Friday, December 02, 2005

எங்க ஆட்டுக்கும் `சிசேரியன்'

`கம்பர் வீட்டுக் கட்டுத் தறியும் கவி சொல்லும்’கிற மாதிரி, டாக்டர் வீட்டு ஆட்டுக்குட்டிக்குக்கூட அறுவை சிகிச்சையில்தான் பிரசவம் பார்க்க வேண்டியிருக்குது.

போனவருஷ `அறுவடைத் திருநாள்’ சமயம் எங்க வீட்டு குட்டிப்பையன் ஒரு ஆட்டுக்குட்டியை ஏலத்தில் எடுத்துவந்தான். அதுகூட ஏக கொஞ்சல் குலவல். ஆனால் அது போடற புழுக்கைகளை சுத்தம் செய்ய தகுந்த உதவியாளர்கள் இல்லாததால் தோட்டத்தில் கொண்டுபோய் விட்டுட்டோம். ஆனாலும் ஞாயிறுதோறும் அதைப் பார்த்து கொஞ்சிட்டு வராட்டி அவனுக்கு இருப்பு கொள்ளாது. சமீபத்தில் போனப்போ அது குட்டி போடப்போறதாக தோட்டக்காரத் தம்பி சொல்லிச்சு. இவனுக்கு ஏக சந்தோஷம், ரெண்டு குட்டிகூட விளையாடப்போறோம்னு.

முந்தாநாள், நானும் என் ஹஸ்பெண்டும் செம பிஸி! திடீர்னு தோட்டக்காரன் போன் பண்ணி ஆடு குட்டிபோட முடியாமல் கஷ்டப்படுது, கவனிக்காமல் போயிட்டா செத்துப் போயிடும்போல இருக்குங்கிறான். எங்க ரெண்டுபேருக்கும் நகற முடியாதபடி கேஸ். வேற வழியில்லாமல் பிரெண்ட் வெட்டினரி மருத்துவரை ட்ரைவர்கூட அனுப்பி போய்ப் பார்த்துட்டு வரச் சொன்னோம். அவர் அங்கிருந்து போனில், உடனடியா ஆப்பரேஷன் பண்ணணும் குட்டி குறுக்கே கிடக்குதுன்னு சொன்னார். அதுக்கு சிரமப்பட வேணாம்னு தோணினால் கசாப்புக் கடைக்குக் கொடுத்திடலாம், உங்க விருப்பம் என்னன்னு கேட்டார். ரொம்ப கஷ்டமா இருந்தது, அதைக் கேட்டு. ஆப்பரேஷன் பண்ணினா ஆடு பிழைக்க வாய்ப்பு இருந்தா பண்ணிடுங்கன்னு எங்க வீட்டுக்காரர் சொல்லிட்டார். ஆனால் நாங்க நேரிடையாக உடனிருந்து உதவி செய்ய முடியாத நிலையில் இருப்பதையும் சொல்லிட்டோம். அவரே எல்லாம் பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டார். இது எதுவும் எங்க பையனிடம் சொல்லலை, மூலையில் உட்கார்ந்து அழ ஆரம்பிச்சிடுவானே!

ஒரு வழியா எங்க வேலையெல்லாம் முடிச்சுட்டு கால்நடை அறுவை அரங்குக்குப் போனப்போ ராத்திரி 11 மணிக்கு மேலே ஆயிடுச்சு. எங்க நண்பரான கால்நடை மருத்துவரும், அறுவை சிகிச்சை செய்த அவரது நண்பரும் ஆட்டுக்கு bedside duty பார்த்துகிட்டு இருந்தாங்க. அப்போதான் ஆடு மயக்க மருந்து எபெக்ட்டில் இருந்து வெளி வந்து கொண்டிருந்தது. அப்பப்போ கண்ணை முழிச்சு எங்களைப் பாவமா பார்த்துச்சு.

குட்டி சைஸ் கொஞ்சம் பெரிதாக இருந்துச்சாம், குறுக்கே வேறு கிடந்ததால் பிரசவம் ஆக முடியாமல் தவித்திருக்கிறது. கீழே வர முடியாததால் கர்ப்பப்பை உள்புறமாக கிழிந்துவிட்டது, குட்டியும் இறந்துவிட்டது. அறுவை சிகிச்சை மூலம் இறந்த குட்டியை எடுத்துவிட்டு கர்ப்பப்பையைத் தைத்திருப்பதாக நண்பர் சொன்னார். கர்ப்பப் பையும் வெகுநேர போராட்டத்தால் கிழிந்திருந்ததால், மிகவும் சிதைந்து போயிருப்பதாகவும் சொன்னார். 24 மணிநேரம் கழித்துதான் ஆடு பிழைக்கும் வகை அறியமுடியுமென்று சொன்னார். இதே வகையான விளக்கங்களைப் பலமுறை நோயாளிகளுக்குச் சொல்ல நேருமென்றாலும், வாயில்லா ஜீவனின் அவஸ்தையைத் தக்க தருணத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போனது வருத்தமாக இருந்தது.

கா.ந. மருத்துவர் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட முறை, மயக்கம் கொடுக்க உபயோகித்த மருந்துகள், கொடுக்கப்பட்ட ஆண்டிபயாடிக் முதலியவை பற்றி விளக்கிச் சொன்னார். ஒருநாளாவது தீவிர கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டுமென்றும், தேவைப்பட்டால் IV Fluids கொடுக்க வேண்டுமென்றும் சொன்னார். எங்கள் மருத்துவ மனையின் கார் ஷெட்டில் அதற்குத் தேவையான வசதிகளுடன் படுக்கை தயாரிக்கப் பட்டது. செவிலியர்களுக்கு ஊசி குத்தும் முறை, காயத்துக்கு மருந்து போடும் விதமெல்லாம் சொல்லிக் கொடுத்தோம். ஆனாலும் என் கணவரே அத்தனை வேலையிலும் ஓடி ஓடி வந்து ஊசி போட்டுவிட்டு சென்றார். இன்றுதான் மேரி(எங்க செல்ல ஆடு) மெதுவாக எழுந்து நிற்கிறது, கொஞ்சம் கொஞ்சம் புல் சாப்பிடுது!!! கா.ந. மருத்துவர் தினமும் ஒருதரம் வந்து பார்த்துவிட்டு போகிறார்.
நேற்றுதான் எங்க பையனுக்கு சொன்னோம். ரொம்ப வலிச்சுதா, குட்டி ஆடு எப்படி இருந்திச்சு, எல்லாம் சாப்பிட கொடுக்கலாமான்னு ஏகப்பட்ட கேள்விகளுடன் ஒருதரம் பார்த்துட்டு ஸ்கூலுக்கு போயிருக்கான். வந்த பிறகுதான் நோயாளியின் சொந்தக்காரர்களுக்கு விளக்கம் சொல்லும் பாணியில் அவனை கன்வின்ஸ் பண்ணணும். தோட்டத்தில் விட்டதால்தான் இப்படி ஆயிடுச்சு, வீட்டிலேயே நம்ம கூட வைச்சிருந்தா நல்லா இருந்திருக்கும்கிறது அவனது வாதம். அவன் கால்நடை மருத்துவர்தான் ஆகப் போறானாம்!

அறுவை சிகிச்சையை உடனிருந்து பார்க்க முடியலையேன்னு என் வீட்டுக்காரருக்கு வருத்தம். மனிதர்களுக்கு போடப்படும் விதமாகவே மருந்துகள், தையல் நரம்புகள், மயக்கம் எல்லாமுமே! ஆனால் குழந்தைகளுக்கு போடப்படும் அளவில் !
(கசாப்புக் கடையில் வெட்டுப் படும் ஆடுகளின் நிலையை மனது ஏனோ ஒருதரம் நினைத்துப் பார்க்கிறது).

15 Comments:

At 4:26 PM, Blogger சிங். செயகுமார். said...

என்ன டாக்டர் , வெட் டாக்டருக்கு பீஸ் குடுத்தீங்களா? அப்புறம் ஆட்டை சரியா கவனிக்க மாட்டாரு!

 
At 8:31 AM, Blogger தாணு said...

ஜெயகுமார்
நிஜமாகவே பீஸ் வாங்கமாட்டேன்னுட்டார். அவங்க வீட்டில் நடந்த ஆப்பரேஷன்களுக்கெல்லாம் எங்க வீட்டுக்காரர் இலவச மயக்க மருந்து நிபுணராக இருந்ததால்!!

 
At 7:52 AM, Blogger யாத்ரீகன் said...

இதுவரைக்கும் கேள்விப்படாத விஷயமா இருக்கு...

இன்றைய இயந்திர சூழ்நிலையில, ஆடுதானேனு விட்டிராதது ஆச்சரியமா இருக்கு..

சின்ன பையனா இருந்தாலும்,

>> நம்ம கூட வைச்சிருந்தா நல்லா >>இருந்திருக்கும்கிறது அவனது வாதம்.

இப்படி சொல்லியிருக்கார், நல்ல சிந்தனைகளைதான் அவருக்கு ஊட்டியிருக்கீங்க.. வாழ்த்துக்கள்..

இப்போ எப்படி இருக்கு மேரி ?!

-
செந்தில்/Senthil

 
At 8:46 AM, Blogger தாணு said...

செந்தில்,
இன்னைக்கு மேரி கொஞ்சம் கஷ்டப்பட்டுச்சு. பால் கட்டிக்கொண்டு கா.ந.மருத்துவர் வந்து சின்ன அறுவை சிகிச்சை செய்தார். 3 நாள் ஊசி போடச் சொல்லியிருக்கார்.

 
At 11:14 AM, Blogger erode soms said...

சொல்லவேயில்ல!

 
At 3:15 PM, Blogger துளசி கோபால் said...

தாணு,

அடடா, மேரி இப்ப எப்படி இருக்கு? இன்னைக்குத்தான் பார்த்தேன். எப்படி இதை விட்டேன்னு தெரியலை.

மனுஷனுக்குள்ள எல்லாமெ மிருகங்களுக்கு வருமுன்னு சொன்னா பலர் நம்பறது இல்லை.

இங்கே பாருங்க எங்க பூனை ஒண்ணு HIV+ லே போச்சு. இப்ப இருக்கற ஜி.கே.( அதோட பேருங்க)வுக்கு நீரிழிவு வியாதி. 4-6 இருக்கவேண்டிய ப்ளட் ஷுகர் கவுண்ட்டு இதுக்கு 21.5.

தினம் மாத்திரை சாப்புடுது.

 
At 4:26 PM, Blogger பத்மா அர்விந்த் said...

தாணு
உங்க ஆடு இப்போ எப்படி இருக்கு?மடல் அனுப்பினேனே பார்த்தீங்களா? பியானோ பரீட்சை என்ன ஆச்சு?

 
At 8:39 AM, Blogger தாணு said...

துளசி,
வலைப்பதிவர் சந்திப்புக்குப் பிறகு உங்க பூனைக்குட்டி போயிட்டதா கேள்விப்பட்டேன்.

எனக்கு பெட் வளர்ப்பதில் இதுதான் உடன்பாடு இல்லாதது. அதுங்க சொல்லவும் தெரியாமல், கஷ்டமும் படறது பார்க்க சகிக்காது. ஆண்டிபயாடிக் ஊசிகள் ஹெவி டோஸில் போட்டுக்கொண்டிருக்கோம், ஆனாலும், சீழ் ட்ரை ஆகலை.

 
At 8:40 AM, Blogger தாணு said...

பத்மா,
தனிமடல் அனுப்பியுள்ளேன். ஜனவரியில்தான் ரிசல்ட் வரும். ரூ.1000/ ஜெயிப்பேனான்னு அப்போதான் தெரியும்

 
At 7:59 PM, Blogger துளசி கோபால் said...

என்னங்க ராஜ்,
அதான் குட்டி பிரசவத்துலே 'போயிருச்சுன்னு' சொல்லியிருக்காங்கல்லே. அதாலதானே இப்பப் பால் கட்டிக்கிட்டுச் சிரமப்படுது.

மிருகமோ மனுஷியோ 'பெத்துப் பிழைக்கறது' பெரிய விஷயம்தான்.

 
At 9:17 PM, Blogger ramachandranusha(உஷா) said...

துளசி "கப்பு" பற்றி எங்கேயே கேட்டு இருந்தேன். பாவம், நேற்றுதான் இதே கதை "குஞ்சாமணி" என் பதிவில் போட்டு இருந்தேன்,

தாணு இங்கையும் ஜூனியர் பெட் வளர்க்கணும் என்று ஓரே தொல்லை, அடுக்குமாடி குடியிருப்பில் வளர்ப்பது சரிபடாது என்று சொல்லியும் புலம்பல் தாங்கவில்லை.
அப்ப அப்ப ஒரு ஈயை பிடித்து டப்பாவில் போட்டு, அதற்கு பெயரும் சூட்டப்படும்.

 
At 9:44 PM, Blogger துளசி கோபால் said...

ஆமாம் உஷா,
கப்பு வோட கதையின் கடைசிப்பதிவு எழுத ஆரம்பிச்சு ரெண்டு மாசமாகுது. ஒரு கட்டத்துக்குமேலே போகமாட்டேங்குது. அப்படியே மனசு அந்தக் கடைசி நிகழ்வுக்குப் போய் துக்கமா ஆயிடுது உஷா.

இன்னும் கொஞ்ச நாள் போனா மனசு கெட்டிப்படும் அப்ப எழுதி முடிப்பேன்னு நினைக்கிறேன்.

குஞ்சாமணி அருமையா இருக்கு. முந்தியே படிச்சிருக்கேன்.( நீங்க அனுப்பியிருந்தீங்க, நினைவிருக்கா?)

இன்றைய 'ஈ'க்கு என்ன பேர்?:-)

 
At 6:47 AM, Blogger தாணு said...

எல்லோருடைய அன்பான விசாரிப்புக்கும் நன்றி. இன்றுதான் வீக்கமெல்லாம் நன்கு குறைந்து கொஞ்சம் துள்ளுகிறது.

உஷாவின் `ஈ' விஷயம் கேட்டால், எங்க வீட்டிலும் ஆரம்பிக்கப்பட்டு விடலாம், இதைக் காட்டக்கூடாது!

ராஜ்,
இப்போவாவது நல்லா தூங்குங்க!

 
At 12:58 AM, Blogger தாணு said...

ஆபீஸில் வேலை அதிகம்னு சொல்லுவீங்கன்னு பார்த்தா, வீட்லே அதிக வேலைங்கிறீங்க!!!நளபாகமா?

 
At 6:29 AM, Blogger தாணு said...

வாழ்த்துக்கள் ராஜ்!
எல்லத்தையும் கேமராவில் க்ளிக்கி வையுங்க. கொஞ்ச நாள் கழிச்சு பார்த்த ரொம்ப சந்தோஷமா இருக்கும்.

 

Post a Comment

<< Home