Monday, August 29, 2005

என் மகள் இனியவள்
இனி........அவள்.........!

மயக்கும் பார்வையினால்
மனதைக் கொள்ளை கொண்டாயடி
உதட்டுச் சுழிப்பினிலே
உள்ளம் உருக வைத்தாயடி!

வெள்ளைச் சிரிப்பினிலே
வெஞ்சினம் விலகச் செய்வாயடி
கிள்ளை மொழியினிலே
தேகம் சிலிர்க்க வைப்பாயடி!

தூங்க முயலும் வேளையில்
தூங்கவிடாது
பாஷையற்ற உன் கொஞ்சல்கள்.

சாப்பிட அமரும் வேளையில்
சாப்பிடவிடாது
சங்கீதமான உன் சிணுங்கல்கள்!

பிஞ்சுக் காலால் உதைத்து
பஞ்சுக் கையால் அடித்து
பொக்கை வாயால் கடித்து
சின்ன இதழ்களால் முத்தமிட்டு....

அத்தனை இன்பங்களையும்
ஐந்து வயதுக்குள் கொட்டிவிட்டு
கொட்டமடிக்க பள்ளி சென்றாய்
பட்ட மரம்போல் தவிக்க விட்டு!!

5 Comments:

At 2:50 AM, Blogger கயல்விழி said...

உங்கள் மழலையின் அசைவு சொல்லும் கவியழகு.

 
At 11:16 AM, Blogger ஜென்ராம் said...

அம்மா வந்தாள் !

 
At 10:53 AM, Blogger erode soms said...

மழலை இன்பம்
மாசறப் பெற்ற தாய்
கானல் நீரை
கடலென மாற்றம் செய்

 
At 2:57 AM, Anonymous Anonymous said...

We are waiting for ours. We pray God for Children.

From a couple with no child

 
At 4:37 AM, Blogger G.Ragavan said...

அருமையான கவிதை.....நான் சகோதரிகளின் கலியாணங்களின் போது கலங்கியிருக்கிறேன். கிட்டத்தட்ட அதே போன்ற நிலைதான் உங்கள் நிலையும்.

 

Post a Comment

<< Home