Sunday, September 04, 2005

சுமைதாங்கிகள்

கழுதை பொதி சுமப்பது பற்றி
கிண்டலடித்து ஜோக்கடித்திருப்போம்.
கண்முன்னால் மனிதகுலம்
சுமக்கும் பொதி தெரியாமல்.

பள்ளிப் பருவத்தில்
பாடப் புத்தகங்களே பெரும் சுமை
படித்து முடித்துவிட்டால்
பணி தேடுவதன் சோகம் சுமை!

கன்னிப் பருவத்திலே
காதல் கூட வலிதரும் சுமை
கல்யாணப் பந்தலிலே
கன்னியரே கழிக்கவேண்டிய சுமை!

தாம்பத்ய வாழ்க்கையிலே
பகிர்தலின்மைகூட மனச் சுமை
பகிர்ந்ததால் வரும் பந்தங்களோ
வாழ்க்கை முழுதும் பாசச் சுமை!

இறக்கியவுடன் கனம் குறைக்கும்
இத்தனை சுமைகளுக்கிடையே
ஐயிரண்டு மாதம் சுமந்த
என்னுயிரே இதமான சுமை!

3 Comments:

At 4:32 PM, Blogger துளசி கோபால் said...

அருமை!

 
At 12:46 AM, Blogger ஜென்ராம் said...

அப்படிப் போடுங்க!

 
At 8:32 PM, Blogger அன்பு said...

சுகமான சுமைகள் பற்றி அருமையான கவிதை... கலக்குறீங்க.

 

Post a Comment

<< Home