Thursday, September 01, 2005

ஆண்களில்லாத உலகத்திலே

பெண்களுக்கே வக்காலாத்து வாங்கி
ஆண்களைச் சாடிக்கொண்டிருப்பதால்
ஆண்களுக்கு எதிரியல்ல நான்
ஆணாதிக்கத்துக்கு மட்டுமே எதிரி

அன்பான அப்பா சொல்லித் தந்தது
அறிவோடு தன்னம்பிக்கை வேண்டுமென்று
அனுசரணையான அண்ணன் கற்பித்தது
அடுக்களையோடு அடங்கி விடாதேயென்று!

பால்ய நண்பன் பகிர்ந்து கொண்டது
பாலியல் பேதம் நட்பிற்கில்லையென்று
பருவத்தே வந்த நண்பர் கலந்தது
பசுமையான இல்லறத்தில்.

இடையிடையே எத்தனை நண்பர்கள்
இன்னலுற்ற போழ்திலெல்லாம்
இருகரம் நீட்டி துயர் அகற்றி
இன்றும் நல்லதுணையாயிருப்பவர்கள்

இத்தனை இதயங்களையும் மறந்து
இகழ்மொழி பேசுவேனோ இதயமின்றி!
ஆணாதிக்கம் மறந்தவர்கள் மட்டுமே
ஆண்கள்.................என்மொழியில்!

10 Comments:

At 11:08 AM, Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

great!!

-Mathy

 
At 11:24 AM, Anonymous Anonymous said...

ஆணாதிக்கம் மறந்தவர்கள் மட்டுமே
ஆண்கள்.................என்மொழியில்!
சரியாக சொன்னீர்கள் தாணு

 
At 6:59 PM, Blogger ஜென்ராம் said...

மிகவும் தெளிவாக கருத்தை முன்வைக்கத் தெரிகிறது உங்களுக்கு..வாழ்த்துகள்.

 
At 4:39 AM, Blogger வானம்பாடி said...

நன்றாக எழுதுகிறீர்கள்!

 
At 4:44 AM, Blogger ரவியா said...

இப்பொழுதுதான் பார்த்தேன்..கச்சிதம்..

 
At 4:55 AM, Blogger கலை said...

நல்லதொரு கவிதை. "ஆணாதிக்கம் இல்லாதவர்கள் மட்டுமே ஆண்கள்". அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

 
At 5:31 AM, Blogger G.Ragavan said...

அருமையான பாடல்.

ஆதிக்கம் செய்ய நினைக்காதவனே ஒரு பதவிக்குத் தகுதியானவன். ஆணுக்கும் அப்படியே.

 
At 8:41 PM, Blogger அன்பு said...

அருமை...

 
At 9:08 PM, Blogger Ramya Nageswaran said...

இப்பொழுது தான் பார்த்தேன் தாணு..அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

 
At 10:56 PM, Blogger rv said...

நல்லா இருக்கு..

 

Post a Comment

<< Home