Wednesday, September 07, 2005

அரசியல்வாதியா?ஆண்டவனா?

அரசியல்வாதிகளுக்கோ பலமுகம்
ஆனைமுகனுக்கோ ஒருமுகம்

அரசியல்வாதியைத் தொடவிடாது
அணைத்து நிற்கும் போலீஸ் படை

தொந்திக்கணபதிக்குத் துணை நிற்குது
தொப்பை பெருத்த போலீஸ் உடை!

அவன் சிலை கரையும் கடலில்
கொழுக்கட்டை கரையும் நம் வாயில்!

அரசியல்வாதியை அசைப்பது ஓட்டுப்பெட்டி
அண்ணாச்சியை அலங்கரிப்பது உண்டியல் குலுக்கி


தம்பியை உலகம் சுற்ற வைத்தான்
அன்று
ஒரு பழத்துக்காக!

அனைவரையும் ஊர் சுற்ற வைக்கிறான்
இன்று
விநாயகர் சதூர்த்திக்காக!

6 Comments:

At 11:21 AM, Blogger erode soms said...

கடவுளே ஆனாலும் கட்சியில்லாமல் காட்சியளிக்க விடமாட்டோம் ..!

 
At 8:40 AM, Blogger ஜென்ராம் said...

அவரையும் விட்டு வைக்கவில்லையா?

 
At 5:41 AM, Anonymous Anonymous said...

அருமையா இருக்கிறது உங்கள் பதிவுகளெல்லாம்.
நீங்களும் நெல்லையா? எனக்கு சொந்த ஊர் அம்பாசமுத்திரம்.(எனக்கு இதே வேலையாப் போச்சு எல்லா இடத்துலயும் இதே கேள்விய கேட்டுட்டுத் திரியறேன்).

 
At 7:11 AM, Blogger தாணு said...

நெல்லையில் படித்தேன். சொந்த ஊர் திருச்செந்தூர் அருகில் சின்ன கிராமம்- ஆறுமுகனேரி. கேள்விப்பட்டதுண்டா?
என் பதிவுகள் படித்ததற்கு நன்றி

 
At 2:24 AM, Blogger அன்பு said...

ஆறுமுகனேரி - கிராஸிங்க் தாண்டிதானே திருச்செந்தூர் செல்ல முடியும். இப்ப இருப்பது பள்ளிப்பாளையமா, பவானியா!?

நல்ல விடயங்கள் நிறைய எழுதுகின்றீர்கள் - பல விடயங்கள் கவிதைநடையில் வேறு. பணிகளுக்கிடையே பதிவும் எழுதும் உங்களுக்கு நன்றி.

 
At 3:11 AM, Blogger தாணு said...

அன்பு
உங்கள் பின்னூட்டங்கள் அனைத்தும் பார்த்தேன். என் பதிவை படித்ததில் பிடித்ததாக ஏற்றுக் கொண்டதற்கு நன்றி. அதே க்ராசிங்தான் என் ஊர்!

 

Post a Comment

<< Home