uri>http://www.blogger.com/profile/04865211166801373288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15229466.post-112781447242291519</id><published>2005-09-27T02:45:00.000-07:00</published><updated>2005-09-27T02:47:52.423-07:00</updated><title type='text'>சூழ்நிலைக் கைதிகள்!</title><content type='html'>தேன்துளியின் பதிவிற்கு என்னுடைய பின்னூட்டம்:&lt;br /&gt;(கற்பு எனப்படுவது யாதென்று தெளிவாக விளக்கியிருந்த தோழிக்கு நன்றி. அவரளவு வெளிப்படையாக என்னால் எழுத முடியாதென்பது யோசிக்கத் தூண்டும் உண்மை-)&lt;br /&gt;ஒரு யதார்த்தமான விஷயத்தை வெளிப்படையாக பேசுவதற்கோ, எழுதுவதற்கோ கூட சில தடைக்கற்கள் நாம் வாழும் சமுதாயத்தைச் சார்ந்து இருக்கிறது.&lt;br /&gt;உதாரணமாக குஷ்புவின் பேட்டி, சரியான பிரசுரமோ அல்லது திரித்து சொல்லப்பட்டதோ,கடந்த இரண்டுமூணு நாட்களாக படும் அவலம். ஒரு மும்பை பட உலக நடிகையோ, வெளிநாட்டில் settle ஆகிவிட்ட நடிகையோ இப்படி சொல்லியிருந்தால், கருத்து முன்னேற்றம் பெண்களிடம் வந்துவிட்டதாக மேற்கோள் காட்ட பயன்பட்டிருக்கும். தமிழ்நாட்டு மருமகளானதால் அழ வேண்டிய நிலைமை. தனிப்பட்டவர்களின் கருத்தைப் பொறுத்துதான் ஒரு கலாச்சாரமே மாறப் போகிறதென்றால், அப்படி நிலையற்ற கலாச்சாரம் என்ன பயனளிக்கப் போகிறது?&lt;br /&gt;ஒரு பெண்ணை மனரீதியாகக் காயப்படுத்த கற்பு என்ற வார்த்தைதான் தோதாக இருக்கும் என்பதால், கற்பு சம்பந்தப்பட்ட உடை அணிதல் தொடங்கி, ஆண்களுடன் சகஜமாகப் பேசுவது வரை ஏகப்பட்ட வறையறைகளை கருவிலிருந்தே திணித்துத் திணித்து வளர்க்கப்படுகிறார்கள் பெண்கள். அதில் சற்று விலகி நின்று யோசிக்கும் பெண்களுக்கேகூட அடிமனதில் சரியா தவறா என்ற தடுமாற்றம் அவ்வப்போது வந்துவிடுகிறது. வளர்ப்புக்கும் நினைவுகளின் தாக்கங்களுக்கும் இடையே பெண்கள் தடுமாறும் இடைவேளைப் பகுதி இது. இதிலிருந்து எழும்பி வரும் பெண் சமுதாயம் அடுத்த தலைமுறைக்குக் கருத்து சுதந்திரம் ஊட்டி வளர்க்கவேண்டும். அப்போதுதான் இத்தைகைய புகைச்சல்கள் ஓயும்.அதுவரையில் `சமூகம் என்பது நாலு பேர்’தன்மைதான், தனிமனித உணர்வுகள் அல்ல.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15229466-112781447242291519?l=forusdear.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://forusdear.blogspot.com/feeds/112781447242291519/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15229466&amp;postID=112781447242291519&amp;isPopup=true' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/112781447242291519'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/112781447242291519'/><link rel='alternate' type='text/html' href='http://forusdear.blogspot.com/2005/09/blog-post_112781447242291519.html' title='சூழ்நிலைக் கைதிகள்!'/><author><name>தாணு</name><uri>http://www.blogger.com/profile/04865211166801373288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15229466.post-112758186393793994</id><published>2005-09-24T09:53:00.000-07:00</published><updated>2005-09-24T10:11:04.886-07:00</updated><title type='text'>பதிவுகள் வீணாகலாமா?</title><content type='html'>படித்துவிட்டுக் கிழிக்க&lt;br /&gt;பத்திரிகையும் அல்ல&lt;br /&gt;பார்த்தவுடன் மறக்க&lt;br /&gt;திரைப்படமும் அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;படித்த பிறகும்&lt;br /&gt;பலமுறை திரும்பத் திரும்ப படித்து&lt;br /&gt;பின்னூட்டங்களில்&lt;br /&gt;பதில்களை அலசும் சுவையான பதிவுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;முகம் காட்டாவிடினும்- ஓரளவு&lt;br /&gt;முகவரிசொல்லும் உறவுகள் இங்குண்டு&lt;br /&gt;முகவரி  அற்றவர்களைத் தாக்கும்&lt;br /&gt;முயற்சியாகவும் பதிவுகள் இங்கு கண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுதுவது&lt;br /&gt;அவரவர் சொந்த விருப்பம்&lt;br /&gt;வரம்புடன் எழுதுவது&lt;br /&gt;மற்றவர்கள் மனதில் உயர்ந்து நிற்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சர்ச்சைகளும் சண்டைகளும்&lt;br /&gt;இங்கும் வேண்டும்-அது&lt;br /&gt;உறவுகளைப் பலப் படுத்தவே அன்றி&lt;br /&gt;நட்புகளை நலியச் செய்ய அல்ல.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15229466-112758186393793994?l=forusdear.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://forusdear.blogspot.com/feeds/112758186393793994/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15229466&amp;postID=112758186393793994&amp;isPopup=true' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/112758186393793994'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/112758186393793994'/><link rel='alternate' type='text/html' href='http://forusdear.blogspot.com/2005/09/blog-post_24.html' title='பதிவுகள் வீணாகலாமா?'/><author><name>தாணு</name><uri>http://www.blogger.com/profile/04865211166801373288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15229466.post-112742348988093672</id><published>2005-09-22T14:10:00.000-07:00</published><updated>2005-09-22T14:11:29.886-07:00</updated><title type='text'>கவிதைகள் சொல்லவா......</title><content type='html'>பழைய கவிதையைக் கிறுக்கினேன் காகிதத்தில்&lt;br /&gt;பதிக்கத் துணிவில்லை இணையத்தில்&lt;br /&gt;பார்த்துவிடுவாளோ என் பெண்ணுமோ என்று&lt;br /&gt;பயத்தில் ஒளித்துவைத்தேன் நானும் இன்று!&lt;br /&gt;&lt;br /&gt;காதல் கவிதையென்பதால் வந்த குழப்பமா&lt;br /&gt;காதலித்த நாட்கள் பற்றிய&lt;br /&gt;கதைகள் சொல்லவேண்டுமோ என்ற&lt;br /&gt;கற்பனை தோன்றியதால் வந்த மயக்கமா?&lt;br /&gt;&lt;br /&gt;நேர்மை இல்லையோ நெஞ்சில் என்று&lt;br /&gt;நெருடலாய் ஒரு விவாதம்...&lt;br /&gt;வலைத் தளங்களில் மட்டும்&lt;br /&gt;வேறு முகம் காட்டுகிறோமோ?&lt;br /&gt;&lt;br /&gt;விதண்டாவாதமாய் விமரிசிக்க முடிகிறது&lt;br /&gt;வெட்டித்தனமாக தர்க்கம் செய்யமுடிகிறது&lt;br /&gt;வீட்டுக் காரியமென்று வரும்போது&lt;br /&gt;வலைவேறு வாழ்க்கைவேறு என்றாகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;வலைஞர்களின் குடும்பம்&lt;br /&gt;வலைப்பூக்களை வழிபடுமா&lt;br /&gt;காகிதப் பூக்களென்று&lt;br /&gt;கசக்கி எறிந்துவிடுமா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15229466-112742348988093672?l=forusdear.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://forusdear.blogspot.com/feeds/112742348988093672/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15229466&amp;postID=112742348988093672&amp;isPopup=true' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/112742348988093672'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/112742348988093672'/><link rel='alternate' type='text/html' href='http://forusdear.blogspot.com/2005/09/blog-post_23.html' title='கவிதைகள் சொல்லவா......'/><author><name>தாணு</name><uri>http://www.blogger.com/profile/04865211166801373288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15229466.post-112714761994026430</id><published>2005-09-19T09:30:00.000-07:00</published><updated>2005-09-19T09:33:39.946-07:00</updated><title type='text'>பத்திரிக்கைகள்</title><content type='html'>எங்க ஊரில் வெளிவரும் குறிப்பிட்ட பத்திரிக்கையின் விளம்பரப் பகுதி ஒரு வித்தியாசமான ஒண்ணு. தினசரி செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுதோ இல்லையோ, இரங்கல் செய்திகள் Highlighted-ஆக இருக்கும். பக்கத்து தெரு இரங்கல் கூட பத்திரிக்கை பார்த்துதான் அனேக நேரங்களில் தெரிய வரும். மிக நெருங்கியவர்கள் தவிர மற்றவர்களுக்கு அறிவிக்கும் விதமாக அறிவிப்பாக வருவது நல்லதுதான். ஆனால் மிக முக்கிய புள்ளிகள் இறப்புக்கு `வருந்துகிறோம்’ சொல்பவர்கள், சில நேரங்களில் பெருவாரியான பக்கங்களை ஆக்ரமித்துக் கொள்வதால், அத்தியாவசியமான செய்திகள் கூட ஒன்றிரண்டு நாட்கள் தள்ளிப் போடப்படும்!&lt;br /&gt;&lt;br /&gt;காலையில் எழுந்ததும் எந்த வீட்டு இரங்கலுக்கு செல்ல வேண்டுமென்று plan பண்ணுவது வேதனை கலந்த routineதான். இதில் இன்னொரு வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால், &lt;strong&gt;வாழ்த்துகி&lt;/strong&gt;றோமும் &lt;strong&gt;வருந்துகி&lt;/strong&gt;றோமும் அடுத்தடுத்து பிரசுரிக்கப் படுவதுதான். வயசு ரொம்ப கொஞ்சமாக இருக்கே, என்ன காரணத்தால் இறந்திருப்பாரோ என்று கவலையுடன் பார்த்தால், வெளிநாடு போக வாழ்த்துகிறோம் என்றிருக்கும். தப்பர்த்தம் பண்ணிக்கொண்டதுக்காக குற்ற உணர்ச்சியுடன் அடுத்த பக்கத்துக்குத் தாவுவோம். மணநாள் வாழ்த்தும், மரண வருத்தமும் கூட இதேபோல்தான் பிரசுரிக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற அறிவுப்புகளெல்லாம் ஒரே பக்கத்தில் வந்தாலும் இரங்கலுக்கு மட்டும் தனிபக்கமோ, குறிப்பிட்ட இடமோ கொடுக்கலாமே! இது எங்க ஊரில் மட்டும் நடப்பதா இல்லை மற்ற ஊர்களிலும் உண்டா என்று தெரியவில்லை. தெருத்தொண்டன் போன்ற பத்திரிக்கைக்காரர்கள் இதைத் திருத்த சொல்லலாமே!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15229466-112714761994026430?l=forusdear.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://forusdear.blogspot.com/feeds/112714761994026430/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15229466&amp;postID=112714761994026430&amp;isPopup=true' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/112714761994026430'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/112714761994026430'/><link rel='alternate' type='text/html' href='http://forusdear.blogspot.com/2005/09/blog-post_19.html' title='பத்திரிக்கைகள்'/><author><name>தாணு</name><uri>http://www.blogger.com/profile/04865211166801373288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15229466.post-112705935231129498</id><published>2005-09-18T09:00:00.000-07:00</published><updated>2005-09-18T09:02:32.316-07:00</updated><title type='text'>பாவப்பட்டஜென்மங்கள்-2</title><content type='html'>சமீபத்தில் ஒரு தொடர்கல்வி நிகழ்ச்சிக்காக என்னை அழைக்க வந்தவர் கொடுத்த புள்ளிவிபரம் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எய்ட்ஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களின் விகிதாச்சாரம்&lt;/strong&gt;:&lt;br /&gt;           &lt;strong&gt;குடும்பப் பெண்கள்- 22%&lt;/strong&gt;&lt;br /&gt;           ப்ரொபஷனல்     - 10%&lt;br /&gt;           பாராமெடிகல்     - 17%&lt;br /&gt;           ........                                - x&lt;br /&gt;           .........                               - x&lt;br /&gt;          &lt;strong&gt;commercial sexual workers - 2%&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;மற்ற புள்ளிவிபரங்கள் நான் சொல்ல வந்த கருத்துக்கு முக்கியமல்ல, எனவே அவ்வளவையும் எழுதவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கூறிய புள்ளி விபரங்களைப் பார்த்தால் பளிச்சென கண்ணில் படுவது என்ன? எய்ட்ஸ் தாக்குதல் குடும்பப் பெண்களிடம் அதிக அளவில் காணப்படுகிறது. அதிலும் இவையெல்லாம் பெரும்பாலும் தற்செயலாகவே, முதல் பிரசவத்துக்கு வரும் பெண்களிடம் கண்டுபிடிக்கப்படுகின்றன. அது மேல்மட்டத்தை சேர்ந்த படித்த குடும்ப பெண்களையும் விட்டு வைப்பதில்லை.&lt;br /&gt;பையன் என்ன படித்திருக்கிறான், எவ்வளவு சம்பாதிக்கிறான் என்றெல்லாம் விசாரித்து ஏகப்பட்ட பொருத்தம் பார்த்து திருமணம் பண்ணும் பெற்றோர்க்கு இந்த விஷயத்தை அறிந்து சொல்ல மட்டும் எந்த வழியுமே இல்லையே! ஜாதகப் பரிவர்த்தனைகள் பார்க்கும் போது இருபாலாருக்குமே இந்த பரிசோதனையும் பார்க்க முடிந்தால் எத்தனை இழப்புகளைத் தடுக்க முடியும். ஆனால் சாத்தியப்படாத ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;கமர்சியல் செக்ஸுவல் வொர்க்கர்ஸுக்கு எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு மறுபடி மறுபடி புகட்டப்படுவதால், அதற்குத் தேவையான பாதுகாப்பு முறைகளைக் கடைப் பிடித்து விடுகிறார்கள். ஆனால் நம் குழந்தைகள் எத்தனை பேருக்கு செக்ஸ் குறித்த சரியான அறிவும், எய்ட்ஸ் பற்றிய கல்வியும் போதிக்கப் படுகிறது? பாலியல் கல்வியை கட்டாயப் பாடமாக்குவது எத்தனை அறியாமைகளைப் போக்கும்! ஒரு தாயோ தந்தையோ சொல்லித் தருவதை விட ஆசிரியர்கள் மூலம் கிடைக்கும் அறிவுத்திறன் நிச்சயமாக சிறந்ததே!&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பாதிக்கப்பட்ட பெண்களின் நிலை என்ன?&lt;br /&gt;பாசிடிவ் என்று கண்டுகொள்ளப் பட்டதும், ஒன்று டாக்டரை மாற்றிக் கொள்வார்கள், அல்லது ஊரை மாற்றிக் கொள்வார்கள், அதுவும் இல்லையெனில் கணவர் காணாமல் போய்விடுவார். கடைசியாக இந்த பரிசோதனை வசதிகளே கிராம தாதியரிடம் பிள்ளை பெற்றுக் கொள்வார்கள். வருங்கால சந்ததியின் வாழ்க்கையையும் தொலைத்துவிட்டு தங்கள் வாழ்க்கையும் கேள்விகுறியாகி நிற்கிறார்கள்!!!!?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15229466-112705935231129498?l=forusdear.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://forusdear.blogspot.com/feeds/112705935231129498/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15229466&amp;postID=112705935231129498&amp;isPopup=true' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/112705935231129498'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/112705935231129498'/><link rel='alternate' type='text/html' href='http://forusdear.blogspot.com/2005/09/2.html' title='பாவப்பட்டஜென்மங்கள்-2'/><author><name>தாணு</name><uri>http://www.blogger.com/profile/04865211166801373288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15229466.post-112703301623045855</id><published>2005-09-18T01:42:00.000-07:00</published><updated>2005-09-18T02:00:40.113-07:00</updated><title type='text'>பாரதியின் புதுமைப் பெண்களும் பாவப்பட்ட ஜென்மங்களும்</title><content type='html'>நிமிர்ந்த நன்னடையும் நேர் கொண்ட பார்வையும் திமிர்ந்த ஞானச் செருக்கும் கொண்ட பாரதத்தின் புதுமைப் பெண்களைப் படைத்தது பாரதியின் புதுமைத் தமிழ். அதைப் படிப்பதோடு முடிந்துவிடுகிறது பாரதீயர்களின் புதுமையோங்குதல்.&lt;br /&gt;&lt;br /&gt;கலாச்சாரப் பரிவர்த்தனைகள் என்ற பேரில் மேல்நாட்டு பண்புகளை ஏற்றுக்கொள்ளும்போதும், தங்களுக்கு இயைந்தது எதுவோ அதுமட்டுமே உண்மையான கலாச்சாரம் என்று வெட்டித்தனமான வியாக்கியானங்களுடன் பின்பற்றுதலும் ஒரு விதமான மாய்மாலமே. அங்கு பெண்களுக்குத் தரப்படும் சம உரிமையைத் தம் வீட்டுப் பெண்களுக்கு என்றாவது தந்ததுண்டா?&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களுக்கு புதிய சுதந்திரங்களைக் கொடுக்காட்டியும் பரவாயில்லை, இருப்பதை எடுத்துக்காம இருந்தாலே போதும். என்னோட நெருங்கிய தோழி திருமணத்துக்குப் பிறகு எப்போதும் &lt;strong&gt;பட்டு சேலையிலேயே&lt;/strong&gt; நடமாட ஆரம்பித்தாள். கணவர் பசையுள்ளவர், அதனால் அப்படியாக்கும்னு நெனைச்சுக்கிட்டோம். ஆனால் ரொம்ப நாள் கழிச்சு தற்செயலா அதைப் பத்தி பேசும்போதுதான் உண்மையான காரணம் தெரிந்தது. மற்ற சிந்தெடிக் சேலைகள் உடலோடு ஒட்டித் தெரிவது அவருக்குப் பிடிக்கலையாம், அதனால்தான் பட்டு போர்த்தப்பட்டது! அது ஆபாசமா அடக்கமாங்கிறது முக்கியமில்லை, ஒரு சாதாரண ஆடை விஷயத்தில்கூட &lt;strong&gt;தன் கருத்துகளுக்கே முக்கியத்துவம் வேண்டுமென்று நினைப்பவர்கள்&lt;/strong&gt;, பெண் சுதந்திரம் பற்றி நினைப்பது எங்ஙனம்? இது &lt;strong&gt;ஒரு துளி&lt;/strong&gt; எடுத்துக்காட்டுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்குழந்தை வேண்டுமென்பதற்காக மறுபடி மறுபடி மடிதாங்க வைக்கும் மஹானுபாவர்கள் இங்கே அதிகம். &lt;strong&gt;மருத்துவரீதியாக உடல் நிலை மோசமாக இருப்பதாக மருத்துவர் கூறினால் கூட சட்டை செய்யாமல் மறுபடியும் கருத்தரிக்கச் செய்யும் அவலங்களும்&lt;/strong&gt; அதிகம். மூன்றாவது முறையாக சிசேரியனுக்கு வந்தபோதும் பெண்குழந்தை என்பதால் கருத்தடை ஆப்பரேஷனுக்கு சம்மதம் கொடுக்காமல் ஓடிப்போய்விட்ட கணவனை எந்த கணக்கில் சேர்ப்பது? அவர் கையெழுத்துப் போடாட்டியும் நீ ஒத்துக்கொண்டால் இப்போதே கருத்தடை செய்துவிடுகிறேன் என்று கேட்டபோது சம்மதம் சொல்ல முடியாமல் &lt;strong&gt;மெளனமாக அழுத பெண்&lt;/strong&gt; இன்னும் என் கண்ணில் இருக்கிறாள். பெண்சிசுக்கொலை என்பது, அழிக்கப்படும் கருவை மட்டும் பாதிப்பதில்லை, ஏற்கனவே வளர்ந்துவிட்ட தாய்மையையும் அதிகம் பாதிக்கிறது. சிசுவுக்கோ ஒருமுறை மரணம். தாய்க்கோ மறுபடி மறுபடி மரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்குழந்தை உருவாவதற்குக் காரணமே பெண்கள்தான் என்று நம்ப வைத்துவிடும் சாமர்த்தியமும் இந்த ஆண்களுக்கு உண்டு. &lt;strong&gt;குழந்தை பெற்றுக் கொள்வது தேவையா இல்லையா என்று முடிவெடுக்கக் கூட பெண்களுக்கு உரிமையிருக்கிறதா&lt;/strong&gt;? வாடகைக்கு விடப்படும் இடத்திற்கு என்ன மதிப்போ அதுதான் பெண்மைக்கும். திருமணமானவுடனேயே மசக்கை வரவில்லையே என்று கவலைப்படுவார்களேயன்றி அதைத் தாங்கும் பக்குவம் அந்தப் பெண்ணுக்கு உண்டா என்று ஆராய்வதில்லை.. இப்படி எல்லாவகையிலும் `&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;ஆண்&lt;/strong&gt;&lt;/span&gt;டு’கொண்டிருப்பவர்கள் பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்திருப்பதாகச் சொல்வது வேடிக்கையே!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15229466-112703301623045855?l=forusdear.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://forusdear.blogspot.com/feeds/112703301623045855/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15229466&amp;postID=112703301623045855&amp;isPopup=true' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/112703301623045855'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/112703301623045855'/><link rel='alternate' type='text/html' href='http://forusdear.blogspot.com/2005/09/blog-post_18.html' title='பாரதியின் புதுமைப் பெண்களும் பாவப்பட்ட ஜென்மங்களும்'/><author><name>தாணு</name><uri>http://www.blogger.com/profile/04865211166801373288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15229466.post-112697713622955255</id><published>2005-09-17T10:10:00.000-07:00</published><updated>2005-09-17T10:12:16.240-07:00</updated><title type='text'>குடிமகனே!.....பெரும்குடிமகனே!!</title><content type='html'>தண்ணீரில் தத்தளித்து&lt;br /&gt;தரைமேலே தள்ளாடி&lt;br /&gt;தனக்குள்ளே தடுமாறி&lt;br /&gt;தவிக்கிற மனசு!&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு குடிமகனின்&lt;br /&gt;ஒரு இரவுக் கதை!&lt;br /&gt;&lt;br /&gt;தடியால் அடிவாங்கினாலும்&lt;br /&gt;தாங்கிப்பிடித்து தூங்கவைத்து&lt;br /&gt;வாந்தி எடுத்தாலும் கையில்வாங்கி&lt;br /&gt;பக்குவப்பட்ட மனசு!&lt;br /&gt;&lt;br /&gt;குடிமகன்களின் மனைவியரின்&lt;br /&gt;அன்றாட இரவுக் கதை!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15229466-112697713622955255?l=forusdear.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://forusdear.blogspot.com/feeds/112697713622955255/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15229466&amp;postID=112697713622955255&amp;isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/112697713622955255'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/112697713622955255'/><link rel='alternate' type='text/html' href='http://forusdear.blogspot.com/2005/09/blog-post_17.html' title='குடிமகனே!.....பெரும்குடிமகனே!!'/><author><name>தாணு</name><uri>http://www.blogger.com/profile/04865211166801373288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15229466.post-112680266837840144</id><published>2005-09-15T09:43:00.000-07:00</published><updated>2005-09-15T09:45:33.610-07:00</updated><title type='text'>எதனைக் கண்டான்.................மதங்களைப் படைத்தான்</title><content type='html'>மதத்தை மதிப்பவர்கள் ஏன்&lt;br /&gt;மனிதர்களை மதிக்க மறுக்கிறார்கள்?&lt;br /&gt;கடவுளுக்கு வக்காலாத்து வாங்குபவர்கள் ஏன்&lt;br /&gt;கலவரங்களுக்கு சமாதிகட்ட முயலுவதில்லை?&lt;br /&gt;&lt;br /&gt;மதம் என்ற மதம்பிடித்து ஒரு கூட்டம்&lt;br /&gt;கடவுளைக் கட்சிக்கொடிசுற்றி காட்டும்!&lt;br /&gt;மனம் வருத்தும் பின்னூட்டம்பல இட்டும்&lt;br /&gt;வருந்தி வம்புக்கிழுக்கும் `நட்பு’ வட்டம்!&lt;br /&gt;&lt;br /&gt;இடையில் கருத்துசொல்லப் புகுந்தாலோ&lt;br /&gt;இடையிடையே எட்டிப் பார்த்தாலோ&lt;br /&gt;இதுவரை என்ணியிருந்த கருத்தும் குழம்பி&lt;br /&gt;இனிமேல் எதுசரியென்ற தெளிவும் இன்றி&lt;br /&gt;&lt;br /&gt;மோட்டுவளையையும் மொட்டைமாடியையும்&lt;br /&gt;வெறித்துப் பார்க்கும் `சேது’விக்ரம் ஆக்கிவிடும்!&lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பூக்களிலும் கள்ளிகள் பூப்பதேனோ&lt;br /&gt;விடைதேடி விழிகள் காத்திருக்கின்றனவே!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15229466-112680266837840144?l=forusdear.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://forusdear.blogspot.com/feeds/112680266837840144/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15229466&amp;postID=112680266837840144&amp;isPopup=true' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/112680266837840144'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/112680266837840144'/><link rel='alternate' type='text/html' href='http://forusdear.blogspot.com/2005/09/blog-post_15.html' title='எதனைக் கண்டான்.................மதங்களைப் படைத்தான்'/><author><name>தாணு</name><uri>http://www.blogger.com/profile/04865211166801373288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15229466.post-112669334436621045</id><published>2005-09-14T03:19:00.000-07:00</published><updated>2005-09-14T03:22:24.376-07:00</updated><title type='text'>ஏட்டுச் சுரைக்காய் மருத்துவத்துக்கு ஆகுமா?</title><content type='html'>துளசியின் பதிவு பார்த்ததும் எனக்குள் தோன்றியவை.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கையின் அடுத்த கட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் பள்ளிக் குழந்தைகளின் முதல் கனவு, அனேகமாக டாக்டர் ஆவதாகத்தான் இருக்கும். மற்றைய தொழில் நுட்பங்கள் உலகளாவி விரிந்திருந்தாலும் இந்தக் கனவுகளை சிதைக்க முடிவதில்லை. அவ்வளவு உயரிய எதிர்பார்ப்புகளையும் உயர்ந்த நோக்கங்களையும் உடைய மருத்துவத் துறை இப்போது எப்படி இருக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;மெடிகல் காலேஜ் சீட் வாங்குவதை விட செவ்வாய்க் கிரஹத்தை அடைவது மிகச் சுலபம் (வேறு உவமானம் கொடுத்து பிறகு அழித்துவிட்டேன்). இது கஷ்டப்பட்டு படித்து மெரிட்டில் வருபவர்களுக்கு மட்டுமானது. இப்போது குழந்தைகள் எல்லோரும் ரொம்ப நல்லா படிக்கிறாங்க. தேர்ந்தெடுப்பது மிகக் கடினமாகவே உள்ளது.ஒரு வழியாக எம்.பி.பி.எஸ்.முடித்தாலும் தகுதி அடிப்படையில் படித்த மாணவனுக்கு முது நிலை படிப்பு சேருவதற்கு பொருளாதார சிக்கல்கள் இருக்கும் பட்சத்தில் எதேனும் பெரிய மருத்துவ மனையில் பகுதி நேர ஊழியமோ இல்லை, துளசி சொன்னது போன்ற க்ளினிக்கோ நடத்திக் கொண்டு மேற் படிப்புக்கு முயல வேண்டும்.அரசு வேலையில் சேர்ந்தால் மேற்படிப்பு சீட் கிடைப்பது சற்று சுலபமென்றாலும்,அரசு வேலையென்பது குதிரைக் கொம்பாகிவிடுகிறது.(செவ்வாய்க் கிரஹமே பரவாயில்லை)&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சுமார் ரகமாகப் படிக்கும் மாணவனும் மருத்துவராகலாம், பெற்றோரின் பின்பலம் மற்றும் பண பலம் மூலம். முதுகலைப் படிப்பையும் தடையின்றி மேற்கொண்டுவிடுவார்கள். முடித்து வந்ததும் சகல வசதிகளுடனும்  மருத்துவமனை ரெடியாக இருக்கும்; மருத்துவப்பணி இயல்பாகத் தொடரும்.அதற்காக இப்படி படித்து வருபவர்களெல்லாம் தகுதியற்றவர்கள் என்ற அர்த்ததில் சொல்லவில்லை. இவர்களது சமூக அங்கீகாரம், சம காலத்திய (contemporary) மெரிட் மாணவனின் சின்ன க்ளினிக்கைவிட அதிக தரம் கொண்டதாகத் தோற்றமளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;(எண்பதுகளில் மருத்துவம் படித்தவர்களில் ஒருசிலரே குறுகிய வட்டத்தில் சுழன்றுகொண்டிருந்தாலும், பெருவாரியானவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி எல்லா சிறப்புத் துறைகளிலும் முக்கியத்துவத்துடன் விளங்குகிறார்கள். ஆனால் இப்போது `வாரிசு அரசியல்’, `சினிமாவில் வாரிசுகள்’ போன்று மருத்துவமும் வாரிசுகளைக் கொண்டு மருத்துவக் குடும்பம் என்ற மரபில் சென்றுகொண்டிருக்கிறது. தனிப்பட்டவர்களின் திறமை வெளிவருவது கடினமே. ஆலமரத்தடியில் வளரும் சிறு செடிபோலத்தான்  சோபிக்கிறார்கள்)&lt;br /&gt;&lt;br /&gt;இன்னுமொரு கூட்டம், குடும்பத்துக்கு ஒரு டாக்டராவது வேண்டும் என்ற பெருமைக்காக சாக்கு மூட்டையில் பணத்துடன்&lt;br /&gt;அலைந்து கொண்டிருக்கிறது. இதில் யாருமே அந்த குழந்தைக்கு மருத்துவராவதற்கு விருப்பமிருக்கிறதா என்று கூட கவலைப் படுவதில்லை. சேர்த்து விட்டுட்டா எத்தனை வருஷம் கழிச்சுன்னாலும் டாக்டர்தானே. இப்போதைக்கு ப்ராக்கெட்டுக்குள்ளே போட்டுகிட்டப் போச்சு என்கிற விளக்கம் வேறு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மூன்றுவிதமான மருத்துவர்களைத் தாங்கி வரப்போகின்ற வருங்கால மருத்துவ சந்ததியை நினைத்தால் கவலையாகத்தான் இருக்கிறது. House-surgeoncy  period-ல் கற்றுக்கொள்ளும் ப்ராக்டிகல் அறிவே ஒரு திடமான மருத்துவ அறிவை வழங்கும். ஆனால் இப்போதைய தலைமுறை அந்தக் காலகட்டத்தில் மேற்படிப்புக்கு சீட் வாங்கும் பொருட்டு நூலகத்திலேயே பொழுதைப் போகிவிடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏட்டுச் சுரைக்காய்த்தனமும், தெளிந்த எதிர்நோக்குகள் அற்ற படிப்பும் விழலுக்கிரைத்த நீராய் மருத்துவ உலகை அசைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது.( பெரிய டாபிக் இது-பின்னூட்டங்களைப் பொறுத்து இதன் திசை தொடரும்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15229466-112669334436621045?l=forusdear.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://forusdear.blogspot.com/feeds/112669334436621045/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15229466&amp;postID=112669334436621045&amp;isPopup=true' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/112669334436621045'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/112669334436621045'/><link rel='alternate' type='text/html' href='http://forusdear.blogspot.com/2005/09/blog-post_14.html' title='ஏட்டுச் சுரைக்காய் மருத்துவத்துக்கு ஆகுமா?'/><author><name>தாணு</name><uri>http://www.blogger.com/profile/04865211166801373288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15229466.post-112645728602030371</id><published>2005-09-11T09:45:00.000-07:00</published><updated>2005-09-11T09:48:06.026-07:00</updated><title type='text'>`வாஸ்து'வுக்கு வைத்தியம் செய்யலாமா?</title><content type='html'>`&lt;strong&gt;வாஸ்து&lt;/strong&gt;’; `&lt;strong&gt;நட்சத்திரம்&lt;/strong&gt;’ இந்த இரண்டும் மக்களைப் படுத்தி வைக்கும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. ஆரம்பத்தில் நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டிருந்தது இப்போது Fashion cum passion ஆகி விட்டது. அதைக் கடைப்பிடிப்பவர்களை மட்டுமல்லாது சுற்றி இருப்பவர்களையும் சேர்ந்தே கலக்கிவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt; ஏதேனும் மருத்துவ காரணங்களுக்காக அறுவை சிகிச்சை செய்யவெண்டுமென்று மருத்துவர் கூறிய மறு நிமிடமே நல்ல நேரம் குறித்த துண்டு சீட்டுடன் தாத்தாவோ அப்பாவோ வந்து விடுவார்கள். குழந்தையின் வளர்ச்சி குறைவாக இருந்தாலும் கீழ்வரும் காரணங்களுக்காக குறைமாதக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளக்கூட தயக்கம் காட்டுவதில்லை-&lt;br /&gt;ஆடி மாதத்தில் குழந்தை பிறந்தால் குடும்பத்தை ஆட்டி வைத்துவிடுமாம்; சித்திரை அப்பன் தெருவிலாம்; இன்னும் என்னென்னவோ பழமொழிகளும் புது மொழிகளும், இயற்கையான பிரசவ நேரத்தையே மாற்றிக்கொண்டு வருகின்றன- ஆனி, பங்குனி மாத இறுதி நாட்களின் சிசேரியன்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது!&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கெல்லாம் மருத்துவர்கள் ஏன் துணை போகவேண்டுமென்ற விவாதம் எழலாம். ஆரம்பகாலங்களில் elective caesarean செய்ய நாள் குறிக்கும்போது பெற்றோர்களின் விருப்பத்தை மதிக்கும்விதமாக அதற்கு துணை போன மருத்துவ உலகம் இன்று அதிலிருந்து மீளமுடியாமல் தர்மசங்கடத்தில் தவிப்பதுதான் உண்மை. குறிப்பிட்ட நல்ல நாளின் நல்ல நேரத்தில் எல்லாக் குழந்தைகளையும் பெற்றுக்கொடுக்க வேண்டிய கட்டாயம்;அதனால் எற்படும் நடைமுறைச் சிக்கல்கள் என விழி பிதுங்கி நிற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதையும் தாண்டிய கொடுமை சமீப காலங்களில்! சுகப் பிரசவத்திற்குரிய வாய்ப்புகளையே தராமல் நல்ல நேரத்தில் பிரசவமாக வேண்டுமென்று, விரும்பி அறுவை சிகிச்சை செய்துகொள்ளுபவர்களை அதிகமாகப் பார்க்க முடிகிறது. இந்த மாதிரி செய்துகொள்பவர்களில் மருத்துவர்களும் அடக்கம் என்பதுதான் கவலை தரக் கூடியது.`படிப்பது ராமாயணம்னாலும் இடிப்பது ராமர் கோயில்தான்’ கதையாகிவிட்டது. அறிவியல் படித்தவர்களே அஷ்டமி நவமியைப் பிடித்துத் தொங்கும்போது&lt;br /&gt;சாமான்யர்களைக் குறை சொல்லமுடியுமா? 37 வாரங்கள் முடிந்த குழந்தைதான் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை நன்கு உணர்ந்தும்கூட, 35 வாரங்களில் சிசேரியன் செய்துகொண்ட சக மருத்துவரை எனக்குத் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை manipulations உடன் கணிக்கப்படுகிற நேரங்கள் எத்துணை முக்கியம் வாய்ந்ததாக இருக்கமுடியும்?? பிறக்கப் போகும் ஜீவனின் ஆரோக்கியத்தைவிட அதிக சக்தி வாய்ந்ததாகிவிட்டது அர்த்தமற்ற சாஸ்திரம்.&lt;br /&gt;&lt;br /&gt;வாஸ்து பற்றியோ கேட்கவே வேண்டாம் . அது குறித்து எழுதினால் ஒரு புத்தகமே போடலாம். என் நண்பரின் குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்னைகள் ஏற்பட்டபோது முதலில் அணுகியது ஜோதிடரைத்தான். புதுவீடு கட்டியதில் வாஸ்து சரிவர கடைப் பிடிக்கப்படாததால்தான் அத்தனை கஷ்டங்களும் என்று அவர் சொல்லிவிடவே, அதற்குப் பரிகாரமாக வீட்டை இடித்து உடைத்து மாறுதல் செய்தார்கள். அப்படி செய்த மூன்றே மாதத்தில் , நன்கு தேக ஆரோக்கியத்துடனிருந்த அவர் மனைவி அகால மரணமடைந்தார். அதற்கு அந்த ஜோதிடர் என்ன விளக்கம் கொடுத்தார்  என் நான் கேட்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வாஸ்து இன்னும் கப்பலேறி/விமானமேறி அமெரிக்கா போன்ற தூர தேசங்களுக்குச் சென்றிருக்காது என்று நம்புகிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15229466-112645728602030371?l=forusdear.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://forusdear.blogspot.com/feeds/112645728602030371/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15229466&amp;postID=112645728602030371&amp;isPopup=true' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/112645728602030371'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/112645728602030371'/><link rel='alternate' type='text/html' href='http://forusdear.blogspot.com/2005/09/blog-post_112645728602030371.html' title='`வாஸ்து&apos;வுக்கு வைத்தியம் செய்யலாமா?'/><author><name>தாணு</name><uri>http://www.blogger.com/profile/04865211166801373288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15229466.post-112642784079583618</id><published>2005-09-11T01:35:00.000-07:00</published><updated>2005-09-11T01:37:20.803-07:00</updated><title type='text'>நண்பர்கள்</title><content type='html'>நட்பென்ற தேரில்&lt;br /&gt;நாளெல்லாம் பவனி வந்தேன்&lt;br /&gt;நண்பர்கள் மூலமே&lt;br /&gt;நல்லவைபல நான் கற்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இடையில் கொஞ்சம் கண்ணயர்ந்தேன்&lt;br /&gt;இல்லற வாழ்வில் குடிபுகுந்தேன்&lt;br /&gt;பாசமழையில் நனைந்தாலும்&lt;br /&gt;பகிர்ந்து கொண்ட நட்புகள் இழந்தேன்&lt;br /&gt;                     (தற்காலிகமாக)&lt;br /&gt;&lt;br /&gt;கடமைகள் அரங்கேற்றிவிட்டு&lt;br /&gt;அக்கடா என்று அமரும்போதுதான்&lt;br /&gt;அடடா இழந்துவிட்டேனோ-என்&lt;br /&gt;அருமை நண்பர்களை என பதைத்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரம் மைலோ அன்றாட வாழ்க்கைச் சூழலோ&lt;br /&gt;அழித்துவிடவில்லை எங்கள் நட்பின் பசுமையை&lt;br /&gt;புரிந்துகொண்டேன் புரிதலின் சுகம்&lt;br /&gt;அறிந்துகொண்டேன் நட்பின் ஆழம்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15229466-112642784079583618?l=forusdear.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://forusdear.blogspot.com/feeds/112642784079583618/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15229466&amp;postID=112642784079583618&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/112642784079583618'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15229466/posts/default/112642784079583618'/><link rel='alternate' type='text/html' href='http://forusdear.blogspot.com/2005/09/blog-post_11.html' title='நண்பர்கள்'/><author><name>தாணு</name><uri>http://www.blogger.com/profile/04865211166801373288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15229466.post-112628003737565508</id><published>2005-09-09T08:32:00.000-07:00</published><updated>2005-09-09T08:33:57.380-07:00</updated><title type='text'>பிஞ்சின் முத்தமா?பிஞ்சில் பழுத்த முத்தமா?</title><content type='html'>ஒரு நாள் பள்ளியிலிருந்து வந்ததிலிருந்து என் எட்டு வயது மகன் குறுகுறுவென்று அலைந்துகொண்டிருந்தான்.ஏதோ சொல்லத்துடிப்பது புரிபட வாயைக் கிண்டினேன். மடை திறந்து வெள்ளம் பாய்ந்தது (ஓட்டைப் பல் gap வழியாக).அவன் வகுப்பு குறும்புக்கார `மொஹ’ (முகமது) பண்ணிய `சேட்டை’ பற்றி!&lt;br /&gt;&lt;br /&gt; டெஸ்க்கில் கைநீட்டிப் படுத்திருந்த வகுப்புத் தோழியின் கையில் சட்டென்று முத்தம் கொடுத்திட்டானாம். சொல்லிவிட்டு என்
