Monday, August 29, 2005

மலரும் மங்கையும் ஒரு ஜாதி

முகர்ந்து மட்டும் பார்த்துவிட்டு
முத்தமிடாமல் சென்றுவிட்ட
முட்டாள் வண்டிற்காக-ஒரு
முல்லைமலர் வாடாமல் காத்திருக்கிறது!

காத்திருப்பது மலருக்குத் தவம்
காக்கவைப்பது வண்டின் குணம்
மலர் உதிர்ந்து சருகாகும் முன்
முட்டாள் வண்டு முத்தமிடுமா???

3 Comments:

At 3:40 AM, Blogger NambikkaiRAMA said...

பலே!

 
At 9:48 AM, Blogger ஜென்ராம் said...

ம்....நம்பிக்கைதானே வாழ்க்கை..
பொருள் புரியாமல் ஏதோ எழுதிவிட்டேனா தெரியவில்லை.

 
At 10:49 AM, Blogger erode soms said...

தவமென்று சொல்லிவிட்டு
தவிப்பது சிறப்பாமோ !
உதிர்திட்ட இடமதிலும்
உள்ளம் ஒன்று தவமிருக்கும்
சருகும் மலராகும்
காலம் பிறந்துவரும் !

 

Post a Comment

<< Home