Thursday, March 31, 2022

அலை-64

 அலை-64

வாழ்க்கைப் பயணத்தின் மிக முக்கியமான கட்டம் மருத்துவக் கல்லூரிப் பருவம்தான். ஐந்தரை வருடங்கள் கல்லூரிப் படிப்பு அதன் பின் ஒரு வருடம் பயிற்சி மருத்துவ காலம் என மொத்தமாக ஆறரை வருடங்கள் .இன்னும் சிலர் சீனியர் ஹவுஸ் சர்ஜன் என மேலும் ஒன்றிரண்டு வருடங்கள் அங்கேயே பயிற்சி பெறுவார்கள். இளமைப் பருவத்தின் மிக முக்கியமான காலமான பதினாறு வயது முதல் இருபத்து மூன்று வருடங்கள் வரை இணைந்திருந்த பொழுதுகள். இளமை ஊஞ்சலாடிய நாட்கள்.
எல்லா கல்லூரிகளுக்கும் பொதுவான முறைதான் என்றாலும் எங்கள் கல்லூரிக்கென்று நிறைய சிறப்புத் தன்மைகள் உண்டு. ஆணும் பெண்ணும் இருபத்திநாலு மணிநேரமும் இணைந்து பணியாற்றுவது மருத்துவக் கல்லூரியில்தான்.
கலைக் கல்லூரி, பொறியியல் கல்லூரியில் படிப்பவர்களும் இந்த பருவத்தைக் கடப்பவர்கள்தான், இதே மாதிரி அநுபவங்கள் ஏற்படலாம். ஆனால் எங்கள் உறவுகள் தொடர்புகள் சொந்தங்கள் அனைத்தும் வர்ணனைக்கும் அப்பாற்பட்டது. எங்களுக்கிடையில் தூரங்கள் அதிகரித்தாலும் தொடர்பு விட்டுப்போனது போகாது. என்றென்றும் எங்களை இணைக்கும் பாலமாக நோயாளிகள் இருப்பார்கள். பாடம் கற்ற ஆசிரியருக்கே மருத்துவம் செய்யும் நிலையில் அடுத்த தலைமுறை மருத்துவர் இருப்பார். ஆசிரியரின் குடும்பமே மாணவரின் பராமரிப்பில் இருப்பது சாதாரணமாக நடக்கும்.
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என்று நீட்டி முழக்கிச் சொன்னாலும், ஹைகிரவுண்டு ஆஸ்பத்திரி என்று சொன்னால்தான் ஊருக்குள் எல்லோருக்கும் தெரியும். அதிலேயும் ஒரு “க்” போட்டு அழுத்தமாக ஹை‘க்’கிரவுண்டுன்னு சொல்லணும். அப்போதான் மஜாவாக இருக்கும். இப்போது எழுதும்போது கூட அந்தப் பெயரை உச்சரிக்கும் போது ‘ இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’தான்.
மூன்று வருட மருத்துவ மாணவர்கள், ஒரு வருட பயிற்சி மருத்துவர்கள், சீனியர் ஹவுஸ் சர்ஜன் பண்ணுபவர்கள்,ஆசிரியர்கள் என பலதரப்பட்ட மருத்துவர்களும் முட்டி மோதி உழன்று கொண்டிருக்கும் இடம். இஷ்ட தெய்வங்களாகவும் ஒரு சில துஷ்ட தேவதைகளுமாக ஆசிரியர்களும் பேராசிரியர்களும், அனைவருக்கும் குட்டு வைக்கும் இடத்தில் துறைத் தலைவர்களும் கிடுக்கிப்பிடி போடும் சாஹர சங்கமம் அது.
சீனியர்களும் ஜூனியர்களும் ஒரே நோயாளியை அவரவர் கண்ணோட்டத்துடன் பரிசோதித்து விவாதித்து விளக்கம் பெற்று வைத்தியம் செய்யும்போது அங்கே ஒரு நல்ல மருத்துவன் உருவாகிறான். அதே சமயம் வயது வித்தியாசங்கள் மறைந்து ஒரு குடையின்கீழ் வரும் உறவுகள் காலம் கடந்தும் நிலைத்திருக்கிறது. புத்தகங்களில் படித்ததை விட சீனியர்களிடம் கற்றுக் கொண்டதுதான் அதிகம். ஆசிரியரிடம் கேட்கத் தயங்கும் சந்தேகங்களைக் கூட சீனியரிடம் கேட்டுத் தெளிவு பெறலாம்.
நாங்கள் படித்த காலங்களில் எல்லாம் சீனியர்களை அக்கா என்றும் ஆண்களை சார் என்றும்தான் அழைப்போம். கொஞ்சம் நெருங்கியவர்களைப் பெயர் சொல்லிக் கூப்பிடும் கலாச்சாரம் அங்கங்கே உண்டு. வகுப்புத் தோழர்களை நேரில் பார்க்கும் போது நீங்க நாங்கன்னு கூப்பிட்டுக் கொள்வதும், சகாக்களுடன் இருக்கும்போது அவன், அவள் என்று பேசிக் கொள்வதும் எழுதப்படாத விதிகள்.
மூன்றாம் ஆண்டு படிக்கும் போது நிறைய சுதந்திரம் இருக்கும். பொறுப்பற்று வானம்பாடிகள் மாதிரி பறந்து திரியலாம். நோயாளியை பரிசோதித்து ஆசிரியரிடம் விளக்க வேண்டியதில்லை. ஏதாவது ஒரு மூலையில் நின்று கொண்டு ஓணான் போல் தலையை மட்டும் நீட்டி எட்டிப் பார்த்துக் கொள்ளலாம்.பேராசிரியரிடம் சீனியர்கள் குட்டுப் படுவதையும் திட்டு வாங்குவதையும் நமட்டுச் சிரிப்புடன் ரசித்துக் கொள்ளலாம். வகுப்பு போரடித்தால் சத்தமில்லாமல் நழுவி ஓடியும் விடலாம். நம்மளைத் தேடுவோரே இருக்க மாட்டாங்க.
எந்த OP க்கு போனாலும் புதுப் பிள்ளைங்க என்று நம்மளை ரொம்பப் படுத்த மாட்டாங்க. எங்களுக்கு முதல் போஸ்டிங் தொற்று நோய் வார்டு என்று நினைக்கிறேன். ஊசி போடவெல்லாம் கத்துக்குறதுக்கு முன்னாடியே அங்கே போயிட்டோம். வெறிநாய்க்கடி, ரண ஜன்னி (Tetanus) போன்ற நோயாளிகள்தான் அங்கே இருப்பாங்க.வலிப்பு வரும் வேளைகளில் பார்க்கவே சங்கடமாக இருக்கும். நல்ல வேளையாக காலரா நோயாளிகள் யாருமில்லை. பயந்துகொண்டேதான் போனோம். ஆனால் அதன் பொறுப்பு ஆசிரியர் Dr. Edwin Sir ரொம்ப ஃப்ரெண்ட்லியாக இருந்ததால் அந்த போஸ்டிங் தடையின்றி போய்விட்டது.
எங்கள் க்ரூப்பில் சுகந்தி, சூரி, தங்கராஜ், தாணு, தில்லை, விஜி, விசா அனைவரும் இருந்ததாக ஞாபகம். என்னைத் தவிர அந்த க்ரூப்பில் எல்லோரும் பயங்கர படிப்ஸ். அதனாலே தனியாகக் கட் அடிக்க முடியாது. விஜி மட்டும் கொஞ்சம் என்னைமாதிரி ஜாலி வகை. சூரியகாந்தியோ கொஞ்சம் சேட்டை பண்ணினாலும் கண்ணாலேயே எரித்துவிடுவதுபோல் பார்த்து எச்சரிப்பாள். அவளுக்குப் பயந்தே எல்லா வகுப்புக்கும் தவறாமல் போய்க் கொண்டிருந்தேன்.
எங்களது வகுப்பிலிருந்து C Batch க்கு நிறைய பேர் போயிட்டமாதிரி முந்தின வகுப்பிலிருந்து நிறைய பேர் எங்க கூட சேர்ந்த்திருந்தாங்க. அதிலும் வாசகுமார், விஜயகுமார், வைரமுத்துராஜா என ஒரு கும்பல் அகர வரிசைப்படி எங்களுடன் இணைந்தார்கள். முதல் வருஷம் எங்களை செமையாக ராகிங் என்ற பெயரில் கலாய்த்தவர்கள். கடைசி வருஷம் வரைகூட அவங்களைப் பார்த்து ஓடியிருக்கிறேன். வைரம்ஸ் மட்டும் சிரித்த முகத்துடன் கொஞ்சம் நட்புடன் பேசுவார். அதனால் அவருடன் சகஜமாகப் பபேசினால்,உடனே நம்மளை ஓட்ட ஆரம்பிச்சுடுவாங்க.
வார்டு போஸ்டிங் வரும்போது எல்லாரையும் இன்னும் சின்னச் சின்னக் குழுக்களாகப் பிரிச்சுடுவாங்க. எப்போழுதும் தங்கரஜ், தாணு, தில்லை மூணுபேரும் ஒண்ணாகத்தான் இருப்போம். ஆறரை வருடங்களும் இணைபிரியாத மூவர் நாங்களாகத்தான் இருந்திருப்போம். தில்லை மட்டும் இடையில் Medicine AS unitக்கு விரும்பிச் சென்றுவிட்டார்.
பொது மருத்துவத்தில் மூன்றாம் அலகு Dr.PSS unit தான் எங்களுக்கு ஒதுக்கப்பட்டது. அவர் யூனிட் பற்றி மிகப் பெருமையாகச் சொல்லுவாங்க. வகுப்பு எடுப்பதைக் கேட்டுகிட்டே இருக்கலாம்னு சொல்லுவாங்க. எங்களுக்கு கேள்வி ஞானம்தான். மூன்றாம் ஆண்டு மக்கள் கடைசியில் அல்லவா நிப்போம், ஒண்ணுமே கேட்காது. அவர் அவ்ளோ மென்மையாகப் பேசுவார்.
அவரோட உதவி பேராசிரியர் ஸ்ரீநிவாசன் சார். அவர் இன்னும் மென்மையாகப் பேசுவார். அவர் வகுப்பிலும் எதுவும் காதில் விழுந்ததில்லை. ஐந்தாம் ஆண்டு மாணவர்கள் (Case Presentation ) விளக்கம் சொல்லிகிட்டு இருப்பாங்க. நாங்க ஜாலியாக ஏதாச்சும் சேட்டை பண்ணிகிட்டு இருப்போம். நாமளும் அஞ்சாம் வருஷம் படிச்சுக்கலாம்னு ஒரு தைரியம்தான்.
அறுவை சிகிச்சை பகுதியிலும் எனக்கு மூணாம் அலகுதான். RH Unit என்று அழைக்கப்படும் Dr. R. ஹரிஹரன் சார் யூனிட். கோமதிநாயகம் சாரும் சுப்பாராவ் சாரும் உதவி பேராசிரியர்கள். மாரிமுத்து சார் அவ்வப்போது சேர்ந்து கொள்வார். வைகுண்டராமன் சாரும் அப்போதுதான் வந்து சேர்ந்தார். குழந்தைநல அறுவை சிகிச்சை நிபுணர் என்றாலும் கொஞ்ச நாள் அறுவை சிகிச்சை பிரிவில் இருந்தார்.தீக்காயங்களுக்கான வார்டு பொறுப்பில் இருந்தார்.
வைகுண்டராமன் சார் அசப்பில் பாபி பட கதானாயகன் ரிஷி கபூர் போலவே இருப்பார். அதனால் அவருக்கு ரசிகைகள் கூட்டம் அதிகம் இருக்கும். ஆனால் எதனாலோ எப்பவும் உர்ரென்று சிடுமூஞ்சியாகவே வலம் வருவார்.
சுப்பாராவ் சாரிடமிருந்துதான் Robin Cook Novels வாசிக்கும் பழக்கம் வந்தது. அதுவரை சிட்னி ஷெல்டன்தான் all time favourite. பெரிய மீசையுடன் ஒருவர் RH sir இன் நிழல்போல் வந்து கொண்டே இருப்பார். சீனியர் ஹவுஸ் சர்ஜன் என்று பின்னால் தெரிந்து கொண்டோம்.
பொது மருத்துவத்துக்கும் அறுவை சிகிச்சைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கும். அறுவை சிகிச்சையில் கண்முன்னாடி தெரியும் கட்டிகள், வீக்கங்கள், புண்கள், தையல்கள் பற்றி டக் டக்கென்று விவாதித்து இன்ன வைத்தியம் என்று முடிவுடன் அடுத்த நோயாளிக்குப் போய்விடலாம். பொது மருத்துவத்தில் நோயாளி சொல்லுவதற்கும் உடம்பிலுள்ள நோய்க்கும் தொடர்பே இருக்காது. துருவித் துருவி கேட்டாலும் சம்பந்தமில்லாத பதில்கள்தான் நிறைய வரும். விவாதங்களும் நீண்டுகொண்டே இருக்கும். அப்போவே முடிவு செய்திட்டேன் , நமக்கு அறுவை சிகிச்சைதான் சரி என்று.
மகப்பேறு மருத்துவத்தில் இரண்டு யூனிட்டுகள் உண்டு. நான் GS madam unit. ஆக்னஸ் மேடம் நல்லா சொல்லித் தருவாங்கள். ஆனால் அவங்க முதல் யூனிட்டில் இருந்தாங்க. நிறைய உதவி பேராசிரியைகள் உண்டு. என் பெயரிலேயே தாணுமதி மேடம் இருந்தாங்க. பாக்கியம் பார்வதி, மீனாட்சி, சகுந்தலா என ஒன்றிரண்டு பெயர்கள்தான் நினைவுக்கு வருகிறது.
மூணாம் வருஷம் முழுவதுமே பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் அரைகுறையாக ஏதோ படித்தோம். அப்போது படிக்கும் அனைத்துக்குமான தேர்வு ஐந்தாம் வருடத்தில்தான் வரும் என்பதால் விட்டேத்தியாக இருப்போம். ஒருமாதிரி Honey-moon period மாதிரிதான் அந்த வருஷம் ஓடிப்போனது.
மதியம் சாப்பாட்டுக்குப் பிறகு தியரி வகுப்புகள் கல்லூரி வளாகத்தில் நடக்கும்.
Pharmacology என்ற ஒரே பாடம்தான் மூன்றாம் வருடம் தேர்வுக்குரியது. அவ்ளோ மாத்திரை மருந்துகள் பற்றியும் நுணுக்கமாகப் படிக்கணும். மருந்து கண்டுபிடிச்சது தொடங்கி, நோயாளிக்கு கொடுக்கப்படும் வரை உள்ள கதைகள் ஒருபுறம். சாப்பிட்ட பின் அந்த மருந்து எப்படி வேலை செய்யும், என்னனென்ன உபத்திரவங்களைப் பக்க விளைவாகத் தரும், எந்த அவயங்களையெல்லாம் பாதிக்கும், எப்படி வெளியேறும்- அப்பப்பா எழுதும்போதே கண்ணைக் கட்டுதே, படிக்கும் போது எப்படி இருந்திருக்கும்.
பாதி விஷயங்களைப் புரியாமலேயே மனப்பாடம் செய்திருப்போம். புரிந்த விஷயங்களிலோ ஆயிரத்தெட்டு சந்தேகம் இருக்கும். ஆனாலும் முனகல் சத்தமே வராமல் வகுப்பு கவனிக்கணும். Pharmacology professor கனகாம்பாள் மேடம் பயங்கர terror. அவங்க சிரிச்சே பார்த்ததில்லை.
அதுபோக பொது மருத்துவம், OG, surgery, Forensic, Pathology எல்லா பாடங்களின் தியரியும் தினமும் நடக்கும். நிறைய வகுப்புகள் எனக்கு Latin, French போல் அந்நிய மொழிகளாகவே தெரிந்தது. என்னை மாதிரி நிறைய பேர் உண்ட மயக்கத்துடன்தான் இருப்பார்கள். தூங்குபவர்களைப் பற்றி எந்த ஆசிரியரும் கண்டு கொண்டதே இல்லை. வகுப்பைத் தொந்தரவு செய்யாமல் தூங்கிவிட்டால் நல்லதுன்னு விட்டுடுவாங்க.
இதெல்லாம் அன்றாட நிகழ்வுகள். ஆனால் அவற்றின் இடைச் சொறுகல்களாக தினமும் ஏதாவது வித்தியாசமான விஷயமோ ஜாலியான நிகழ்ச்சியோ நடக்கும் . அதையெல்லாம் திரும்பிப் பார்க்கும்போது அலைகள் மூன்றாம் வருடத்தையே தாண்டாது போலிருக்கு. அத்தனை நிகழ்ச்சிகள் மனதில் முட்டி மோதுகின்றன. என் ஒருத்தியின் அநுபவங்களே தோண்டத் தோண்டப் பொங்கி வரும்போது சக நண்பர்களின் பங்களிப்பையும் சேர்த்தால் என்னே சுகானுபவம்.அலை-64
வாழ்க்கைப் பயணத்தின் மிக முக்கியமான கட்டம் மருத்துவக் கல்லூரிப் பருவம்தான். ஐந்தரை வருடங்கள் கல்லூரிப் படிப்பு அதன் பின் ஒரு வருடம் பயிற்சி மருத்துவ காலம் என மொத்தமாக ஆறரை வருடங்கள் .இன்னும் சிலர் சீனியர் ஹவுஸ் சர்ஜன் என மேலும் ஒன்றிரண்டு வருடங்கள் அங்கேயே பயிற்சி பெறுவார்கள். இளமைப் பருவத்தின் மிக முக்கியமான காலமான பதினாறு வயது முதல் இருபத்து மூன்று வருடங்கள் வரை இணைந்திருந்த பொழுதுகள். இளமை ஊஞ்சலாடிய நாட்கள்.
எல்லா கல்லூரிகளுக்கும் பொதுவான முறைதான் என்றாலும் எங்கள் கல்லூரிக்கென்று நிறைய சிறப்புத் தன்மைகள் உண்டு. ஆணும் பெண்ணும் இருபத்திநாலு மணிநேரமும் இணைந்து பணியாற்றுவது மருத்துவக் கல்லூரியில்தான்.
கலைக் கல்லூரி, பொறியியல் கல்லூரியில் படிப்பவர்களும் இந்த பருவத்தைக் கடப்பவர்கள்தான், இதே மாதிரி அநுபவங்கள் ஏற்படலாம். ஆனால் எங்கள் உறவுகள் தொடர்புகள் சொந்தங்கள் அனைத்தும் வர்ணனைக்கும் அப்பாற்பட்டது. எங்களுக்கிடையில் தூரங்கள் அதிகரித்தாலும் தொடர்பு விட்டுப்போனது போகாது. என்றென்றும் எங்களை இணைக்கும் பாலமாக நோயாளிகள் இருப்பார்கள். பாடம் கற்ற ஆசிரியருக்கே மருத்துவம் செய்யும் நிலையில் அடுத்த தலைமுறை மருத்துவர் இருப்பார். ஆசிரியரின் குடும்பமே மாணவரின் பராமரிப்பில் இருப்பது சாதாரணமாக நடக்கும்.
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என்று நீட்டி முழக்கிச் சொன்னாலும், ஹைகிரவுண்டு ஆஸ்பத்திரி என்று சொன்னால்தான் ஊருக்குள் எல்லோருக்கும் தெரியும். அதிலேயும் ஒரு “க்” போட்டு அழுத்தமாக ஹை‘க்’கிரவுண்டுன்னு சொல்லணும். அப்போதான் மஜாவாக இருக்கும். இப்போது எழுதும்போது கூட அந்தப் பெயரை உச்சரிக்கும் போது ‘ இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’தான்.
மூன்று வருட மருத்துவ மாணவர்கள், ஒரு வருட பயிற்சி மருத்துவர்கள், சீனியர் ஹவுஸ் சர்ஜன் பண்ணுபவர்கள்,ஆசிரியர்கள் என பலதரப்பட்ட மருத்துவர்களும் முட்டி மோதி உழன்று கொண்டிருக்கும் இடம். இஷ்ட தெய்வங்களாகவும் ஒரு சில துஷ்ட தேவதைகளுமாக ஆசிரியர்களும் பேராசிரியர்களும், அனைவருக்கும் குட்டு வைக்கும் இடத்தில் துறைத் தலைவர்களும் கிடுக்கிப்பிடி போடும் சாஹர சங்கமம் அது.
சீனியர்களும் ஜூனியர்களும் ஒரே நோயாளியை அவரவர் கண்ணோட்டத்துடன் பரிசோதித்து விவாதித்து விளக்கம் பெற்று வைத்தியம் செய்யும்போது அங்கே ஒரு நல்ல மருத்துவன் உருவாகிறான். அதே சமயம் வயது வித்தியாசங்கள் மறைந்து ஒரு குடையின்கீழ் வரும் உறவுகள் காலம் கடந்தும் நிலைத்திருக்கிறது. புத்தகங்களில் படித்ததை விட சீனியர்களிடம் கற்றுக் கொண்டதுதான் அதிகம். ஆசிரியரிடம் கேட்கத் தயங்கும் சந்தேகங்களைக் கூட சீனியரிடம் கேட்டுத் தெளிவு பெறலாம்.
நாங்கள் படித்த காலங்களில் எல்லாம் சீனியர்களை அக்கா என்றும் ஆண்களை சார் என்றும்தான் அழைப்போம். கொஞ்சம் நெருங்கியவர்களைப் பெயர் சொல்லிக் கூப்பிடும் கலாச்சாரம் அங்கங்கே உண்டு. வகுப்புத் தோழர்களை நேரில் பார்க்கும் போது நீங்க நாங்கன்னு கூப்பிட்டுக் கொள்வதும், சகாக்களுடன் இருக்கும்போது அவன், அவள் என்று பேசிக் கொள்வதும் எழுதப்படாத விதிகள்.
மூன்றாம் ஆண்டு படிக்கும் போது நிறைய சுதந்திரம் இருக்கும். பொறுப்பற்று வானம்பாடிகள் மாதிரி பறந்து திரியலாம். நோயாளியை பரிசோதித்து ஆசிரியரிடம் விளக்க வேண்டியதில்லை. ஏதாவது ஒரு மூலையில் நின்று கொண்டு ஓணான் போல் தலையை மட்டும் நீட்டி எட்டிப் பார்த்துக் கொள்ளலாம்.பேராசிரியரிடம் சீனியர்கள் குட்டுப் படுவதையும் திட்டு வாங்குவதையும் நமட்டுச் சிரிப்புடன் ரசித்துக் கொள்ளலாம். வகுப்பு போரடித்தால் சத்தமில்லாமல் நழுவி ஓடியும் விடலாம். நம்மளைத் தேடுவோரே இருக்க மாட்டாங்க.
எந்த OP க்கு போனாலும் புதுப் பிள்ளைங்க என்று நம்மளை ரொம்பப் படுத்த மாட்டாங்க. எங்களுக்கு முதல் போஸ்டிங் தொற்று நோய் வார்டு என்று நினைக்கிறேன். ஊசி போடவெல்லாம் கத்துக்குறதுக்கு முன்னாடியே அங்கே போயிட்டோம். வெறிநாய்க்கடி, ரண ஜன்னி (Tetanus) போன்ற நோயாளிகள்தான் அங்கே இருப்பாங்க.வலிப்பு வரும் வேளைகளில் பார்க்கவே சங்கடமாக இருக்கும். நல்ல வேளையாக காலரா நோயாளிகள் யாருமில்லை. பயந்துகொண்டேதான் போனோம். ஆனால் அதன் பொறுப்பு ஆசிரியர் Dr. Edwin Sir ரொம்ப ஃப்ரெண்ட்லியாக இருந்ததால் அந்த போஸ்டிங் தடையின்றி போய்விட்டது.
எங்கள் க்ரூப்பில் சுகந்தி, சூரி, தங்கராஜ், தாணு, தில்லை, விஜி, விசா அனைவரும் இருந்ததாக ஞாபகம். என்னைத் தவிர அந்த க்ரூப்பில் எல்லோரும் பயங்கர படிப்ஸ். அதனாலே தனியாகக் கட் அடிக்க முடியாது. விஜி மட்டும் கொஞ்சம் என்னைமாதிரி ஜாலி வகை. சூரியகாந்தியோ கொஞ்சம் சேட்டை பண்ணினாலும் கண்ணாலேயே எரித்துவிடுவதுபோல் பார்த்து எச்சரிப்பாள். அவளுக்குப் பயந்தே எல்லா வகுப்புக்கும் தவறாமல் போய்க் கொண்டிருந்தேன்.
எங்களது வகுப்பிலிருந்து C Batch க்கு நிறைய பேர் போயிட்டமாதிரி முந்தின வகுப்பிலிருந்து நிறைய பேர் எங்க கூட சேர்ந்த்திருந்தாங்க. அதிலும் வாசகுமார், விஜயகுமார், வைரமுத்துராஜா என ஒரு கும்பல் அகர வரிசைப்படி எங்களுடன் இணைந்தார்கள். முதல் வருஷம் எங்களை செமையாக ராகிங் என்ற பெயரில் கலாய்த்தவர்கள். கடைசி வருஷம் வரைகூட அவங்களைப் பார்த்து ஓடியிருக்கிறேன். வைரம்ஸ் மட்டும் சிரித்த முகத்துடன் கொஞ்சம் நட்புடன் பேசுவார். அதனால் அவருடன் சகஜமாகப் பபேசினால்,உடனே நம்மளை ஓட்ட ஆரம்பிச்சுடுவாங்க.
வார்டு போஸ்டிங் வரும்போது எல்லாரையும் இன்னும் சின்னச் சின்னக் குழுக்களாகப் பிரிச்சுடுவாங்க. எப்போழுதும் தங்கரஜ், தாணு, தில்லை மூணுபேரும் ஒண்ணாகத்தான் இருப்போம். ஆறரை வருடங்களும் இணைபிரியாத மூவர் நாங்களாகத்தான் இருந்திருப்போம். தில்லை மட்டும் இடையில் Medicine AS unitக்கு விரும்பிச் சென்றுவிட்டார்.
பொது மருத்துவத்தில் மூன்றாம் அலகு Dr.PSS unit தான் எங்களுக்கு ஒதுக்கப்பட்டது. அவர் யூனிட் பற்றி மிகப் பெருமையாகச் சொல்லுவாங்க. வகுப்பு எடுப்பதைக் கேட்டுகிட்டே இருக்கலாம்னு சொல்லுவாங்க. எங்களுக்கு கேள்வி ஞானம்தான். மூன்றாம் ஆண்டு மக்கள் கடைசியில் அல்லவா நிப்போம், ஒண்ணுமே கேட்காது. அவர் அவ்ளோ மென்மையாகப் பேசுவார்.
அவரோட உதவி பேராசிரியர் ஸ்ரீநிவாசன் சார். அவர் இன்னும் மென்மையாகப் பேசுவார். அவர் வகுப்பிலும் எதுவும் காதில் விழுந்ததில்லை. ஐந்தாம் ஆண்டு மாணவர்கள் (Case Presentation ) விளக்கம் சொல்லிகிட்டு இருப்பாங்க. நாங்க ஜாலியாக ஏதாச்சும் சேட்டை பண்ணிகிட்டு இருப்போம். நாமளும் அஞ்சாம் வருஷம் படிச்சுக்கலாம்னு ஒரு தைரியம்தான்.
அறுவை சிகிச்சை பகுதியிலும் எனக்கு மூணாம் அலகுதான். RH Unit என்று அழைக்கப்படும் Dr. R. ஹரிஹரன் சார் யூனிட். கோமதிநாயகம் சாரும் சுப்பாராவ் சாரும் உதவி பேராசிரியர்கள். மாரிமுத்து சார் அவ்வப்போது சேர்ந்து கொள்வார். வைகுண்டராமன் சாரும் அப்போதுதான் வந்து சேர்ந்தார். குழந்தைநல அறுவை சிகிச்சை நிபுணர் என்றாலும் கொஞ்ச நாள் அறுவை சிகிச்சை பிரிவில் இருந்தார்.தீக்காயங்களுக்கான வார்டு பொறுப்பில் இருந்தார்.
வைகுண்டராமன் சார் அசப்பில் பாபி பட கதானாயகன் ரிஷி கபூர் போலவே இருப்பார். அதனால் அவருக்கு ரசிகைகள் கூட்டம் அதிகம் இருக்கும். ஆனால் எதனாலோ எப்பவும் உர்ரென்று சிடுமூஞ்சியாகவே வலம் வருவார்.
சுப்பாராவ் சாரிடமிருந்துதான் Robin Cook Novels வாசிக்கும் பழக்கம் வந்தது. அதுவரை சிட்னி ஷெல்டன்தான் all time favourite. பெரிய மீசையுடன் ஒருவர் RH sir இன் நிழல்போல் வந்து கொண்டே இருப்பார். சீனியர் ஹவுஸ் சர்ஜன் என்று பின்னால் தெரிந்து கொண்டோம்.
பொது மருத்துவத்துக்கும் அறுவை சிகிச்சைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கும். அறுவை சிகிச்சையில் கண்முன்னாடி தெரியும் கட்டிகள், வீக்கங்கள், புண்கள், தையல்கள் பற்றி டக் டக்கென்று விவாதித்து இன்ன வைத்தியம் என்று முடிவுடன் அடுத்த நோயாளிக்குப் போய்விடலாம். பொது மருத்துவத்தில் நோயாளி சொல்லுவதற்கும் உடம்பிலுள்ள நோய்க்கும் தொடர்பே இருக்காது. துருவித் துருவி கேட்டாலும் சம்பந்தமில்லாத பதில்கள்தான் நிறைய வரும். விவாதங்களும் நீண்டுகொண்டே இருக்கும். அப்போவே முடிவு செய்திட்டேன் , நமக்கு அறுவை சிகிச்சைதான் சரி என்று.
மகப்பேறு மருத்துவத்தில் இரண்டு யூனிட்டுகள் உண்டு. நான் GS madam unit. ஆக்னஸ் மேடம் நல்லா சொல்லித் தருவாங்கள். ஆனால் அவங்க முதல் யூனிட்டில் இருந்தாங்க. நிறைய உதவி பேராசிரியைகள் உண்டு. என் பெயரிலேயே தாணுமதி மேடம் இருந்தாங்க. பாக்கியம் பார்வதி, மீனாட்சி, சகுந்தலா என ஒன்றிரண்டு பெயர்கள்தான் நினைவுக்கு வருகிறது.
மூணாம் வருஷம் முழுவதுமே பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் அரைகுறையாக ஏதோ படித்தோம். அப்போது படிக்கும் அனைத்துக்குமான தேர்வு ஐந்தாம் வருடத்தில்தான் வரும் என்பதால் விட்டேத்தியாக இருப்போம். ஒருமாதிரி Honey-moon period மாதிரிதான் அந்த வருஷம் ஓடிப்போனது.
மதியம் சாப்பாட்டுக்குப் பிறகு தியரி வகுப்புகள் கல்லூரி வளாகத்தில் நடக்கும்.
Pharmacology என்ற ஒரே பாடம்தான் மூன்றாம் வருடம் தேர்வுக்குரியது. அவ்ளோ மாத்திரை மருந்துகள் பற்றியும் நுணுக்கமாகப் படிக்கணும். மருந்து கண்டுபிடிச்சது தொடங்கி, நோயாளிக்கு கொடுக்கப்படும் வரை உள்ள கதைகள் ஒருபுறம். சாப்பிட்ட பின் அந்த மருந்து எப்படி வேலை செய்யும், என்னனென்ன உபத்திரவங்களைப் பக்க விளைவாகத் தரும், எந்த அவயங்களையெல்லாம் பாதிக்கும், எப்படி வெளியேறும்- அப்பப்பா எழுதும்போதே கண்ணைக் கட்டுதே, படிக்கும் போது எப்படி இருந்திருக்கும்.
பாதி விஷயங்களைப் புரியாமலேயே மனப்பாடம் செய்திருப்போம். புரிந்த விஷயங்களிலோ ஆயிரத்தெட்டு சந்தேகம் இருக்கும். ஆனாலும் முனகல் சத்தமே வராமல் வகுப்பு கவனிக்கணும். Pharmacology professor கனகாம்பாள் மேடம் பயங்கர terror. அவங்க சிரிச்சே பார்த்ததில்லை.
அதுபோக பொது மருத்துவம், OG, surgery, Forensic, Pathology எல்லா பாடங்களின் தியரியும் தினமும் நடக்கும். நிறைய வகுப்புகள் எனக்கு Latin, French போல் அந்நிய மொழிகளாகவே தெரிந்தது. என்னை மாதிரி நிறைய பேர் உண்ட மயக்கத்துடன்தான் இருப்பார்கள். தூங்குபவர்களைப் பற்றி எந்த ஆசிரியரும் கண்டு கொண்டதே இல்லை. வகுப்பைத் தொந்தரவு செய்யாமல் தூங்கிவிட்டால் நல்லதுன்னு விட்டுடுவாங்க.
இதெல்லாம் அன்றாட நிகழ்வுகள். ஆனால் அவற்றின் இடைச் சொறுகல்களாக தினமும் ஏதாவது வித்தியாசமான விஷயமோ ஜாலியான நிகழ்ச்சியோ நடக்கும் . அதையெல்லாம் திரும்பிப் பார்க்கும்போது அலைகள் மூன்றாம் வருடத்தையே தாண்டாது போலிருக்கு. அத்தனை நிகழ்ச்சிகள் மனதில் முட்டி மோதுகின்றன. என் ஒருத்தியின் அநுபவங்களே தோண்டத் தோண்டப் பொங்கி வரும்போது சக நண்பர்களின் பங்களிப்பையும் சேர்த்தால் என்னே சுகானுபவம்.

0 Comments:

Post a Comment

<< Home