Saturday, August 27, 2005

என்ன பாட்டு பாட….....

எழுதத் துவங்கிவிட்டேன்
என்ன எழுதுவதென்ற சிந்தனையற்று.
எழுத்தாளர்கள் பாடு எத்தனை கஷ்டமென்று
எழுத அமர்ந்த வேளையில்தான் புரிகிறது!

காதல் பற்றி எழுதலாமா?
கழுதை கெட்டால் குட்டிச் சுவர்
என்றொரு
கேலிச்சிரிப்பு பின்னால் கேட்கிறது!

அரசியல் பற்றி அலசலாமா?
ஆழ்ந்த அறிவில்லை அதில் எனக்கு.
அறைகுறையாக
அலசிஆராய்ந்து அவதிப்பட வேண்டாமே!

சினிமா பற்றி எழுதினால் என்ன?
அரைத்தமாவையே மறுபடியும் அரைத்து
ஏற்கனவே
சலித்துபோன பேனாமுனைகள் அதிகம்!

மருத்துவம் சார்ந்த மருந்தடிக்கலாமோ?
கணிணிமூலம் கரைகண்ட அறிஞர்களன்றி
உடல்நொந்த
நோயாளிகள் படிக்கப் போவதில்லையே!

ஒருவழியாக.....முடிவு செய்துவிட்டேன்!!!

குழந்தைகள் பற்றிக் கதைக்கலாம்
குழலையும் யாழையும் புறம் தள்ளி
மழலை மலர்களைக்
கொண்டாடலாம் அவர்கள் வளரும்வரை

(நானும் வளரும்வரை- எழுத்துக்களில்)!!!

3 Comments:

At 7:52 AM, Blogger ஜென்ராம் said...

ஆஹா..பின்னுகிறீர்கள்..அற்புதமான பொருளை வேறு தேர்வு செய்திருக்கிறீர்கள்.. தொடர்ந்து காத்திருக்கிறோம்.. கலக்குங்கள்..

 
At 10:03 AM, Blogger erode soms said...

தாய்க்குப்பின் சேய் ..
நல்ல தெரிவுகள்

 
At 3:16 AM, Blogger erode soms said...

தாயைப்போலவே சேயுமா?

 

Post a Comment

<< Home