Saturday, August 27, 2005

கருவறையிலிருந்து....

கதகதப்பான அரவணைப்பு
கண்மூடி எந்தன் லயிப்பு
சின்னச்சின்ன குலுக்கல்கள்
சிணுங்கி உருளுது என் உடல்

ஓயாது ஒலிக்கும் பின்னணிபோல்
ஒடிவந்து என்னுள் பதிக்கும்
நாபிக் கொடிமூலம்
நான் உணரும் உன் இதயத்துடிப்பு.

சுகம் தந்தாய் பேணிக்காத்து
சொர்க்கமும் தந்தாய் அடைகாத்து!

அம்மா.............

5 Comments:

At 9:58 PM, Blogger ஜென்ராம் said...

தொடர்ந்து மூன்றாவது பதிவு..
வளர்க வளர்க..

 
At 10:04 AM, Blogger erode soms said...

அம்மாவுக்குத்தழிழ் கிரீடம்
சூட்டிய தோழியே.......
வாழ்கிறாள் நின் தாய்....

 
At 6:54 PM, Blogger பத்மா அர்விந்த் said...

தாணு
நல்ல தெளிந்த கருத்துக்கள் கொண்டவர் வலை பதிய வந்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து எழுதுங்கள்.

 
At 1:47 AM, Blogger தாணு said...

நன்றி பத்மா! உங்கள் எழுத்துக்களின் கம்பீரமே நான் எழுத ஒரு உந்துதல் தந்ததென்றால் மிகையாகாது.

மரு. சோமுவுக்கும் நன்றிகள்.உங்கள் எழுது ஊர்வலமும் தொடரட்டும்.

எனக்குள் ஆர்ப்பரித்திருந்த தேடலுக்கு ஒரு வடிவம் கொடுத்த ராம்கிக்கு மிக்க நன்றி.

 
At 3:09 AM, Anonymous Anonymous said...

அருமை...
தொடர்ந்து எழுதுங்கள்.

 

Post a Comment

<< Home